Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுலுக்கு வந்த 24 மணி நேரத்தில் 13 பேர் கடத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் முடிவெடுத்த 24 மணி நேரத்துக்குள் யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் 13 பொதுமக்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

வலிகாமம் கிழக்கில் உள்ள கல்வியங்காடு, கட்டப்பிராய், டச் வீதி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 9 பேரை ஆயுததாரிகள் கடத்திச் சென்றுள்ளனர். கடத்திச் சென்றவர்கள் சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என அப்பகுதி வாசிகள் தெரிவித்தனர்.

அதே இரவில் வலிகாமம் வடக்குப் பகுதியில் இருந்து மேலும் நால்வரை இராணுவம் கடத்திச் சென்றுள்ளனர். இது குறித்து யாழ். மனித உரிமை அமைப்பிடம் கடத்தப்பட்டவர்களது உறவினர்கள் புகார் செய்துள்ளனர்.

காணாமல் போனவர்களைத் தாங்கள் கைது செய்ததை இராணுவம் ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டது என்றும் அந்த உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வேளையில் தெல்லிப்பளை, அம்பனை பகுதியைச் சேர்ந்த தியாகலிங்கம் சுந்தரலிங்கம் (வயது 48) என்ற வர்த்தகரை இராணுவம் டிசம்பர் 3 ஆம் திகதி இரவு 11.50 மணியளவில் கடத்தியுள்ளது. அவரது வீடு சிறிலங்கா இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளது என்று அவரது மனைவி கமலாம்பிகை சுந்தரலிங்கம் தெரிவித்துள்ளார்.

தனது கணவரை படையினர் கடத்திச் சென்றனர். ஆனால் இது குறித்து இராணுவ அதிகாரிகளிடம் தாம் முறையிட்ட போது, தமது கணவர் குறித்த விவரங்களைத் தெரிவிக்க அவர்கள் மறுத்துவிட்டனர் என்று கமலாம்பிகை கூறினார்.

யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறியுடன் நேரடித் தொடர்பில் உள்ள இலங்கை மனித உரிமை அமைப்பின் அதிகாரிகள் சுந்தரலிங்கத்தின் கடத்தல் குறித்து விசாரித்துள்ளனர். ஆனால் இது குறித்த மேற்படி தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

thanks to : www.puthinam.com

வியாழன் 07-12-2006 20:32 மணி தமிழீழம் (சிறீதரன்)

24 மணி நேரத்தில் யாழ்பாணத்தில் 19பேர் கடத்தப்பட்டுள்ளார்கள்

ஹலோ ரஸ்ட் நிறுவன ஊழியர் உட்பட யாழ்குடாநாட்டில் கடந்த 48 மணிநேரத்தில் கல்வியன்காடு, கதிரப்பாய், வலிகாமம் டொச்வீதி ஆகிய இடங்களைச்சேர்ந்த 19 இளைஞர்கள் சிறீலங்கா படையினரால் சேர்ந்தியங்கும் ஆயுதக்குழுக்களால் கடத்தப்பட்டுள்ளதாக குடிசார்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை 9 இளைஞர்கள் கடத்தப்பட்டமை தொடர்பாக சிறீலங்கா மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. சிறீலங்கா இராணுவத்தின் தகவலின்படி இதுவரை தாம் அவ்வாறாக எவரையும் கைதுசெய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

இணுவிலில் பூசகரான முதியவர் வெள்ளை வான் கும்பலால் தாக்கப்பட்டார்.

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் வெள்ளை வான் மற்றும் இராணுவ ரக் கவச வாகணங்கள் சகிதம் சென்ற இரானுவத்தினர் வயது முதிர்ந்த பூசகர் ஒருவரைத் தாக்கி விட்டுச் சென்றுள்ளார்கள்.

கடந்த செவ்வாய் கிழமை இரவு 10.45 மணியளவில் குறிப்பிட்டவரின் வீட்டிற்குச் சென்ற இராணுவத்தினரும் ஈ.பிடி.பி ஆயுதக் குழுவினரும் இணைந்து வீட்டின் கதவுகளை உடைத்து உட்பிரவேசித்து குறிப்பிட்டவரைத் தாக்கி படுகாயமடைந்த நிலையில் கைவிட்டுச் சென்றுள்ளார்கள்.

இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியவர் க.சத்தியலிங்கம் வயது 50 என்பவராவர். இவர் தற்போது தனியார் வையித்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதே நேரம் இணுவில் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் இராணுவத்தினர் மற்றும் ஈ.பிடி.பி ஆயுதக் குழுவினரும் வெள்ளை வானில் நடமாடிவருவதாகவும் இதன் காரணமாக அப் பகுதியில் பெரும் அச்சமான நிலமை காணப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

-பதிவு

கந்தரோடையில் இரு இளைஞர்கள் கைது.

சுன்னாகம் கந்தரோடைப் பகுதியை சுற்றி வளைத்த இராணுவத்தினர் அப் பகுதியைச் சேர்நத இரண்டு இளைஞர்களை கைது செய்து கொண்டு சென்றுள்ளார்கள்.

கடந்த திங்கட்கிழமை காலையில் இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கையில் 513 படைத்தரப்பினர் ஈடுபட்டார்கள். குறிப்பி;ட்ட ஒரு சிறிய பிரதேசத்தை மட்டும் சுற்றி வளைத்த இராணுவத்தினர் சுமார் இரண்டு மணித்தயால சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கையுடன் திரும்பிச் சென்று விட்டார்கள்.

இவ் சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டவர்கள் கந்தரோடையைச் க.டீசரன் 25 வயது, மற்றும் செ.டிலக்சன் 24 வயது என்பவர்களே கைது செய்யப்ட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஒரு இளைஞனின் விட்டிற்குச் சென்ற இராணுவத்தினர் குறிப்பிட்ட இளைஞளை அழைத்துக் கொண்டு உடுவிலில் அமைந்துள்ள 513 படை கட்டளை முகாமுக்க கொண்டு வரும்படி பெற்றோர்களுக்கு கட்டளையிட்டுவிட்டும் சென்றுள்ளார்கள்.

-பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாலையில் ஆயுதக் குழுவைக் கண்டு

அஞ்சி ஓடிய சிறுமி மீது துப்பாக்கிச் சூடு!

யாழ். கல்வியங்காடு பகுதியில் சம்பவம்

அதிகாலை வீட்டின் பின்புறம் இயற் கைக் கடன் கழிக்கச் சென்ற சிறுமி ஒருத்தி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிக் காய மடைந்தார்.

யாழ்ப்பாணம், கல்வியங்காடுப் பகுதியில் புதிய செம்மணி வீதியில் இந்தச் சம்பவம் நேற்று விடிகாலை 2 மணி யளவில் இடம்பெற்றது. இச் சூட்டில் காலில் காயமடைந்த சிறுமி யாழ். மருத் துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிகள், கத்திகள், பொல்லு களுடன் சுமார் 30 பேரடங்கிய கும்பல் ஒன்று இரவுவேளை அப்பகுதியில் நட மாடியது என்று கூறப்படுகிறது.

குறிப்பிட்ட சிறுமி அதிகாலை எழுந்து இயற்றைக் கடன் கழிப்பதற்காக வீட்டின் பின்புறம் தனியே சென்றிருக்கிறார். அப் போது அந்த ஆயுதக் குழுவினரைக் கண் டிருக்கிறார். அச்சத்தால் திகைத்துப்போன சிறுமி அங்கிருந்து வீட்டை நோக்கி ஓடியவேளை அவரை நோக்கிச் சுடப்பட்டிருக்கிறது. இதனால், சிறுமிக்குக் காலில் காயம் ஏற்பட்டது.

ஆயுதக் குழுவினர் பின்னர் வீட் டின் வேலியைப் பிரித்துக் கொண்டு வெளி யேறிச் சென்றுள்ளனர்.

ஆயுதக் குழுவினர் யார், அவர்கள் என்ன நோக்கத்துக்காக அப்பகுதியில் வந்து மறைந்திருந்தனர் என்பது தெரிய வில்லை. இந்தச் சம்பவத்தால் அப்பகுதிக் குடியிருப்பா ளர்கள் பீதி அடைந்துள்ளனர்.

காக்கைதீவில் தமிழ் இளைஞர்

சுட்டுக் கொலை! மட்டக்குளி காக்கைதீவுப் பகுதியில் நேற்று முற்பகல் இடம்பெற்ற துப்பாக் கிச்சூட்டுச் சம்பவம் ஒன்றில் தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மற் றொரு இளைஞர் காயமடைந்தார்.

கடற்படையினரின் துப்பாக்கியைப் பறிக்க முற்பட்ட சமயமே இந்தச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றது என்று முதலில் கிடைத்த தகவல்கள் தெரிவித்தன.

பொலிஸார் வழங்கிய தகவல் ஒன்றின் பேரில் கடற்படையினர் அப்பகுதியில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த வேளை இந்தச் சம்பவம் இடம்பெற்றதா கக் கூறப்படுகிறது.

உயிரிழந்த மற்றும் காயமடைந்த இளைஞர்களின் பெயர் விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.