Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேதாளம் விமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தல ரசிகர்கள் இந்த தீபாவளியை தல தீபாவளியாய் சரவெடியுடன் வேதாளம் படத்தை மிக பிரம்மாண்டமான முறையில் வரவேற்க தொடங்கியுள்ளனர்.

வீரம் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவா- அஜித் கூட்டணி மீண்டும்வேதாளம் மூலம் இணைந்ததால் பலத்த எதிர்பார்ப்பு எழுந்தது. இத்தனைக்கும் வேதாளம் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் தவிர வேறு எதுவும் ப்ரொமோஷ்னுக்காக படக்குழு செய்யவில்லை அப்படி இருந்தும் இவ்வளவு அலைமோதும் கூட்டம் யாருக்காக?ஒருவருக்காக அது தல.

கதை

படத்தின் ஓப்பனிங்கே இத்தாலியில் வில்லன் ராகுல் தேவ் வுடன் ஆரம்பமாகிறது வேதாளம். ஒரு சர்வதேச குற்றவாளியான ராகுல் தேவ் வை ஒரு ராணுவ அதிகாரி தன் கூட்டத்துடன் பிடிக்க முயற்சி செய்து தோல்வியில் உயிரைவிடுகிறார், ஆனால் உயிரை விடும் போது "உன்னை எதிர்க்க என்னை போல் ஒரு நல்லவன் வருவான் டா என்ற வீர வசனத்துடன் உயிரை விட அடுத்த நொடியே கொல்கத்தா பயணமாகிறது படம்.

தன் தங்கை லக்ஷ்மி மேனன் படிப்புக்காக அஜித் கொல்கத்தா வர, அங்கு சூரியின் உதவியோட டாக்ஸி டிரைவர் வேலை செய்கிறார். ரொம்ப சாதுவாக தங்கை மீது அதிதம் பாசம் கொண்ட அண்ணனாக இருக்கிறார் , இடையில் ஸ்ருதிஹாசன் வக்கீலாகவும் படத்தின் காமெடி க்காகவும் அடிக்கடி வந்து செல்கிறார். இதனிடைய கொல்கத்தா போலீஸ் தீவிரமாக தேடும் ராகுல் தேவ் வின் தம்பியை டாக்ஸி டிரைவரான அஜித் போலீசிடம் பிடித்து கொடுக்கிறர் .

இதனால் கடுப்பான ராகுல் தேவ் வின் தம்பி அஜித்தை கடத்தி தன் இடத்தில் போட்டு தள்ளுமாறு திட்டம் தீட்ட அப்போது எதிர்பார்க்காத வகையில் விஸ்வரூபம் எடுக்கிறார் அஜித். நீ என்னை கடத்தி வரவில்லை நானே தான் வந்தேன் என்ற வசனத்துடன் ராகுல் தேவ் வின் தம்பியை அஜித் போட்டு தள்ள அங்கிருந்து ஜெட் வேகத்தில் பறக்கிறது திரைக்கதை.

சாதுவான அஜித் தீடிரென்று விஸ்வரூபம் எடுப்பது ஏன் ? தங்கையிடம் மட்டும் பயந்த சுபாவமுள்ளவாறு இருப்பது ஏன் ? யார் இவர் ? எதற்காக வில்லன்களை துரத்துகிறார் போன்ற பல முடிச்சுகளுடன் நகர்கிறது வேதாளம்.

நடிகர் , நடிகை பங்களிப்பு

அஜித் நடித்த படங்களில் இது வரை பண்ணாத ஒரு சைக்கோத்தனமான கதபாத்திரத்தில் நம்மை அஜித் மிரட்டுவது உறுதி. வில்லன் ஆட்களுடன் அவர் மோதும் காட்சி அனல் பறக்கிறது, குறிப்பாக அவர் வில்லன் ஆட்களுடன் மோதும் போது அவர் செய்யும் முகபாவனை அட அட.

அதன்பின் சில சென்டிமெண்ட் காட்சியில் நம் தொண்டையை கனமாக்குகிறார் அஜித். லக்ஷ்மி மேனன்-ஐ சுற்றி தான் இந்த படம் நகர்கிறது , உண்மையில் தங்கையாக நடித்து விட்டோமே என்பதற்கு வருத்தபடுவதற்கு வேலை இல்லாமல் தன் கதாபாத்திரத்தில் யாதார்த்த நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். மற்ற படங்களில் நடித்ததை விட இப்படத்தில் நடித்து அதிக ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

சுருதிஹாசன் படத்திற்கு ஒரு அழகு தேவதை என்று வைத்திருக்கிறார்கள் என்று நினைத்தால் படத்தில் ஒரு முக்கியமான காட்சி திருப்பத்திற்கு காரணமாக அமைகிறார் ஸ்ருதிஹாசன்.

சூரி சில இடங்களில் சிரிக்க வைத்தாலும் பல இடங்களில் கடுப்புதான் வருகிறது. இப்படத்தில் கோவைசரளா , சுவாமிநாதன் ,பாலசரவணன் , ரமேஷ், மொட்டை ராஜேந்திரன் போன்ற பல நடிகர்கள் இருந்தாலும் அவர்களுக்கான இடம் குறைவு தான் , இருந்தாலும் தங்கள் பங்கை சரி வர செய்துள்ளனர்.

க்ளாப்ஸ்

அஜித் தன் நடிப்பால் இந்த படத்தை ஒரு படி நிமிர செய்கிறார். இப்படம் பழைய கதையாக இருந்தாலும் கொஞ்சமும் விறுவிறுப்பு குறையாமல் கொண்டு சென்ற சிவா வின் திரைக்கதை. குறிப்பாக "நீ கெட்டவன் நா நான் கேடுகெட்டவன் போன்ற வசனத்துக்கு கைதட்டல் அள்ளுகிறது அனிருத்தின் பாடல்கள் படம் வெளிவரும் முன்பே செம்ம ஹிட் , இன்று ஆலுமா டோலுமா பாடலுக்கு விசில் பறக்கிறது மற்றும் பின்னணி இசையிலும் கலக்கியுள்ளார்.

குறிப்பாக எடிட்டர் ரூபனின் வேலை பற்றி சொல்லியே ஆக வேண்டும், இப்படத்தின் மிக பெரிய பலம் அவரின் எடிட்டிங் ஸ்டைல். ஒளிப்பதிவாளர் வெற்றி காட்டிய இத்தாலி , கொல்கத்தா , சென்னை போன்ற இடங்களும் சரி சண்டை காட்சிகளிலும் சரி நம்மை மிரள வைத்துள்ளார்.

பல்ப்ஸ்

இந்த படத்தில் புதிதாக கதையில் சொல்ல எதுவுமே இல்லை, பார்த்து பழகி போன கதை தான். தெலுங்கு வாடை அதிகமாக உள்ளது போல் தெரிகிறது. படத்தில் வரும் வில்லன் ஆட்களின் தேர்வு மனதில் ஒட்டவில்லை. குறிப்பாக அவர்களின் லிப் சின்க் ஒழுங்காக இல்லை

இயக்குனர் சிவா அஜித் என்ற மாஸ் ஹீரோவை பல டைமென்ஷன்களில் நடிக்கவும் வைத்து மற்றும் குடும்பங்களுடன் கொண்டாடும் வகையில் இந்த படத்தை கொடுத்துள்ளார் .

மொத்தத்தில் வேதாளம் - மசாலா கலந்த அதிரடி பாசமலர்

http://www.cineulagam.com/

Vedhalam movie Copied from sarathkumar in "Yeeii" 'ஏய்' Movie ;-

சரி படத்துக்கு வருவோம்!!

நான் ஒரு படத்தின் கதையை சொல்றேன். கவனமா படிங்க. பத்து வருடத்துக்கு முன்பு சரத்குமார் நமீதா (ஸ்ஸ்ஸ்ஆஆஆஆ) நடித்த ஏய்ன்னு ஒரு படம். வடிவேலு காமெடி கூட செமயா இருக்கும்.

பழனியில் சரத் டியுப் லைட் விற்பவராக வருவார். அவருடன் இணைந்து வடிவேலு தொழில் பண்ணுவார். அவருக்கு ஒரு தங்கச்சி, தங்கச்சிக்காக உயிரையே கொடுப்பார். தங்கச்சி கலெக்டருக்கு படிக்க வைக்க வேண்டுமென்பதற்காக சிரமப்பட்டு படிக்க வைப்பார். கோவமே படாமல் சிரித்த முகத்துடன் வடிவேலுவை இணையாக வைத்து காமெடி செய்து வருவார்.

தங்கச்சிக்கு பிரச்சனை கொடுப்பதால் வின்சென்ட் அசோகனை போட்டு பெரட்டி எடுத்து தான் பயங்கர பலசாலி என்பதை பார்வையாளர்களுக்கு நிரூபிப்பார். இடைவேளையில் நமீதா ஒரு உண்மையை கண்டுபிடிக்க சரத்துக்கு தங்கச்சியே கிடையாது, அவர் வளர்ப்பு தங்கச்சி என்று ட்விஸ்ட் வைப்பார்கள்.

இப்போ வேதாளம் படத்தின் கதை. அஜித் கொல்கத்தாவில் டாக்ஸி ஓட்டும் அப்பாவி, சூரி டாக்ஸியின் ஓனர். கோவமே வராத சாது, அப்பாவி, தங்கையான லட்சுமிமேனனை படிக்க வைக்க சிரமப்படும், தங்கை மேல் உயிரையே வைத்து இருக்கும் ஒரு அன்பு அண்ணன்.

ஒரு கெட்டவனை போலீஸில் காட்டி கொடுத்து விட்டு அதற்காக வில்லன்களிடம் சாக இருக்கும் போது எல்லாரையும் போட்டு பெரட்டி எடுத்து தான் பயங்கர பலசாலி என்பதை பார்வையாளர்களுக்கு நிரூபிப்பார். ஸ்ருதி அஜித் பயங்கர கொலைகாரன் என்பதை கண்டு பிடிக்க அஜித்துக்கு தங்கச்சியே கிடையாது, அவர் வளர்ப்பு தங்கச்சி என்று ட்விஸ்ட் வைப்பார்கள்.

ஏய் படத்தில் இடைவேளைக்கு பிறகு பெர்பார்மன்ஸில் பின்னி எடுத்து வில்லன்கள் கையால் சாவார் கலாபவன் மணி. அவரது தங்கையை தான் பழனியில் சரத் தன் தங்கையாக தத்தெடுத்து வளர்த்து வருவார்.

இந்த படத்தில் இடைவேளைக்கு பிறகு பெர்பார்மன்ஸில் பின்னி எடுத்து வில்லன்கள் கையால் சாவார் தம்பி ராமையா. அவரது மகளை தான் கொல்கத்தாவில் அஜித் தன் தங்கையாக தத்தெடுத்து வளர்த்து வருவார்.

இறுதியில் வில்லன்களை கொன்று படத்தை சுபமாக முடிக்கிறார்கள் சரத்தும் அஜித்தும்.

சாரி. கம்பேரிசன் கூடாதுல்ல. ஆனா அந்த படத்தை அப்பட்டமாக காப்பி அடித்தால் என்ன செய்வது.

படத்தின் ஆகச் சிறந்த எரிச்சல் சூரி. அவருக்கு ஒரு பர்சென்ட் கூட காமெடி வரவில்லை. மொத்த படத்தின் காமெடியை அவருக்கு கொடுத்து நம்மையும் சாகடிச்சியிருக்கிறார்கள்.

முதல் பாதி செம அறுவை. உக்காரவே முடியலை. இரண்டாம் பாதி கொஞ்சம் தேவலாம் முன்பாதியுடன் ஒப்பிடுகையில்.

ஒரே ஒரு காட்சி விளக்குகிறேன், இந்த இயக்குனர்கள் ரசிகர்களை எவ்வளவு மடையன் என்று நினைத்து காட்சிகளை அமைக்கிறார்கள் என தெரிந்து கொள்ளுங்கள்.

தம்பியை கொன்றவன் யாரென தெரியாத வில்லன், 3 ஐடி வல்லுனர்களை வைத்து ரெண்டு ஆப்பிள் மேக் கம்ப்யுட்டர்கள் , ஒரு புரொஜக்டர். ஒரு ஜிபிஆர்எஸ் ட்ராக்கர், ஒரு கம்ப்யுட்டர் ஆபீஸ் வைத்து சிரமப்பட்டு ஜப்பானுக்கெல்லாம் போன் செய்து அது அஜித் தான் என கண்டு பிடிக்கும் ஒரு தருணத்தில் வெறும் பட்டன் உள்ள செல்போனை வைத்துக் கொண்டு அதை கூட யூஸ் செய்யாமல் வில்லன் இடத்தை கண்டு பிடித்து வந்து அவர்களை கூண்டோடு கொலை செய்வார். . . .

 

த்தா எங்களையெல்லாம் பார்த்தா எப்படிடா தெரியுது உங்களுக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.