Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி யர்ஷிகா 28 நாட்களின் பின்னர் சடலமாக மீட்பு

Featured Replies

article_1437366886-images.jpg

கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதிமுதல் காணாமல் போயிருந்தகிளிநொச்சி,சத்தியபுரம் கிராமத்தைச் சேர்ந்தஉதயகுமார் யர்ஷிகா (வயது 03) என்ற சிறுமியின் சடலம்,குறித்த சிறுமி காணாமல் போன இடத்திலிருந்து 5 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பொறிக்கடவை வயல்வெளியிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) மீட்கப்பட்டது. 

குறித்த வயல்வெளியில் புதைக்கப்பட்டிருந்த நிலையிலேயே சிறுமியின் சடலம் புதைக்கப்பட்டிருந்தது எனவும் அச்சிறுமி காணாமல் போனபோது அணிந்திருந்த ஆடை, அலிஸ்பாண்ட் மற்றும் செருப்பு ஆகியனவும் அச்சிறுமி புதைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து மீட்கப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் கூறினர். 

மேற்படி சிறுமியின் சடலம் குறித்த பகுதியில் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்ததகவலின் அடிப்படையில், அவ்விடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன், அச்சடலம் சிறுமி யர்ஷிகாவினுடையது என அவர் அணிந்திருந்த ஆடைகள் மூலம் அடையாளம் காணப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர். 

மேற்படி கிராமத்திலுள்ளவர்கள் 2 கிலோமீற்றர் தூரத்திலுள்ள வாய்க்கால் ஒன்றில் குளிப்பதற்காக தினமும் சென்றுவருபவர்கள். இந்த சிறுமியுடன் தாயாரும் வேறுச pலரும் கடந்தமாதம் 21ஆம் திகதி மாலை வாய்க்காலில் குளிப்பதற்காகவீட்டிலிருந்துநடந்துசென்றுகொண்டிருந்தனர்.

சிறுமி நடக்க சிரமப்பட்டதையடுத்து அவ்வழியாக சைக்கிளில் சென்ற 14 வயதுச் சிறுவனிடம் சிறுமியை வாய்க்கால் வரையும் கொண்டு சென்று விடுமாறு தாய் அனுப்பியுள்ளார். தாயார் வாய்க்காலடிக்கு வந்தபோது, சிறுமியைக் காணவில்லை. சைக்கிளில் கூட்டிச்சென்ற சிறுவனிடம் விசாரணை செய்தபோது, தான் சிறுமியை வாய்க்காலடியில் விட்டதாக கூறியுள்ளான். இதனையடுத்து, சிறுமியின் தாயார் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட பொலிஸார்,அந்தச் சிறுவன் மற்றும் சிறுமியின் உறவினர்கள் என 5பேரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். எனினும் சிறுமி தொடர்பான எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து, கடற்படையினர், இராணுவத்தினர், பொதுமக்கள் உதவியுடன் தேடுதல் மேற்கொண்டும் சிறுமி பற்றி எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. சிறுமியை காட்டேரி கடத்தியிருக்கலாம் என சிறுமியின் உறவினர்கள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 http://www.tamilmirror.lk/150507#sthash.T2WFtg1R.dpuf

கிளிநொச்சி யதுர்சிகா கொலையில் காட்டேறிப் பேயாம்…. வெளிவரும் மர்மம்.

கிளிநொச்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன் காணாமல் போன சிறுமியை காட்டேறிப் பேயே துாக்கிச் சென்று இரத்தத்தை உறுஞ்சிய பின் வயலுக்குள் வீசி விட்டுச் சென்றுள்ளதாக அப்பகுதியில் உள்ள சில வயதானவர்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.

காட்டேறிப் பேயின் முன் அகப்பட்ட யாராக இருந்தாலும் அவர்களை காட்டேறிப் பேய் மூளையை மாறாட்டமாக்கி அவர்களை தனது போக்கில் கொண்டு சென்று அவர்களது இரத்தத்ம் அனைத்தையும் உறுஞ்சிய பின் அந்த இடத்திலேயே போட்டுவிட்டு சென்றுவிடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமி கிளிநொச்சி எள்ளுக்காடு பிரதேசத்தில் இருந்து குஞ்சுப்பரந்தன் வரையான வயல்வெளிவரை எவ்வாறு செல்ல முடியும் எனவும் அவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இதே வேளை குறித்த சிறுமியைக் கடத்திச் சென்று காமுகர்கள் பாலியல்வல்லுறவுக்கு உள்ளாக்கிய பின் கொலை செய்திருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவிக்கின்றனர் சிலர். சிறுமி கொலையுண்டபின் வயலுக்குள் அழுகிய சடலமாகக் கிடக்கும் காட்சி இது.Kele  Baby

இந்தப் பிஞ்சை கொடுமைப்படுத்தியவர்கள் உண்மையில் பேய்கள் தான்,ஒரு சில வேளைகளில் பேயாவது இரங்கினாலும் இரங்கும். நீங்கள் தயவு செய்து உயிர் வாழாதீர்கள்.ஒரு குழந்தையை அடையாளம் தெரியாவர்கள் வாழ்வதில் பிரியோசனமே இல்லை. நாங்களும் எமது காலங்களில் குழப்படிகள் செய்துதான் இருக்கின்றோம்.எங்களால் யாருமே பாதிக்கப்படவில்லை.உங்களையெல்லாம் ஏன் ராணுவத்தினர் கொல்லாமல் விட்டான் என்பதே என் கேள்வி?
  • கருத்துக்கள உறவுகள்

காட்டேறிப் பேய் தமிழ் பொம்பிளப் பிள்ளைகளை தான் கடித்துக் குதறுமோ. சிங்கள இராணுவப் பிசாசுகளை குதறாதோ. அதுசரி... காட்டேரியை காட்டேரி எப்படி கடிச்சுக்கு குதறும். :unsure::innocent:

சிறுமி ஜதுர்சிகாவை சிதைத்த சிறுவன்.

 

கிளிநொச்சி எள்ளுக்காடு பகுதியில் அண்மையில் உருக்குலைந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக அச்சிறுமியின் ஒன்றுவிட்ட சகோதரர் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.

சிறுமி காணாமல் போனதை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை தொடர முடியாமல்
பொலிசார் திணறிக் கொண்டிருந்த சமயத்தில், சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட விசாரணையில், பல தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

சந்தேகநபரான 14 வயது சிறுவனிடம் தொடர்ந்தும்  விசாரணைகளை மேற்கொள்வதற்காக அவரைத் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கான நீதிமன்ற உத்தரவு நேற்று (24)  பெறப்பட்டது.

இதன்பிரகாரம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளிலேயே சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு   உட்படுத்தியமையை சிறுவன் ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலையுடன்  அவரிற்கு பங்குள்ளதாக என்பதை பகிரங்கமாக தெரிவிக்க பொலிசார் மறுத்தவிட்டனர்.

எனினும், சட்ட மருத்துவ அறிக்கை இன்னும் கிடைக்கப் பெறவில்லை என பொலிஸார்   குறிப்பிட்டனர்.

சிறுமியுடையது என சந்தேகிக்கப்படும் எச்சங்கள் கடந்த 19 ஆம் திகதி பிற்பகல்  எள்ளுக்காடு பகுதியில் உள்ள வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்டது.

கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி சிறுமி காணாமற்போயிருந்தார்.

http://www.jvpnews.com/srilanka/118044.htmlKele

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.