Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீமை கருவேல மரத்துக்கு தடை விதிக்க அரசு பரிசீலனை: முற்றிலும் அழிக்க பல வழிகளில் ஆய்வு

Featured Replies

 

அபாயமானதாக கருதப்படும் சீமை கருவேல மரங்களை தடை செய்வது குறித்து, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. தமிழகம் முழுவதும் இந்த மரங்களை அழித்து, மீண்டும் வளர விடாமல் எப்படி தடுப்பது என்பது குறித்து, பலவழிகளில் அரசு ஆராய்ந்து வருகிறது; நிபுணர்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது.

'சீமை கருவேலம் எனப்படும் வேலி காத்தான் மரங்கள், தமிழகம் முழுவதும் புற்றீசல் போல் வளர்ந்துள்ளன. இதன் அருகில் உள்ள தாவரங்கள் பாதிக்கப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. இந்த மரங்களால் எந்த பயனும் கிடையாது. 'இதன் இலைகளை, ஆடு, மாடு போன்ற கால்நடைகள் கூட சாப்பிடுவதில்லை. விறகுக்காக மட்டும் பயன்படும் இந்த மரங்களால், சுற்றுச்சூழல் கெடுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. எனவே, அவற்றை தடை செய்ய வேண்டும்' என, இயற்கை ஆர்வலர்கள் பல காலமாக போராடி வருகின்றனர். அதற்கான காலம் இப்போது தான் கணிந்து வருகிறது.
 

பணி முடுக்கம்:


'சீமை கருவேல மரங்களை அழிக்கவேண்டும்' என்ற வழக்கை விசாரித்து வரும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, அவற்றை அழிப்பதற்காக விரிவான திட்ட அறிக்கையை, எட்டு வாரத்துக்குள் தயாரித்து தரக் கூறிஉள்ளது. இது தொடர்பாக, வனம், வேளாண்மை, வருவாய், பொதுப்பணி மற்றும் ஊரக வளர்ச்சி துறைகளை, தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது. இந்நிலையில், சீமை கருவேல மரங்களை அகற்றுவதில், புதிய சிக்கல் எழுந்துள்ளது.

இதுகுறித்து அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகளை முழு அளவில் செயல்படுத்த பெரும்தொகை தேவை. எனவே, அதற்காக தனி கருத்துரு தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சமீபத்தில், தலைமைச் செயலர் ஞானதேசிகன் தலைமையில் நடந்த பல துறை அதிகாரிகள் பங்கேற்ற, மாநில அளவிலான ஆய்வுக் கூட்டத்தில், இதுபற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கேரளாவை போல், தமிழகத்திலும், சீமை கருவேல மரத்துக்கு தடை விதிக்கலாமா என்றும்
பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அதற்காக கேரளாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள அரசு உத்தரவை பார்த்து, அதில், என்னென்ன வழிமுறைகள் கையாளப்பட்டுள்ளன என ஆராய வேண்டியுள்ளது.
 

சிக்கல்:

ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற சில மாவட்ட அதிகாரிகள், 'கருவேல மரங்களை, புகை மூட்டம் போட்டு, கரியாக மாற்றி விற்கும் தொழிலில், ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். அங்கு, சீமை கருவேல மரங்களை அகற்ற எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது' என்றனர்.அதனால், சீமை கருவேல மரத்தை முழுவதுமாக தடை செய்வதில் சிக்கல் உள்ளது. எனினும், மாற்று ஏற்பாடுகள் செய்ய முடியுமா என ஆராய்ந்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1381556

 

  • கருத்துக்கள உறவுகள்

பூமியின் நிலததடி நீரை நோக்கி  800 அடி ஆழத்துக்கு இதன் வேர்கள் பரவும் வல்லமை உள்ளது இம்மரம், அழிப்பது என்பது சந்தேகமே .

  • 9 months later...
  • தொடங்கியவர்

பொது இடங்களில் கருவேல மரங்களை அழிக்கும் பணி தொடக்கம்

 

காரைக்காலில் பொது இடங்கள், சாலையோரங்களில் வளர்ந்திருக்கும் கருவேல மரங்களை அழிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

காரைக்கால் மாவட்டத்தில் கருவேல மரங்கள் சாலையோரப் பகுதியிலும், அரசு அலுவலக வளாகம் உள்ளிட்ட பொது இடங்களில் வளர்ந்திருக்கின்றன. சாலையோரங்களில் உள்ள கருவேல மரங்களால், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாக புகார் கூறப்படுகிறது. மண்டிக் கிடக்கும் கருவேல மரங்கள் பகுதியில் பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

இதையடுத்து, காரைக்கால் மாவட்டம் முழுவதும் கருவேல மரங்களை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

இதையடுதது, பொதுப் பணித் துறை நிர்வாகம் இதை சீரமைக்க கவனம் செலுத்துமாறு புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் உத்தரவிட்டிருந்தார். இதற்கு, முதல்கட்டமாக ரூ.6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, திருநள்ளாறு பகுதியில் திட்டப் பணியை அமைச்சர் தொடங்கிவைத்தார். திருநள்ளாறு பிரதான சாலை முதல் அம்பகரத்தூர் வரையிலான பகுதி, பேட்டை, அத்திப்படுகை, அகலங்கண்ணு உள்ளிட்ட பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, காரைக்காலின் பிற பகுதிகளிலும் கருவேல மரங்கள் அழிக்கும் பணி மேற்கொள்ளப்படும் என பொதுப் பணித் துறையினர் தெரிவித்தனர்.  இப் பணி தொடக்க நிகழ்ச்சியில் பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளர் பி.சுவாமிநாதன், கண்காணிப்புப் பொறியாளர் வி.சண்முகசுந்தரம், செயற்பொறியாளர் ஏ.ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

http://www.dinamani.com/edition_villupuram/puducherry/2016/08/09/பொது-இடங்களில்-கருவேல-மரங்க/article3570749.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.