Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடல் ரோந்து: இலங்கைக்கு இந்தியா ஒத்துழைப்பு

Featured Replies

டெல்லி: ரோந்துப் பணியில் இலங்கை கடற்படையுடன் ஒருங்கிணைந்து இந்திய கடற்படை செயல்படும் என கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தா கூறியுள்ளார்.

இலங்கையும், இந்தியாவும் இணைந்து பாக் ஜலசந்திப் பகுதியில் கூட்டு ரோந்து மேற்கொள்ள இலங்கை அதிபர் ராஜபக்ஷே விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் இக்கோரிக்கையை இந்தியா ஏற்க மறுத்து விட்டது. தமிழக அரசியல் கட்சிகளின் கடும் நெருக்கடி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால் ரோந்துப் பணியில் இலங்கை கடற்படையுன் இந்திய கடற்படை ஒருங்கிணைந்து செயல்படும் என கடற்படை தலைமைத் தளபதி சுரேஷ் மேத்தா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை விவகாரத்தில் தலையிட இந்திய கடற்படைக்கு எந்த அதிகார¬ம் இல்லை. அமைதிப் பணியில் கடற்படை தனது வரம்புக்கு உட்பட்டு உதவிகளைச் செய்யும்.

இலங்கையில் போர் வெடித்தால் அங்கிருந்து அதிக அளவில் அகதிகள் வருவார்கள். அந்த நிலையை சமாளிக்க இந்தியக் கடற்படை தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அகதிகள் வருகையின்போது விடுதலைப் புலிகள் ஊடுறுவி விடக் கூடாது என்ற கவலை கடற்படைக்கு உள்ளது. அதைக் கண்காணிக்க இலங்கை கடற்படையுடன் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இரு தரப்பும் தங்களது தரப்பிற்குக் கிடைக்கம் தகவல்களை பரிமாறிக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்றார் மேத்தா.

மேத்தா கூறுவதும் கிட்டத்தட்ட இணைந்து கண்காணிப்பது என்ற அர்த்தத்தில்தான் வருகிறது. எனவே மறைமுகமாக கூட்டு ரோந்து மற்றும் கண்காணிப்புக்கு மத்திய அரசு திட்டமிடுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்திய கடல் பகுதியை வளைக்கும் சீனா:

முன்னதாக கடற்படை தினத்தையொட்டி நடந்த நிகழ்சியில் சுரேஷ் மேத்தா பேசுகையில், தனது அண்டை நாடுகளின் உதவியுடன் இந்திய கடல் பகுதியில் ஒரு மறைமுக போர்க்களத்தை உருவாக்கி வருகிறது சீனா. எதிர்காலத்தில் இது நமது நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சீனாவின் அண்டை நாடுகளான மியான்மர் போன்றவை இன்று நம்முடன் நட்புறவாக உள்ளன. ஆனால் இன்னும் 20 ஆண்டுகள் கழித்து இவை எதிரிகளாக மாறக் கூடிய வாய்ப்புகளை நாம் புறந்தள்ளி விட முடியாது.

மியான்மருடன் நீண்ட காலமாகவே நல்ல தொடர்புகளை ஏற்படுத்தி வைத்துள்ளது சீனா. அதேபோல இலங்கையுடனும் சீனா நட்புறவை ஏற்படுத்தி வருகிறது. பாகிஸ்தானுடன் ஏற்கனவே நெருங்கிய உறவு உள்ளது. ஆப்பிரிக்க கடலோரப் பகுதிகளில் உள்ள நாடுகளோடும் நல்லுறவை ஏற்படுத்தி வருகிது சீனா.

இவற்றை பயன்படுத்தி இந்திய கடல் எல்லையைச் சுற்றிலும் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த ஆரம்பித்துள்ளது. இது மறைமுக போர்க்களமே ஆகும். இந்த நாடுகளின் கடலோர அடிப்படைக் கட்டமைப்புத் திட்டப் பணிகளில் சீன நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் பல முக்கிய விஷயங்கள் சீனாவுக்கு போகும் வாய்ப்புகள் உள்ளன.

நமது கடல் பகுதியில் சீன நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துவதையும், சுதந்திரமாக செயல்படுவதையும் நாம் தடுக்க வேண்டும். அவற்றை அனுமதிக்கக் கூடாது. சீன நாட்டின் பல்வேறு தயாரிப்புகள் இந்திய கடல் பாதை வழியாகத்தான் செல்கின்றன. இதனால் நமது பொருளாதாரத்திற்கும் பாதிப்புகள் ஏற்படக் கூடும்.

வங்கதேசத்திற்கு பாகிஸ்தான் நீர்மூழ்கிக் கப்பல்களை அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது வங்கக் கடலில் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே முக்கிய நிலைகளில் நமது கடற்படை நீர்மூழ்கிக் கப்பல்களை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் சுரேஷ் மேத்தா.

http://thatstamil.oneindia.in/news/2006/12/03/india.html

இவ்விடயத்தில் இந்தியா மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தடுமாறுவதையே இது எடுத்துக் காட்டுகிறது. இலங்கைப் பிரச்சனையில் எந்தத் தீரமானத்தை எடுத்தாலும் அது ஏதோ ஒரு வகையில் இந்தியாவிக்குப் பாதகத்தை ஏற்படுத்தும் என இந்திய வெளிவிவகாரங்களைக் கையாளுபவர்கள் கருதுவதில் தவnhறன்றும் இல்லை.

ஆனால், இப்பொழுது இந்தியாவிற்குள்ள ஒரேயொரு வழி அனைத்து அணுகுமுறைகளிலும் ஆகக் குறைந்த தீமையளிக்கக்கூடிய தீர்வைக் கண்டடைவதுதான்.

இவ்வகையில் பார்த்தால் தமிழர்களின் சுயநிரணய உரிமையை அங்கீகரிப்பதும் அதன்படியான தீர்வுத் திட்டத்திற்க வழிசமைத்துக் கொடுப்பதுமே இந்தியாவிற்குள்ள சாத்தியப்பாடு.

சுயநிர்ணய உரிமையை அங்கீகாரம் செய்வதன் மூலம் தமிழீழத்தை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு இந்நதியா தான் தள்ளப்படுவதை விரும்பாதென்பது வெளிப்படையான உண்மை.

அப்படியானால் இந்தியாவிற்குள்ள வழி வடக்குக் கிழக்கு இணைந்த ஓரு தழிழர் பிரதேசத்தின் மீதான சுயாட்சியை பெற்றுத்தருவதற்கான வழிசமைப்பது.

வெறும் சுயாட்சியை தமிழர் தரப்போ அல்லது விடுதலைப் புலிகளோ ஏற்றுக் கொள்ளாது விடுவதற்கான காரணம் ஏராளம் இருக்கின்றது. இத்தனை பலமான ஒரு இராணுவத்தைக் கொண்டுள்ள விடுதலைப்புலிகள், இத்தனை ஆயிரம் போராளிகளையும் பொதுமக்களையும பலி கொடுத்த விடுதலைப் புலிகள் அரைகுறைத் தீர்வுகளுக்கு ஆதரவளிப்பார்கள்; என எண்ணுவது முட்டாள்தனம்.

அதுமட்டுமன்றி, ஒருங்கிணைத்த இலங்கைக்குள்ளான ஒரு தீர்வு திணிக்கப்படும் பட்சத்தில் ஒரு நாட்டில் இரண்டு இராணுவங்கள் இருக்க முடியாது. அப்படியானால் சிறுபான்மை மக்களின் இராணுமாகிய விடுதலைப் புலிகளின் இராணும் என்னாகும் ? வெறும் பொலிஸ் படையாக மாற்றப்படுமா ?

நகைப்பிற்குரிய விடயம். விடுதலைப்புலிகள் இத்தனை தியாகங்களின் பின்னர் பெற்றுக்கொண்ட கனரக ஆயுதங்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பதோ அன்றில் அழிப்பதோ நடக்கக்கூடிய காரியமா ?

மடிந்தோருக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை மீறி விடுதலைப் புலிகள் தமிழீழம் தவிர்ந்த ஒரு மாற்றுத் தீர்வை ஏற்றுக் கொள்ளும் உளவியல் சாத்தியக்கூறுகள் உள்ளனவா ?

இந்தியாவை மிறி தமிழீழம் உருவாகுவது சாத்தியமானதா ?

இந்தியாவிற்கெதிராக, இந்தியாவை மீறி, இந்தியா தவிர்ந்த இன்னொரு பிரதேச சக்தியான சீனாவின் ஆதரவுடன் தனியான ஒரு அரசை இலங்கையில் தமிழர்களுக்கு அமைக்கமுடியுமா ?

தமிழ் நாட்டுத் தமிழர்களுடன் இது ஒரு நிரந்தரப் பகை நிலையை உருவாக்காதா ?

எந்தப் பக்கத்தால் கேள்விகளை அடுக்கிக் கொண்டு போனாலும் ஒவ்வொரு பதிலும் இன்னொரு கேள்வியின் பதிலுடன் மோதிக்; கொள்வதைப் பார்க்கிறோம் அல்லவா.

இதுதான் இன்றைய நிலை.

சிங்கள அரசாங்கமாக இருந்தாலென்ன, இந்திய நிலைப்பாடாக இருந்தாலென்ன, அனைத்துத் தமிழர்களின் ஆவலையும் மீறி விடுதலைப் புலிகள் சாத்வீகமாக இருப்பதற்கான காரங்களாக இருந்தாலென்ன எல்லாமே இதற்குள்தான் விளக்கம் பெறுகின்றன.

மொத்தத்தில் இலங்கை இனப்பிரச்சனை இன்னும் பல ஆண்டுகளுக்கு இழுபடும் சாத்தியக்கூறுகள்தான் தென்படுகிறது எனக்கூறினால் அதில் தவறுண்டா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருகோணமலை வேணும் என்டா இதெல்லாம் செய்து தானே ஆகனும்.

"(சீனா) இவற்றை பயன்படுத்தி இந்திய கடல் எல்லையைச் சுற்றிலும் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த ஆரம்பித்துள்ளது. இது மறைமுக போர்க்களமே ஆகும். இந்த நாடுகளின் கடலோர அடிப்படைக் கட்டமைப்புத் திட்டப் பணிகளில் சீன நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் பல முக்கிய விஷயங்கள் சீனாவுக்கு போகும் வாய்ப்புகள் உள்ளன"

அப்பாடியாயின் பலகாலமாகவே ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருக்கும் செய்திகளும் இந்தியாவின் எண்ணத்தை வேறுவிதமாகப் பிரதிபலிப்பதாகத்தான் இருக்கிறது.

இந்தியாவின் உதவியுடன் திருமலையில் அனல்மின்சார நிலையமொன்றை அமைக்கும் திட்டம் பற்றி அண்மையில் வெளிவந்த செய்தியும் இந்தியாவின் இலங்கைப்பிரச்சினை பற்றிய ஈடுபாட்டின் உள்நோக்கத்தைக் காட்டுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெருப்பில்லாமல் புகையுமா? :huh::huh: சோலியன் குடுமி சும்மா ஆடுமா? :lol::( ஒவ்வொரு நாட்டவனும் தனக்கு என்ன கிடைக்கும் என்றுதான் பாப்பான் :(:( எங்களுக்கு என்ன வேண்டுமென்று நாங்கள்தான் தீர்மானிக்கவேண்டும். ;) ;) ;)

  • தொடங்கியவர்

இலங்கைக் கடற்படையுடன் கூட்டு ரோந்து இல்லை; ஒருங்கிணைப்பு உண்டு: கடற்படைத் தளபதி

புதுதில்லி, டிச. 4: இலங்கை கடற்படையுடன் சேர்ந்து கூட்டு ரோந்து நடத்தும் திட்டம் ஏதும் இல்லை; அதே நேரத்தில் அவரவர் பகுதிகளில் இரு படைகளும் ஒருங்கிணைந்து செயல்படும் என இந்திய கடற்படைத் தளபதி சுரேஷ் மேத்தா சனிக்கிழமை தெரிவித்தார்.

இந்தியக் கடற்படை தினம் தில்லியில் சனிக்கிழமை நடந்தது. அப்போது இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

இலங்கையின் இறையாண்மையில் இந்தியா தலையிடாது; எனினும் அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றி பெறுவதற்கு இந்தியா உதவி செய்யும்.

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வரும் அகதிகள் பிரச்சினையைச் சமாளிப்பதற்குத் தேவையான முன்னேற்பாடுகளை இந்தியக் கடற்படை எடுத்து வருகிறது.

நாம் அகதிகள் பிரச்சினையில் கவனம் செலுத்தி வரும் அதே வேளையில், விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கிடைத்துவிடக்கூடாது என்பதில் இலங்கை ராணுவம் அதிகக் கவனம் செலுத்தி வருகிறது.

இப்பிரச்சினைகளைத் முறையாகக் கையாளும் பொருட்டு, இருநாட்டு கடற்படைகளும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றன. இதன்படி, இருநாடுகளின் கடற்கரைப் பகுதிகளிலும் நடக்கும் பிரச்சினைகள் பற்றிய தகவல்களை இருதரப்பும் பகிர்ந்து கொள்ளும் என்றார் சுரேஷ் மேத்தா

http://www.dinamani.com/NewsItems.asp?ID=D...7Ls&Topic=0

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.