Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கசிந்துள்ள ஐ.நா ஆவணம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா என கேள்வி எழுப்புகிறது சனல்4

Featured Replies

கசிந்துள்ள ஐ.நா ஆவணம் – பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்குமா என கேள்வி எழுப்புகிறது சனல்4

JUL 29, 2015 | 0:51by கார்வண்ணன்in செய்திகள்

CHANNEL-4-300x200.jpgஐ.நாவில் இருந்து கசிந்து தமக்கு கிடைத்துள்ள ஆவணம் ஒன்று, சிறிலங்காவில் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நீதி கிடைக்குமா என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளதாக, பிரித்தானியாவின் சனல் 4 ஊடகம் தெரிவித்துள்ளது.

நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்படும், சிறிலங்காவின் 26 ஆண்டுகால உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போது, இடம்பெற்ற மீறல்கள் குறித்த ஐ.நா  விசாரணை குறித்து வரும் செப்ரெம்பரில்  ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நடத்தப்படவுள்ள விவாதத்தை, பலவீனப்படுத்தக் கூடும் என்று விமர்சிக்கப்படக் கூடிய ஆவணம் ஒன்று சனல்4 இற்கு கிடைத்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில், பத்தாயிரக்கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று ஐ.நா கூறுகிறது.

சுருங்கி வந்த நெரிசல் மிக்க பாதுகாப்பு வலயத்துக்குள். சிறிலங்கா அரச படைகள் நடத்திய பீரங்கித் தாக்குதலிலேயே, இவர்களில் பெரும்பாலான மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா அறிக்கை கூறுகிறது.

அதேவேளை விடுதலைப் புலிகளும் கூட, தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் மனித கேடயங்கள் போன்ற மோசமான மீறல்களில் ஈடுபட்டதாகவும் ஐ.நா குறிப்பிட்டுள்ளது.

மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஐ.நாவுடன் இணைந்து- ஐ.நாவின் தொழில்நுட்ப உதவிகளுடன்  சிறிலங்கா அரசாங்கம் முழுமையான உள்நாட்டு விசாரணை  ஒன்றை உருவாக்குவதற்கான, திட்டவரைவு ஒன்றைக் கொண்டிருப்பதாக இந்த ஆவணங்களில் இருந்து தோன்றுகிறது.

பெரும்பாலான மனித உரிமை அமைப்புகள், உள்நாட்டு நீதிப் பொறிமுறையை அமைக்கும் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாதென அறிவித்துள்ளன.

அது, வெற்றியாளரின் நீதிமன்றமாகவே இருக்கும் என்றும் பலர் எச்சரித்துள்ளனர்.

கசிந்துள்ள ஐ.நாவின் திட்டங்களின்படி, இந்த திட்டத்தை் நடைமுறைப்படுத்தும் பங்காளர்களாக, சிறிலங்கா அரசாங்கமும், வடக்கு மாகாணசபையும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், வடக்கு மாகாண முதலமைச்சர், சி.வி.விக்னேஸ்வரன், இதுபற்றி தம்முடன் ஐ.நா எந்தக் கலந்துரையாடல் எதையும் நடத்தவில்லை என்று  சனல்4 ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார்.

செப்ரெம்பர் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டம் நடக்கவுள்ள நிலையில், இந்த ஆவணம் கசிந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்காவின் மைத்திரிபால சிறிசேன அரசாங்கம், உள்நாட்டு விசாரணையை நடத்துவதாக கூறினாலும் தமிழ் செயற்பாட்டாளர்கள், அனைத்துலக விசாரணையையே கோருகின்றனர் என்றும் சனல் 4 தெரிவித்துள்ளது.

http://www.puthinappalakai.net/2015/07/29/news/8246

  • கருத்துக்கள உறவுகள்

சனல் 4 வெளியிட்ட செய்தி

http://bcove.me/m5m0drr3

 

http://link.brightcove.com/services/player/bcpid69900095001?bckey=AQ~~,AAAAAEabvr4~,Wtd2HT-p_VhJQ6tgdykx3j23oh1YN-2U&bctid=4381759515001

 

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

 

கசிந்துள்ள ஐ.நா அறிக்கை: போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்குமா? - சனல் 4 ஊடகம் கவலை!

<p>கசிந்துள்ள ஐ.நா அறிக்கை: போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்குமா? - சனல் 4 ஊடகம் கவலை!</p>



இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் பணியகத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் ஊடாக உண்மையான நீதி கிடைக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரித்தானியாவின் சனல் 4 ஊடகம் தெரிவித்துள்ளது.

ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் இருந்து கசிந்து தமக்கு கிடைத்துள்ள இந்த விசாரணைகள் தொடர்பிலான ஆவணம் ஒன்றை அடிப்படையாக வைத்தே சனல் 4 ஊடகம் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இவ்வூடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட சர்வதேச மனிதாபிமான மற்றும் மனிதவுரிமை சட்டங்களுக்கு எதிரான சம்பவங்கள் தொடர்பிலான ஐ.நாவின் விசாரணை குறித்து எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் ஜெனிவாவில் நடத்தப்படவுள்ள விவாதத்தை பலவீனப்படுத்தக் கூடும் என்று விமர்சிக்கப்படக் கூடிய ஆவணம் ஒன்று சனல் 4க்கு கிடைத்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது பத்தாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக  ஐ.நா தெரிவிக்கின்றது. சிறிலங்கா படைத்தரப்பினர் நெரிசலான பாதுகாப்பு வலயங்களை இலக்கு வைத்து மேற்கொண்ட பீரங்கித் தாக்குதலிலேயே பெரும்பாலான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. 

அதேபோன்று தமிழீழ விடுதலைப் புலிகளும் தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் பொது மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தியமை போன்ற மோசமான மீறல்களில் ஈடுபட்டதாகவும் ஐ.நா கூறுகின்றது. 

இத்தகைய மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஐ.நாவுடன் இணைந்து, சிறிலங்கா அரசாங்கம் உள்நாட்டு விசாரணை ஒன்றை ஐ.நாவின் தொழில்நுட்ப உதவிகளுடன் நடத்துவதற்கான திட்டவரைவு ஒன்றைக் கொண்டிருப்பதாக இந்த ஆவணங்களில் இருந்து தோன்றுகிறது.

அதேவேளை, இந்தப் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்த உள்நாட்டுப் பொறிமுறையை அமைக்கும் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என பெரும்பாலான மனிதவுரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், கசிந்துள்ள ஐ.நாவின் ஆவணத்தின்படி இந்தத் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கமும், வடமாகாண சபையும் இணைந்து நடைமுறைப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இவ்விடயம் தொடர்பில் தன்னுடன் ஐ.நா எவ்வித கலந்துரையாடலையும் நடத்தவில்லை என்று  வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சனல் 4க்கு தெரிவித்துள்ளார்.

இப்போரின் போது மேற்கொள்ளப்பட்ட சர்வதேச மனிதாபிமான மற்றும் மனிதவுரிமை சட்டங்களுக்கு எதிரான சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஜெனிவாவில் செப்ரெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில்  வெளியிடப்படவுள்ள சிறிலங்கா மீதான அறிக்கை தொடர்பிலான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகின்றது.

இந்த மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணையை நடத்துவதாக மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் கூறினாலும், சர்வதேச விசாரணையையே தமிழ் செயற்பாட்டாளர்கள் கோருகின்றனர்.

இதனிடையில் சிறிலங்காவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போட்டியிடுகின்றார். சிறிலங்கா மீதான போர்க்குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள மகிந்த ராஜபக்ச, சர்வதேச விசாரணைக்கும் முற்றான எதிர்பபை வெளியிட்டுள்ளார் என்று சனல் 4 மேலும் தெரிவித்துள்ளது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=bcbf8c75-cf2b-4f68-8901-1c3cbf3f8970

channel4 leaked doc

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் பணியகத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் ஊடாக உண்மையான நீதி கிடைக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரித்தானியாவின் சனல் 4 ஊடகம் தெரிவித்துள்ளது.

ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் இருந்து கசிந்து தமக்கு கிடைத்துள்ள இந்த விசாரணைகள் தொடர்பிலான ஆவணம் ஒன்றை அடிப்படையாக வைத்தே சனல் 4 ஊடகம் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இவ்வூடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட சர்வதேச மனிதாபிமான மற்றும் மனிதவுரிமை சட்டங்களுக்கு எதிரான சம்பவங்கள் தொடர்பிலான ஐ.நாவின் விசாரணை குறித்து எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் ஜெனிவாவில் நடத்தப்படவுள்ள விவாதத்தை பலவீனப்படுத்தக் கூடும் என்று விமர்சிக்கப்படக் கூடிய ஆவணம் ஒன்று சனல் 4க்கு கிடைத்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது பத்தாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா தெரிவிக்கின்றது. சிறிலங்கா படைத்தரப்பினர் நெரிசலான பாதுகாப்பு வலயங்களை இலக்கு வைத்து மேற்கொண்ட பீரங்கித் தாக்குதலிலேயே பெரும்பாலான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

அதேபோன்று தமிழீழ விடுதலைப் புலிகளும் தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் பொது மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தியமை போன்ற மோசமான மீறல்களில் ஈடுபட்டதாகவும் ஐ.நா கூறுகின்றது.

இத்தகைய மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள ஐ.நாவுடன் இணைந்து, சிறிலங்கா அரசாங்கம் உள்நாட்டு விசாரணை ஒன்றை ஐ.நாவின் தொழில்நுட்ப உதவிகளுடன் நடத்துவதற்கான திட்டவரைவு ஒன்றைக் கொண்டிருப்பதாக இந்த ஆவணங்களில் இருந்து தோன்றுகிறது.

அதேவேளை, இந்தப் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்த உள்நாட்டுப் பொறிமுறையை அமைக்கும் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என பெரும்பாலான மனிதவுரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், கசிந்துள்ள ஐ.நாவின் ஆவணத்தின்படி இந்தத் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கமும், வடமாகாண சபையும் இணைந்து நடைமுறைப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இவ்விடயம் தொடர்பில் தன்னுடன் ஐ.நா எவ்வித கலந்துரையாடலையும் நடத்தவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சனல் 4க்கு தெரிவித்துள்ளார்.

இப்போரின் போது மேற்கொள்ளப்பட்ட சர்வதேச மனிதாபிமான மற்றும் மனிதவுரிமை சட்டங்களுக்கு எதிரான சம்பவங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஜெனிவாவில் செப்ரெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் வெளியிடப்படவுள்ள சிறிலங்கா மீதான அறிக்கை தொடர்பிலான எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகின்றது.

இந்த மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணையை நடத்துவதாக மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் கூறினாலும், சர்வதேச விசாரணையையே தமிழ் செயற்பாட்டாளர்கள் கோருகின்றனர்.

இதனிடையில் சிறிலங்காவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போட்டியிடுகின்றார். சிறிலங்கா மீதான போர்க்குற்றச்சாட்டுக்களை நிராகரித்துள்ள மகிந்த ராஜபக்ச, சர்வதேச விசாரணைக்கும் முற்றான எதிர்பபை வெளியிட்டுள்ளார் என்று சனல் 4 மேலும் தெரிவித்துள்ளது.

நன்றி : பொங்குதமிழ் (மொழியாக்கம்)

 

http://tamilleader.com/?p=50291

 

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.