Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிக தமிழர்கள் போட்டியிடும் கனடியத் தேர்தல்: கனடாவில் ஏற்படப்போகும் பாரிய மாற்றங்கள்

Featured Replies

கனடாவில் இடம்பெறவுள்ள தேர்தல் பலத்த முக்கியத்துவம் பெறப் போகின்றது. 30 புதிய பாராளுமன்றத் தொகுதிகள் இந்தத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டு மொத்ததத் தொகுதிகள் 338 ஆக்கப்பட்டிருக்கின்றன.

கனடாவின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகளவிலான தமிழர்கள் இந்த முறை வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றார்கள். புதிய ஜனநாயகக் கட்சி சார்பாக மூவரும் லிபரல் கட்சி, கண்சவேட்டிக் கட்சி சார்பாக தலா ஒவ்வொருவரும் போட்டியிடுகின்றனர்.

இத்தத் தேர்தல் கனடாவில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள் என்ன? இந்தத் தேர்தலில் போட்டியிடும் தமிழர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன என்பதை இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் திரு.சுரேஸ் தர்மா அவர்கள் விபரித்தார்.

 

GaryRathika

http://www.canadamirror.com/canada/47513.html#sthash.KeZDZuYV.dpbs

 

- See more at: http://www.canadamirror.com/canada/47513.html#sthash.KeZDZuYV.dpuf

  • கருத்துக்கள உறவுகள்
கனடிய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்புடன் மேலும் ஒரு தமிழ் இளைஞர்: Top News
[Wednesday 2015-08-19 18:00]
ஸ்காபரோ தென்மேற்கு தேர்தல் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கன்சவ்வேட்டிவ் கட்சியின் சார்பில் தேர்தலில் குதித்துள்ள 32 வயது இளைஞர் றொசான் நல்லரட்ணம், அத்தொகுதியில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. கணித விஞ்ஞானத்துறையில் பட்டப்படிப்பையும், ஆங்கில இலக்கியத்தில் முதுமாணிப் பட்டத்தையும் முடித்துள்ள சிறந்த கல்விமானும் விளையாட்டு வீரருமான றொசான், தற்போது ரொறன்ரோ பெரும்பாகத்தில் ஒரு பொலிஸ் அதிகாரியாகப் பணியாற்றுகின்ற தீரமிக்க இளைஞர்.

ஸ்காபரோ தென்மேற்கு தேர்தல் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கன்சவ்வேட்டிவ் கட்சியின் சார்பில் தேர்தலில் குதித்துள்ள 32 வயது இளைஞர் றொசான் நல்லரட்ணம், அத்தொகுதியில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. கணித விஞ்ஞானத்துறையில் பட்டப்படிப்பையும், ஆங்கில இலக்கியத்தில் முதுமாணிப் பட்டத்தையும் முடித்துள்ள சிறந்த கல்விமானும் விளையாட்டு வீரருமான றொசான், தற்போது ரொறன்ரோ பெரும்பாகத்தில் ஒரு பொலிஸ் அதிகாரியாகப் பணியாற்றுகின்ற தீரமிக்க இளைஞர்.

  

இதே தொகுதியில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பில் பிளயர், லிபரல் கட்சியின் சார்பில் போட்டியில் குதித்துள்ளார். பொலிஸ் தலைமையதிகாரியாகக் கடமையாற்றிய காலத்தில் கன்சவ்வேட்டிவ் கொள்கைகளுக்கு பெருமளவில் ஆதரவு வழங்கிவந்த பில் பிளயர், ஓய்வுபெற்றதும், லிபரல் கட்சியின் சார்பில் தேர்தலில் குதித்துள்ளதால் கொதிப்படைந்துள்ள கனடிய மக்களும், பில் பிளயருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இந்நிலையில், இரு பிள்ளைகளின் தந்தையான றொசான், பில் பிளயருக்கு கடும் சவாலைக் கொடுப்பார் என எதிர்பார்க்கிறார்கள். இதேவேளை, பசுமைக் கட்சியின் சார்பில், இதே தொகுதியில், பொலிசாரின் தவறான நடவடிக்கைகளால் பாதிப்படைந்த, பொலிசாரால் தாக்கப்பட்டு காயமடைந்த ஒருவர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற வேட்பாளர் தேர்வில் அபார வெற்றிபெற்ற றொசான் அவர்களுக்கு, கன்சவ்வேட்டிவ் கட்சியின் தலைமைப் பீடமும், முக்கிய அமைச்சர்களாகப் பணியாற்றிய கட்சியின் சிரேஷ்ட பிரதிநிதிகளும் தங்களது அதிகபட்ச ஆதரவை உடனடியாகவே வெளிப்படுத்திவரும் நிலையில், றொசான் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்த அளவில் காணப்படுகின்றன.

நேற்று முன்தினம், கௌரவ ஜேசன் கெனி அவர்கள், றொசானுக்கான ஆதரவுப் பிரச்சாரத்திற்கென ஸ்காபரோவிற்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது. பிரதமர் ஸ்ரீவன் காப்பர் அவர்கள் பிரம்டனுக்கு வருகை தந்தபோது, றொசான் அவர்களை நேரில் பாராட்டியதுடன் தனது ஆதரவையும் பகிரங்கமாக வெளியிட்டார். தமிழர் சமூகத்தின் முக்கிய பிரதிநிதிகள், சில நாட்களுக்கு முன்னர் கனடிய வெளிநாட்டமைச்சர் கௌரவ றொப் நிக்கல்சனுடனான வட்டமேசை சந்திப்பில் கலந்துகொண்டபோது, றொசான் அவர்களும் உள்ளடக்கப்பட்டிருந்ததோடு, வெளிநாட்டமைச்சரின் பாராட்டையும் நேரில் பெற்றுக்கொண்டார்.

கௌரவ கிறிஸ் அலெக்சாந்தர் உட்பட, ஏராளமான சிரேஷ்ட தலைவர்களும் தங்களது பேராதரவை றொசான் அவர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

தமிழர்களை மிகச் சிறப்பாகப் பிரதிநிதித்துவம் செய்யத்தக்க தகமையும், நிர்வாகத் திறமையும், ஆங்கில மொழிப் புலமையும் கொண்ட றொசான் அவர்கள், தமிழர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் தமக்குத் தேவை என்று பணிவுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திரு. றொசான் நல்லரட்ணம் அவர்கள் கலந்துகொண்ட பிரச்சார நிகழ்வுகள் சிலவற்றின் படங்களையும், பல முக்கிய பிரமுகர்களும் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டு ஆதரவு வழங்கும் படங்களையும் இங்கே காணலாம்.

 

Roshan-nmallaradnam-190815-seithy%20%281

 

 

Roshan-nmallaradnam-190815-seithy%20%282

 

 

Roshan-nmallaradnam-190815-seithy%20%283

 

 

Roshan-nmallaradnam-190815-seithy%20%284

 

 

Roshan-nmallaradnam-190815-seithy%20%285

 

 

Roshan-nmallaradnam-190815-seithy%20%286

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.