Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆதரவாளரைத் தாக்கச் சென்ற மகிந்த! வீடியோ

Featured Replies

ஆதரவாளரைத் தாக்கச் சென்ற மகிந்த! வீடியோ

தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொள்வதற்காக மேடைக்குச் சென்றுகொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே தனது கட்சி தொண்டரை தாக்கச் சென்ற காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று அரச ஊடகங்களில் ஒளிபரப்பாகின.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் அக்குரஸ்ஸ தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. இதன்போது மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மகிந்த ராஜபக்ச ஆதரவாளர் நெரிசலில் சிக்கிக் கொண்டார்.

அப்போது தொண்டர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச மேடையில் ஏறுவதற்கு முன்பாக அவரது கையை பிடித்து இழுத்துள்ளார். மகிந்த ராஜபக்சவும் குறித்த ஆதரவாளரைத் தாக்க கையை உயர்த்தினார். எனினும், கூட்ட நெரிசலில் அவர் இழுபட்டுச் செல்ல, அவரைச் சுற்றியிருந்தவர்கள் மகிந்த ராஜபக்சவை மேடைக்கு அழைத்துவந்தனர்.

இந்த வீடியோ தற்போது இணையத்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
 

http://www.tamil.srilankamirror.com/news/item/3594-2015-07-22-06-04-57

https://www.youtube.com/watch?v=B0nYUIw0bLo

article_1437551760-_DSC0423(1).jpg


பொதுத்தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்வதற்காக ஐக்கிய மக்கள் சுத்திர கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ, அக்குரஸ்ஸ நகரத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றார்.  அங்கு பழைய பஸ்தரிப்பிடத்திலேயே பிரசாரக் கூட்டத்துக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. 

தேர்தல் பிரசாரக்கூட்டம் மாலை 4 மணிக்கு ஆரம்பமானது. மஹிந்த ராஜபக்ஷ மாலை 5.30க்கு வருகைதந்தார். குண்டுகள் துளைக்காத பென்ஸ் காரில் வந்திறங்கிய அவர், குழுமியிருந்த மக்களுக்கு இடையிலேயே மேடையை நோக்கி சென்றார். 

அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர், மஹிந்த ராஜபக்ஷவின் கையை பிடித்துள்ளார். அச்சந்தர்ப்பத்தில் ஏதோவொரு குழப்பத்தில் இருந்த மஹிந்த ராஜபக்ஷவின் முகத்தில் ஒருவிதமான மாற்றம் திடீரென ஏற்பட்டது.

தன் கையை பிடித்தவரை நோக்கி மஹிந்த ராஜபக்ஷ கையை ஓங்கினார. மஹிந்த, தாக்குதல் நடத்த முயற்சித்த போதும் அவருக்கு பாதுகாப்பு வழங்கிகொண்டிருந்த பாதுகாப்பு தரப்பைச்சேர்ந்த மூவரும் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்காக மஹிந்த ராஜபக்ஷவை பின்தள்ளிவிட்டனர். அவர் விழ பார்த்தார். எனினும், மஹிந்தவுக்கு பின்னால் இருந்த பாதுகாப்பு தரப்பினர் மஹிந்தவை பிடித்துவிட்டனர். 

அதன் பின்னர், அக்குரஸ்ஸ, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அக்குரஸ்ஸ வேட்பாளர் மனோஜ் சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷவை மேடைக்கு அழைத்துசென்றார். 

அந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ சுமார் 25 நிமிடங்கள் உரையாற்றினார். எனினும், இந்த சம்பவம் தொடர்பில் எதுவுமே கூறவில்லை.

எனினும், மஹிந்த ராஜபக்ஷ, தன்னை பாதுகாத்து கொள்வதற்காகவே இவ்வாறு செய்தார் என்று மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சாளர் தெரிவித்தார். 

article_1437551775-_DSC0425.jpg

 

http://www.tamilmirror.lk/150671#sthash.Qi70gIjE.dpuf

 

Edited by Athavan CH

மகிந்த ரோட்டுக்கு வந்திட்டார் என்பதற்கு தகுந்த ஆதாரம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.