Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'முஸ்லிம்கள் வெளியேற் றப்பட்டது இனசுத்திகரிப்பு இல்லை: அது இனபாதுகாப்பே' - அரியநேத்திரன்

Featured Replies

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் மக்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றியமைக்கு தமிழ் மக்கள் வெட்கித் தலைகுனியத் தேவையில்லை. முஸ்லிம் மக்கள் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டமை இனசுத்திகரிப்பில்லை. இது இன பாதுகாப்பே என   முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.  அரியநேத்திரன் தெரிவித்தார்.fdf40f--jaffna-north-f30f.jpg

யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யாழ் முஸ்லிம் மக்களை விடுதலைப் புலிகள் கடந்த 1990ஆம் ஆண்டு வெளியேற்றியமைக்கு ஒவ்வொ
ரு தமிழரும் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்றும் இது ஒரு இனசுத்திகரிப்பு எனவும் கூறிய கருத்து தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அரியநே;திரன் இதனைத் தெரிவித்தார்.
 
 பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறிய கருத்தானது அவரின் சொந்தகருத்தே தவிர அது தமிழ்த் தேசியகூட்டமைப்பின் கருத்தல்ல. கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. அவரின் கருத்தை சிலர் ஏற்றுக்கொள்ளலாம் பலர் ஏற்காமலும் விடலாம்.

யாழ். முஸ்லிம் மக்களை விடுதலைப் புலிகள் இனசுத்திகரிப்பு செய்யவில்லை. இன பாதுகாப்புக்காகவே அவர்கள் பாதுகாப்பாக எந்த தாக்குதலும் இல்லாமல் வெளியேற்றப்பட்டார்கள்.

யாழ்ப்பாணத்தில் இவ்வாறு வெளியேற்றப் படுவதற்கான காரணத்தை ஒவ்வொருவரும் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

http://virakesari.lk/articles/2015/11/02/முஸ்லிம்கள்-வெளியேற்-றப்பட்டது-இனசுத்திகரிப்பு-இல்லை-அது-இனபாதுகாப்பே

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். முஸ்லிம் மக்களை விடுதலைப் புலிகள் இனசுத்திகரிப்பு செய்யவில்லை. இன பாதுகாப்புக்காகவே அவர்கள் பாதுகாப்பாக எந்த தாக்குதலும் இல்லாமல் வெளியேற்றப்பட்டார்கள்.

யாழ்ப்பாணத்தில் இவ்வாறு வெளியேற்றப் படுவதற்கான காரணத்தை ஒவ்வொருவரும் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.

எத்துணை தெளிவாக, துல்லியமாக விளங்கப்படுத்தினாலும் சிங்கள இனவாத அரசியல்வாதிகள், அவர்களுக்குச் சலாம் போட்டு அடிதொழுது தங்கள் பதவியைப் பாதுகாக்க முயல்பவர்கள் இதனை விளங்கிக்கொள்ளப் போவதில்லை. செவிடன் காதில் ஊதும் சங்குதான்...:( 

 

இவர் முன்னாள் ஆகியது இப்படிப்பட்ட அறிவால்தான் போலகிடக்கு .

புலிகளே தாங்கள் செய்தது பிழைஎன்று மன்னிப்பு கேட்டதுதான் வரலாறு ஆனால் வாலுகள் திருந்திய பாடாக காணவில்லை .

சிங்கள அரசியல்வாதிகள் இதையே தான் தமிழர்களுக்கு செய்யும் அநியாயத்தையும்  சொல்லுகின்றார்கள் 

சரியான நேரத்தில் முஸ்லிம்களை தமிழ் மக்கள் காப்பாற்றினர்
[ திங்கட்கிழமை, 02 நவம்பர் 2015, 08:50.50 AM GMT ] [ வலம்புரி ]
hakeem_pirapa_1.jpg
எண்பது வீதத்தை 12 வீதம் எதிர்த்தால், 12 வீதத்தை எட்டு வீதம் ஏன் எதிர்க்கக்கூடாது. இப்படிக் கேள்வி எழுப்பியவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள்.

80 வீதமான சிங்கள மக்களை 12 வீதமான தமிழர்கள் எதிர்க்கின்ற போது, 12 வீதமான தமிழர்களை 8 வீதமான முஸ்லிம்கள் ஏன் எதிர்க்கக் கூடாது என்று ரவூப் ஹக்கீம் கேள்வி எழுப்பியதற்குள் தமிழர்கள் தொடர்பில் முஸ்ஸிம் அரசியல் தலைமையிடம் இருந்த காழ்ப்புணர்வு வெளிப்படுகிறது.

வடபுலத்தில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றியமையால் அவர்கள் தமிழர்கள் மீது கோபம் கொண்டிருக்கலாம் என்று கருதுவதும் பொருத்தமுடையதன்று.

ஏனெனில் விடுதலைப் புலிகளுடன் ரவூப் ஹக்கீம் உடன்படிக்கை செய்தவர். விடுதலைப் புலிகளை ஏற்று இணங்கிக் கொண்ட ரவூப் ஹக்கீம் தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்தமை அவ்வளவு நல்லதல்ல.

வன்னிப் பெருநிலப்பரப்பில் மிகப்பெருமெடுப்பில் தமிழின அழிப்பு நடந்த போது, முஸ்லிம் மக்கள் அந்தக் கொடூரத்தைக் கண்டித்திருக்க வேண்டும்.

hakeem_pirapa_3.jpg

இருந்தும் வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த கொடூரங்கள் தொடர்பில் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் அமைப்புகளும் குறைந்தது தமது வருத்தத்தையேனும் வெளிப்படுத்தவில்லை.

இது தவிர, இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை என்று தமிழ் மக்கள் ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்திய போது, அதற்கு எதிராக-இலங்கை அரசுக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஜெனிவாவில் பிரசாரம் செய்தார். இலங்கை அரசுக்கு முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்கும் ஹக்கீம் உதவினார்.

hakeem_pirapa_2.jpg

எனினும் இன்று வரை தமிழ் மக்கள் அது பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. இருந்தும் சிறுபான்மைத் தமிழினத்திற்கு இன்னொரு சிறுபான்மை இனமான முஸ்லிம் மக்கள் நிச்சயம் உதவி செய்திருக்க வேண்டும்.

பரவாயில்லை ஆட்சியாளர்களுடன் சேர்ந்து செயற்படுவதே புத்திசாலித்தனமானது என்று கருதிய முஸ்லிம் தலைமைகளுக்கு தாங்கள் யார் என்பதை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­ச மிகத் தெளிவாகக் காட்டியிருந்தார்.

ஒரு கட்டத்தில் மகிந்த ராஜபக்­சவுக்கு முஸ்லிம் மக்கள் மீது கடும் வெறுப்பு ஏற்பட்டிருந்தது. அதனால் ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன் போன்றவர்களை மிக மோசமாக அவகெளரவப்படுத்தினார்.

தமிழ் மக்களை கடுமையாக எதிர்த்த மகிந்த ராஜபக்­சவுடன் முஸ்லிம் அரசியல் தலைமைகள் சேர்ந்து செயற்பட்டன. இருந்தும் அதற்கான பாடத்தையும் அவர்கள் மகிந்தவிடம் கற்றுக் கொண்டனர்.

ஆனால் ஒன்றை மட்டும் அடித்துக் கூறமுடியும். அதாவது முஸ்லிம் மக்கள் மீது தமிழர்கள் வெறுப்புக் கொண்டிருந்தால்-அவர்களை பழிதீர்க்க வேண்டும் என்று நினைத்திருந்தால் அதனை மகிந்த ராஜபக்­ மூலமாக செய்திருக்க முடியும்.

ஆம், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்­சவை ஆதரித்திருந்தால், அவரே ஜனாதிபதியாகியிருப்பார். அவர் ஜனாதிபதியானால் முஸ்லிம் மக்களுக்கு என்ன நடந்திருக்கும் என்பதை நாம் சொல்லி எவரும் அறியவேண்டிய தேவை இருந்திருக்காது.

தமிழ் மக்கள் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்ததால் இலங்கையில் முஸ்லிம் மக்களின் இருப்பு காப்பாற்றப்பட்டது.

இந்தப் பேருதவியைச் செய்தவர்கள் தமிழ் மக்கள் என்பதை முஸ்லிம் மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம்.

நன்றி தமிழ்வின்.கொம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.