Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உயிரோடு விளையாடாதீர்கள்!: கைதிகளின் போராட்டம் குறித்து ஒரே குரலில் இலங்கை தமிழ் நாளிதழ்கள்:

Featured Replies

உயிரோடு விளையாடாதீர்கள்!: கைதிகளின் போராட்டம் குறித்து ஒரே குரலில் இலங்கை தமிழ் நாளிதழ்கள்:

 

 

உயிரோடு விளையாடாதீர்கள்!: கைதிகளின் போராட்டம் குறித்து ஒரே குரலில் இலங்கை தமிழ் நாளிதழ்கள்:


இலங்கை தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் உயிரோடு விளையாடதீர்கள் என்று இலங்கை அரசை நோக்கி இலங்கைத் தமிழ் நாளிதழ்கள் ஒரே குரலில் வலியுறுத்தியிருக்கின்றன.

குளோபல் தமிழ் குழுமத்தின் உலக தமிழ் வானொலியான GTBC.FMஇன் பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சியில் இடம்பெற்ற இன்றைய நாளிதழ்களின் ஆசிரியர் தலையங்கம் குறித்த பார்வையை குளோபல் தமிழ் வாசகர்களுக்காக இங்கு தருகிறோம்.

தமிழர் தாயகத்திலிருந்து வெளிவரும் பிராந்திய தமிழ் நாளிதழ்களான யாழ் தினக்குரல், வலம்புரி, உதயன் நாளிதழ்களுடன் மற்றும் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் வீரகேசரிப் பத்திரிகை ஆகியன இன்றைய பத்திரிகை கண்ணோட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

அனைத்து தமிழ் நாளிதழ்களும் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்பிலும் அவர்களின் விடுதலை தொடர்பிலும் தமது குரலை பதிவு செய்துள்ளன. தமிழ் மக்களின் இன்றைய முக்கிய பிரச்சினை ஒன்றில் கரிசனை கொள்ள வேண்டிய அவசியத்தின் வெளிப்பாடா எமது சமூக வெளிப்பாடா இது அமைகிறது.

உயிரோடு விளையாடாதீர்

உயிரோடு விளையாடாதீர் என்ற தலைப்பில் இன்றைய உதயன் நாளிதழின் ஆசிரியர் தலையங்கம் எழுப்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகள் கடந்தும் தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்க்கமான முடிவொன்றை கொழும்பு அரசால் காண இயலவில்லை என்று உதயன் நாளிதழ் குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கையின் புதிய அரசு தெற்கின், பௌத்த சிங்கள மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் அதிக நாட்டம் கொண்டுள்ளதே தவிர தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் அத்தகைய நாட்டம் கொள்ளவில்லை என்றும் அந்த நாளிதழ் குறிப்பிடுகிறது.

நான்கு நாட்கள் கடந்தும் அரசு முடிவெடுக்கவில்லை என்று கூறும் உதயன் நாளிதழ் தாமத்திற்கும் ஒவ்வொரு மணித்துளியும் பெறுமதி மிக்கவை என்று குறிப்பிட்டுள்ளதுடன் திலீபன் போன்றவர்களின் பட்டினிச் சாவால் ஏற்பட்ட விளைவுகளையும் தனது ஆசிரியர் தலையங்கத்தில் நினைவுபடுத்தியுள்ளது.

அரசியல் ரீதியான முடிவு தேவை

தொடரும் கைதிகளின் போராட்டம் என்ற தலைப்பில் எழுதப்பட்டிருக்கிறது இன்றைய வீரகேசரி நாளிதழின் ஆசிரியர் தலையங்கம்.

சிறைச்சாலைகளில் கைதிகள் போராட்டம் நடத்துவதும் அரசியல்வாதிகள் அங்கு சென்று வாக்குறுதி அளித்து பின்னர் கைதிகள் ஏமாற்றப்படுவதும் காலா காலமாக நடந்து வரும் நிகழ்வு என்று கூறுகிறது வீரகேசரி நாளிதழின் ஆசிரியர் தலையங்கம்.

இதன் காரணமாகவே இம்முறை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்தால் மாத்திரமே போராட்டத்தை கைவிடுவோம் என்ற தீர்க்கமான முடிவை கைதிகள் கொண்டிருப்பதாக சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் வீரகேசரி நாளிதழ் சுட்டிக்காட்டுகிறது.

கைதிகள் விடயத்தில் உறுதியான தீர்வு ஒன்று எட்டப்படுவதுடன் குறுகிய காலத்தில் அவர்களை விடுதலை செய்யும் ஒருபொறிமுறை தேவை என்றும் வலியுறுத்தும் அந் நாளிதழ் இனை அரசியல் ரீதியான முடிவின் அடிப்படையில் அணுக வேண்டும் என்றும் கூறுகிறது.

உங்கள் போராட்டமே உங்கள் விடுதலை

உண்ணா விரதம் இருக்கும் தமிழ் கைதிகளுக்கு ஒரு மடல் என்ற தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் தமிழர் தாயக்திலிருந்து வெளிவரும் வலம்புரி நாளிதழின் ஆசிரியர் தலையங்கம் உங்கள் போராட்டத்தின் மூலமே உங்களுக்கு விடுதலை என்றும் தெரிவிக்கிறது.

தமிழ் கைதிகள் சிறைகளில் வாழ்வதும் அவர்களின் குடும்பங்கள் மற்றும் உறவுகள் அவர்களை நினைத்து உருகி ஓடாகிப்போவதும் எங்கள் மண்ணில் நடக்கும் மிகப் பெரும் துன்பம் என்று கூறும் வலம்புரி நாளிதழ் தமிழ் அரசியல் தலைமைகள் கைதிகளுக்கு விடுதலைக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தனது குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது.

இதேவேளை தமிழ் அரசியல் கைதிகளே அவர்களின் விடுதலைக்கான உத்தரவாத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அதற்கு கைதிகளின் போராட்டம் உதவும் என்றும் நம்புவதாக வலம்புரி நாளிதழ் குற்பிபடுகிறது.

எவ்வாறெனினும் சாகும்வரை உண்ணா விரதம் என்ற முடிவை கைவிட்டு சுழற்சி முறையில் உண்ணா விரதத்தை மேற்கொள்ளுமாறும் வலம்புரி நாளிதழ் தன்னுடைய இன்றைய ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது.

மனிதாபிமான அணுகுமுறை தேவை

கைதிகள் உண்ணா விரதம் - மனிதாபிமான அணுகுமுறை தேவை என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது தமிழர் தாயகத்திலிருந்து வெளிவரும் யாழ் தினக்குரல் நாளிதழின் ஆசிரியர் தலையங்கம்.

யுத்தத்தில் நேரடியாக பங்குபற்றி போருக்குத் தலைமை தாங்கிய பலர் எந்தவித விசாரணைகளுமின்றி சுதந்திரமாக செயற்பட்டு வந்ததுடன் கடந்த ஆட்சியில் பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்தாகவும் தினக்குரல் நாளிதழ் குறிப்பிடுகிறது.

அரசியல் மாற்றம் ஒன்றுக்காக தமிழ் மக்கள் வாக்களித்துள்ள நிலையில் தமிழ் கைதிகளின் விடுதலை தொடர்பான உண்ணா விரத்தில் இலங்கை அரசு மனிதாபிமான முறையில் அணுகவேண்டும் என்பதே பரவலான எதிர்பார்ப்பு என்றும் தினக்குரல் நாளிதழின் ஆசிரியர் தலையங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கைதிகளின் விவகாரத்தை அரசியல் இலாபத்திற்காக எந்த தரப்பும் பயன்படுத்தக் கூடாது என்று குறிப்பிடும் யாழ் தினக்குரல் நாளிதழின் ஆசிரியர் தலையங்கம் பாரிய குற்றங்களில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் துவாரங்களை வைத்து தப்பிக்கொள்ள குற்றம் எதுவும் அறியாதவர்கள்கூட சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/124944/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.