Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரும்பகை தாங்கும் வேல்!

18.08.2015

                பெரும் பகை தாங்கும் வேலினானும்

அரும் பகை தாங்கும் ஆற்றலானும் – (தொல்காப்பியம்-1021:7-8)

            தமிழர்களின் முன்னோர் பயன்படுத்திய போர்க் கருவிகளுள் முதன்மையானதாக வேல் போற்றப்படுகிறது. வேல் என்றாலும் எஃகம் என்றாலும் ஒரே பொருள் தோற்றும் இலக்கியப் பதிவுகள், வேலின் வடிவத்தையும், பயன்பாட்டையும், பயன்படுத்திய வீரர்களையும் பற்றி வியந்து வியந்து விளக்கியிருக்கின்றன. அத்தகைய வேலின் வடிவத்தைத் தமிழ் இனத்தாரின் மூளைப்பதிவில் இருந்து அகற்றியது யார்? எப்படி இது நடந்தது என்பது ஆய்வுக்குரியது. வேல், தமிழர்களின் தொல்குடி அடையாளம். அதனை மீட்பது தமிழர்களின் கடமை.

          கருங்கடை, மரக்காழ், பலகை, திண்பிணி, சுரை, வடிமணி, இலை, கதுவாய், நுதி, நீறு, புலியுறை, தாலி ஆகிய இந்தப் பன்னிரெண்டு சொற்களும் வேலின் உறுப்புகளைக் குறிப்பதும், அது தொடர்புடைய அடையாளங்களைக் குறிப்பதும் ஆகும்.

          ஆளுயரத்தில் வீரர்கள் பயன்படுத்திய வேல் உறுதியான மரக் கம்பினையே கொண்டுள்ளது. அதன் கீழ்ப் பகுதியில் இரும்பினால் ஆன பூண் இருக்கும். அது கருங்கடை எனப்படுகிறது. ஒவ்வொரு வீரனின் உயரத்திற்கும் ஏற்ப அவனது மேற்கழுத்து வரையிலான கம்பின் உச்சியில் மரம், செம்பு, பித்தளை, இரும்பு அல்லது தங்கத்தினால் ஆன சதுரப்பலகை பொருத்தப்பட்டிருக்கும். அந்தப் பலகைச் சதுரத்தின் அகலம் ஒரு சாண். சதுரப் பலகையின் மேற்புற நடுவில் ஒரு துளை இடப்பட்டு அதில் சுரை இடப்பட்டிருக்கும். பலகையின் கீழ்ப்புறம் தாமரையின் மடல் போன்றும் சிறிய கட்டுப்பகுதியில் குடம் போன்றும் அக்குடத்தின் கீழ் தாழி என்ற பகுதியும் தூண்களில் உள்ளது போன்று கடைசல் செய்து வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருக்கும். அந்தத் தொங்கல் ஒரு குழாய் போல வார்க்கப்பட்டு அதில்தான் வேல்கம்பின் நுனிப்பகுதி நன்கு செருகிப் பொருத்தப்பட்டிருக்கும். அது திண்பிணி எனப்படுகிறது. ஒரு வீரன் ஒரே கம்பில் வேறு வேறு வடிவம் மற்றும் எடையுள்ள பலகைகளைத் தேவைக் கேற்ப மாற்றி மாற்றிப் பொருத்திப் பயன்படுத்தியிருக்கிறான் என்று தெரிகிறது. ஆனால் பலகையின் சதுர வடிவத்தை மட்டும் என்றுமே மாற்றியது இல்லை. பலகைகளின் நான்கு மூலைகளிலும் சிறிய மணிகள் தொங்கவிடப் பட்டிருந்தன. அவை வடிமணி என அழைக்கப் பெற்றன.

          இப்போது கருங்கடை, மரக்காழ் என்ற உறுதியான தண்டு அதன் நுனியில் பலகை பொருத்தப்பட்டுவிட்டது. இனிமேல் கொல்லன் அடிக்கடி திருத்திக் கொடுத்த இரு புறமும் கூர்மையான அரம் கொண்டு உரசப்பட்ட இலை போன்ற கொலை வேல் பாதுகாப்பான புலி உறையில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டு, அந்த இலையின் கீழ் உள்ள புரியிடப்பட்ட காம்பு, பலகையின் சுரைத்துளைக்குள் திருகிச் செருகப்பட்டு வேல் முழு வடிவம் பெறுகிறது. பலகை பொருத்தப்பட்ட வேல் மட்டுமே பயன்பாட்டுக்கு வருகிறது. பலகையானது மடை என்ற சொல்லாலும் குறிப்பிடப்படுகிறது. வேலின் இலைப் பகுதியின் கூர்மையான இருபகுதிகளும் கதுவாய் என்று அழைக்கப்படுகின்றன. அதன் மேற்புற நுனியும் அதன் கூரிய வடிவமும் நகத்தின் கூர்மை போன்று உள்ளமையால் நுதி என்று அழைக்கப்படுகிறது. வேல் ஒளி பொருந்தியதாகவும் இருபுறமும் திருநீறு பூசப்பட்டும், வேப்பிலை போன்ற அடையாளங்கள் பொருந்தியும் இருந்ததை அறிய முடிகிறது. வேலின் பலகையின் கீழான கழுத்துப் பகுதியில் தாலிக் கட்டாக ஒரு கயிறு கட்டப் பெற்று, அந்தக் கயிற்றின் எச்சம் கொசுவமாக மடிக்கப்பட்டு வீரனின் இடுப்பில் செருகப்பட்டிருக்கும் என்று தெரிகிறது. வேலை எடுத்தெறிந்தவுடன் மீண்டும் எடுத்துப் பயன்படுத்த அக்கயிறு பயன்பட்டிருக்கும் என்று தெரிகிறது. கடலிலும், காட்டிலும், போரிலும் ஒற்றை வேலைப் பயன்படுத்தும் வீரனுக்குக் கயிறும் கட்டாயம் தேவைப்பட்டிருக்கும் என்று தெரிகிறது. இவையெல்லாம் வேல் பற்றிய இலக்கிய வியப்பான பதிவுகளில் இருந்து சான்றுகளோடு மீட்கப்பட்ட செய்திகள்

          வேல்வடித்துக் கொடுத்தல்

        கொல்லற்குக் கடனே (புறம்-312-3)

          மீண்டும் தமிழ் மரபுக் கொல்லன் காசு வாங்காமல் வேல் வடிக்கத் தொடங்கினால் தற்போது அறியப்பட்டிருக்கும் தோசைக் கரண்டி காணாமல் போகும் என்று நம்பலாம்.

          தமிழ் மரபின் முருகனை இழந்தோம். முருகன் கைவேலின் பலகையைப் பறிகொடுத்தோம். முருகனின் மூத்த தளபதிகளான அவுணர்களைக் காப்பாற்றாமல் விட்டோம். அவுணர்களுக்கும், முருகனுக்கும் துணையாக வந்த அணங்குகள் பற்றி அறியாமல் இருந்தோம்.

          சமண, பவுத்த, ஆரியத் தொடர் திருடர்கள் வேலின் பலகை மீதும், அவுணர்கள் மீதும் கடும் தாக்குதல் தொடுத்து வசை புராணம் பாடியே எற்றிப் பிழைத்தனர். பிழைத்தும் வருகின்றனர்.

          வேலின் வடிவத்தை மீட்டு எடுத்து அதற்குப் பலகை பொருத்தும் முயற்சியில் தமிழர் யாரும் ஈடுபடலாம். தமிழர் அல்லாதார் முயற்சி செய்ய மாட்டார்கள். முயன்றால் அதுவும் தமிழர்களுக்குத்தான் பயன் தரும்.

          இந்த வேலின் பலகையைப் பற்றிப் ‘ஃபலகாலஷணம்’ என்று எழுதப் பெற்றுள்ள வடமொழிப் பதிவுகள், பழந்தமிழ்ப் பதிவுகள் உட்பட அனைத்துச்  சான்றுகளையும் பட்டியலிட்டு நாட்டுப் புறக் கோயில்களின் வேல் வடிவங்களையும் கணக்கில் கொண்டு ஆரியப் பார்ப்பனர் வேலுக்குச் செய்த அழிம்புகளையும் மனதில் பதித்துச் சிறு வெளியீடாக ஒரு கட்டுரைத் தொகுப்பினை வெளியிட மரபு வழித் தமிழ் தேசியத் தக்கார் அவையம் முயற்சி செய்து வருகிறது. அது பற்றிய முதல் நிலை அறிமுகமே இந்தச் செய்தி. வேல் மீட்பில் ஆர்வம் உள்ள யாரும் பங்களிப்புச் செய்யலாம்.

          இனி உருப்பெறும் இந்த வேல் அடுத்து ஊன்றும் தமிழ்த் தலைமுறைக்கு ஆனது என்பதனை நன்கு மனம் கொள்ள வேண்டும்.

(இது மரபு வழித் தமிழ்த் தேசிய தக்கார் அவைய வெளியீடு 2015)

___...>>>()<<<...___

          தமிழ்ப் புத்தாண்டு மீட்பு, தொழூஉப்புகுத்தல் மீட்பு, வேல் வடிவம் மீட்பு ஆகிய இம் மூன்று முயற்சிகளிலும் சில அடிப்படைத் தரவுகளைத் தமிழ் இனச் சுற்றுக்கு விடுவதில் மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம் 2015 தனது பங்களிப்பைத் திட்டமிட்டபடிச் செய்யும்.

 

 ‘பெரும்பகை தாங்கிய வேல்’ என்ற கட்டுரை நூல் தமிழர்களின் பங்களிப்புடன் வெளியிட விரும்புகிறோம். பங்களிப்புச் செய்ய விரும்புவோர் 30-செப்டம்பர்-2015-க்குள் கட்டுரைகளை thakkar.avaiyam@gmail.com என்ற இமெயிலுக்கு அனுப்பவும். 

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி நன்பரே...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.