Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது : உறவினர்களுடன் கண்ணீரால் பேசிய கைதிகள்

Featured Replies

உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது : உறவினர்களுடன் கண்ணீரால் பேசிய கைதிகள்

 
 

தமக்கு விடு­தலை அளிக்­கப்­பட வேண்­டு­மென்­பதை வலி­யு­றுத்தி உண்­ணா­வி­ரத போராட்­டத்தை முன்­னெ­டுத்­துள்ள தமிழ் அர­சியல் கைதிகள் நேற்று மூன்­றா­வது நாளா­கவும் போராட்­டத்தை தொடர்ந்­தி­ருந்­தனர். நேற்­றைய தினம் ைகதிகள் அனை­வரும் சோர்­வாக காணப்­பட்­ட­துடன் மேலும் ஏழு அர­சியல் கைதிகள் உடல் நிலை பாதிப்­ப­டைந்­துள்­ள­தாக சிறைச்­சாலை உள்­ளகத் தக­வல்கள் தெரி­வித்­துள்­ளன. அதன்­படி மொத்­த­மாக 12 கைதிகள் உடல்­நிலை பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.fd5f40d8fdf.jpg
அத்­துடன் கொழும்பு மகஸின் சிறைச்­சா­லைக்கு சிறைக்­கை­தி­களின் உற­வி­னர்­களும், அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லைக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.ஏ.சுமந்­திரன் மற்றும் செல்வம் அடைக்­க­ல­நா­தனும், தும்­பறை சிறைச்­சா­லைக்கு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வேலு­கு­மாரும் நேற்யை தினம் சென்று கைதி­களை நேரில் பார்­வை­யிட்­டனர்.
விசா­ர­ணை­க­ளின்­றியும், வழக்கு தாக்கல் செய்­யப்­பட்டு கால இழுத்­த­டிப்­புக்கள் செய்­யப்­ப­டு­வ­தாலும் நாட­ளா­விய ரீதியில் உள்ள 14 சிறைச்­சா­லை­களில் நீண்­ட­கா­ல­மாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள 217 அர­சியல் கைதிகள் தமது விடு­த­லையை வலி­யு­றுத்தி உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை கடந்த திங்­க­ளன்று ஆரம்­பித்­தி­ருந்­தனர்.
இந்­நி­லையில் நேற்­றைய தினமும் இவர்­களின் உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்டம் குறித்து உரிய வாக்­கு­று­திகள் அளிக்­க­ப்பட்­டி­ருக்­காத நிலையில் போராட்­டத்தை கைதிகள் தொடர்ந்­தனர்.
இது குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,
நேற்­றுக்­கா­லை­யிலும் கடந்த இரண்டு தினங்­க­ளைப்­போன்று கைதிகள் தமது சிறைக்­கூ­டங்­களில் அமை­தி­யான முறையில் உண்­ணா­வி­ர­தப்­போ­ராட்­டத்தை முன்­னெ­டுத்­தனர். காலை வேளையில் சிறைச்­சாலை மருத்­து­வர்கள் கைதி­களின் உடல் நிலை குறித்து பரி­சோ­தித்­த­துடன் தொடர்ந்தும் நீரா­கா­ரத்தைக் கூட உள்­ளெ­டுக்­கா­தி­ருப்­பீர்­க­ளாக இருந்தால் உடல் நிலை மோச­ம­டை­யு­மென எச்­ச­ரிக்கை விடுத்­துச்­சென்­றனர். எனினும் கைதிகள் தமது நிலைப்­பாட்டில் உறு­தி­யாக உள்­ள­தாக தெரி­வித்­த­துடன் எமக்­கான பதில் கிடைக்கும் வரையில் அதனை கைவி­டப்­போ­வ­தில்லை எனவும் பதி­லெ­துமே அளிக்­கப்­ப­டா­த­வி­டுத்து உயிரைத் துறக்­கவும் தயா­ரா­க­வி­ருப்­ப­தா­கவும் குறிப்­பிட்­டனர்.


கண்­ணீரால் கலந்த
கைதி­களும் உற­வு­களும்
அதனைத் தொடர்ந்து பிற்­பகல் வேளையில் வடக்கு, கிழக்கு, மலை­ய­கத்­தி­லி­ருந்து வரு­கை­தந்­தி­ருந்த தமிழ் அர­சியல் கைதி­களின் உற­வி­னர்கள் மகஸின் சிறைச்­சா­லைக்குச் சென்று தமது உற­வு­களை பார்­வை­யிட அனு­ம­தி­ய­ளிக்­கு­மாறு கோரினர். சிறிய ்கால தாமதத்தின் பின்னர் அவர்­க­ளுக்­கான அனு­மதி வழங்­கப்­பட்­டது. மூன்று நாட்­க­ளாக உண்­ணா­வி­ர­த­மி­ருந்த கைதி­களின் உடல்­நிலை சோர்­வுடன் காணப்­பட்­டதால் அவர்­களின் உற­வி­னர்கள் கண்­ணீ­ருடன் கத­றி­ய­ழு­தனர். இதன்­போது வார்த்­தை­களால் எத­னையும் அவர்­க­ளுக்கு கூற­மு­டி­யாது பதி­லுக்கு தங்­க­ளு­டைய கண்­ணீ­ரையே வெளிப்­ப­டுத்தி கத­றி­ய­ழு­தனர். தொடர்ந்து சிறைச்­சாலை அதி­கா­ரி­களால் வழங்­கப்­பட்ட கால எல்லை நிறை­வ­டைந்­த­தை­ய­டுத்து உற­வி­னர்கள் சிறைச்­சாலை வளா­கத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டனர். தமது உற­வு­களை கண்­களால் பார்த்­தமை ஒரு நிம்­ம­தியை ஏற்­ப­டுத்­து­கின்­ற­போதும் அவர்­களின் நிலைமை மேலும் சோகத்தை ஏற்­ப­டுத்­து­வ­தாக உற­வி­னர்கள் தெரி­வித்­தனர்.


சிறைச்­சாலை ஆணை­யாளர் விஜயம்
நேற்று நண்­ப­க­ல­ளவில் சிறைச்­சாலை ஆணை­யாளர் ரோஹண புஷ்­ப­கு­மார மகஸின் சிறைச்­சா­லைக்கு விஜயம் செய்தார். கைதி­களின் நிலை­மைகள் தொடர்பில் பார்­வை­யிட்­ட­தோடு கைதி­களின் கோரிக்­கைகள் அனைத்­துமே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கவ­னத்­திற்கு கொண்டு செல்லும் வகையில் சட்டம் ஒழுங்கு மற்றும் சிறைச்­சாலைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சின் செய­லாளர் ஊடாக அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பிட்டார். அத்­துடன் இவ்­வி­ட­யத்­துடன் தொடர்­பு­டைய ஏனைய அமைச்­சர்­க­ளுக்கும் அதி­கா­ரி­க­ளுக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார்.
அதே­நேரம் தமிழ் அர­சி­யல்­பி­ர­தி­நி­திகள் இவ்­வி­டயம் தொடர்­பாக கூடிய கவனம் எடுக்­க­வேண்டும் என்­ப­தையும் கைதி­க­ளி­டத்தில் குறிப்­பிட்­டவர் உங்­க­ளது உடல் நிலையைக் கருத்திற் கொண்டு மருத்­து­வர்­களின் ஆலோச­னைக்­கி­ணங்க செயற்­ப­டு­மாறும் அர­சியல் கைதி­க­ளிடம் கோரிக்கை விடுத்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.


அர­சியல் பிர­தி­நி­தி­களின் விஜயம்
தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் மகஸின் சிறைச்சாலைக்கு நேற்று மாலை விஜயம் செய்தார். அதேநேரம் பாரா­ளு­மன்றக் குழுக்­களின் பிரதித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான செல்வம் அடைக்­க­ல­நாதன், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற குழுக்­களின் பேச்­சா­ளரும் யாழ்.பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் ஆகியோர் அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லைக்கு நேற்று பிற்­பகல் விஜயம் செய்து உண்­ணா­வி­ரதத்தில் ஈடு­பட்­டுள்ள 35 தமிழ் அர­சியல் கைதி­க­ளையும் பார்­வை­யிட்­டனர். அதே­போன்று தும்­பறை சிறைச்­சா­லைக்கு விஜயம் செய்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வேலு­கு­மாரும் அர­சியல் கைதி­களை நேரில் பார்­வை­யிட்டார். குறித்த மக்கள் பிர­தி­நி­திகள் கைதிகள் விடு­தலை தொடர்­பாக தாம் விரைந்து நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ள­தாக குறிப்­பிட்­டுள்­ளனர்.


மேலும் எழு­வரின்
உடல் நிலை பாதிப்பு
இரண்­டா­வது நாளான நேற்று முன்­தினம் மகஸின் சிறைச்­சா­லையைச் சேர்ந்த நால்­வரும் அநு­ரா­த­பு­ர சிறைச்சாலையைச் சேர்ந்த ஒரு­வ­ரு­மாக ஐவர் உடல் நிலை பாதிக்­கப்­பட்டு வைத்­திய சாலையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­தனர். இந்­நி­லையில் நேற்­றைய தினம் மகஸின் சிறைச்­சா­லையில் மேலும் அறு­வரும் அநு­ரா­த­புர சிறைச்­சா­லையில் ஒரு­வ­ரு­மாக எழுவர் உடல் நிலை பாதிப்­புக்­குள்­ளா­கி­யி­ருந்­தனர்.
மகஸின் சிறைச்­சா­லையில் கே.தயா­பரன், கே.சிவாஜி, ரி.நேச­மு­ருகன், எஸ்.உமா­கரன், பி.மனோ­கரன், சகா­தேவன் ஆகி­யோரும் அநு­ரா­த­பு­ரத்தில் கே.கோபி­நாத்தும் உடல் நிலை பதிப்­புக்­குள்­ளா­ன­வர்­க­ளாவர். இதில் அநு­ரா­த­பு­ரத்தில் உடல் பாதிப்­புக்­குள்­ளான இரு­வரும் அநு­ரா­த­புர பொது வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.


இன்று முக்கிய தீர்மானம்
மூன்று நாட்களாக தாம் உண்ணாவிரதப் போராட்டத்தினை தொடர்கின்ற போதும் இதுவரையில் அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த தரப்பினரால் எவ்விதமான நல்லெண்ண கருத்துக்களும் முன்வைக்கப்படவில்லை. அதேநேரம் சிவில் அமைப்புக்கள், அரசியல் பிரதிநிதிகள் எமது விடுதலையை வலியுறுத்தி போராட்டங்களையும் முன்னெடுத்துள்ள போதும் அவர்களுக்கும் உரிய பதில் அளிக்கப்படவில்லை. ஆகவே இந்த நிலைமை இன்றும் தொடருமாகவிருந்தால் உண்ணாவிரதமிருக்கும் நாம் முக்கிய தீர்மானமொன்றை இன்று எடுக்கும் நிலைமைக்கு தள்ளப்படுவோமென தமிழ் அரசியல் கைதிகள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/articles/2015/10/15/உண்ணாவிரதப்-போராட்டம்-தொடர்கிறது-உறவினர்களுடன்-கண்ணீரால்-பேசிய-கைதிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.