Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

14 ஆண்டுகளின் பின் மீண்டும் விசாரணை

Featured Replies

14 ஆண்டுகளின் பின் மீண்டும் விசாரணை
14 ஆண்டுகளின் பின் மீண்டும் விசாரணை

2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்காகத் தீவகம் சென்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களைக் கொடூரமாகத் தாக்கியதுடன் ஆதரவாளர்கள் இருவரைக் கொலை செய்த வழக்கு 14 ஆண்டுகளின் பின்னர் நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. திருகோணமலை மேல் நீதிமன்றில் நீதிபதி சசி மகேந்திரன் முன்பாக வழக்கு விசாரிக்கப்பட்டது. 

விசாரணைக்கு முற்படுமாறு அறிவித்தபோதும்- அதனை எதிர்கொள்வதற்கான போதிய ஏற்பாடுகளுடன் வராமல் இருந்த சந்தேகநபர்கள் இருவரது பிணை அனுமதியை நீக்கிய நீதிபதி அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். வடக்கு - கிழக்கில் போர்க் காலத்தில் இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கிய முன்னாள் தமிழ் ஆயுதக் குழுக்கள் - துணை இராணுவக் குழுக்கள் - ஒட்டுக் குழுக்கள்  மீதான பிடி இறுகி வரும் நிலையில் மற்றொரு சம்பவமாக இந்த வழக்கிலும் மீண்டும் முழு வீச்சில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

பின்னணி 2011 நவம்பர் 28ஆம் திகதி - மாவீரர் நாளுக்கு அடுத்த நாள்  தேர்தல் பரப்புரைக்காக கூட்டமைப்பு வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தீவகத்திற்குச் சென்றனர். யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறைச் சந்தியில் நாரந்தனை வடக்கு தப்பாட்டிச் சந்திக்கு அருகில், குடியிருப்புகள் ஏதுமற்ற பகுதியில் கும்பல் ஒன்றால் அவர்கள் வழிமறிக்கப்பட்டு மிலேச்சத்தனமாகத் தாக்கப்பட்டனர். துப்பாக்கியால் சுட்டும், வாள்களால் வெட்டியும், கொட்டன் பொல்லுகள் மற்றும் அலவாங்குகளால் தாக்கியும் காடையர் குழு வெறியாட்டம் போட்டது.

 கூட்டமைப்பின் வேட்பாளர்களான மாவை சேனாதிராசா, எம்.கே.சிவாஜிலிங்கம், அப்போதைய யாழ். முதல்வர் ரவிராஜ், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் உள்ளடங்கிய கூட்டமைப்புக் குழுவே கடும் தாக்குதலை எதிர்கொண்டது. கடுமையான தாக்குதலால் கூட்டமைப்பு ஆதரவாளர் ஏரம்பு பேரம்பலம் அங்கேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த யோகசிங்கம் கமல்ஸ்ரன் பின்னர் வைத்தியசாலையில் உயிரிழந்தார். 

மாவை. சேனாதிராசா, எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட 18 பேர் மோசமான காயங்களுக்கு உள்ளாகினர். மேலும் பலருக்கும் காயங்கள் ஏற்பட்டன. 

விசாரணை அப்போது அரச படைகளோடு சேர்ந்தியங்கிய ஈபிடிபியினரே இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டது. சந்தேகத்தின் பேரில் ஈபிடிபியைச் சேர்ந்த, அப்போதைய ஊர்காவற்றுறைப் பிரதேச சபைத் தலைவரும் நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளருமான என்.மதனராஜா, ஈபிடிபியின் ஊர்காவற்றுறைப் பொறுப்பாளர் நெப்போலியன், மற்றொரு ஈபிடிபி உறுப்பினரான ஜீவன் என்பவர் உட்பட நால்வரைப் பொலிஸார் தேடினர். 

டிசெம்பர் 30ஆம் திகதி ஊர்காவற்றுறைப் பொலிஸார் மூலமாக நீதிமன்றில் சரணடைந்த நெப்போலியன் மற்றும் மதனராஜா ஆகியோருக்கு அப்போது நீதிவானாக இருந்த இ.த.விக்னராஜா சரீரப் பிணை வழங்கியிருந்தார். அதன் பின்னர் இருவரும் தலைமறைவாகினர். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஜீவனும் மற்றைய நபரும் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 

திருமலையில் வழக்குசட்டமா அதிபரின் பரிந்துரைக்கு அமைய இந்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்திடம் விசாரணைக்காகப் பாரப்படுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொலைகள் என்றபோதும் காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படாமலேயே வழக்கு திருகோணமலைக்கு மாற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக முற்படுமாறு வழக்காளிகள் மற்றும் எதிராளிகளுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா உட்பட சிலர் நீதிமன்றில் முற்பட்டிருந்தனர். பிணையில் விடப்பட்டிருந்த சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றில் முற்பட்டிருந்தனர். எனினும், முன்னறிவித்தல் கொடுத்தும் வழக்கு விசாரணையை எதிர்கொள்வதற்கான சட்ட ஏற்பாடுகளுடன் அவர்கள் வருகை தந்திருக்கவில்லை என்பதால் அவர்களின் பிணையை நீக்கி இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

மற்றைய இரு சந்தேகநபர்களான மதனராஜா மற்றும் நெப்போலியன் ஆகியோர் தொடர்ந்தும் தலைமறைவாகவே இருக்கிறார்கள். வழக்கில் 41 சாட்சிகள் விசாரிக்கப்பட உள்ளனர். நவம்பர் மாதம் 17, 18ஆம் திகதிகளுக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

http://onlineuthayan.com/news/1220

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.