Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிகளவில் இளைஞர்கள் மனித உரிமைகள் ஆணையத்தில் சரண்

Featured Replies

புதன் 06-12-2006 07:44 மணி தமிழீழம் (சிறீதரன்)

யாழ்பாணத்தில் அண்மைக்காலத்தில் சிறீலங்கா படையினரால் அதிகரித்துவரும் மனித உரிமை மீறல்களாலும்இ இளைஞர்கள் தாம் சிறீலங்கா இராணுவத்தால் கடத்தப்பட்டு கொலைசெய்யப்படுவோம் என்ற பயம் காரணமாக மனித உரிமைகள் ஆணையத்தில் சரணடைந்து வருவதல் அதிகரித்து வருவதாக மனிதஉரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கடந்த இரு மாதத்தில் மாத்திரம் யாழ்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 30 இளைஞர்கள் இவ்வாறாக சரணடைந்துள்ளதாகவும் பின் இவர்கள் யாழ் நீதிவான் முன்னிலையில் ஆயர்படுத்தப்பட்டு அவர்களுக்கான பாதுகாப்பு யாழ் சிறையால் வழங்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடந்த திங்கட்கிழமை ஒரு இளைஞனும், செவ்வாய் கிழமை ஒரு பாடசாலை மாணவன் உட்பட இருவர் சரணடைந்ததாக அறியமுடிகிறது.

நன்றி : பதிவு.கொம்

ஈழத்திலிருந்த

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமைகள் ஆணைக் குழுவில்

சரண் அடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

குடாநாட்டில் அண்மைக்காலமாக இனந்தெரியாத ஆயுததாரிகள் மற்றும் இரவு வேளையில் வெள்ளைவானில் வருவோரின் அச்சுறுத்தல்கள் காரணமாக பலர் யாழ்.மனித உரிமை ஆணைக் குழுவில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

யாழ்.மனித உரிமை ஆணைக்குழு வட்டாரங்கள் இத்தகவலைத் தெரிவித்தன.

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் இனந்தெரியாதவர்கள் நடத்தும் கொலை கள் அதிகரித்து வருவதும் இரவுவேளை வீடுபுகுந்து இளைஞர்களை வெள்ளைவானில் வருவோர் கடத்திச்சென்று பின் காணாமற்போவதும் அண்மைக் காலங்களில் அதிகரித்து வருவது தெரிந்ததே.

இதன் காரணமாக பல இளைஞர்கள் யாழ்.மனித உரிமை ஆணைக்குழுவில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

நேற்றுவரை 32 பேர்வரை இவ்வாறு அச்சுறுத்தல் காரணமாக தஞ்சமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் உடனடியாக நீதிவானின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவரது உத்தரவின் பேரில் யாழ். சிறைச்சாலையில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டு வருகின்றனர்.

நேற்றும் ஆவரங்கால், சரசாலைப் பகுதிகளைச்சேர்ந்த இருவர் மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் சரண் அடைந்துள்ளனர்.

அவர்கள் யாழ்.நீதிவானின் உத்தரவின் பேரில் யாழ்.சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.