Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலரம்மா கண்ணீர் சிந்துவது ஏன்? குளோபல் தமிழ் செய்திகளுக்காக அன்பழகன்

Featured Replies

மலரம்மா கண்ணீர் சிந்துவது ஏன்? குளோபல் தமிழ் செய்திகளுக்காக அன்பழகன்:-

2009 இனப்படுகொலை யுத்தத்தில் மிகவும் கோரமாக அழிக்கப்பட்ட புதுக்குடியிருப்பு நகரம் உயிர் பெற்றுக் கொண்டிருந்தாலும் இன்னமும் அதன் முகத்திலிருந்து பேரழிவின் காயங்கள் மாறவில்லை. ஆங்காங்கே குண்டுகள் சல்லடையாக துளைத்த வீடுகளும் கடைகளும் கொடும் யுத்தத்தின் சாட்சிகள் போல நிற்கின்றன. 

ஆனாலும் பேரழிவிலிருந்து அந்த நகரம் மீண்டது என்ற அல்லது மீண்டு வருகிறது என்று சொல்லத் தக்க வகையில் புதுக்குடியிருப்பு நகரம் மெல்ல மெல்ல உயிர்த்தெழுந்து வருகிறது. புதுக்குடியிருப்பிலிருந்து கேப்பாபுலவுக்கு செல்லும் வழி ஆரம்பித்ததும் நகரத்திலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் இருக்கிறது மலரம்மாவின் வீடு.

வீடு என்று சொல்ல முடியாது. மீள்குடியேற்றத்தின் தொடக்கத்தில் கட்டப்பட்ட கூடாரம். அது உக்கி உடைந்து கலாவதியாகி பொத்திப் பொத்தி வேயப்பட்டு காட்சி அளிக்கின்றது. அந்த வீடு யுத்த்தினால் அவர்கள் அடைந்த கதியை தெளிவாகச் சொல்கிறது. மலரம்மாவின் கண்ணீர் கோலத்தை அந்தக் கூடாரம் தெளிவாகச் சொல்கிறது. 

யாரோ ஒரு வீட்டைத் தேடிச் சென்றபோது மலரம்மா எங்களை மறித்து தன் கதையை கூறினாள். 64 வயதான மலரம்மாவுக்கு மூன்று பிள்ளைகள். கணவர் முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் காயப்பட்டு கொல்லப்பட்டு விட்டார். மலரம்மா தன் துணையை இழந்து பெரும் தனிமைக்குள்ளும் சோகத்திலும் தள்ளப்பட்டார்.

மலரம்மா தன் கணவனை மாத்திரம் இழக்கவில்லை. யுத்தத்தில் காயப்பட்டு தன் கால் ஒன்றையும் இழந்தாள். 

யுத்தம் முடிந்து பெரும் இழப்புக்களை சந்தித்த பின்னரும் வாழத்தான் வேண்டும் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் புதுக்குடியிருப்புக்குத் திரும்பிய மலரம்மாவுக்கு சோதனை வந்தது. துயரம் வந்தது. அவள் வசித்து வந்த காணி பிணக்கிற்குள்ளானது. அதை சிலர் உரிமை கோரி பிரச்சினையை ஏற்படுத்தினர். 

தனது நிலத்திற்காக அவள் செல்லாத இடங்களில்லை. யுத்தத்தில் காணி ஆதாரங்கள் அழிந்துவிட்டன. அதிகாரத் தரப்பில் இருப்பவர்களும் மலரம்மாவின் காணியை சுருட்டிக் கொள்ள முயற்சிக்கின்றனர். அதனால் அவளின் காணியை அபகரிக்க நினைப்பவர்களுக்கு அதிகாரிகள் துணைபோகின்றனர் என்று மலரம்மா குற்றம் சுமத்துகிறார். 

தன் காணிக்கான போராட்டத்தில் தான் வெற்றே தீருவேன் என்று சொல்கிறாள் மலரம்மா. தீராத கண்ணீருடன் பேசும் இந்த தாயார் தனது தாயார் அண்மையில் காலம் ஆகியபோது தாங்கள் வசிக்கும் கூடாரத்திற்குள் பட்ட அல்லல்களை சொல்லியும் அழுதாள். 

மழை. வெயில், புழுதி எதையும் தாங்காத அந்தக் கூடாரத்திற்குள் இன்னும் எத்தனை காலம் அவள் வாழ வேண்டும்? தனது காணியில் ஒரு நிரந்தர வீடு அமைக்க வேண்டும் தனக்கு வீட்டுத்திட்டம் வழங்க வேண்டும் என்பதே அவளது கோரிக்கை. காணிப் பிணக்கை காரணம் காட்டி அவள் கூடாரத்திற்குள் கடந்த ஆறு வருடங்களாக தள்ளப்பட்டாள்.

முள்ளிவாய்க்கால் நோக்கி 2009இல் அலையத் தொடங்கிய வாழ்க்கை, தொடர்ந்து இன்றுவரை அவள்கூடாரங்களில் ஒரு அகதியைப் போல அனர்த்த காலத்தில் வாழ்வதுபோல வசிக்கிறாள். யுத்தம் முடிந்துவிட்டது எல்லோரும் எல்லாமும் பெற்றுவிட்டனர் என்று அரசு சொல்கிறது. 

ஆனால் நிலங்களுக்கான இவ்வாறான விளையாட்டுக்களால் எத்தனை குடும்பம் கண்ணீரோடு அலைகின்றன. நிம்மதியிழந்து அழுத்தத்தில் அவதியுறுகின்றன. அரசும் அதன் அதிகாரிகளும்  இந்த மக்களின் கண்ணீரை துடைக்க வேண்டும். கிராமத்திற்கு கிராமம் உள்ள மலரம்மாக்களின் துயரை நீக்க வேண்டும். 

மலரம்மா தனியொருத்தியாகவே தன் நிலத்திற்காக போராடுகிறாள். 

மலரம்மா கண்ணீர் சிந்துவது ஏன்? இந்தக் கேள்வி மிகவும் முக்கியமானது. இன அழிப்பு போருக்கு முகம் கொடுத்த, நிலஆக்கிரமிப்புக்களால் பெரும் ஆபத்துக்களை சந்திக்கும் ஒரு இனம் நாங்கள். அந்தப் போரில் கணவனை இழந்து காலை இழந்த ஒருத்தியின் நிலத்தை பறிப்பதும் அதற்கு துணைசெய்வதும் யார்? 

சம்பந்தப்பட்டவர்கள் நன்கு சிந்திக்க வேண்டும்!

அரசுகளும் அரசியல்வாதிகளும் மாத்திரம் நிலங்களை அபகரிப்பதில்லை. அதிகாரத்துக்கு நெருக்கமானவர்களும் ஆதிக்க மனநிலை கொண்டவர்களும் எளிய சனங்களின் நிலங்களை சுவீகரிப்பதுண்டு. வன்னியில் போருக்குப் பின்னர் இப்படி எத்தனையோ காணிப் பிணக்குகள் சனங்களை அலைக்கின்றன. இப்படி எத்தனையோ மலரம்மாக்கள் கண்ணீர் சிந்துகின்றனர். 

குளோபல் தமிழ் செய்திகளுக்காக அன்பழகன்

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/123443/language/ta-IN/article.aspx

 

  • கருத்துக்கள உறவுகள்

இதைப்படித்தபோது எனது அம்மா தனது நிலத்துக்காக  பல இடங்களுக்கு அலைந்தது களைத்ததை நினைவுபடுத்துகிறது..................... 

 

எங்கள் வளவினைப்பூட்டிய அரசபடை, அதனை இராணுவத்தின் சொத்து என உரிமை கொண்டாடியது. பலத்த போராட்டம் மற்றும் இழுபறியின் பின்னரே பெறமுடிந்தது.

மலரம்மாக்கள் போராடுகின்றார்கள்................. ஆனால்  அரசியலாளர்கள்... அறிவாளர்கள்...  சுயநல அரசியல் பேசும் கூட்டமென ..................  தம்மை வளர்க்கிறது.

மலரம்மாக்களின் துயரையார் தீர்ப்பார்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.