Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மகளை மீட்டு தாருங்கள் என கதறிய தாய்- குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு அருகில் உள்ள எனது மகளை என்னிடம் ஒப்படையுங்கள் என தாயொருவர் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனாவிடம் கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்தார்.

யாழ்ப்பாணத்திற்கு செவ்வாய்க்கிழமை திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் வீட்டில் காணாமல் போனவர்களின் உறவினர்களை சந்தித்து இருந்தார்.

அதன் போதே காணாமல் போயுள்ள மாணவி ஒருவரின் தாயார் அவ்வாறு உருக்கமான கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன் வைத்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மைத்திரி பால சிறிசேனா  பாடசாலை மாணவிகள் சிலருக்கு மத்தியில்  நிற்கும் படம் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டன

அந்த துண்டு பிரசுரத்தில் காணப்படும் படத்தில் உள்ள மாணவிகளில் ஒருவர் தனது மகள் என கூறி மாணவியின் தாயார் அந்த துண்டு பிரசுரத்தை ஜனாதிபதியிடம் கையளித்து இந்த படத்தில் உள்ளவர் காணாமல் போன எனது மகள் தான் என்னுடைய மகளை மீட்டு தாருங்கள் என கண்ணீர் மல்க உருக்கமாக கோரினார்.
  

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122400/language/ta-IN/article.aspx

.Angajan 01Angajan 02Angajan 03Angajan 04Angajan 05Angajan

  • கருத்துக்கள உறவுகள்

Angajan 04

அரசியலுக்கு அப்பால்... இவ்வளவு சாதரணமாக மக்களுடன், உரையாடும் ஜனாதிபதியை காண ஆச்சரியமாக உள்ளது.
தனது மகளை காணாமல் ஏங்கும்... அந்தத் தாயின் துன்பத்தை மைத்திரி போக்க வேண்டும்.

jaffna_005

சனாதிபதி மைத்திரிக்கு அருகில் இருக்கும் மகளை மீட்டுத் தரமுடியாதவர்கள் போலி வாக்குறுதிகளுடன் வாக்குப் பிச்சை கேட்டு வருவதாக காணமல் போனவர்களின் உறவினர்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்

வடகிழக்கு மாகாணங்களில் காணாமல்போனவர்களை கண்டறிந்து தருமாறுகோரி நேற்று யாழ்.நல்லூர் பகுதியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

காலை 11 மணியளவில் நடைபெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் 8 மாவட்டங்களை சேர்ந்த காணாமல் போனவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

‘தற்போதைய ஜனாதிபதி அருகில் படத்தில் இருக்கும் எனது மகள் எங்கே’

‘எனது அப்பாவை மீட்டுத்தாருங்கள் எனக்கும் எனது அப்பா வேண்டும்’

‘தேர்தல் காலத்தில் மட்டுமா நாமும் மற்றவர்களுக்கு சமமாக தெரிகின்றோம்’

‘எம்மிடம் வாக்குப் பிச்சை கேட்பவர்களே எமது கண்ணீர் உங்களுக்கு தெரியவில்லையா’

‘காணாமல் ஆக்கப்பட்டவர்களை இப்போதாவது நிமிர்ந்து பார் அரசே’

போன்ற சுலோகங்களை தாங்கியவாறு போராட்டத்தை மேற்கொண்டனர்.

http://tamilleader.com/?p=50272

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.