Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆப்கன் மருத்துவமனை மீதான தாக்குதல் தவறுதலானது: அமெரிக்க ராணுவம்

Featured Replies

ஆப்கன் மருத்துவமனை மீதான தாக்குதல் தவறுதலானது: அமெரிக்க ராணுவம்

 

 
 
ஆப்கானுக்கான அமெரிக்க ராணுவ ஜெனரல் ஜோன் எப் காம்ப்பெல். | படம்: ப்ளூம்பெர்க்
ஆப்கானுக்கான அமெரிக்க ராணுவ ஜெனரல் ஜோன் எப் காம்ப்பெல். | படம்: ப்ளூம்பெர்க்

ஆப்கானிஸ்தானின் வடக்கே குண்டுஸ் மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதல், தவறுதலாக நேர்ந்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் நகரில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதல் தவறுதலாக நடந்துவிட்ட சம்பவம் என்று ஆப்கானுக்கான அமெரிக்க ஜெனரல் ஜோன் எப் காம்ப்பெல் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும்போது "நாங்கள் வேண்டுமென்றே ஒரு பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் மருத்துவமனையை இலக்கு வைத்து தாக்கமாட்டோம்" என்றும் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் நகரை தாலிபான்கள் கடந்த திங்கள்கிழமை கைப்பற்றினர். அவர்களிடம் இருந்து அந்த நகரை மீட்க நேட்டோ படையினருடன் இணைந்து ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் தீவிரமாக போரிட்டு வருகின்றனர். அப்போது கடந்த சனிக்கிழமை குண்டுஸ் மருத்துவமனையில் நடந்த தாக்குதலில் 22 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதல் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையை சேர்ந்த விமானத்தால் நடத்தப்பட்டது. இதனை அமெரிக்கா செய்திருக்கும் குற்றச் செயல் என்று ஐ.நா. கடுமையாக கண்டித்தது.

மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டபோது, அந்த மருத்துவமனையில் நோயாளிகளும் பணியாளர்களும் நிரம்பியிருந்தனர். தாக்குதலில் குறைந்தது 22 பேர் பலியானார்கள். மேலும் 37 பேர் படுகாயம் அடைந்தனர்.

http://tamil.thehindu.com/world/ஆப்கன்-மருத்துவமனை-மீதான-தாக்குதல்-தவறுதலானது-அமெரிக்க-ராணுவம்/article7734144.ece

  • கருத்துக்கள உறவுகள்

22 பேர் பலியான இந்தத் தாக்குதலுக்கு சர்வதேச கண்காணிப்புடன் போர்க்குற்ற விசாரணை நடத்தக் கோரியுள்ளது இம் மருத்துவமனையை நடத்தி வந்த Medecins San Frontieres (MSF) அமைப்பு. இதனை தணிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் பகிரங்க மன்னிப்பும் கோரியுள்ளார்.

US President Barack Obama has apologised to the president of aid agency Medecins San Frontieres (MSF) for a bombing that killed at least 22.

http://www.bbc.co.uk/news/world-us-canada-34467631

ஆனால் 40,000 தமிழர்களைக் கொன்ற இனப்படுகொலையாளர்ளை எம்மவர்கள் உள்ளகவிசாரணைக்குள் அடக்கி எம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியைக் கூட மறுத்தலித்துவிட்டார்கள். அதுவும் அதே மக்களிடம் வாக்குப் பறித்து அரசியல் செய்யும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தமிழரசுக் கட்சி முட்டாள்கள். 

MSF wants the bombing to be investigated as a war crime.

  • தொடங்கியவர்

ஆப்கன் மருத்துவமனை தாக்குதல்: மன்னிப்புக் கோரினார் ஒபாமா

 
 
 
அமெரிக்க அதிபர் ஒபாமா. |கோப்புப் படம்:ஏஎப்பி.
அமெரிக்க அதிபர் ஒபாமா. |கோப்புப் படம்:ஏஎப்பி.

ஆப்கானிஸ்தானின் வடக்கே குண்டுஸ் மருத்துவமனையில் தவறுதலாக ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா மன்னிப்புக் கோரியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் வடக்கே குண்டூஸ் நகரில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட விமான தாக்குதலில் 22 பேர் பலியானார்கள். இந்தத் தாக்குதல் அமெரிக்கா தலைமையிலான கூட்டுபடையை சேர்ந்த விமானத்தால் நடத்தப்பட்டது.

குண்டூஸ் நகரில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதல் தவறுதலாக நடந்துவிட்ட சம்பவம் என்று ஆப்கானுக்கான அமெரிக்க ஜெனரல் ஜோன் எப் காம்ப்பெல் நேற்று (புதன்கிழமை) தெரிவித்திருந்தார்.

இதற்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்தத் தாக்குதலுக்கு மன்னிப்பு கோரியுள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா.

தாக்குதல் நடத்தப்பட்ட மருத்துவமனையில் பணியாற்றி வரும் 'எல்லைகளற்ற மருத்துவர் குழு' என்ற தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் ஜோயேன் லியூவை அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

அப்போது மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு மன்னிப்பு கோரி பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, இனி இதுபோன்ற சம்வவங்கள் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

இதனை வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் ஏர்னெஸ்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் தாக்குதல் சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்த ஒபாமா உத்தரவிட்டதாகவும் அவர் கூறினார்.

ஒபாமா மன்னிப்பு கோரியதை உறுதி செய்துள்ள 'எல்லைகளற்ற மருத்துவர் குழு', 22 அப்பாவி மக்களை பலி கொண்ட தாக்குதலுக்கு மன்னிப்பு கோருவது மட்டும் நியாயமாகாது என்று குறிப்பிட்டுள்ளது.

http://tamil.thehindu.com/world/ஆப்கன்-மருத்துவமனை-தாக்குதல்-மன்னிப்புக்-கோரினார்-ஒபாமா/article7738232.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.