Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குவார்ட்டர் பாட்டில் கொடுத்த மாணவி... திகைத்து நின்ற ஸ்டாலின்!

Featured Replies

குவார்ட்டர் பாட்டில் கொடுத்த மாணவி... திகைத்து நின்ற ஸ்டாலின்!

 

சென்னை: திமுக பொருளாளர் ஸ்டாலினிடம் மது பாட்டிலை கொடுத்து,  தமிழகத்தில் மதுவிலக்கைக் கொண்டுவர வேண்டும் என்று கல்லூரி மாணவி ஒருவர் கண்ணீரோடு கோரிக்கை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 தமிழகம் முழுக்க பொதுமக்களை நேரடியாகச் சந்திக்கும் 'நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம்'  மேற்கொண்டுள்ளார் ஸ்டாலின். அந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் காட்பாடி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டார்.

இன்று (புதன்) காட்பாடி கடைத்தெரு பகுதியை பார்வையிட்ட ஸ்டாலின்,  அங்கிருந்து மேல்விஷாரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது சில மாணவ மாணவிகள் எழுந்து குறைகளையும், அவருக்கு சில ஆலோசனைகளையும் கூறினர்.

satlin%20qwarter.jpg

அதற்கு பதிலளித்து ஸ்டாலின் பேசினார். கலந்துரையாடலின் நடுவே நிவேதிதா எனும் மாணவி எழுந்து,  ஸ்டாலினிடம் ஒரு குவாட்டர் பாட்டிலை நீட்டி,  "ஒவ்வொரு ஊரிலும் அந்தந்த ஊருக்கான சிறப்பு பொருட்களை உங்களுக்கு பரிசாக கொடுத்திருப்பாங்க. எங்க ஊர்ல சாராயம்தான் பிரபலம். இதனால்தான் எங்கப்பா செத்துப்போனார். சிறியவர், பெரியவர், பெண்கள் என்று யார் கேட்டாலும் சாராயம் கிடைக்கிறது. நீங்க ஆட்சிக்கு வந்தால் உடனே மதுவிலக்கை கொண்டுவாங்க" என்று கண்ணீரோடு கோரிக்கை வைத்தார்.

இதை பார்த்துத் திகைத்த ஸ்டாலின், அந்தப்பெண்ணுக்கு ஆறுதல் கூறி,  "இதை முன்னரே நாங்கள் அறிவித்துள்ளோம். ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் மதுவிலக்குக் கொண்டு வருவோம்!" என்றார்.

கல்லூரி மாணவி மது பாட்டிலுடன் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

http://www.vikatan.com/news/article.php?aid=54659

  • கருத்துக்கள உறவுகள்

மதுக்கடைகளை அளவு கணக்கின்றி ஆரம்பிச்சதே.. இந்த திமுக.. அதிமுக நாதாரிகள் தான். அதாவது தமிழினை பல வகைகளிலும் கூறுபோட்டு வேரழிக்க வந்த இந்த திராவிட நச்சுக் கும்பல். இதனை தமிழ் நாட்டில் தோற்கடித்து மாற்று அரசியல் சக்தியாக நாம் தமிழர் போன்ற தமிழ் மக்கள் நலன்.. உணர்வு பேணும் அரசியல் தலைமையை தமிழ் நாட்டில் ஆட்சியில் அமர்த்துவது தான் இதற்கு ஒரே தீர்வு. ஸ்ராலினை குசிப்படுத்த.. நீங்கள் தான் வெல்வீங்க என்று சொல்லிட்டு.. மதுக்கடைகள் திறந்த அவங்க கிட்டையே மூடுன்னு சொல்லி அழும் அவலம்.. உண்மையில் தமிழகத்தில் தமிழரின் பரிதாபத்தைக் காட்டுகிறது. ஈழத்தில் எம்மைக் கொன்றவனிடமே எமக்கு நீதி தா என்று கெஞ்சச் சொல்லி இருக்கும் பரிதாபம் போன்றது இது. தமிழனை தமிழன் பலத்தோடு ஆள முடியாமல் போனதால் வந்த வினை இவை. எனியும் அந்தத் தவறை தமிழர்கள் செய்யக் கூடாது. tw_angry:

  • தொடங்கியவர்

'அதனாலதான் மது பாட்டிலை எடுத்து போய் ஸ்டாலின் சார் கிட்ட பேசுனேன்...!'

 

நான் ஐந்தாவது படிக்கும் போது ஒரு நாள் எங்கப்பா விபத்துல இறந்துட்டதா சொல்லி என்னை nivedhitha%20pic.jpgஅழைச்சிட்டு போனாங்க. இனிமே எங்கப்பா எழுந்து வந்து என் கூட பேசமாட்டார், விளையாடமாட்டார், எங்கப்பா இனி இல்லைன்னு தெரிஞ்சு கதறி அழுதேன். எங்கப்பா இறந்ததுக்குக்  காரணம் இந்த கேவலமான குடிதான்.

அதனால்தான் ஸ்டாலின் சார்கிட்ட மது பாட்டிலை கொடுத்து, 'எப்படியாவது சாராய கடையை மூடுங்க!' ன்னு கேட்டுகிட்டேன்” என்று குடியினால் தன் வீட்டு குடி கெட்ட கதையைச்  சொல்கிறார் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவி நிவேதிதா.

வேலூரில் நடைபெற்ற ஸ்டாலினின் நமக்கு நாமே பயணத்தின் ஹைலைட்டே நிவேதிதாவின் பேச்சுதான்.

கலந்துரையாடல் முடிந்து ஸ்டாலின் கிளம்பும் போது அவரை அழைத்து. "ஒவ்வொரு ஊர்லயும் அந்தந்த ஊருக்கே ஃபேமஸான கம்பு, நெல்லுன்னு தந்திருப்பாங்க. எங்க வேலூர்ல ஒயின்ஷாப்தான் ஃபேமஸ்.  இதுக்கு என்ன சார் பண்ண போறீங்க...? சின்ன பசங்கள்ல இருந்து பெரியவங்க வரை யார் கேட்டாலும் சாராயம் கிடைக்குது. இதனாலதான் எங்கப்பா இறந்தார். இதுல இருக்கிறது சாராயம் இல்லை... பொம்பளைங்க கண்ணீர்” என்று சொல்லி மது பாட்டிலை ஸ்டாலினிடம் நீட்ட,

“இந்த கலாச்சாரத்தை ஒழிக்கதான் பூரண மதுவிலக்கை தேர்தல் அறிக்கையில் சேர்த்திருக்கிறோம். உங்க உணர்வுக்கு மதிப்பளிக்கிறேன். எங்கள் ஆட்சியில் மதுவிலக்கை கட்டாயம் கொண்டு வருவோம்” என்று ஸ்டாலின் சொல்லி செல்ல, அது ஊடகங்களில் வைரலானது.

இந்த நிலையில்தான் நிவேதிதாவை சந்தித்து பேச அவர் வீட்டிற்குச்  சென்றோம். அவரின் சித்தப்பா பராமரிப்பில்தான் வளர்கிறார். அவரின் அம்மா, லெதர் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து நிவேதிதாவின் கல்லூரி கட்டணத்திற்கு உதவி செய்கிறார்.

"என்ன நடந்தது?"  என்று கேட்டோம்.

“ஸ்டாலின் மக்களை சந்திச்சு குறைகள் கேட்கறத செய்திகள்ல பார்த்தேன். எங்க கல்லூரிக்கு வர்றது தெரிஞ்சது. இன்னைக்கு குடியால பல குடும்பம் சீரழிஞ்சு வருது. என்னோட குடும்பம் அதற்கு நேரடி உதாரணம். குடிக்கு எதிரா அழுத்தமா குரல் கொடுக்கனும்னு முடிவு பண்ணேன். அதனாலதான் என் உறவினர் மூலமா, மது பாட்டிலை வாங்கி எடுத்து போய் ஸ்டாலின் சார்கிட்ட பேசுனேன்.

எங்கப்பா கட்டட தொழில்ல இருந்தவர். ஜாலிக்காக அப்பப்போ குடிக்க ஆரம்பிச்சிருக்கார். ஒரு கட்டத்துல குடிக்கு அடிமையாகிட்டார். அந்தளவுக்கு அவரை குடி அடிமைப்படுத்திடுச்சு. இதனால சரியா வேலைக்கு போறதில்லை. வேலை கிடைக்கிறது குறைஞ்சு போச்சு. எங்கம்மா எவ்வளவோ சொல்லியும் கேட்கலை. தினமும் குடிக்க காசு வேணுமே. காசு இல்லாததால அப்செட்டாகிட்டார். என்னோட இயல்பான அப்பாவே மாறிப் போய்ட்டார். இப்படியிருந்த சமயத்துலதான் குடிச்சிட்டு வண்டில போகும் போது விபத்துல சிக்கி இறந்து போய்ட்டார். 

அதற்கு பிறகு எங்க குடும்பத்துக்கு சித்தப்பாதான் உதவியா இருக்கார். அவரும் இல்லனா நாங்க நொடிச்சி போயிருப்போம். நான் ஸ்டாலின் சார்கிட்ட சாராய பாட்டிலை தந்ததை நெட்ல காமெடியாக்கி ஷேர் செய்றாங்க. அந்த வலி அவங்க அம்மாவோ, தங்கச்சியோ, பொண்ணோ அனுபவிக்கும்போதுதான் தெரியும். இன்னைக்கு யார் வேணும்னாலும் ஈசியா வாங்கி குடிக்கிற நிலைமை தமிழ்நாட்டுல வந்திடுச்சு. எவ்ளோ யங்ஸ்டர்ஸ் ஜாலிக்கு, விளையாட்டுக்குன்னு ஆரம்பிச்சு, வாழ்க்கையே தொலைக்கிறாங்க.

சாராய பாட்டில் இல்லாம தமிழ் சினிமாவே இல்லை. அதனால மொத்தமா தமிழ்நாட்ல மதுவை தடை பண்ணணும் ” என்று படபடவென சொல்லி முடித்தார்.

மது நிச்சயம் அழிக்கப்பட வேண்டிய ஒன்று!

http://www.vikatan.com/news/article.php?aid=54705

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.