Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முத்த சர்ச்சையில் வசுந்தரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முத்த சர்ச்சையில் வசுந்தரா

ai01is1.jpg

பெண்களுக்கு எதிரானவர்கள் கிளப்பி விடும் சர்ச்சை இது * "முத்த' விவகாரத்திற்கு வசுந்தரா பதில்

புதுடில்லி: ""பெண்களுக்கு எதிரான கொள்கை உடையவர்கள் தான் கிரண் மஜும்தாருக்கு நான் முத்தம் கொடுத்த விவகாரத்தைப் பெரிதுபடுத்துகின்றனர். நாங்கள் இருவரும் பெண்கள் என்பதால் இப்படி பேசுகின்றனர்,'' என்று ம.பி., முதல்வர் வசுந்தரா ராஜே கூறியுள்ளார்.

பா.ஜ., ஆட்சிப் பொறுப்பில் உள்ள ராஜஸ்தான் மாநில முதல்வராக இருப்பவர் வசுந்தரா ராஜே சிந்தியா. 53 வயதாகும் வசுந்தரா மேல்நாட்டு நாகரிகத்தில் வளர்ந்த ராஜ பரம்பரையைச் சேர்ந்தவர்.

சமீபத்தில் நடந்த ஒரு அழகிப் போட்டியில், பயோகான் நிறுவன உரிமையாளர் கிரண் மஜும்தாரைக் கட்டி அணைத்து, உதட்டில் முத்தம் கொடுத்தார் வசுந்தரா. அந்த புகைப்படம் அனைத்து பத்திரிகைகளிலும் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

வட மாநில தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இது குறித்து வசுந்தராவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்துப் பேசிய வசுந்தரா, ""நாங்கள் இருவரும் பெண்கள் என்பதால், இவ்விஷயம் இவ்வளவு பெரிய சர்ச்சையாகிவிட்டது. பெண்களுக்கு எதிரான செயல் இது. பத்திரிகைகள் இதை பெரிதுபடுத்திவிட்டன,'' என்று குற்றம் சாட்டினார். இச்சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக, வேறொரு அழகிப் போட்டியிலும் வசுந்தரா கலந்து கொண்டார். இது குறித்தும் இந்த "டிவி' நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த வசுந்தரா, ""பிரிட்டன் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சரே தன் நாட்டு உடை அலங்காரத்தை பிரபலப்படுத்துவதற்காக "பேஷன் ஷோ'வில் டிசைனர் உடை அணிந்து நடந்து வந்தார். அவர் இப்படி பிரபலப்படுத்திய பிறகு தான், "பேஷன்' உடைகளுக்கு பிரிட்டனில் மவுசு ஏற்பட்டது. அது போல, என்னுடைய தொழிற்சாலையில் உருவாகும் ஆடைகளை அணிந்து "பேஷன் ஷோ'வில் நானே வலம் வந்து, என் தயாரிப்புகளை பிரபலப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன்,'' என்று பதிலளித்தார்.

இவர் இப்படி "பட்பட்' பதில் சொல்லி விட்டாலும், இவர் சார்ந்துள்ள கட்சியான பா.ஜ.,வில் இந்த இரண்டு விவகாரங்களும் பெரும் புகைச்சலைக் கிளப்பி விட்டுள்ளன.

"இந்திய கலாசாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று கூரை மீது ஏறிக் கூவிக் கொண்டிருக்கும் பா.ஜ.,வின் முதல்வர் பதவியில் உள்ளவர் இப்படி நடந்து கொள்ளலாமா?' என்று காங்., கட்சியினர் கேள்வி மேல் கேள்வி எழுப்புவதால், செய்வதறியாமல் திகைக்கிறது பா.ஜ., இதைப் பற்றி பேச முடியாமல் அனைத்து தலைவர்களும் "லிப்டைட்' ஆகிவிட்டனர்.

http://www.dinamalar.com/

ஊருக்குத் தான் உபதேசம் உனக்கு இல்லை கண்ணே. :lol::D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களுக்கும் நம் ஊர் பேரூந்து நிலையத்தில் திரியும் நாய் கூட்டட்திற்க்கும் என்ன வித்தியாசம்? B)

Edited by kumarasamyy

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆடம்பர முதல்வருக்கு எதிர்க்குரல்கள்

ஊழலை மறைக்க உதட்டில் முத்தம்?

இந்தியாவிலேயே ‘ஆடம்பரமான முதல் அமைச்சர்’ என்ற பெயருக்கு கொஞ்சம் கொஞ்சமாக சொந்தக்காரராகிக் கொண்டிருக்கிறார், ராஜஸ்தான் முதல் அமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா! கோடிக்கணக்கான ரூபாய் செலவில் விமானம், அரசு செலவில் பங்களா அலங்கரிப்பு, மெர்சிடீஸ் கார் என அவரின் ஆடம்பர லிஸ்ட் முடிவில்லாமல் போவது ஒருபக்கம். இன்னொரு பக்கம்... ஃபேஷன் ஷோவில் மாடலாக நடந்தது, பெண் தொழிலதிபரை முத்தமிட்டது, அரசு நிலத்தை கையகப்படுத்தியது என பல்வேறு சர்ச்சைகளும் கூடிக் கும்மியடித்துக் கொண்டிருக்கின்றன.

p16asz1.jpg

மத்திய பிரதேசத்தின் குவாலி யர் ராஜவம்சத்தில் பிறந்து, ராஜஸ்தானுக்கு மருமகளாக வந்தவர் வசுந்தரா ராஜே சிந்தியா. பி.ஜே.பி. எம்.எல்.ஏ&வாக ஒரு முறையும், எம்.பி&யாக நான்கு முறை யும் இருந்தவர். மத்தியில் தேசிய முன்னணி ஆட்சி நடந்தபோது மத்திய அமைச்சராகவும் இருந்தார். கடந்த 2003&ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸை தோற்கடித்த பி.ஜே.பி., வசுந்தராவை ராஜஸ் தான் முதல் அமைச்சராக்கியது. பதவியேற்று மூன்று ஆண்டுகளுக்குள் அவர் ஏகப்பட்ட சர்ச்சை களில் சிக்கியிருக்கிறார். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரின் சிவில் பகுதியில் உள்ளது, முதல் அமைச்சரின் வீடு. இதற்கு அருகில் மாநில அரசின் ஜெய்பூர் வளர்ச்சிக் கழகத்துக்குச் சொந்தமாக சுமார் ஏழாயிரம் சதுரமீட்டர் அளவுள்ள காலி நிலம் உள்ளது. 80 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலம் திடீரென ‘தீன்தயாள் உபாத்யா டிரஸ்ட்’டுக்கு வெறும் 65 லட்சங்களுக்கு விற்கப்பட்டது. இதை எதிர்த்து, ‘முதல் அமைச்சரே இந்த டிரஸ்டின் முக்கிய டிரஸ்டியாக இருப்பதால், மிக குறைவான விலையில் நிலத்தை வளைத்து அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது’ என்ற குற்றச்சாட்டுடன் காங்கிரஸ் கட்சியின் வழக் கறிஞர் பிரிவுத் தலைவர் சுசில் சர்மா, ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடுத்திருக்கிறார். இதே பிரச்சனைக்காக ஜெய்பூர் நகர நீதிமன்றத்திலும் முதல்வர் வசுந்தரா மீது ஒரு கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஜெய்பூர் நகர நீதிமன்றம், முதல் அமைச்சர் வசுந்தரா மீது வழக்குப் பதிவு செய்யும்படி கடந்த மாதம் அதிரடி உத்தரவிட்டது. இந்நிலையில், மேலும் ஒரு நில மோசடிப் புகார் வசுந்தரா மீது எழுந்துள்ளது. இவர் பதவி ஏற்ற மறு வருடம், நாட்டின் பல மாநிலங்களில் உள்ளது போல் ராஜஸ்தானிலும் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்களுக்காக ‘வேர்ல்டு டிரேட் பார்க்’ என ஒன்றை நிறுவ முடிவு செய்தார். அதற்காக ஜெய்பூரின் பிரதான பகுதியில் அடிக்கல் நாட்டினார். கமர்ஷியல் பகுதியில் உள்ள இந்த இடத்தை ஒரு சதுரமீட்டர் ரூபாய் 40,000 என விலை நிர்ணயம் செய்தது ஜெய்பூர் வளர்ச்சிக் கழகம். ஆனால், ஒரு சதுரமீட்டர் 25,000 ரூபாய்க்கே விற்கப்பட்டது. இதிலும் ஊழல் என சொல்லி காங்கிரஸ் இன்னொரு வழக்கைப் போடத் தயாராகி வருகிறது.

p17azx9.jpg

இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் பெங்களூரில் நடந்த காதி கண்காட்சியின் ஃபேஷன் ஷோவில் பிரபல மாடலும், பாலிவுட் நடிகருமான ராகுல் தேவுடன் ‘கேட் வாக்’ போட்டார் வசுந்தரா. அடுத்து நவம்பர் இறுதியில் டெல்லியில் நடந்த ‘எக்கானமிக் சம்மிட்&2006’&ல் கலந்து கொண்டு, அங்கு வந்த பயோகான் நிறுவனத்தின் தலைவர் கிரண் மஜும்தார் ஷாவின் உதடுகளில் தன் உதடுகளைப் பொருத்தி முத்தம் கொடுத்தார். இதெல்லாம் சர்ச்சைகளைக் கிளப்பிவிட, முதல்வர் கொடுத்த முத்தம் குறித்து ஒரு பொதுநல வழக்கு வசுந்தரா மீது போடப்பட்டது.

‘‘தலித்கள் மீதான கொடுமைகள் ராஜஸ்தானில் அதிகம் நடக்கிறது. நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னும் பல ஊர்களில் தலித்துகள் கோயிலின் உள்ளே அனுமதி மறுக்கப்படுகிறார்கள். ஒரு பெண் முதல் அமைச்சர் ஆளும் மாநிலமாக இருந்தும் இங்கு பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகம் உள்ளது. தலைநகரான ஜெய்பூரில் சமீபத்தில் நிலத்தகராறில் ஒரு பெண்ணை டிராக்டரில் கட்டி இழுத்து அரை கி.மீ. தூரம் இழுத்துச் சென்று சாகடித்திருக்கிறார்கள். இன்னொரு இளம் பெண்ணை அவரது வீட்டிலேயே பலாத்காரம் செய்து கொன்று விட்டனர். போலீஸ் கஸ்டடியிலும் பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். இவற்றை எல்லாம் கேட்க வசுந்தராவுக்கு நேரம் இல்லை. ஃபேஷன் ஷோ, அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது, ஆடம்பரம் செய்து கொள்வது என கவலைப்படாமல் இருக்கிறார். இதற்காக எங்கள் அமைப்பு சார்பில் வீதியில் இறங்கிப் போராடி வருகிறோம்’’ என ஆவேசப்படுகிறார் பி.யூ.சி.எல். அமைப்பின் ராஜஸ்தான் மாநில பொதுச் செயலாளர் கவிதா ஸ்ரீவாத்சவ்.

முதல்வர் வசுந்தரா இதுவரை செய்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விமானப் பயணங்களும், அதற்காக அவர் வாங்கிய ஒரு தனி விமானமும் தற்போது சர்ச்சைக் குள்ளாகி இருக்கிறது. இதனால், இந்தியாவிலேயே அதிக மாக விமானத்தில் பயணம் செய்த முதல் அமைச்சர் இவர் எனக் குறிப்பிட்டு, ஏழைகளின் பணத்தை இப்படி பறக்கடித்ததை எதிர்த்து ஒரு பொதுநல வழக்கு போடப்பட்டுள்ளது. அரசு செலவில் முதல் அமைச்சரின் வீடு அலங்கரிக்கப்பட்டதும், அவருக்காக மெர்சிடீஸ் கார் வாங்கியதும்கூட சர்ச்சைக்குள்ளாகி ‘ஆடம்பர முதல் அமைச்சர்’ என்ற பட்டத்தையும் வசுந்தராவுக்கு வாங்கிக் கொடுத்து விட்டது.

p16os6.jpg

இது போன்ற பல புகார்களுக்கு நேரடியாக பதில் தராமல் ராஜஸ்தான் பத்திரிகையாளர்களுக்கு டிமிக்கி கொடுத்து வந்த வசுந்தரா, வேறு வழியின்றி சமீபத்தில் ஒரு தனியார் டி.வி. சேனலுக்கு அளித்த பேட்டியில் சிக்கி விட்டார். ‘‘நிலப் பிரச்சனையைப் பொறுத்தவரை சட்டப்படியாகத்தான் எல்லாவற்றையும் செய்துள்ளேன். உண்மையில் அந்த நிலத்தை எனக்கு முன் இங்கு முதல் அமைச்சராக இருந்த அசோக் கெல்லட், தன் தந்தையின் பெயருக்கு மாற்ற முயற்சித்தார். நான் பொறுப்பு ஏற்றுள்ள அந்த டிரஸ்டால் எனக்கு சொந்த பலன் எதுவுமே கிடை யாது. இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் இதற்கு மேல் இது பற்றி என்னால் பேச முடியாது. நான் கேட்வாக் போட்டதற்குக் காரணம் என் மாநிலத்தின் காதி நெசவாளர்கள் முன்னேற்றத்துக்காகத்தான். ஆண்கள் ஒருவரையருவர் அணைத்துக் கொண்டு முத்தமிடுவதை கேள்வி கேட்காதவர்கள் அரசியல் காழ்ப்பு உணர்ச்சி காரணமாகவே நான் பெண் தொழிலதிபருக்கு முத்தம் கொடுத்ததை பிரச்னையாக்குகிறார்கள்’’ என்று சமாளித் திருக்கிறார்.

ஆடம்பரம் எத்தகைய அரசியல் வீழ்ச்சிக்கு வித்திடும் என்பதை தெற்கு பக்கம் திரும்பிப் பார்த்தாவது வசுந்தரா அம்மையார் புரிந்து கொண்டிருக்கலாம்!

http://www.vikatan.com/

முத்தம் "fire" ஆகிடுமோனு பயப்படுறாங்க போல இருக்கு. காவி கட்சியிலேயே இப்படி ஒரு அம்மாவானு "சீர்திருத்த" கை கட்சிகாரர்கள் பொறாமைப்படுறார்கள் போல.

எந்த குட்டையில் ஊறினாலும் மட்டை மட்டைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

கிழடுகளின் முத்தம் இனிப்பாக இல்லை. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.