Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் 191 பேரை பலி கொண்ட விமான விபத்து : இன்றுடன் 41 வருடங்கள் பூர்த்தி

Featured Replies

இலங்கையில் 191 பேரை பலி கொண்ட விமான விபத்து : இன்றுடன் 41 வருடங்கள் பூர்த்தி
 

 

இலங்­கையில் இடம்­பெற்ற பாரிய விமான விபத்து சம்­ப­வமொன்று நடந்து இன்­றுடன் சரி­யாக 41 வரு­டங்கள் பூர்த்தியா­கின்­றன.

 

1358902-%281%29.jpg

 

1974ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் திகதி இந்­தோ­னே­ஷியா சுரா­ப­யா­வி­லி­ருந்து 182 ஹஜ் பய­ணிகள் மற்றும் 9 ஊழி­யர்கள் சகிதம்  மக்கா நோக்கி பய­ணித்த மார்டின் எயார் பிளைட் 138  பய­ணிகள் “சப்த கன்­னிய” என அறி­யப்­படும் ஏழு­கன்­னியர் மலையில் ஐந்­தா­வது குன்றின் மீது மோதிச் சித­றி­யது. இச்­சம்­ப­வத்தில் விமா­னிகள் உட்­பட 191 பேரும் அதே இடத்தில் பலி­யா­கினர்.

 

இலங்­கையில் அது­வ­ரை­யி­லான மிக மோச­மான விபத்­தாக இச்­சம்­பவம் அமைந்­தது. மலை­ய­கத்­திற்கு இது அதிர்ச்­சி­ய­ளித்த ஒரு புது அனு­பவம். 191 பேர் பலி­யான இவ்­வி­பத்து இடம்­பெற்ற மலைப்­ப­கு­தியை ஏழு கன்­னியர் மலை (ஆங்­கி­லத்தில் வில்கின் ஹில்ஸ்) என்று அழைக்­கின்­றனர்.

 

இவ்­வி­பத்தில் பலி­யான 190 பேர் தெப்­பட்டன் தோட்ட கொத்­த­லென பகு­தியில் அவ்­வி­டத்­தி­லேயே புதைக்­கப்­பட்­டனர்.

 

அடை­யாளம் காணக்­கூ­டி­ய­வாறு இருந்த விமானப் பணிப்பெண் ஒரு­வரின் உடலை அவரின் காதலர் ஹெலி­கொப்டர் மூல­மாக கொண்டு சென்ற நெகிழ்ச்­சி­யான சம்­ப­வமும் இதில் அடங்கும்.

 

விபத்­துக்­குள்­ளான மெக்­டொனல்ட் டக்ளஸ் டி.சி. 8 ரக விமா­னத்தின் பாகங்­களில் எஞ்­சி­யி­ருக்கும் டயர்கள் இரண்டு மட்டும் இது­வரை பாது­காக்­கப்­பட்டு வரு­கின்­றன.

 

ஒரு டயர், நோட்டன் பொலிஸ் நிலை­யத்தில் உள்­ளது. நல்­ல­நி­லை­யி­லி­ருக்கும் டயர் நோட்டன் விம­ல­சு­ரேந்­தி­தர அணைக்­கட்­டுக்கு செல்லும் வழியில் சம்­ப­வங்களை சுருக்­க­மாக தாங்கி, பார்­வைக்­காக காட்­சி­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

 

விபத்து நடைபெற்ற இடத்தில் வெளி­நாட்டு  நாண­யத் தாள்கள் உட்­பட பல பொருட்­களை அப்­பி­ர­தேச மக்கள் பாது­காத்து வரு­கின்­றனர்.

 

உயி­ரி­ழந்­த­வர்கள் புதைக்­கப்­பட்ட இடத்தில் நினை­வுத்தூண் ஒன்றும் அமைந்­துள்­ளது. ஆனால் இன்று அப்­ப­குதி காடாக காட்­சி­யளிக்­கின்­றது.

 

இறந்­த­வர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்த ஒவ்­வொரு வரு­டமும் டிசம்பர் 4ஆம் திகதி இந்­தோ­னே­சி­யா­வி­லி­ருந்து உற­வி­னர்கள் இவ்­வி­டத்­திற்கு வந்து செல்­வது வழக்­க­மாகும்.

 

விமா­னத்தின் கறுப்­புப்­பெட்டி தக­வலின்படி தொழில்­நுட்ப கோளாறு கார­ண­மா­கவே இவ்­வி­மானம் விபத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இவ்­வி­மா­னத்தை செலுத்­திய விமானி 8 தட­வைகள் இலங்கை ஊடாக மக்­கா­விற்கு விமா­னத்தை செலுத்­திய அனுபவம் கொண்டவர் என்பது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒரு முக்கிய விடயமாகும். 

 

இவ்விபத்து சம்பவம் நடந்த இடத்தில் வசித்தவர்கள், இன்னமும் அப்பகுதிக்கு செல்பவர்களுக்கு இச்சம்பவத்தை எடுத்துக்கூறுபவர்களாக உள்ளனர். 

 

13589MED041215-PG07-R1.jpg

- See more at: http://www.metronews.lk/article.php?category=news&news=13589#sthash.03l9Huie.dpuf
  • தொடங்கியவர்
இலங்கையின் முதலாவது விமான விபத்து...
 
04-12-2015 10:02 AM
Comments - 0       Views - 55

article_1449204502-08.jpg

-ரஞ்சித் ராஜபக்ஷ

1974 ஆம் ஆண்டு, டிசெம்பர் மாதம் 4 ஆம் திகதி, இந்தோனேசியாவிலிருந்து 182 ஹஜ் பயணிகளை ஏற்றிக்கொண்டு மக்கா நோக்கி பயணித்த Martin Air Dc 8 ரக விமானம், ஹட்டன், நோட்டன் ஏழுகன்னியர் மலையில் மோதி விபத்துக்குள்ளானது.

இச்சம்பவம் நடைபெற்று இன்றுடன் 41 வருடங்கள் நிறைவடைகின்றன.  இவ்விபத்தினால், விமானிகள் உட்பட 191 பேர்  அதே இடத்தில் உடல் சிதறி பலியாகினர். இவர்களில் 190 பேரின் உடல்கள்;, கொத்தலென கந்த என்று அழைக்கப்படும் அவ்விடத்திலேயே புதைக்கப்பட்டன.

அடையாளம் காணக்கூடியவாறு இருந்த விமான பணிப் பெண்ணின் உடலை, அவரின் காதலர் ஹெலிகொப்டர் மூலமாக இந்தோனேசியாவுக்கு கொண்டு சென்றார்.

விமான பாகங்களில் எஞ்சியிருக்கும் சில்லு ஒன்று மட்டும் இதுவரை பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அந்த சில்லானது, இச்சம்பவத்தை நினைவுக்கூறும் வகையில், நோட்டன் விமலசுரேந்திர அணைக்கட்டுக்கு செல்லும் வழியில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவ்விடத்தில் சேகரிக்கப்பட்ட டொலர்கள் மற்றும் இன்னோரன்ன பொருட்களை அப்பிரதேச மக்கள் பாதுகாத்து வருகின்றனர்
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தில்,   நினைவுத்தூபி ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. விமானத்தின் கருப்புப்பெட்டி தகவலின்படி, தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்விமானம் விபத்துக்குள்ளாகியதாக தெரியவந்துள்ளது.

article_1449204513-05.jpg

article_1449204523-06.jpg

article_1449204532-07.jpg

article_1449204552-09.jpg

article_1449204561-10.jpg

article_1449204579-12.jpg

article_1449204594-11.jpg

article_1449204605-15.jpg

article_1449204612-16.jpg

article_1449204625-17.jpg

article_1449204633-20.jpg

article_1449204643-21.jpg

article_1449204652-22.jpg

article_1449204661-23.jpg

article_1449204670-24.jpg

article_1449204678-25.jpg

- See more at: http://www.tamilmirror.lk/160588/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99-%E0%AE%95-%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%A4-#sthash.zSthDr4k.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.