Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசைகவின் கலைப் பல்கலைக் கழகம்

வெளியில் வரும் பூனைக்குட்டிகள்

 

யானும் ஓர் ஆடுகள மகளே !

என்கைக் கோடீரீலங்கு வளை நெகிழ்ந்த

பீடுகெழு குரிசிலும் ஓர் ஆடுகள மகனே!    - குறுந்தொகை-31

               

இந்தப் பாடலில் குறிப்பிடப்படும் ஆடுகள மகனும் ஆடுகள் மகளும் பார்ப்பனர் இல்லை. பரத நாட்டியம் எங்கிருந்து வந்தது? அதில் பார்ப்பனர் எண்ணிக்கை எப்படி மிகுந்தது?

 

                மரல் பழுத்தன்ன மருகு நீர் மொக்குள்

                நண்பகல் அந்தி நடை இடை விலங்கலின்

பெடை மயில் உருவில் பெருந்தகு பாடினி

களிறு வழங்கு அதரக் கானத்து அல்கி

இலை இல்மரா அத்த எவ்வம் தாங்கி

----------------------------------------------------------------

முரசு முழங்கு தானை மூவரும் கூடி

அரசவை இருந்த தோற்றம் போல

பாடல் பற்றிய பயனுடைய எழா அல்

கோடியர் தலைவ கொண்டது அறிந

                                                                                                பொருநர் ஆற்றுப்படை 47-57

யா பல கொல்லோ பெரும!

வார்  உற்று விசிபிணிக் கொண்ட

மண்கனை முழவின் பாடினி பாடும்

வஞ்சிக்கு நாடல் சான்ற மைந்தினோய்! நினக்க

                                                                                                                புறம் – 15(22-25)

 

யானைகள் திரியும் காட்டு வழியே வெயிலின் கொடுமையைத் தாங்கி கால்களில் கொப்புளங்களுடன் நடந்து சென்று மண்பானைத் தாளம்போட்டு மன்னனுக்கு வரலாறு புரிய வைத்த பாடினி பார்ப்பன மகள் இல்லை.

 

கருணாடக சங்கீதம் எப்படி வந்தது? அதில் பார்ப்பனர் எண்ணிக்கை எப்படி மிகுந்தது?

 

காலக் கணிதமும் கலைகளின் துணிவும்

நாடக மகளிர்க்கு நன்கனம் வகுந்த

ஓவியச் செந்நூல் உரைநூற் கிடக்கையும்

கற்றுத் துறை போகிய பொற்கொடி நங்கை

                                                                                -மணிமேகலை ஊர் அலர் உரைத்த காதை: 29-32

இந்த ஓவிய நூலைக் காணவில்லை. எட்டாம் நூற்றாண்டில் விட்டுணு தருமோத்தரம் என்ற புராணத்திற்குள் ‘மார்க்கண்டேய உவாச்ச....’ என்று கூறிக் கொண்டுசித்ர சூத்ரம்என்ற நூற்பகுதி எப்படிப் புகுந்தது?

 

வகை பெற எழுந்து வானம் முழ்கி

சில்காற்று இசைக்கும் பல்புழை நல் இல்

                                                                                                                மதுரைக்காஞ்சி (357-58)

 

இப்பாடல் குறிக்கும் தமிழர் கட்டடக் கலைத்திறன் கொண்ட கட்டுமானம் இன்று நம்மிடம் இல்லை. பெருந்தச்சர்கள் இல்லை. கல்வெட்டுப் பெயர்க் குறிப்புகள் உட்படப் புறக்கணிக்கப் படுகின்றன. இன்று உலகெங்கும் கட்டப்பட்டுள்ள கோயில்களுக்குத் தனிக் கட்டடக் கலை அடையாளம் எங்கிருந்து வந்தது? இசுதபதிகள் என்போர் எங்கிருந்து வந்தனர்?

 

எதிர்பாராத அறிவிப்பு

 

                தமிழக அரசுஇசை-கவின் கலைப் பல்கலைக் கழகம்ஒன்று அமைக்கப்படும் என்று அறிவிப்புச் செய்திருக்கிறது. தமிழ் நாட்டில் உள்ள அனைத்து இசைக் கல்லூரிகள், சென்னையிலும் குடந்தையிலும் இயங்கி வரும் இரண்டு கவின் கலைக் கல்லூரிகள் ஆகியவற்றோடு மாமல்லபுரத்தில் இயங்கி வரும் கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியையும் சேர்த்து ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியாக இது அமையும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது மிக்க மகிழ்ச்சி! வரவேற்கலாம்.

 

                இங்கு பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் சாகும் தறுவாயில் நின்று கொண்டிருக்கும் நலிவடைந்த நிறுவனங்களேயாகும். இவற்றுக்கு ஒரு மறுவாழ்வு இல்லமாக இந்தப் பல்கலைக்கழகம் அமையுமானால் வரவேற்கலாம். அந்தப் பயன்பாடும் இல்லையென்றால், மருத்துவ மனை கட்டுவதற்குத் திட்டமிட்டு விட்டு, மார்ச்சுவரி மட்டும் கட்டுவது போலாகும் இந்தச் செயல்.

 

வல்லுநர்கள் எங்கே?

 

                தமிழர் கலைகளைத் தனித்தனியே தூய்மைப்படுத்தி வளர்த்து எடுத்தால் மட்டுமே உரிய முறையில் ஒருங்கிணைப்புச் செய்ய முடியும். கலப்படமான கலைப்பிரிவுகளை ஒருங்கிணைத்துப் பெருந்தோற்றத்தை ஏற்படுத்த முடியாது.

 

                தமிழர் கலைகள் அனைத்துமே சரி நிகர்த் தகுதி கொண்ட கலைகள் தாம். இவற்றில் ஒன்றை மட்டும் முதன்மைப் படுத்திவிட்டுப் பிற கலைகள் அதற்கு வால்பிடிப்பது போலத் திட்டமிடுவது தமிழர் மரபுப்படி நேர்மையான செயல் இல்லை. முக்காடு போட்டு மாறாட்டம் செய்வது தமிழர்களின் வேலை இல்லை.

 

                தமிழர் கலைகளைக் காயப்படுத்தாமல் ஒருங்கிணைக்கும் ஆற்றல் தூய்மைப்படுத்தப்பட்ட தமிழ் மொழிக்கு மட்டுமே இருக்கிறது.

 

                அழுக்கிலா ஒன்று தூய்மையாவது போல்

                ஒழுக்கம் என்பதன் உருவமே கலைகள்

                சிதறிய தூசுகள் தூய்மையாகாப் போல்

                சிதறிய ஒழுக்கமும் கலைகள் ஆகா              - கனிச்சாறு

 

                ஆகவே தமிழ் பல்கலைக்கழகம் என்பதில் உள்ளபல்கலைஎன்ற சொல்லே பொருத்தமான பொருள் உடையது தான்.

 

                தமிழ் என்ற மொழியும் ஒரு கலைப் பிரிவு என்பது ஒரு வலுவான கருதுகோள் என்ற அளவுகோலின் படி, தமிழை முதன்மைப்படுத்திய பல கலைகளின் கழகம்தமிழ்ப் பல்கலைக் கழகம்தானே!

 

                தமிழ் மொழி, தமிழ் இசை, தமிழர் மரபு ஓவியம், தமிழர் மரபுப் படிமக்கலை, தமிழர் மரபு வழிப்பட்ட கட்டடக் கலைத்திறன் ஆகியவற்றோடு வரலாற்று ஆய்வுகளையும் இணைத்து தமிழரின் வாழ்வியல் விழுமியங்களைக் கட்டிக் காப்பது எதுவோ அதுவே காலத்தின் தேவை!.

 

                கடந்த 50 ஆண்டுகளில் தமிழர் மரபுக் கலைகள் பற்றிய கல்வியும் பயிற்சியும் பெருமளவில் ஊக்கப்படுத்தப்படவில்லை. அதனால் அவற்றுக்குரிய வல்லுநர்கள் உருவாகவில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சில வியப்பாளர்கள் இருக்கிறார்கள். மற்றபடி திறனாய்வாளர்கள் எனச் சிறப்பாக ஒருவரையும் குறிப்பிட இயலவில்லை.

 

                தமிழில் உயராய்வு மேற்கொண்டு வரும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் ஓவியத்துறை, சிற்பத்துறை, கட்டடக் கலைத்துறை ஆகிய மூன்றும் சொல்லும் படியான எந்த எதிர்காலத் திட்டத்தையும் இன்று வரை முன்வைக்கவில்லை.

 

                இன்று தமிழக அரசு அறிவித்திருக்கும் இசை-கவின் கலைப் பல்கலைக் கழகம் என்பது, அடிப்படையில் ஒரு தவறான பெயரிடுதல் ஆகும்.

 

                பசு-கால்நடைப் பல்கலைக் கழகம்என்றால் என்ன சிறப்பான பொருள் தோன்றுமோ அப்படி ஒரு சிறப்பான உள்நோக்கம் இருப்பதை அறிவு உலகம் புரிந்து கொள்ள வேண்டும்.

                இன்றைய சூழலில், உண்மையான நல்லெண்ணத்தோடு, தமிழர் மரபு மதிப்புகளை அடியொற்றி ஒரு நுண்கலைப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு விரும்பினாலும் அதற்குத் தக அமைத்துத் தர உரிய வல்லுநர்கள் இல்லை.

 

                ஆரிய வைதிக நலனை முன்னிறுத்தி அமைத்துத் தரவும் வல்லுநர்கள் இல்லை. கலப்படமாக ஒரு கட்டமைப்பைச் செய்து தர வல்லுநர்கள் தேவையில்லை. யார் முயற்சி செய்தாலும் பூனைக்குட்டு விரைவில் வெளியில் வந்து விடும் என்று எதிர் பார்க்கலாம்.

 

                இது போன்ற முயற்சிகளில் உண்மைத் தமிழர் தமது அறிவையும், உழைப்பையும் வீணாக்கிவிடக் கூடாது.

 

                தமிழ் இசையைக் கருணாடக இசையாக மாற்றியவர்கள், தமிழர் கூத்துக் கலையை பரத நாட்டியமாக மாற்றியவர்கள், தமிழர் ஓவியக் கலையை சித்திர சூத்திரமாக மாற்றியவர்கள், தமிழரின் படிமக் கலையைப் பிரதிமா சாத்திரமாக மாற்றியவர்கள், தூய தமிழை மணிப் பிரவாளமாக மாற்றியவர்கள், தமிழரின் தூய மந்திர மரபைக் கருமாதிச் சடங்காக மாற்றியவர்கள், இனத்தைச் சாதிகளாக மாற்றியவர்கள், பேசத்தெரிந்த தமிழர்களை வரலாற்று ஊமைகளாக மாற்றி விட்டார்கள்.

 

                பேய் பிடித்த பெண்ணே உடுக்கையும் அடிப்பது போல் தவறு மேல் தவறுகளைச் செய்து விட்டு அவற்றையெல்லாம் விதி செய்ய முயற்சிக்கக் கூடாது.

 

                உலகெங்கும் வாழும் தமிழர்கள் தமது இழப்பின் தன்மையை இனப்படுகொலையின் அளவு கோல் கொண்டு கணக்கிட்டிக் கொண்டிருக்கிறார்கள். இனியும் தமிழர் கலைகளைத் தமிழர் அல்லாதார் கையாள்வதும், கையாளத் திட்டமிடுவதும் அவர்களுக்கு நல்லதல்ல.

 

                தமிழ் மொழியானது தமிழர் கலைகளோடு பின்னிக் கிடக்கிறது. அதனை மேலும் சிக்கல் படுத்தாமல் பிரித்தெடுக்கும் ஆற்றல் எந்தக் கோணத்தில் பார்த்தாலும் தமிழ்த் தேசிய உணர்வுள்ளவர்களிடம் மட்டுமே இருக்கிறது. அவர்களும் குடிசார் நெறியைப் பின்பற்றிக் கோட்பாட்டு வரைவுகள் செய்து தக்க முறையில் மக்கள் குழுக்களை அமைத்துக் கலைகளை மீட்டெடுக்க வேண்டும். தமிழ் மரபுக் கலைஞர்கள் அதற்கு வெளிப்படையாக உதவிட வேண்டும்.

 

                ஆரிய வைதிக நலனை முன்னிறுத்துவோர் உருண்டு திரண்டு தமிழ் இன நலம் விரும்பிகளாக வடிவம் எடுக்க இயன்றவரை தமிழர்கள் உதவிச் செய்யலாம். மற்றபடி அவர்களை உள்ளடக்கியோ முதன்மைப் படுத்தியோ உருப்பட முடியாது. அவர்களிடமிருந்து விலகி வாழக் கற்றுக் கொள்வது மட்டுமே இன்றைய சூழலில் தமிழர்களுக்கு ஆறுதலும், அரசியலும் அடிப்படைத் தேவையும். ஆகும்.

-    தென்னன் மெய்ம்மன்

 

___---ooo000OOO000ooo---___

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.