Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளை வான் விவகாரம் – மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவிடம் 4 மணிநேரம் விசாரணை

Featured Replies

வெள்ளை வான் விவகாரம் – மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவிடம் 4 மணிநேரம் விசாரணை

JUL 23, 2015 | 12:53by கார்வண்ணன்in செய்திகள்

Major General Prasanna de Silvaமீரிஹான பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால் பயன்படுத்தப்படும் வெள்ளை வான் கைப்பற்றப்பட்டது தொடர்பாக, மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவிடம் நான்கு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவின் தளபதியும், பாதுகாப்பு அமைச்சில் இணைப்பதிகாரியாகப் பணியாற்றுபவருமான மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்ட வெள்ளை வான், கடந்த திங்கட்கிழமை இரவு மீரிஹாவின் வைத்து சிறிலங்கா காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.

இதில் இருந்த மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் மூன்று மெய்க்காவலர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் இருந்து பிரசன்ன சில்வாவின் கைத்துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பாக நேற்று மீரிஹான காவல் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவிடம் நான்கு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது அவர் அந்த வெள்ளை வான் தனது பாதுகாப்பு அணியினரால் பயன்படுத்தப்பட்டது என்பதையும், கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கி தனது சொந்தப் பாவனையில் இருந்தது என்றும் ஒப்புக்கொண்டார்.

தனது பெயரில் பதிவு செய்யப்பட்ட அந்த கைத்துப்பாக்கியை, 15 ஆண்டுகளாக பயன்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நுகேகொடவில் உள்ள தனது வீட்டில் இருந்து அந்த கைத்துப்பாக்கியை எடுத்துக் கொண்டு கொழும்புக்கு வருமாறு தனது பாதுகாவலர்களுக்கு தானே உத்தரவிட்டதாகவும் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா கூறியுள்ளார்.

கொழும்பில் இருந்து தனது பாதுகாவலர்களுடன் இணைந்து கண்டிக்குச் செல்லவிருந்தாகவும், அவர் காவல்துறை விசாரணையில் கூறியுள்ளார்.

எனினும், இராணுவத்தின் இலக்கத் தகடு மாற்றப்பட்டு, சாதாரண இலக்கத்தகடு பொருத்தப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.

http://www.puthinappalakai.net/2015/07/23/news/8081

  • கருத்துக்கள உறவுகள்

ம்..ம்ம் 

புலிகள் இருந்தால், புலி வேட்டைக்கு கிளம்பினோம் எண்டு சொல்லி விசயத்தை மூடியிருப்பினம்.

இப்ப என்னத்தை சொல்லுறது எண்டு தான் முழிப்பார். இவர் கோத்தா விண்ட ஆள் போல கிடக்குது. ஏதோ மைத்திரி தப்பிப் பிழைச்சால் சரி தான்.:shocked:

  • கருத்துக்கள உறவுகள்

//எனினும், இராணுவத்தின் இலக்கத் தகடு மாற்றப்பட்டு, சாதாரண இலக்கத்தகடு பொருத்தப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.//

வாகனத்தின், இலக்கத் தகடு மாற்றியமைக்கு.... என்ன காரணம் சொல்லியிருப்பார் என்பதை அறிய ஆவலாக உள்ளது.:)
அவர் சொல்லா விட்டாலும், யாழ்கள உறவுகள் ஊகிப்பதில் கெட்டிக்காரர். என்ன சொல்லியிருப்பார் என்று... சொல்லுங்கோ பாப்பம்.:grin:

 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவுகள் ஊகிப்பதில் கெட்டிக்காரர். என்ன சொல்லியிருப்பார் என்று... சொல்லுங்கோ பாப்பம்.:grin:

 

புலிகளிடமிருந்து தமிழ் மக்களை பாதுகாக்க நானும் எனது மெய்பாதுகாவலர்களும் மாறு வேசத்தில் வீதி வலம் வருவதற்கு

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளிடமிருந்து தமிழ் மக்களை பாதுகாக்க நானும் எனது மெய்பாதுகாவலர்களும் மாறு வேசத்தில் வீதி வலம் வருவதற்கு

Major General Prasanna de Silva


அட..... மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவுக்கும், புலி தான் தேவைப்படுது. 
நன்றாக.... இருந்தது, புத்தன்.:)

புத்தன் யோச்சிச்ச மாதிரி, மற்றைய உறவுகள் ஏன்... யோசிக்கவில்லை.
குறிப்பாக... மாற்றுக் கருத்து மாணிக்கங்கள்... யோசிச்சால், எப்பிடி இருக்கும்... என்று, அறிய ஆவல்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியின் ஜேர்மன் புத்தக கூட்டத்தை குழப்ப,

சம்பந்தருக்கு முட்டை அடிக்க,

சுமந்திரனை யாழில் கால்வைக்காமல் செய்ய......

இப்படி பல வெத்து ஜம்பங்களை ஜேர்மனியில் இருக்கும் ஒருவர் சார்பில் செய்வதற்கே நம்பர் பிளேட்டை மாத்தினோம். 

 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியின் ஜேர்மன் புத்தக கூட்டத்தை குழப்ப,

சம்பந்தருக்கு முட்டை அடிக்க,

சுமந்திரனை யாழில் கால்வைக்காமல் செய்ய......

இப்படி பல வெத்து ஜம்பங்களை ஜேர்மனியில் இருக்கும் ஒருவர் சார்பில் செய்வதற்கே நம்பர் பிளேட்டை மாத்தினோம். 

சாத்திரியின், புத்தக வெளியீட்டில்,  அவர் யாழ்கள உறுப்பினர் என்பதால்....
பலரின், அன்பு வேண்டு கோழுக்கு இணங்க.... அதில் குழப்பம் விளைவிக்க விரும்பவில்லை.

அடுத்து... சம்பந்து உடுவிலில்,  வைக்க இருந்த கூட்டம்... ரத்து, என்று... கதை அடிபடுது.
சுமந்து... ஏற்கெனவே, "பிச்சை வேண்டாம், நாயை பிடி" என்ற கணக்கில்.... முகநூலில்   இறங்கி விட்டார்.
இது.... வெற்றி தானே.....:grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.