Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப் பிரச்சனை மத்திய அரசுக்குப் புரிகிறதா? - சோலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப் பிரச்சனை மத்திய அரசுக்குப் புரிகிறதா? - சோலை

சிங்கள இனவாதம் நரவேட்டை ஆடுவதற்கு, ஈழத்தமிழர்கள் அநாதைகள் அல்ல என்பதனை முதல்வர் கலைஞர் ஐக்கிய முன்னணித் தலைவி சோனியா காந்தியிடம் பக்குவமாக எடுத்துக்கூறி வந்திருக்கிறார். தமிழ் மக்களின் உணர்வை எங்கே எடுத்துக் கூறினால் பரிகாரம் கிடைக்குமோ, அங்கே எடுத்துக் கூறியிருக்கிறார். சோனியாவிடம் வேறு எந்தப் பிரச்னை பற்றியும் அவ்வளவு விரிவாக அவர் விவாதித்ததாகத் தெரியவில்லை!

முல்லைத்தீவு செஞ்சோலை குழந்தைகள் காப்பகம் மீது சிங்கள விமானங்கள் குண்டுகள் போட்டன. பச்சிளம் குழந்தைகள் பலியாகின. சட்டமன்றத்தில் அதற்குக் கலைஞர் கண்டனம் தெரிவித்தார். ‘விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது பற்றிச் சிந்திக்கவேண்டிய நேரம் நெருங்கிவிட்டது’ என்றார்.

தமிழக அரசிற்குத் தெரியாமலே சிங்கள போலீஸ்காரர்களுக்கு கோவையில் பயிற்சி அளிக்கப்பட்டது. அது, மைய அரசின் ஏற்பாடுதான். ஈழப் பிரச்னையில் மைய அரசு தனது நிலையை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றார்.

கோவையில் பயிற்சி பெற்ற சிங்களவர்களைப் பின்னர் பெங்களூருக்குக் கடத்திப்போய் பயிற்சி அளித்தனர். இப்போது சண்டிகரில் சிங்கள ராணுவ விமானிகளுக்கு ‘மிக்’ விமானத்திலிருந்து எப்படிக் குண்டு போடுவது என்று பயிற்சி அளிக்கின்றனர். இலங்கையின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் காக்க, சிங்களக் கடற்படைக்கு உதவும்படி மத்திய அரசு கேட்டுக்கொண்டதாக நமது கடற்படைத் தளபதி கூறுகிறார்.

ஆயுதங்களைத் தவிர, சிங்கள ராணுவத்திற்கு எல்லா உதவிகளும் செய்வோம் என்று, தற்போது டெல்லி வந்த இலங்கை அதிபர் ராஜபட்சேக்கு, மைய அரசு உறுதி அளித்திருப்பதாகக் கூறுகிறார்கள். வேதனை தரும் செய்தி. விளங்கச் சொல்வதென்றால், சிங்களச் சிப்பாய்களுக்குத் துப்பாக்கி தரமாட்டார்கள். ஈழத் தமிழனை எப்படிச் சுட்டுக்கொல்வது என்று பயிற்சி அளிப்பார்கள்.

சிங்கள விமானிகளுக்குக் குண்டுகள் தரமாட்டார்கள். ஆனால், ஈழப் பரப்பில் எப்படிக் குண்டு வீசி அப்பாவி மக்களைப் படுகொலை செய்வது என்று கற்றுத் தருவார்கள்.

சிங்கள இனவாத அரசிற்கு இந்திய ராணுவப் பிரிவுகள் அளிக்கும் பயிற்சிகள், ஈழத் தமிழ் இனத்தையே அழிக்கத்தான் பயன்படுகின்றன. இதனை முதன்முறையாகத் தம்மைச் சந்தித்த எம்.கே. நாராயணனிடமும் சிவசங்கர மேனனிடமும் கலைஞர் எடுத்துரைத்தார். ஈழப் பிரச்னையில் தமது நிலையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றார். வந்தவர்கள் பிரதமரின் தூதர்கள்.

அவர்கள் அண்மையில் மீண்டும் வந்தனர். வெளியுறவுச் செயலாளர் என்ற முறையில் மேனன் கொழும்பு சென்று சென்னை வந்தார். பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் என்ற முறையில் எம்.கே. நாராயணன் டெல்லியிலிருந்து வந்தார். இருவரும் கலைஞரைச் சந்தித்தனர்.

ஈழப் பிரச்னையில் மைய அரசின் கொள்கையில் மறு பரிசீலனை தேவை என்று ஏற்கெனவே கலைஞர் தெரிவித்த கோரிக்கை, செயலுக்கு வரவில்லை. வந்தவர்களோ, ஈழத்திற்கு அரிசி, பருப்பு அனுப்புவது பற்றி ஆலோசிக்க வந்தனர். அப்படி அனுப்பப்படுவதில் பெரும் பகுதி சிங்கள ராணுவத்திற்குத்தான் செல்கின்றன.

ஈழத்திற்கு மாநில சுயாட்சி என்ற கோணத்தில், மைய அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என்பதில் கலைஞர் தெளிவாக இருக்கிறார். ஆனால், அந்தத் திசையில் வந்தவர்கள் சிந்திக்கவில்லை.

ஈழப் பிரச்னையில் இதுவரை மைய அரசு சரியான நிலை எடுக்கவில்லை. சிங்கள இனவாத அரசிற்கு ஆதரவாகவே செயல்படுகிறது என்ற ஆழ்ந்த வருத்தம் தமிழகத்தில் குடிகொண்டிருக்கிறது.

இந்தச் சூழலில்தான் இலங்கை அதிபர் ராஜபட்சே இந்தியா வந்தார். தகிக்கும் தனது உணர்வுகளைத் தமிழகம் கொட்டிவிட்டது. ராஜபட்சேயின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல்வேறு இயக்கங்களும் பல்வேறு வடிவில் போராட்டங்கள் நடத்தின. ஈழப் பிரச்னையில் கலைஞரின் கரங்களை வலுப்படுத்தும் முறையிலேயே அந்த ஆர்ப்பாட்டங்கள் அமைந்தன.

சென்னையில் தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், சமூக ஆர்வலர்கள் திரண்டு நடத்திய உண்ணாவிரதமும் அதில் கனிமொழி கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும். ஈழப் பிரச்னையில் கலைஞர் எங்கே நிற்கிறார் என்பதனைக் கனிமொழி இங்கே தெளிவுபடுத்தியிருக்கிறார்.

கலைஞர் டெல்லி சென்றார். ஈழ மக்களுக்கு என்ன தேவை _ தமிழகத்தின் உணர்வு என்ன என்பதனை அவர் சோனியாவிடம் தெரிவித்திருக்கிறார்.

ஈழப் பிரச்னையில் அவர் தொடர்ச்சியாகக் குரல் கொடுக்கவில்லை என்று காழ்ப்புணர்ச்சியாளர்கள் கதை கட்டியதும் உண்டு. கங்கையின் அடி நீரோட்டம் கண்களுக்குத் தெரிவதில்லை. எனவே, அவர்களுக்கும் தெரியவில்லை.

ஈழத் தமிழர்களுக்கு என்ன உரிமை என்பதனைப் பேசுங்கள் என்று பிரதமரின் தூதர்களை இரண்டு முறையும் கலைஞர் கேட்டுக்கொண்டார். நோய் அறிந்து சிகிச்சை அளிக்கவேண்டும் என்றார். கோரிக்கைக்குப் பலன் கிடைத்திருக்கிறது.

ஒன்றுபட்ட இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு என்ன அதிகாரம் என்பதனை நிர்ணயம் செய்யுங்கள் என்று மத்திய அரசு இலங்கை அதிபரிடம் தெரிவித்திருக்கிறது. அடுத்த மாதமே அறிவிப்பு வரும் என்று ராஜபட்சே சொல்லியிருக்கிறார். அதற்காக, நொண்டிகள் கூடி கும்மி அடித்துக்கொண்டிருக்கிறார்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.