Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரெயில் மீது பாலம் இடிந்து விழுந்து விபத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பீகாரில் ஓடும் ரெயில் மீது பாலம் இடிந்து விழுந்து விபத்து: 47 பேர் பலி

பகல்பூர், டிச.3-:ஓடும் ரெயில் மீது மேம்பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், 37 பயணிகள் உடல் நசுங்கி பலியானார்கள். 55 பேர் படுகாயம் அடைந்தனர்.

பீகார் மாநிலம் பகல்பூர் ரெயில் நிலையத்தில், நேற்று காலை இந்த கோர விபத்து நடந்துள்ளது.

கிழக்கு ரெயில்வே பிரிவில் அமைந்துள்ள அந்த ரெயில் நிலையத்தின் நடைபாதை மேம்பாலம், பழுதடைந்து இருந்தது. 140 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்த பாலம், படிப்படியாக இடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதி இடிக்கப்படாமல் இருந்தது.

அதிவேக ரெயில்கள் அந்த வழியாக சென்று வந்ததால், அதிர்வு காரணமாக அது இடிந்து விழும் நிலையில் இருந்திருக்கிறது. இந்த நிலையில், மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில் இருந்து ஜமால்பூர் செல்லும் அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை பகல்பூர் ரெயில் நிலையத்தை நெருங்கியது.

பாலத்தின் அருகே ரெயில் சென்றபோது, அந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. காலை 7.50 மணி அளவில் நடந்த இந்த விபத்தில், தூங்கும் வசதி கொண்ட `எஸ். 8'-ம் நம்பர் பெட்டி தடம் புரண்டு இடிபாடுகளில் சிக்கி நொறுங்கியது. அதை அடுத்துள்ள பெட்டியின் ஒரு பகுதியும் சேதம் அடைந்தது. இடிபாடுகளில் சிக்கி தவித்த பயணிகள் கூக்குரல் எழுப்பினார்கள். உடனடியாக, ரெயில் நிலையத்தில் இருந்த மற்ற பயணிகள் விரைந்து சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

03trainsm0.jpg

தகவல் அறிந்ததும், போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த கோர விபத்தில், 47 பயணிகள் உடல் நசுங்கி இறந்தனர்.

இறந்தவர்களில், 40 பேர் இடிபாடுகளுக்குள் பிணமாக கிடந்தனர். காயம் அடைந்து மருத்துவ மனைகளில் இறந்தவர்கள் 7 பேர். மேலும் இந்த விபத்தில் 45 பேர் காயம் அடைந்து, அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

விபத்து காரணமாக, அந்த பாதையில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. பாலம் இடிந்து விழுந்தது பற்றி விசாரணை நடத்தும்படி, ரெயில்வே பாதுகாப்பு ஆணையாளருக்கு மந்திரி லல்லுபிரசாத் யாதவ் உத்தரவிட்டார்.

விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவியும், குடும்பத்தில் தகுதியான ஒருவருக்கு ரெயில்வே துறையில் வேலையும் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். பணியில் கவனக்குறைவாக இருந்ததாக, கிழக்கு ரெயில்வேயின் தலைமை துணை என்ஜினீயர் உள்பட 2 என்ஜினீயர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். பாலத்தை இடிக்கும் பணியை மேற்கொண்டு வரும் ஒப்பந்தக்காரர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

http://www.vikatan.com/

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் போக்குவரத்து விதிகளும் நடைமுறைகளும்..கட்டுமானங்களின

மனுசனை மனுசனாக மதிக்க ஒவ்வொருவரும் தலைப்பட்டால் இவ்வாறான சம்பவங்கள் நடக்காது இப்படி காசை அடிச்சுக்கொண்டு பாலமும் கட்டமாட்டார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப அடுத்ததா இதைப்பற்றி ஒரு படம் எடுப்பாங்கள். அதில வடிவா பாக்கலாம் என்ன நடந்த என்டு.

அப்ப அடுத்ததா இதைப்பற்றி ஒரு படம் எடுப்பாங்கள். அதில வடிவா பாக்கலாம் என்ன நடந்த என்டு.
:lol::(:huh::huh: :P
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அடுத்ததா இதைப்பற்றி ஒரு படம் எடுப்பாங்கள். அதில வடிவா பாக்கலாம் என்ன நடந்த என்டு.

வடிவேலு சாருக்கு கலியாணம் எண்டு கேள்விபட்டேன்

உதுக்குள்ள நிண்டுகொண்டு படம் எடுத்து பாலம் கட்டுறதுல ஆராய்ச்சி நடக்குது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரப்பா அது இந்த புரளிய கிழப்பி விட்டது. நான் சந்தோசம இருக்கிறது பிடிக்கவில்லையா.

கடையில பால் விற்க நான் ஏன் மாட்டை வாங்கனும் :-)

பெண்கள் கோவிக்கிறது விளங்குது. என்னுடைய நண்பன் ஒருவன் எனக்கு இப்படி சொன்னான்.

வடிவேலு நண்பன் என்று ஏன்பிளேட்டை மாத்துறீங்க? :huh: :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா அது இந்த புரளிய கிழப்பி விட்டது. நான் சந்தோசம இருக்கிறது பிடிக்கவில்லையா.

கடையில பால் விற்க நான் ஏன் மாட்டை வாங்கனும் :-)

பெண்கள் கோவிக்கிறது விளங்குது. என்னுடைய நண்பன் ஒருவன் எனக்கு இப்படி சொன்னான்.

வடிவேலு சார் இதென்ன லொள்ளா நண்பன் சரியா லொள்ளுபேர்வழி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடையில பால் விற்க நான் ஏன் மாட்டை வாங்கனும் :-)

:huh::huh::lol: :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.