Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கே இனியவன் கவிதைகள்

Featured Replies

  • தொடங்கியவர்

நண்பா ..நான் வறுமை பட்டபோது ....
நீ வாங்கி தந்த ஆடை இன்றும் இருக்கிறது .....
எனக்கு அது புதைபொருள் பொக்கிஷம் ....
எத்தனை புது ஆடைஉடுத்தாலும் ....
உன் ஆடையின் அழகுக்கு நிகரில்லை ....!!!

+
கே இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
நட்பு கவிதைகள் 
கவிதை எண் 09

ஐய்ம்பூதங்கலின் கருத்தை ....
ஐவகை நிலத்தை என்னால் ....
ஐந்து வரியில் விளக்கிடுவேன் ....
நண்பா நட்பை பற்றி என்னால் ....
ஜென்மம் எடுத்தாலும் விளக்க முடியாது ....!!!

+
கே இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
நட்பு கவிதைகள் 
கவிதை எண் 10

  • Replies 390
  • Views 39.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அம்மா - இறைவனின் உன்னத படைப்பு ....
அம்மா - இறைவனாக பார்க்கப்படும் பிறப்பு ....
அம்மா - ஒவ்வொரு இதயத்திலிருக்கும் சாமி .....
அம்மா - இன்ப துன்பத்தை தாங்கும் கடவுள் ....
அம்மா - எல்லா உயிரினங்களின் மூல கடவுள் ....!!!

+
கே இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
அம்மா கவிதைகள் 
கவிதை எண் 11

தாயே உன்னை வார்த்தையால் .....
வரிகளால் அழைக்கும் போதும் .....
அம்மா என்று அழைத்த போதும் .....
உயிரில் அதிர்வு ஏற்படுகிறது ....
உயிரில் கலந்த உறவு தானே .....!!!

+
கே இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
அம்மா கவிதைகள் 
கவிதை எண் 12

  • தொடங்கியவர்

தான் எங்கிருந்து வந்தேன் ....
என்பதை எனக்கு எடுத்துரைக்கவே .....
என்னை ஆலயத்துக்கு அழைத்து ....
சென்றார் அம்மா என்பதை ......
மக்கு மண்டைக்கு புரியவில்லை ....!!!

+
கே இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
அம்மா கவிதைகள் 
கவிதை எண் 13

தன் தாயைப்போல் எல்லா ....
தாயையும் நினைப்பவன் ஞானி .....
ஆனால் எந்த தாயையும் -நீங்கள் ....
அம்மா என்று அழைத்துபாருங்க்கள் ....
உங்களை தன் குழந்தையாகவே பார்க்கும் .....!!!
+
கே இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
அம்மா கவிதைகள் 
கவிதை எண் 14

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ....
எந்த மனகுழப்பமும் இல்லாமல் ...
எந்த வேறுபாடும் இல்லாமல் .....
அன்புவைக்கும் உயிர் வேண்டும் .....
தாயே அது உன்னால் மட்டுமே முடியும் ....!!!

+
கே இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
அம்மா கவிதைகள் 
கவிதை எண் 15
 
  • தொடங்கியவர்

சில சமயம் காதல் தோல்வியின் வலி மனசுக்கும் தேவையாய் இருக்கிறது...!

கவிதைகள் நன்றாக இருக்கின்றன நன்பரே...! வாழ்த்துக்கள்...!!

நன்றி நன்றி 
தொடரும் 

 

@@@@@@@@@@@

என் இதயத்தை ....
உன்னை நினைக்காமல் ....
இருக்க தடுப்பு சுவர் ....
போட்டேன் - அதையும் 
தாண்டி உன்னை ....
எட்டி வந்து பார்க்கிறது ...
இதயம் ....!!!

காதல் தனியே ....
காதலிக்க மட்டுமல்ல ....
காலமெல்லாம் உன்னோடு ...
வாழ்வதற்கே - நீ 
காதலித்துவிட்டு சென்றுவிட்டாய் .....!!!
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

Edited by கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்
 
 

மனதால் நேசிக்காத நட்பு ....
நேசிப்பதுபோல் நடிக்கும் நட்பு ....
காரியத்துக்காய் பழகும் நட்பு ....
ஆருயிர் போல் பழகினாலும் ....
அது கூடா நட்பே ....!!!

உள் ஒன்று வைத்து ....
புறமொன்று பழகும் நட்பை ....
வளர்ப்பதை விட ஆரம்பத்தில் ...
வெட்டி எரிவதே சிறப்பு ....!!!

+
குறள் 821
+
கூடாநட்பு
+
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை 
நேரா நிரந்தவர் நட்பு.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 41

மனமில்லாமல் பழகும் நட்பு ....
---

வேண்டும் ஆனால் வேண்டாம் ...
அன்பு இருக்கும் , இருக்காது 
சந்தேகத்துடன் பழகும் நட்பு .....
சங்கடத்தில் முடியும் .....!!!

மனமில்லாமல் பழகும் நட்பு ....
மனமில்லாமல் பழகும் ....
பாலியல் இன்பத்துக்கு நிகர் ....
இரண்டுமே வேண்டாம் மனமே ....!!!

+
குறள் 822
+
கூடாநட்பு
+
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் 
மனம்போல வேறு படும்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 42

  • தொடங்கியவர்

நல் நட்பாக மாறிவிடாது ....!!!

---

மனதால் பொருந்தாத நட்பு ....
அமிர்தம்போல் பழகினாலும் ....
உடைந்த மட்பாண்டாமே.....!!!

மனதுக்கு பொருந்தாத நட்பு ....
ஆயிரம் ஆயிரம் நூல்களை ...
வாசித்து அறிவை பெற்றாலும் ....
நல் நட்பாக மாறிவிடாது ....!!!

+
குறள் 823
+
கூடாநட்பு
+
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் 
ஆகுதல் மாணார்க் கரிது.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 43

சென்றவுடன் வெறுக்கும் நட்பு ....
---

காணும்போது சிரித்தும் ....
காணாதபோது வெறுத்தும் ....
பழகும் நட்பை தொடராதே ....!!!

கண்டவுடன் பழகும் நட்பு ...
சென்றவுடன் வெறுக்கும் நட்பு ....
நெஞ்சு முழுதும் நஞ்சை கொண்டு ....
பழகும் நட்பு - பகைவனுக்கு நிகர் ...!!!

+
குறள் 824
+
கூடாநட்பு
+
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா 
வஞ்சரை அஞ்சப் படும்.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 44

நம்பிக்கை இல்லாத நட்பே ....!!!
---

மனத்தால் நேசிக்காத நட்பு ....
மனம் நிறைந்த வார்த்தை ....
வாயார உரைத்தாலும் ....
உண்மை நட்பு அல்ல ....!!!

ஆயிரம் ஆயிரம் ....
வார்த்தைகளை உதிர்த்தாலும் ....
உயிரைப்போல நடித்தாலும் ...
மனத்தால் இணையாத நட்பு ....
நம்பிக்கை இல்லாத நட்பே ....!!!

+
குறள் 825
+
கூடாநட்பு
+
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் 
சொல்லினால் தேறற்பாற்று அன்று.

+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல் 
+
கவிதை எண் - 45

  • தொடங்கியவர்

காதலை காதலால் காதல் செய்

கண் உறங்கி எழுந்ததுமே ......
+++ கண்முன் சிலையாய் நிற்கின்றாய்....!!!
காலையில் குளிக்கும் தருவாயில் ......
+++ முத்து நீர்த்துளியாய் நினைவில் வருகிறாய் ....!!!
உணவுண்ணும் உணவு தட்டில் நீ .......
+++ முழுநிலா அழகுடன் வருகிறாயே ......!!!
வேலைக்கு செல்லும் தூரம் வரை .......
+++ என்னோடு அருகில் பயணம் வருகிறாய் ....!!!

உனக்கென்ன உயிரே ஜாலியாய் .......
+++ உறங்கி கொண்டே இருகிறாய் ......!!!
உனக்கும் சேர்த்து நானே காதலிப்பதால் .....
+++ இரண்டு இதயவலியை நானே சுமக்கிறேன் .....!!!
அடுத்த ஜென்மம் நான் நீயாக பிறந்து ....
+++ நீ நானாக பிறந்து உன்வேதனைபார்க்கணும் ......!!!
உனக்காக உன் வலியையும் சுமக்கும் .....
+++ என் இதயத்துக்கு எத்தனை வலிமை .....!!!

என்ன காரணத்துக்காய் என்னை மறந்தாய் ....
+++ என் இதயத்திலும் உயிரிலும் தேடுகிறேன் ....!!!
நீ கூறும் நிஜாயங்கள் நியமாக இருந்தால் ....
+++ அந்தக் கணப்பொழுதே நான் மடிந்துடுவேன் ....!!!
எனக்கென்று எதுவுமே இல்லாதபோது .....
+++ நான்உயிர்இருந்தென்ன சாதிப்பேன் ...???
அடுத்த ஜென்மத்தில் நீ பிறந்தால் .....
+++ காதலை காதலால் காதல் செய் உயிரே ....!!!

கவிநாட்டியரசர் 
கே இனியவன் 
உள்ளத்தால் காதல் செய்

  • தொடங்கியவர்

சுட்டெரிக்கும் சூரியனை விட ......
உன் வார்த்தைகள் சூடானவை .....
வலிமை கொண்ட மலையை விட ....
உன் மனம் கடினமானது .......
பிரிவின் பெறுபேறு உணர்த்தியது ....!!!

+
கே இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல் தோல்வி கவிதை 
கவிதை எண் 16
+++++
சொந்த மொத்தக்கவிதை = 6229

பிரிந்து பார்த்தேன் பிரிய முடியவில்லை ......
வெறுத்துப்பார்த்தேன் வெறுக்கமுடியவில்லை  .....
மறந்து பார்த்தேன் மறக்கவும் முடியவில்லை ....
பிரிவு வெறுப்பு மறதி எல்லாம் உன்னை .....
அதிகமாய் நினைப்பதற்கே அன்பே .....!!!

+
ஐந்து வரி கவிதைகள் ......!!!
காதல் தோல்வி கவிதை 
கவிதை எண் 17
+++++
சொந்த மொத்தக்கவிதை = 6230

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

காதல் சித்தனாவேன்

காதலுக்கு கிடைக்கும் ....
மிகப்பெரிய பரிசு ....
கவிதை ......!!!

சோகத்துக்கும் கவிதை...
சுகத்துக்கும் கவிதை ....
நினைவுகளாலும் கவிதை ...
கனவுகளாலும் கவிதை ....
ஒன்றில்.....
காதல் பித்தனாவேன்....
இல்லையேல் காதல் ...
சித்தனாவேன் ....!!!


+
ஈழத்து கவிஞர் 
கவிப்புயல் இனியவன்

கண்ணீரின் வலி கூறும்

****

உன்னை காணாமல் ....
இருந்த ஏக்கத்தை ....
உன்னை கண்டவுடன் ....
கண்ணோரத்தில் வடியும் ....
கண்ணீரின் வலி கூறும் ....!!!

நீ சென்ற பின் .....
என் இதயத்தின் வலியை.....
நீ சுமந்துகொண்டு போகும் ....
என் இதயத்திடம் கேள் ....
கண்ணீர் விடு கதறும் ....!!!

+

+
ஈழத்து கவிஞர் 
கவிப்புயல் இனியவன்

நம் காதலே வந்தது

***
ஓவியம் ,,,,
வரைந்தேன் ....
உன் முகமே வந்தது ....!!!

காவியம்
எழுதினேன் ....
நம் காதலே வந்தது ....!!!

கவிதை
எழுதினேன் ....
உன் நினைவுகளே ....
வந்துகொண்டிருகிறது ....!!!

+
ஈழத்து கவிஞர் 
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

என்னோடு இருந்துவிடு

****

உனக்காக ...
எத்தனை வழிகளில் ....
தயங்குகிறேன் ....
என் கவிதைகள் ...
உன்னை வருத்திவிடுமோ ....?
தயங்கி தயங்கி ....
எழுதுகிறேன் ....!!!

என்
விழிகள் திறந்திருக்கும் ....
நேரமே என் இதயத்தில் ,,,,
வந்தாய் .....!!!
என் விழிகள் மூடும்வரை ...
என்னோடு இருந்துவிடு ...!!!

+
ஈழத்து கவிஞர் 
கவிப்புயல் இனியவன்

புனிதமாகும் நம் காதல்

***

என் சுவாசத்தை
நிறுத்துவது ....
எனக்கொன்றும் கடினமல்ல ....
உன் நினைவுகளை ....
நிறுத்துவதை ....
காட்டிலும் அது இலகு ....!!!

மரணத்தில் கூட ....
புனிதமாகும் நம் காதல் .....
மனதால் தோன்றிய காதல் ....
மரணத்திலும் புனிதம் ....!!!

+
ஈழத்து கவிஞர் 
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

ரசிப்போம் வா மனமே .....!!!

ஏய் மனமே ....
நானும் நீயும் என்னவனுடன் ....
கூடுவோம் வா மனமே வா ....
என்னவன் படும் வேதனையை ....
ரசிப்போம் வா மனமே .....!!!

அவசரபடாதே மனமே .....
அவரின் வேதனையை ....
ரசிக்கும் வரை கூடல் செய்யாதே 
ஊடல் செய்வோம் மனமே ....!!!


+
குறள் 1301
+
புலவி.
+
புல்லா திராஅப் புலத்தை அவர்உறும் 
அல்லல்நோய் காண்கம் சிறிது.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 221

  • தொடங்கியவர்

உணவுக்கு உப்பு அளவோடு ...

உப்பில்ல பண்டம் குப்பையில் ......
உப்பு அதிகமானாலும் குப்பையில் ...
உணவுக்கு உப்பு அளவோடு ....
இருப்பதுபோல் தான் ஊடலும் ....!!!

கூடலுக்கு முன் ஊடல் தேவை ....
ஊடலின்றிய கூடல் இன்பமில்லை ...
அளவுக்கு அதிகமான கூடல் ....
ஊடலில் சலிப்பை தரும் ....!!!

+
குறள் 1302
+
புலவி.
+
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 222

துன்பப்படுத்துவதற்கு சமன்

என்னவள் ஊடல் செய்கிறாள் ......
ஊடல் அதிகமாகின் கூடல் ....
செய்யணும் என் மனமே ....!!!

ஊடல் செய்த என்னவளை ...
கூடல் செய்யாமல் விடுவது ....
துன்பத்தில் இருக்கும் ஒருவரை ....
மேலும் துன்பப்படுத்துவதற்கு சமன்

+
குறள் 1303
+
புலவி.
+
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 223

நீரின்றி வாடும் பயிரை ...

என்னவளோடு ....
ஊடல் செய்தவளோடு ....
கூடல் செய்யாமல் விடின் ....!!!

நீரின்றி வாடும் பயிரை ...
அதன் ஆணிவேரோடு ...
அறுதெறிவதுபோல் ....
ஆகிவிடும் மனமே .....!!!

+
குறள் 1304
+
புலவி.
+
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 224

மலர்போன்ற கண்ணுடைய ....

ஒருவனின் அழகு உடலில் ....
அல்ல அவனது நற் குணங்களில் ...
தானே உள்ளது ......!!!

அந்த நற்குணத்தை ஆடவன் ....
மலர்போன்ற கண்ணுடைய ....
மனைவியின் ஊடலின் தாகத்தை ....
அறிந்த ஆடவனே உயர் மனிதன் ....!!!

+
குறள் 1305
+
புலவி.
+
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 225

  • தொடங்கியவர்

இல்லாத காதல் வாழ்க்கை ....

பெரும் பிணி கொண்ட ஊடலும் ...
புதுமை கொண்ட புலவியும் ....
இல்லாத காதல் வாழ்க்கை ....
இன்பம் தரா காதலே ....!!!

ஏக்கமும் புதுமையும் ....
இல்லாத காதழ் வாழ்கை ....
முற்றி பழுத்த பழம் ....
பயனற்று அழுகி விழுவதும் ...
இளம் பிச்சு காய் பழுத்தது ...
போல் தெரிந்தாலும் வெம்பி ...
பழுத்தது போல் ஆகிவிடும் ....!!!

+
குறள் 1306
+
புலவி.
+
துனியும் புலவியும் இல்லாயின் காமம் 
கனியும் கருக்காயும் அற்று.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 226

  • தொடங்கியவர்

இன்பத்திலும் அது துன்பம் ....!!!

கூடலும் புணர்ச்சியும் ....
கூடிச்சென்றால் இன்பம் ....
இடையில் நின்றுவிட்டால் ....
ஏக்கமே மிஞ்சும் ....!!!

ஏக்கத்தோடு ....
கூடிகொண்டிருத்தல் ....
இன்பமாக இருந்தாலும் ....
இன்பத்திலும் அது துன்பம் ....!!!

+
குறள் 1307
+
புலவி.
+
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது 
நீடுவ தன்றுகொல் என்று.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 227

  • தொடங்கியவர்

அந்த காதலில் என்ன பயன் ....?

காதல் என்றால் துன்பம் ....
இருக்கத்தான் செய்யும் ....
என்னால் அவளும் ...
அவளால் நானும் ....
துன்பப்படுவதே காதல் ....!!!

துன்பத்தை உணராமல் ....
காதல் செய்தால் அந்த ,,,,
காதல் இன்பத்தை தராத ....
வெற்று காதல் உயிரே ....
அந்த காதலில் என்ன பயன் ....?

+
குறள் 1308
+
புலவி.
+
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும் 
காதலர் இல்லா வழி.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 228

குளிர்ந்த நீர்போல் இருக்கிறது .

நிழலின் கீழ் இருக்கும் -நீர் 
குளிர்ந்த தண்ணீராகும் ....
பருக பருக இன்பம் தான் ....!!!

என்னவனே ....
அன்புகொண்ட உன் கூடல் ....
குளிர்ந்த நீர்போல் இருக்கிறது ....
பருக பருக இன்பம் தான் ...!!!

+
குறள் 1309
+
புலவி.
+
நீரும் நிழலது இனிதே புலவியும் 
வீழுநர் கண்ணே இனிது.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 229

நச்சரிக்கிறதே மனசு ....!!!

இன்பத்தை தணிக்காத ....
காதலுடன் இணைந்திருப்பது ....
தவிர்க்க விட்டு வேடிக்கை ....
பார்ப்பதுபோன்ற செயல் ....!!!

தவிர்க்க விட்டு வேடிக்கை ....
பார்த்தாலும் கூடு கூடு ....
என்று நச்சரிக்கிறதே மனசு ....!!!

+
குறள் 1310
+
புலவி.
+
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் 
கூடுவேம் என்பது அவா.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 230

  • தொடங்கியவர்

அம்மா கவிதை

அம்மா - இறைவனின் உன்னத படைப்பு .... 
அம்மா - இறைவனாக பார்க்கப்படும் பிறப்பு .... 
அம்மா - ஒவ்வொரு இதயத்திலிருக்கும் சாமி ..... 
அம்மா - இன்ப துன்பத்தை தாங்கும் கடவுள் .... 
அம்மா - எல்லா உயிரினங்களின் மூல கடவுள் ....!!! 

 

என்று தொடரும் இந்த கவிதை  
சென்ற வாரம் 06.09.2015 அன்று யாழ்ப்பாணம் தினசரி பத்திரிகையில் பிரபல பத்திரிக்கை 
ஒன்றான வலம்புரி நாளிதழில் " ஈழத்து கவிஞர்கள்   ' பக்கத்தில் பிரசுரித்தார்கள் .
மிக்க நன்றி . 

இந்த தகவலை பகிர்வதில் மகிழ்ச்சி 

கே இனியவன் 

  • தொடங்கியவர்

என்னுயிர் நண்பா .....
உன்னை விட்டு யாரிடம் ....
பகிர்வேன் என் உணர்வை ...?

மனதிலே 
துன்பம் வரும்போது .....
என்னோடு இருந்து அழும் ...
ஒரே ஜீவன் நீதானே ....
இன்பம் வரும்போதும் ...
என்னோடு இருந்து ....
சிரிக்கும் ஜீவனும் நீதான் ....!!!

ஒரே ஒரு கவலை உன்னால் .....
நான் அழும்போது தான் அழுகிறாய் ....
நான் சிரிக்கும் போதுதான் சிரிக்கிறாய் ....
எப்போது என்னை நீ அழவைப்பாய்....?
எப்போது என்னை சிரிக்க வைப்பாய் ...?

எப்படி உன்னால் முடிகிறது ...?
என் உணர்வுகளை அப்படியே...
எனக்கு காட்டுகிறாய் ....?
என்மீது கொண்ட கோபத்தால் ....
உன்னை அடித்துவிட்டேன் .....
எனது கையில் குருதி ....
உனது இதயம் சுக்குநூறாகியது.....!!!
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
என் அந்த நண்பன் யாராக இருக்கமுடியும் ...?

  • கருத்துக்கள உறவுகள்

உன்னை உனக்கே காட்டும் நண்பன்

உன் எழுதுகோல் அன்றி எவராக முடியும்?

Edited by வல்வை சகாறா

  • தொடங்கியவர்

அவர் வரும்போது .....
கையாட்கள் பலர் .....
கைகூப்புவோர் பலர் ....
செருக்கோடு சிரித்தும் ....
சிரிக்காததுமாய் செல்வார் ....!!!

அடுத்த வேளைக்கு....
உணவுக்காய் அங்கலாக்கும் ....
இவன் வரும்போது ....
போ போ தூரப்போ என்று ....
துரத்தும் கைகள் அதிகம் ....
வறுமையால் பணிவுடன் ...
ஒதுங்குவான் ....!!!

இருவரும் ஒருநாள் ....
ஒரே இடத்தில் சந்திப்பார் ....
கை கூப்பியவரும் துணையில்லை ....
கை விரட்டியவனும் துணையில்லை .....
*
*
*
*
*
*
*
*
*
*
*
*

இருவரும் சந்தித்த அந்த இடம் எது ...?

  • கருத்துக்கள உறவுகள்

ஆன்மா அரங்கேறிய கூடு

அழிகின்ற மயானமேடு

  • கருத்துக்கள உறவுகள்

1) கண்ணாடி.

2) சமரசம் உலாவும் இடம்.

  • கருத்துக்கள உறவுகள்

ம் முதலாவதற்கு குருதி படிந்தது கையில் என்பதைக் கவனிக்கத்தவறிவிட்டேன்  கண்ணாடி என்பதே சரியாகப் பொருந்துகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எழுதியதும் சரிதான்,

கவிப் புயல் அல்லவா , பேனா நிப்பி ல தப்பி யிருப்பார் கையில குருதி கொப்பளிக்க ...! :)

  • தொடங்கியவர்

1) கண்ணாடி.

2) சமரசம் உலாவும் இடம்.

இரண்டும் மிக சரியானது 
வாழ்த்துக்கள் 

  • தொடங்கியவர்

கிழக்கில் இருந்து ஆதவன் ....
கிழந்தெழும்பும் போதே ....
கிழம்பிவிடு... போராடு ....
கிழக்கின் ஆதவன் நீதான் ....!!!

கிரகதோசத்தை காரணம் காட்டி ....
கிடைக்க பெறும் வாய்பை இழக்காதே ...
கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்து .....
கிரகபதி என்றும் நீதான் .....!!!

கிரகித்தல் திறனை வளர்த்துக்கொள் .....
கிராமமாக அறிவை பெற்றுக்கொள் ....
கிலியை முற்றாக அறுத்து எறி ......
கிருபாகரனின் கிருபை கிடைக்கும் ....!!!

கிறுக்கன் என்று பெயர் எடுக்காதே ....
கிரக சித்திரம் நிம்மதியை கெடுக்கும் .....
கிரக பெயர்ச்சி வானில் ஏற்படும் நிகழ்வு ......
கிரகப்பேர்ச்சியை சாட்டி வாழாதே ....!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.