Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Featured Replies

உன்னை தேவதை ஆக்கியது 

உன்னை ...
நான் காதலியாக.... 
மட்டும் நினைக்கவில்லை..... 
வழிபடும் தெய்வமாகாவும் 
கருதுகிறேன் ......
சில வேலை நீ கூட ......
சிரிப்பாக எடுக்கலாம் ......!!!
. 
நீ 
இருந்துபார் நீயே ,,,,,
உனக்கு கடவுளாக தெரிவாய் ....
உன்னை தேவதை ஆக்கியது 
என் "நினைவு அலை" தான் 
இந்த உலகில் எண்ணத்தை 
விட ஒரு கருவி இல்லை....!!!

  • தொடங்கியவர்

பிரச்சனை இல்லாதவன் ....!!!

-----

நீச்சல் .....
அடிக்க தெரிந்தவனுக்கு....
கடல் எவ்வளவு ஆழம் ....
அறிய தேவையில்லை ,.....!!!

வாழ்க்கை ரசிப்பவனுக்கு, .....
பிரச்சனை ஒன்றும் பெரிதில்லை !! 

பிரச்சனை இல்லாதவன் ....
வாழ்க்கை இயந்திர மனிதனை ... 
போன்றது - இயக்கம் இருக்கும்.... 
உணர்வு இருக்காது ....!!!

யுகமாக வலிக்கிடதடி.....!!!
------
உன்னோடு ....
பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ...
ஒவ்வொரு பூக்களாக இருந்தது......... 
ஒவ்வொரு மணிநேரமும் .....
ஒவ்வொரு நிமிடமாக இருந்தது ...........! 

உன் பிரிவுக்கு 
பின்னால் ஒவ்வொரு வார்த்தையும் 
ஒவ்வொரு முள்ளுகளாக குத்துதடி 
ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு 
யுகமாக வலிக்கிடதடி.....!!!

  • தொடங்கியவர்

பிறக்கும் போது அழுதேன் 
புரியாத காலம் ....!!!

இறக்கும் போது அழுவார்கள் 
தெரியாதகாலம் .....!!!

படிக்கும் போது அழுதேன் 
முடியாத காலம் .....!!!

காதலின் போது அழுகிறேன் 
இன்பக்காலம் ....!!!

காதல் பிரிவின்போது அழுதேன் 
இறந்த காலம் ...!!!

வலியால் துடிக்கிறது இதயம் ...!!!
------------

அழுகிறேன் கதறுகிறேன் ... 
நடக்க போவது ஒன்றுமில்லை ....
தெரிந்தும் அழுகிறேன் ..!!! 

நீ எனக்கு இல்லை ....
உறுதியாக தெரிந்த பிறகும், 
உயிரோடு இருக்கிறேன் ........!!!

உனக்காகவோ 
என்னக்காகவோ அல்ல 
உன்னோடு வாழ்ந்த 
அந்த நினைவுகளுக்காக ........!!!

என் இடது இதய அறையில் ...
பழைய நினைவுகள் ...
என் வலது இதய அறையில் ...
புதிய நினைவுகள் .....
வலியால் துடிக்கிறது இதயம் ...!!!
 

  • தொடங்கியவர்

உன் முடிவை ....!!!
----------
இத்தனை நாட்களாய் .. 
பழகிய நீ ... 

இப்போது என்னை கண்டால் 
முகத்தை திருப்புகிறாய்...? 

தூரக்கண்டவுடன் 
திரும்பி செல்லுகிறாய்..? 

கிட்ட வந்தவுடன் 
முறைத்து பார்க்கிறாய் 

நண்பிகளுடன் செல்லும் 
போது தெரியாதன்வன் 
போல் செல்லுகிறாய் ...?

மறக்க போகிறாயா ? 
மறைக்கபோகிறாயா ...?
எனக்கும் கற்று தா ...
உன் முடிவை ....!!!

  • தொடங்கியவர்

யாருக்கு விளங்கப்போகிறது ..? 
----------
பள்ளி காலத்தில் .... 
சுற்றுலா சென்றேன் 
கல்வி சுற்றுலாவாம் .....!!!

சுற்றுலா பேரூந்தில் 
ஏறிய நிமிடத்தில் இருந்து 
உன்னை சுற்றிப்பர்ப்பது 
எனக்கு சுற்றுலா..... 
யாருக்கு விளங்கப்போகிறது ..? 

சுற்றுலா முடிந்தது ....
அறிக்கை எழுத சொன்னால் ...
உன்னை பற்றியே எழுதுவேன் ...
மன்னித்துவிடு ....!!!

  • தொடங்கியவர்

அத்தனையும் செய்யும் தாயே ....!!!

-----

நீ 
என்ன தவறு செய்தாலும் .. 
யாருக்கும் சொல்லாமல் மறைப்பார்...!!!

நீ 
கெட்டவனாக யார் சொன்னாலும் 
நம்பாமல் சொன்னவரை திட்டுபவார் ...!!!

உன்னை 
வீட்டில் யாரும் வெளியேற்றினால் 
யாருக்கும் தெரியாமல் உணவு தருவார் ....!!!

உனக்காக 
நோயாக இருந்தவர் -என்றாலும் 
உன்னை வெறுக்காதவர் ....!!!

ஆறு பேர் நிற்கும் 
போது ஐந்து ரொட்டி இருந்தால் 
பசிக்க வில்லை என ஒதுங்குபவர் ...!!!

இத்தனையும் செய்யகூடிய ....
ஒரே ஒரு உயிர் தாய் தானே ...!!!

என்னைப்போல் எந்த நேரமும் 
நிமிர்ந்து நிற்பவன் ...!!!

எனக்கு பிராண வாயுவை 
தந்து வாழவைப்பவன் ...!!!

எனக்காக தினம் 
தோறும் உணவு தருபவன்....!!! 

தன்னையே அழித்து 
ஒளியை தருபவன் ...!!!

பச்சை நிறத்தை 
பார்த்தால் கண்ணுக்கு 
சிறப்பு என்பதற்காக 
வைத்தியனாக இருப்பவன் ....!!!

என் வீட்டு முத்தத்தை 
அழகுபடுத்துபவன்....!!! 

இரவும் பகலும் துங்காமல் 
உழைப்பது இரண்டு....
ஒன்று என் இதயம் 
மற்றையது என் மரம்....!!! 


 

ஏனடி பிரிந்த பின் இவ்வளவு 
அன்பு காட்டுகிறாய் .................? 

 உன்னோடு இருந்தபோது இவ்வளவு 
அன்பை காட்டவிலையே .......? 

இருந்த போது நான் பட்ட துன்பத்தை விட 
பிரிந்த பின் துன்பம் சுகமாக உள்ளது....!!! 

பிரிந்து இருந்து அன்பு காட்ட 
வேண்டாம்! 

நீ அருகில் இருந்து சண்டை போடு 
அது போதும்!!!...

  • தொடங்கியவர்

வலிகள் தந்து காயம் செய்கிறாள் ...!!!
------

தினம் தினம் 
கவிதை எழுதுகிறாள்.....
வரிகளால் மனதில் வலிகள் 
தந்து காயம் செய்கிறாள் ...!!!

நான் 
செய்த தவறுக்காக 
தன்னை தண்டிக்கிறாள்
உண்மையை சொன்னாலும் 
ஏற்க மறுக்கிறாள் ....!!!

வலிகள் இருந்தும் 
நேசிக்கிறேன் அவளை ...
அவள் என்னை சந்தேகிப்பதே
என்னை எவரும் காதலித்துவிட  
கூடாது என்று பயப்பிடுகிறாள் ....!!!

நண்டுக்கு எட்டுக்கால் ‍..இருந்தும்
என்ன‌ பயன்..? அது நேராக‌ நடக்காதே...

உனக்கு எட்டு குணமிருந்தும் ..
என்ன‌ பயன் ..?

உன்னால் நேர்மையான‌ காதலை
தரமுடியவில்லையே...!

  • 3 months later...
  • தொடங்கியவர்

உன் பாத சுவடுகளை ...
பூக்களாய் வர்ணித்தேன் ....
அதை அள்ளி முகர்ந்தேன் ....
அத்தனையும் கனவானது ....
ஒற்றை வார்த்தையால் ...!!!

நீ 
நடந்து சென்ற பாதையில் ....
பாதத்தை பதிந்து பார்கிறேன் ....
முற்களாய் குத்துகின்றன .....
வார்த்தை இதயத்தை தைத்தது ...
நினைவுகள் உணர்வுகளை ....
தைக்கிறது ......!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.