Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிம்பாப்வே எதிர் பங்களாதேஷ் ஒரு நாள் தொடர்

Featured Replies

காயம் காரணமாக சர்கர் விலகல்

November 07, 2015

சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார் பங்களாதேஸ் அணியின் நட்சத்திர வீரரான சர்கர்.

2
நடப்பு வருடத்தில் இதுவரை 672 ஓட்டங்களை குவித்துள்ள சர்கர் இந்தியா, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் அணிகளை பங்களாதேஸ் வீழ்த்த முக்கிய காரணமாக திகழ்ந்தவர். தற்போழுது சிம்பாப்வே அணி பங்களாதேஸில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் ஆட்டங்கள் மற்றும் இரண்டு ரி-20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

ஒருநாள் ஆட்டம் இன்று ஆரம்பமாகிறது. இதற்காக சர்கர் நேற்றுமுன்தினம் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது பந்து வீசி பயிற்சி எடுக்கும்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த காயத்திற்காக அவர் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டியிருக்கும்.

ஆகையால் அவர் சிம்பாப்வே தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக கையிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆட்டம் இலங்கை நேரப்படி ஒரு மணிக்கு ஆரம்பமாகும்.

http://www.onlineuthayan.com/sports/?p=3134&cat=2

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

முதல் ஒருநாள் போட்டி : ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது வங்கதேசம்

 

Tamil_DailyNews_9481579065323.jpg

 

மிர்பூர்: ஜிம்பாப்வே அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், வங்கதேச அணி 145 ரன் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசியது. வங்கதேசம் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 273 ரன் குவித்தது. முஷ்பிகுர் ரகிம் 107 ரன் (109 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்), சபிர் ரகுமான் 57, தமிம் இக்பால் 40 ரன் விளாசினர். அடுத்து 50 ஓவரில் 274 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியது. அந்த அணி 36.1 ஓவரிலேயே 128 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

கேப்டன் எல்டன் சிகும்புரா அதிகபட்சமாக 41 ரன் எடுத்தார். லூக் ஜாங்வே 39, கிரீம் கிரீமர் 15 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். வங்கதேச பந்துவீச்சில் ஷாகிப் அல் ஹசன் 5, மோர்டசா 2, அல் அமின், நசீர் உசேன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். முஷ்பிகுர் ரகிம் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேசம் 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி தாக்காவில் நாளை நடைபெறுகிறது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=177498

  • தொடங்கியவர்

12227805_1059267404092500_71706161227021

3 ஒருநாள் போட்டிகளையும் வென்று தொடரை பங்களாதேஷ்  3-0 என்ற ரீதியில் கைப்பற்றியது.

  • தொடங்கியவர்

3வது ஆட்டத்திலும் வெற்றி: தொடரை வென்றது வங்கதேசம்

 
பந்தை பவுண்டரிக்கு விளாசிய தமிம் இக்பால், படம்: ஏஎஃப்பி.
பந்தை பவுண்டரிக்கு விளாசிய தமிம் இக்பால், படம்: ஏஎஃப்பி.

வங்கதேசம்-ஜிம்பாப்வே அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. முதல் இரு ஆட்டங்களிலும் வங்கதேசம் வெற்றி பெற்று தொடரை தன்வசமாக்கியது. இந்நிலையில் கடைசி ஆட்டம் மிர்பூரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த வங்கதேசம் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்களான தமிம் இக்பால், இம்ருல் கெய்ஸ் ஆகியோர் தலா 73 ரன்கள் சேர்த்தனர்.

இந்த ஜோடி முதல் விக்கெட் டுக்கு 147 ரன்கள் எடுத்தது. லிட்டன் தாஸ் 28, முகமதுல்லா 52, சபீர் ரஹ்மான் 1, நசிர் ஹோஸைன் 0, மோர்ட்டஸா 16, அராபத் 3 ரன் எடுத்தனர். ஜிம்பாப்வே தரப்பில் ஷிக்கும்புரா, கிரிமர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த ஜிம் பாப்வே 43.3 ஓவரில் 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேசம் 3-0 என தொடரை வென்றது.

http://tamil.thehindu.com/sports/3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/article7868812.ece

  • தொடங்கியவர்
பங்களாதேஷுக்கு ஐந்தாவது தொடர் வெற்றி
2015-11-13 15:31:48

சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் பங்­க­ளாதேஷ் தொடர்ச்­சி­யான ஐந்­தா­வது தொடர் வெற்­றியை ஈட்­டி­யுள்ளது.

 

ஸிம்­பாப்­வேக்கு எதி­ராக டாக்­காவில் புதன்­கி­ழமை நிறைவு பெற்ற சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 3–0  என்ற ஆட்டக் கணக்கில் வெள்­ளை­ய­டிப்பு செய்­த­து டன் இந்த சாத­னையை பங்­க­ளாதேஷ் நிலை­நாட்­டி­யது.

 

1324837.jpg

 

இந்த ஐந்து தொடர் வெற்­றி­க­ளையும் பங்­காதேஷ் தனது சொந்த மண்­ணி­லேயே பதிவு செய்­துள்­ளது.

 

2014 நவம்­பரில் நடை­பெற்ற சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஸிம்­பாப்­வேயை 5–0 என துவம்சம் செய்த பங்­க­ளாதேஷ் அதனைத் தொடர்ந்து இவ் வருடம் பலம்­வாய்ந்த மூன்று நாடு­க­ளான பாகிஸ்தான் (3–0), தென் ஆபி­ரிக்கா (2–1), இந்­தியா (2–1), ஸிம்­பாப்வே (3–0) ஆகி­ய­வற்றை வெற்­றி­கொண்­டுள்­ளது. 

 

இதற்கு முன்னர் 2006, -2007, 2009 ஆகிய வரு­டங்­களில் பங்­க­ளாதேஷ் நான்கு தொடர்­களில் தொடர்ச்­சி­யாக வெற்­றி ­பெற்­றி­ருந்­தது. 

 

மேலும் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இவ் வரு­டத்­திற்­கான இரு­த­ரப்பு தொடர்­களில் தோல்­வி­யு­றாத அணி என்ற பெரு­மையை பங்­க­ளதேஷ் இற்­றை­வரை கொண்­டுள்­ளது.

 

ஸிம்­பாப்­வேக்கு எதி­ரான இரு­த­ரப்பு சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முத­லா­வது போட்­டியில் 145 ஓட்­டங்­க­ளாலும் இரண்­டா­வது போட்­டியில் 58 ஓட்­டங்­க­ளாலும் வெற்­றி­பெற்ற பங்­க­ளாதேஷ், மிர்­பூரில் நேற்­று­ முன்­தினம் நடை­பெற்ற மூன்­றா­வதும் இறு­தி­யு­மான போட்­டியில் 61 ஓட்­டங்­களால் வெற்­றி­பெற்­றது.

 

தமிம் இக்பால், இம்ருள் கயெஸ் ஆகிய இரு­வரும் அரைச் சதங்­க­ளுடன் ஆரம்ப விக்­கெட்டில் பகிர்ந்த 147 ஓட்­டங்கள், மஹ்­மு­துல்­லாஹ்வின் அரைச் சதம், முஸ்­தாஃ­பிஸுர் றஹ்­மானின் துல்­லி­ய­மான பந்­து­வீச்சு என்­பன பங்­க­ளா­தேஷின் வெற்­றியில் பிர­தான பங்­காற்­றி­யி­ருந்­தன.

 

இந்­தி­யா­வுக்கு எதி­ராக ஜூன் மாதம் நடை­பெற்ற சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அறி­மு­க­மாகி முதல் இரண்டு போட்­டி­க­ளிலும் முறையே 5 விக்­கெட்­க­ளையும் 6 விக்­கெட்­க­ளையும் வீழ்த்தி பங்­க­ள­தேஷின் வெற்­றிக்கு வித்­திட்ட முஸ்­தாஃ­பிஸுர் ரஹ்மான், நேற்­று­ முன்­தி­னமும் மூன்­றா­வது தட­வை­யாக 5 விக்­கெட்­களைக் கைபற்­றினார்.

 

எண்­ணிக்கை சுருக்கம்
பங்­க­ளாதேஷ் 50 ஓவர்­களில் 276–9 விக். (தமிம் இக் பால் 73, இம்ருள் கயேஸ் 73, மஹ்­மு­துல்லாஹ் 52, லூக் ஜொங்வே 50–2 விக்., க்ரேம் க்ரேமர் 53–2 விக்.)
ஸிம்பாப்வே 43.3 ஓவர்களில் 215 (சோன் விலியம்ஸ் 64, எல்டன் சிக்கும்புரா 45, மெல்கம் வோக்கர் 32, முஷ்ஃ பிஸுர் ரஹ்மான் 34–5 விக்.)
ஆட்டநாயகன்: தமிம் இக்பால்,

தொடர்நாயகன்: முஷ்ஃ பிக்குர் ரஹிம்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=13248#sthash.00efmcDi.dpuf
  • தொடங்கியவர்
 
சிம்பாப்வேயை வென்றது பங்களாதேஷ்
 
 

article_1447432143-226809%20-%20Copy%20-பங்களாதேஷ், சிம்பாப்வே அணிகளுக்கிடையில் மிர்பூர் ஷேர் பங்களா தேசிய அரங்கில் இன்று ஆரம்பமான இரண்டு போட்டிகள் கொண்ட இருபது-20 சர்வதேசப் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணித் தலைவர் மஷ்ரபி மோட்டார்சா, சிம்பாப்வே அணியைத் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார். இன்றைய போட்டியில், பங்களாதேஷ் அணி சார்பாக 20 வயதான புறச் சுழற்பந்து வீச்சாளர் ஜுபைர் ஹொசைன், இருபது-20 சர்வதேசப் போட்டிகளில் அறிமுகத்தை மேற்கொண்டார்.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 19.3 ஓவர்களில் சகல விக்க்கெட்டுக்களையும் இழந்து 131 ஓட்டங்களை பெற்றது. ஒரு கட்டத்தில் அவ்வணி, 10 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்தபோதும், சிம்பாப்வே அணி சார்பாக இருபது-20 சர்வதேசப் போட்டிகளில் வேகமாக பெற்ற அரைச்சதமாக இருந்த 21 பந்துகளில் அணித்தலைவர் எல்டன் சிக்கும்புராவின் சாதனையை முறியடித்து, 20 பந்துகளில் அரைச்சதத்தை பூர்த்தி செய்த மல்கொம் வோலரின் அதிரடி காரணமாகவே அவ்வணி, இந்த ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றிருந்தது.

துடுப்பாட்டத்தில் சிம்பாப்வே அணி சார்பாக மல்கொம் வோலர் 31 பந்துகளில் ஆறு, 6 ஓட்டங்கள், நான்கு, 4 ஓட்டங்கள் உள்ளடங்கலாக 68 ஓட்டத்தைப் பெற்றார்.

பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக முஷ்டாபிஸூர் ரஹ்மான், அல்-அமின் ஹொசைன், மஷ்ரபி மோட்டார்சா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்‌களை கைப்பற்றினர். அறிமுகப் பந்துவீச்சாளர் ஜுபைர் ஹொசைன், முதலாவது ஓவரில் 20 ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்தாலும், இரண்டாவது ஓவரில் அவரும் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார். தவிர, நசிர் ஹொசைன், மஹ்முதுல்லா ஆகியோரும் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

பதிலுக்கு 132 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 17.4 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. ஒரு கட்டத்தில், அவ்வணி 80 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை இழந்திருந்த போதும், மஹ்முதுல்லா, லிட்டன் தாஸ், மோட்டார்சா அவ்வணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர்.

துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பாக தமீம் இக்பால் 31, மஹ்முதுல்லா ஆட்டமிழக்காமல் 22, சபீர் ரஹ்மான் 18, லிட்டன் தாஸ் 17, நசிர் ஹொசைன் 16, மோட்டார்சா ஆட்டமிழக்காமல் 15 ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில் சிம்பாப்வே அணி சார்பாக சிறப்பாக செயற்பட்ட கிரேமி கிறீமர் 3 விக்கெட்டுக்களையும் டெண்டாய் சிஸோரோ 2 விக்க்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

போட்டியின் நாயகனாக சிம்பாப்வே அணியின் மல்கொம் வோலர் தெரிவானார். 

- See more at: http://www.tamilmirror.lk/159056#sthash.YWkSVruW.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அதிக களத்தடுப்பாளர்களை குவித்த அணி- பங்களாதேஷ்

November 14, 2015

6

சிம்பாப்வேக்கு எதிரான மூன்றாவதும் இறுதியானதுமான ஒருநாள் ஆட்டத்தில் பங்களாதேஷால் வகுக்கப்பட்ட களத்தடுப்பு வியூகமே இது. இதன் மூலம் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு அடுத்த படியாக ஸ்லீப்ஸ் திசையில் அதிக களத்தடுப்பாளர்களை குவித்த அணி என்ற பெருமையைப் பெறுகிறது பங்களாதேஷ்.

http://www.onlineuthayan.com/sports/?p=3498&cat=2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.