Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என்னவளின் காதல் டயறியிலிருந்து

Featured Replies

என்னவளின் டயறி 
---
கண்களால் காதல் தந்து ....
நினைவுகளை மனதில் சுமந்து ....
வலிகளால்  வரிகளை வடித்து ....
என்னவளின் காதல் டயறி ....
கண்டெடுத்தேன் கணப்பொழுதில் ....
என் மீதுகொண்ட கவலைகளை ....
தன் காகிதத்தில் பதிந்திருக்கிறாள்....
காகிதங்கள் கூட ஈரமாய் இருக்கிறது ....
அவைகூட அழுதிருக்கிறது ....!!!

+
காதல் நினைவுகளும் 
காதல் டயறியும்
என்னவளின் பக்கம்( 01)

உயிரற்ற காகித்தத்தில் ....
உயிர் கொண்டு எழுதினேன் ....
உதயனே உயிரானவனே ......!!!
காகிதம் கூட உயிர் பெற்று ....
உன்னையே எழுத சொல்கிறது ....!!!
என் கையெழுத்தை தவிர ....
அத்தனையும் உன் நாமமே ....
கவலைகளை கண்ணீரால் ...
வரிகளாய் எழுதுகிறேன் .....!!!

+
காதல் நினைவுகளும் 
காதல் டயறியும்
என்னவளின் பக்கம்( 02)

என்னவளின் டயறியிலிருந்து ......03
@@

என் பெயரை தவிர ....
மற்றைய வரிகள் எல்லாம் ....
கண்ணீரால் அழிந்துள்ளன .....
டயறியின் மூன்றாம் பக்கம் ...!!!
என் பெயருக்கு இறுதியிலும் ....
காய்ந்த கண்ணீர்துளியின் ....
தடயங்களும் இருக்கிறது ....
காதலுக்கு முற்றுப்புள்ளியாய்....!!!

+
காதல் நினைவுகளும் 
காதல் டயறியும்
என்னவளின் பக்கம் 03
  • தொடங்கியவர்

என்னவளின் டயறியிலிருந்து ...04
@@

உயிரானவனே ....
என்னை மன்னித்துவிடு ....
உனக்கு வலிகளை மட்டுமே ....
தந்திருக்கிறேன் - நீயோ 
உன் வலிகைளை எனக்கு ....
வலியை தராமல் வரியாக்கினாய் ....
அதையே கவிதை என்கிறாய் ....!!!

+
காதல் நினைவுகளும் 
காதல் டயறியும்
என்னவளின் பக்கம் 04

என்னவளின் டயறியிலிருந்து ...05
@@

ஆரம்பத்தில் காதல் கடிதம் ....
எழுதினேன் காதல் பிறந்தது ....
இறுதியில் காதல் டயறி ....
எழுதுகிறேன் -காதல் 
முடிவுக்கு வருகிறது .....!!
என்னவனே மன்னித்துகொள் ...
காதலுக்கு எல்லையில்லை ...
காதலிக்கு தடைகள் உண்டு ...
மன்னவா உனக்கு புரியும் இது ...!!!

+
காதல் நினைவுகளும் 
காதல் டயறியும்
என்னவளின் பக்கம் 05

  • தொடங்கியவர்

என்னவளின் டயறியிலிருந்து ...06
----
உயிருள்ள உடல் ...
உயிரற்று கடதாசியானது ....
உயிரற்ற கடதாசி ....
உயிரானது காதல் டயறியால் .....
என்னவனே என் டயறியை...
பார்க்கும்போது உனக்கு ....
புரியும் வெறும் கடதாசியில்லை ....
என் வலிக்கும் இதயத்தின் ....
வரிகள் என்று புரிவாய் ...!!!

+
காதல் நினைவுகளும் 
காதல் டயறியும்
என்னவளின் பக்கம் 06

  • தொடங்கியவர்

என்னவளின் டயறியிலிருந்து ...07
----
உன்னோடு 
இருந்த காலத்தை விட ....
என் டயறியோடு இருந்த ...
காலமே அதிகம் ....
உன்னிடம் பெற்ற இன்பத்தை ....
உன்னிடம் பெற்ற துன்பத்தை ....
கல் வெட்டாக பதிந்துள்ளேன் ....
காதல் நமக்கு பிடித்துள்ளது ...
உறவுகளுக்கு பிடிக்கவில்லையே ...!!!

+
இப்படிக்கு உன்னால் 
உருகும் இதயம் 
இனியவள் 
என்னவளின் பக்கம் 07

  • தொடங்கியவர்

என்னவளின் டயறியிலிருந்து ...08
---
உன்னை கண்டபோதும் ....
உன்னை காணாதபோதும்....
வீட்டார் திட்டும்போதும் ...
நீ கோபப்படும் போதும் ....
நீ கெஞ்சும் போதும் ...
நீ கொஞ்சும்போதும் ...
ஏதோ நானும் கவிதை ...
எழுதுவதுபோல் டயறியில்...
கிறுக்குவேன் ......!!!

+
இப்படிக்கு உன்னால் 
உருகும் இதயம் 
இனியவள் 
என்னவளின் பக்கம் 08

என்னவளின் டயறியிலிருந்து ...09
---
உன்னை 
எப்படி காதலித்தேன் .....
வருந்துகிறேன் ...
வீட்டாரால் எப்படி ...
துன்பபடுகிறேன் ....
என்பதையெல்லாம் ....
ஒருநாள் என் காதல் ....
டயறி சொல்லும் .....
அப்போது உணர்வாய் ....
என்னவனே நான் உன்னை ...
காதலித்ததால் பட்ட துன்பம் ...!!!

+
இப்படிக்கு உன்னால் 
உருகும் இதயம் 
இனியவள் 
என்னவளின் பக்கம் 09

  • தொடங்கியவர்

என்னவளின் டயறியிலிருந்து ...10
----
என்னவனே இனியவனே ....
டயறியின் அடுத்த பக்கத்தை ....
பார்க்கமுதல் -எனக்காய் ...
ஒன்று செய்வாயா ...?
உன்னை நான் பிரியும் காலம் ...
வந்தால் உனக்கான வாழ்கையை ....
நீ தேடிகொள்வாய் என்று ஒரு ....
சத்தியம் தருவாயா ....?

+
இப்படிக்கு உன்னால் 
உருகும் இதயம் 
இனியவள் 
என்னவளின் பக்கம் 10

  • தொடங்கியவர்

என்னவளின் டயறியிலிருந்து ...11
------
அன்று நான் கோயிலுக்கு ....
செல்லும்போது தூரத்தில் ....
இருந்து அருகில் வந்து ...
ஏதோ சொல்ல எத்தனித்தாய் ....
அதற்குள் அப்பா அருகில் ...
வந்ததால் நீ துடித்த துடிப்பை ....
நினைக்கும்போது கவலையா ...
இருந்ததடா - சாமியை கூட ....
வணங்க மனம் வரவில்லை ....
என் சாமி நீ துன்ப பட்டதால் ...!!!
+
இப்படிக்கு உன்னால் 
உருகும் இதயம் 
இனியவள் 
என்னவளின் பக்கம் 11

  • தொடங்கியவர்

என்னவளின் டயறியிலிருந்து ...12
-----
எனக்கும் உனக்கும் ....
திருமணம் ஆகாவிட்டால் .....
கவலையில்லை - என் 
தோழியின் கல்யாணத்தில்....
நான் மணப்பெண்ணாகவும் ...
நீ மாப்பிள்ளையாகவும் ...
காட்சி தந்த அந்த அழகு ....
இந்த நிமிடம் வரை இனிக்கிறது ...!!! 

+
இப்படிக்கு உன்னால் 
உருகும் இதயம் 
இனியவள் 
என்னவளின் பக்கம் 12

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

என்னவளின் காதல் டயறியிலிருந்து-13

உனக்கும் எனக்கும் ...
திருமணம் நடக்காமல் ....
விடுவதற்கு வாய்ப்புக்கள் ....
அதிகரித்து கொண்டே...
செல்கிறது .....!!!

உன் அருகில் வரும் ...
வாய்ப்பும் நழுவுகிறது ....
உன் பெயருக்கு அருகில் ...
வாய்ப்பும் நழுவுகிறது ....
ஆசையை நிறைவேற்றுகிறேன் ...
டயறியில் என் பெயருக்கு ...
அருகில் உன் முதலெழுத்து.... 
போடுகிறேன் ....!!!

&

....என்னவளின் காதல் டயறியிலிருந்து....
..............கவி நாட்டியரசர்..................
........கவிப்புயல் இனியவன்...............
...............யாழ்ப்பாணம்......................

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

என்னவனே 
உன்னோடு வாழ்ந்த நாள் 
மிக சொற்பம் 
உன் நினைவோடு 
வாழ்ந்த நாள் அதிகம் 
என்பதை என் டயரி 
சொல்லும் பார் ....!!!

இடை இடையே ...
எழுத்துகள் அழிந்திருக்கும் ...
என்னசெய்வது கண்ணீருக்கு ...
தெரியவில்லை ....!!!

^
என்னவளின் காதல் டயரியிலிருந்து
என்னவளின் பக்கம்- 14

காதலில் 
தான் பொய்யும் அழகு 
களவும் அழகு ...
என் வீட்டுக்கு முதல் ...
முதலில் வந்தபோது ...
இரண்டையும் செய்தாய் ....!!!

இதயனே....
உன் அருகில் பேருந்தில் ...
இருக்கும் பாக்கியத்தை ...
பெற்ற அன்று உன்னோடு ....
வாழ்துவிட்ட இன்பம் ....
இன்றும் அந்த பேருந்தை ...
திட்டுகிறேன் விரைவாக ....
ஓடியதுக்கு ....!!!


^
என்னவளின் காதல் 
டயரியிலிருந்து
என்னவளின் பக்கம்- 15
 

  • 4 weeks later...
  • தொடங்கியவர்

உன் .....
இதயத்தில் பெரிய ....
காயத்தை ஏற்படுத்தி விட்டேன் ....
எப்படி தாங்குவாய் இதயனே,,,,?
காலம் எம்மை பிரிகிறது ....
காதல் எம்மை கொல்கிறது....
எனக்கு ஒரே ஆசை ....
இந்த டயரி எழுதி முடியும் ...
நாளில் நானும் ..........?

இதயனே -நீ 
அடிக்கடி பாடும் பாடல் ...
" உன்னை நான் பிரிந்தால் ....
உனக்கு உன் இறப்பேன் "....
*
*
*
வலிக்குதடா அந்த வரிகள்....!!! 

^
என்னவளின் காதல் டயரி
என்னவளின் பக்கம்- 16
கவிப்புயல் இனியவன் 
 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

என்னவனே ,,,,
எனக்கு முதல் முதல் ...
வாங்கி தந்த மோதிரம் ....
இப்போ இறுக்கமாய் இருக்கு ....
நான் தான் உன்னை விட்டு ....
விலகி செல்கிறேன் .....!!!

என் பாடப்புத்தகத்தை ....
எடுத்து இருதிபக்கதில் ....
ஒரு கவிதை எழுதினாயே .....
கல்வி என்னும் பயிருக்கு ....
கண்ணீர்தான் மழை .....
இப்போதான் புரிகிறது ....
காதலும் கண்ணீரில் ....????
^
என்னவளின் காதல் டயரி
என்னவளின் பக்கம்- 17
கவிப்புயல் இனியவன் 
 

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

பள்ளி பருவத்தில் ....
கல்வி சுற்றுலா போனோம் .....
மற்றவர்கள் எல்லோரும் ....
சுற்றி பார்த்தார்கள் ...
நீ என்னை சுற்றி சுற்றி ....
வந்தாய் ,,,,,,,!!!

எனக்கு சிறிதாய் 
காலில் கல் அடிபட்டது ....
துடித்துப்போனாய் ....
இன்று உன் இதயத்தில் ...
காயத்தை தந்துவிட்டேன் ....
என்ன பாடுவடுவாய் ....
மன்னித்து விடு மன்னவா ....!!!

^
என்னவளின் காதல் டயரி
என்னவளின் பக்கம்- 18

கவிப்புயல் இனியவன் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.