Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டைட்டானிக் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட பிஸ்கட் அக்.24-ல் ஏலம்: ரூ.10 லட்சத்துக்கு ஏலம் போகும் என எதிர்பார்ப்பு

Featured Replies

டைட்டானிக் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட பிஸ்கட் அக்.24-ல் ஏலம்: ரூ.10 லட்சத்துக்கு ஏலம் போகும் என எதிர்பார்ப்பு

இங்கிலாந்தில் உள்ள சவுத் தாம்டன் துறைமுகத்தில் இருந்து நியூயார்க் நகருக்கு சென்றுகொண்டிருந்த உலகின் மிகப்பெரிய கப்பலான டைட்டானிக் 1912-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி பனிப்பாறை ஒன்றில் மோதி கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த பயணிகள், கப்பல் ஊழியர்கள், கேப்டன் உட்பட 1,503 பேர் பலியாயினர்.

இந்நிலையில் கப்பலில் பயணம் செய்த முதல் வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்ட உணவுக்கான மெனு கார்டு ஒன்று, அதில் பயணம் செய்து, பின்னர் லைப் போட் மூலம் தப்பித்த ஆபிரகாம் லிங்கன் சாலமன் என்ற பயணியிடம் இருந்தது. அந்த மெனு கார்டு கடந்த வாரம் ஆல்லைன் மூலம் ஏலம் விடப்பட்டது. சுமார் ரூ.5.82 கோடிக்கு மெனுகார்டு ஏலம் போனதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் டைட்டானிக் கப்பல் விபத்தில் உயிர் பிழைத்த மற்றொரு பயணியிடம் இருந்து மீட்கப்பட்ட பிஸ்கட் ஒன்றும் தற்போது ஏலம் விடப்பட உள்ளது. 'ஸ்பில்லர்ஸ் அன்ட் பாக்கர்ஸ் பைலட்' வகையை சேர்ந்த இந்த பிஸ்கட் கடலில் பயணிப் பவர்களுக்காக விசேஷமாக தயாரிக்கப்பட்டது ஆகும். வரும் 24-ம் தேதி லண்டனில் இந்த பிஸ்கட் ஏலம் விடப்படுகிறது. ஹென்றி ஆல்ட்ரிஜ் அன்ட் சன் அமைப்பு இந்த ஏலத்தை நடத்துகிறது. பாக்கர்ஸ் பைலட் பிஸ்கட் ஆனது சுமார் 8 லட்சம் முதல் 10 லட்சம் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொகைக்கு ஏலம் சென்றால் உலகிலேயே அதிக தொகைக்கு ஏலம் போன பிஸ்கட் என்ற பெருமையை பெறும். இதற்கு முன்னர் லுஸிதானியா மியூசியத்தில் இருந்த பிஸ்கட் ஒன்று ரூ.3 லட்சத்துக்கு ஏலம் போனது. இந்த சாதனையை பாக்கர்ஸ் பைலட் பிஸ்கட் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

http://tamil.thehindu.com/world/டைட்டானிக்-கப்பலில்-இருந்து-மீட்கப்பட்ட-பிஸ்கட்-அக்24ல்-ஏலம்-ரூ10-லட்சத்துக்கு-ஏலம்-போகும்-என-எதிர்பார்ப்பு/article7749691.ece

  • கருத்துக்கள உறவுகள்

விசுக்கோத்துக்கு இவ்வளவு விலையா! அட கடவுளே!

  • கருத்துக்கள உறவுகள்

விசுக்கோத்துக்கு இவ்வளவு விலையா! அட கடவுளே!

உந்த விசுக்கோத்தை, வைச்சு இருந்த கப்பலே கவுந்திரிச்சு.  வாங்கி வைச்சிரிந்தாலே தரித்திரம் தான்..

சும்மா வேலில போன ஓணானை சட்டையில விட்ட கதை தான்.

மார்க்கெட்டிங் துறையில் ஒரு கதை சொல்லுவார்கள்: விசயம் முடிந்ததா, இடத்தைக் காலி செய் என்பதாக.

இந்திய காலனித்துவ காலத்தில், நகைகள் மேல் பெரும் ஆர்வம் கொண்ட, ஹைதராபாத் நவாப் பாரிஸ் வந்திருந்தார்.

அவரை சந்தித்து, ஒரு வைர மோதிரம் வித்து விடும் நோக்கில், பிரபல நியூ யார்க் நகைக் கடை ஒன்று ஒரு முக்கிய விற்பனை பிரதிநிதியை அனுப்பியது.

அவர் காட்டிய மோதிரத்தில் அழகில் அக மகிழ்ந்து போன நவாப் உடனே அதை வாங்குவதாக சொல்லி விட்டார்.

அக மகிழ்ந்து போனாலும், சிறுது கவலை அடைந்தார், விற்பனை பிரதிநிதி. இரவு பகலாக, கதைப்பதற்காக நிறைய, பயிற்சி செய்து வந்திருந்த அவருக்கு, அதற்கான வாய்ப்பே இல்லாமல் போனதே அவரது கவலைக்கு காரணாம்.

இடத்தைக் காலி பண்ணமால், எதாவது சொல்லி வைப்போம் என்று, 'பெருமகனாரே, தாங்கள் வாங்கி விட்ட மோதிரம், உலகப் புகழ் கொண்ட ஒருவர் அணிதிருந்தமையால், மிகவும் பெறுமதி மிக்கது. இப்போது உங்களை அடைவதில் இன்னும் புகழ் அதற்கும், தங்களுக்கும் கிடைக்கப் போகிறது', குறிப்பிட்டார்.

நவாப் கேட்டார்: 'அப்படியா, யாரப்பா அந்த உலகப் புகழ் கொண்ட ஒருவர்'?

வேறு யாரும் இல்லை. 'இந்த பிரான்சு மண்ணை ஆண்ட, 16ம் லூயி மன்னன்'.

'என்னது'? என்றவாறே அதிர்சியில் உறைந்தார் நவாப். உடனடியாக ஒர்டரை கான்செல் செய்தார் அவர்.

ஏனெனில் அந்த மோதிரம் அணிதிருந்த நிலையிலே, 16ம் லூயி மன்னர், சிம்மாதனத்தில் இருந்து இறக்கப் பட்டு, சிரச்சேதம் செய்யப் பட்டு கொல்லப் பட்டிருந்தார். :(

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

டைட்டானிக் கப்பல் பிஸ்கட் ரூ.15 லட்சத்துக்கு ஏலம்

 
ஏலம் எடுக்கப்பட்ட பிஸ்கட்
ஏலம் எடுக்கப்பட்ட பிஸ்கட்

டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கிய போது கிடைத்த பிஸ்கட் ரூ.15 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் பயணிகள் கப்பல் டைட்டானிக். மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு பிரிட்டனின் சவுத்டாம்பனில் இருந்து நியூயார்க் புறப்பட்டது. ஆனால் கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி பனிப்பாறையில் மோதி முதல் பயணத்தின் போதே கடலில் மூழ்கியது.

இந்த விபத்தில் 1500-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். உலக வரலாற்றில் மிகப்பெரிய கப்பல் விபத்தாக இது இன்றளவும் நினைவுகூரப்படுகிறது.

அதன்பின், டைட்டானிக் கப்பல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஏலத்தில் விடப்பட்டன. இந்நிலையில், அந்த கப்பலில் வழங்கப்பட்ட பிஸ்கட் நேற்று ஏலம் விடப்பட்டது. ‘ஹென்டிரி ஆல்டிரிஜ் அண்ட் சன்ஸ்’ ஏல நிறுவனம் டைட்டானிக்கில் கிடைத்த பொருட்களை கடந்த சனிக்கிழமை ஏலம் விட்டது.

கிரீஸ் நாட்டை சேர்ந்த அரிய பொருட்கள் சேகரிப்பாளர் ஒருவர் 15 ஆயிரம் பவுண்ட் (சுமார் ரூ.15 லட்சம்) கொடுத்து அந்த பிஸ்கட்டை ஏலம் எடுத்துள்ளார். இந்த பிஸ்கட்தான் உலகிலேயே அதிக மதிப்புள்ள பிஸ்கட் என்று கூறப்படுகிறது.

‘ஸ்பில்லர்ஸ் அண்ட் பேக்கர்ஸ் பைலட்’ என்ற நிறுவனத்தின் பெயருடன் அந்த பிஸ்கட் உள்ளது. டைட்டானிக் படகு மூழ்கிய போது, உயிர் காக்கும் படகுகளிலும், கடலில் குதித்தும் சிலர் தப்பினர். டைட்டானிக் கப்பல் கடலில் மூழ்கி பயணிகள் தத்தளித்து கொண்டிருந்த போது, அந்த வழியாக ‘ஆர்எம்எஸ் கார்பத்தியா’ என்ற பயணிகள் கப்பல் சென்றுள்ளது.

அந்த கப்பலில் இருந்தவர்கள்தான், டைட்டானிக் கப்பல் பயணிகளை காப்பாற்றி உள்ளனர். அப்போது உயிர் காக்கும் படகில் இருந்த ஒரு பையை (கிட்) கார்பத்தியா கப்பல் பயணி ஜேம்ஸ் பென்விக் என்பவர் பத்திரமாக பாதுகாத்து வந்துள்ளார்.

அந்த பையில்தான் பிஸ்கட் இருந்துள்ளது. அந்த பிஸ்கட்டை ஒரு கவரில் போட்டு அதன் மீது, ‘டைட்டானிக் கப்பலின் உயிர் காக்கும் படகில் இருந்து கிடைத்த பைலட் பிஸ்கட் - ஏப்ரல் 1912’ என்று குறிப்பு எழுதி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளான போது கிடைத்த புகைப்படம் ஒன்று 21000 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஏலம் போனது.

http://tamil.thehindu.com/world/டைட்டானிக்-கப்பல்-பிஸ்கட்-ரூ15-லட்சத்துக்கு-ஏலம்/article7805202.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.