Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2 வருட "பிரேக்"குக்குப் பின் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் திரும்பும்.. பிசிசிஐ அறிவிப்பு

Featured Replies

2 வருட "பிரேக்"குக்குப் பின் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் திரும்பும்.. பிசிசிஐ அறிவிப்பு
 
 
 
மும்பை: 2016ல் நடக்கும் 9வது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்குப் பதில் புதிய அணிகள் தற்காலிகமாக இடம் பெறும் என்றும், 2018ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸும், ராஜஸ்தானும் போட்டிக்குத் திரும்பும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
 
அடுத்த ஆண்டு நடைபெறும் 9வது ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகளுடன் போட்டிகள் நடைபெறும் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.
இதுதொடர்பான முடிவு இன்று மும்பையில் நடந்த கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
 
இதுகுறித்து பிசிசிஐ அறிக்கை கூறுகையில், நீதிபதி லோதா கமிட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதித்துள்ளது. எனவே 2016 மற்றும் 2017 ஆகிய இரு ஆண்டுகளில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் இந்த அணிகள் இடம் பெறாது. இதற்குப் பதில் புதிதாக இரண்டு அணிகள் தேர்வு செய்யப்படும்.
 
அவை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்குப் பதில் 2 ஆண்டுகளுக்கு விளையாடும். ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நீக்கப்படாது. மாறாக அவை 2018ம் ஆண்டு தடை முடிந்ததும் விளையாட அனுமதிக்கப்படும். 2016 மற்றும் 2017 தொடர்கள் 8 அணிகளுடன் நடைபெறும். 2018 முதல் 10 அணிகள் கொண்டதாக தொடர் மாறும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2016-2-new-teams-play-csk-rr-return-2018-after-ban-237993.html
  • தொடங்கியவர்

சென்னைக்கு 2 ஆண்டு ‘பிரேக்’ உறுதி

 

 

 


 

chennai team
மும்பை: பிரிமியர் தொடரில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பங்கேற்க முடியாது. புதிதாக இரண்டு அணிகள் இடம் பெற உள்ளன.

 

கடந்த 2013ல் நடந்த பிரிமியர் தொடரில் வெடித்த சூதாட்டம் குறித்து உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட லோதா குழு விசாரித்தது. இக்குழு சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தலா 2 ஆண்டுகள் தடை விதித்தது. இந்த அணிகளின் எதிர்காலம் குறித்து பல கேள்விகள் எழுந்தது. தொடரில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படலாம் என கூறப்பட்டது. இத்தீர்ப்பை ஆய்வு செய்ய முன்னாள் கேப்டன் கங்குலி, பிரிமியர் தொடர் தலைவர் ராஜிவ் சுக்லா உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு பணி குழு அமைக்கப்பட்டது.                         

உத்தரவு அமல்: இந்தச் சூழலில் மும்பையில் புதிய தலைவர் சஷாங்க் மனோகர் தலைமையில் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் லோதா குழுவின் உத்தரவை அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. சிறப்பு பணிக்குழுவின் பரிந்துரையும் ஏற்கப்பட்டது. இதன்படி, புதிய இரண்டு அணிகள் இணைய உள்ளன.                         

புதிய அணிகள்: இது குறித்து பி.சி.சி.ஐ., வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘ லோதா குழுவின் உத்தரவு முழுவதுமாக அமல்படுத்தப்படும். சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு தடை நீடிக்கும். இந்த இரு அணிகளுக்குப்பதில் வரும் தொடர்களில்(2016, 17) பங்கேற்க இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்படும். இதற்காக ‘டெண்டர்’ கோரப்படும். ஓய்வூதியம் பெறும் முன்னாள் வீரர்கள், அம்பயர்கள் பெயர்கள் வெளியிடப்படும். பி.சி.சி.ஐ.,யின் இணையதளத்தை மேம்படுத்துவதற்காக ரூ.25 லட்சம் ஒதுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது,’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.                   

சென்னை, ராஜஸ்தான் அணிகள் 2 ஆண்டுக்குப்பின் மீண்டும் தொடரில் இடம்பெறுவது குறித்து உறுதியான தகவல் தெரிவிக்கப்படவில்லை.             

மற்ற முக்கிய முடிவுகள் வரும் நவம்பர் மாதம் 9ம் தேதி நடக்கவுள்ள பி.சி.சி.ஐ., பொதுக்குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்படும்.

புதிய ‘ஸ்பான்சர்’: கடந்த 2013ல் பிரிமியர் தொடரின் ‘டைட்டில் ஸ்பான்சர்ஷிப்’ உரிமையை 5 ஆண்டுகளுக்கு (ரூ.397 கோடி) பெப்சி நிறுவனம் பெற்றது. சமீபத்தில் விலகுவதாக அறிவித்தது. இது குறித்து நேற்றைய பி.சி.சி.ஐ., செய்குழுவில் விவாதிக்கப்பட்டது.  பெப்சிக்குப்பதிலாக சீனாவை சேர்ந்த ‘வைவா மொபைல்ஸ்’ நிறுவனம் புதிய ஸ்பான்சராக தேர்வு செய்யப்பட்டது. இதற்கான வங்கி உத்தரவாதத்தை அடுத்த 10 நாட்களுக்குள் ‘வைவா’ நிறுவனம் தரவுள்ளது.

http://sports.dinamalar.com/2015/10/1445014509/chennaiteamcricket.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.