Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்மா - கதைகள்

Featured Replies

இரண்டாம் திருமணம் செய்த தகப்பன் தன்னுடைய சிறிய மகனிடம் கேட்கிறான்..
"உன்னுடைய இப்போதைய அம்மா எப்படி".என்று.அப்போது அந்த மகன் சொன்னான் ."என் அம்மா 
என்னிடம் பொய் சொல்பவளாக இருந்தால்.ஆனால் இப்போதைய அம்மா என்னிடம் பொய் சொல்பவலாய் இல்லை"
இதைகேட்ட தகப்பன் கேட்டான்."அம்மா உன்னிடம் என்ன பொய் சொன்னால்?"அந்த குழந்தை சிறுசிரிப்புடன் தன் தகப்பனிடம் சொன்னான் ....."நான் சேட்டைகள் செய்யும்போது என் அம்மா சொல்வாள் ,எனக்கு இனிமேல் சாப்பாடு தரமாட்டேன் என்று .ஆனால் கொஞ்சநேரம் ஆகும்போது என்னை தன்னுடைய மடியில் அமர்த்தி பாட்டுபாடி ,நிலாவைக்காட்டி கதைசொல்லி அவள்தரும் ஓவ்வொரு பருக்கை சோற்றிலும் அவளுடைய ‪பாசம்‬ இருக்கும்.

ஆனால்..

"இப்போதைய அம்மா,நான் சேட்டைகள் செய்யும்போது சொல்வாள் "உனக்கு சோறு தரமாட்டேன் என்று."..இன்றுடன் இரண்டு நாட்கள் ஆகிறது அம்மா சொன்னவார்தையை நிறைவேற்றிவிட்டால்.".!!!

‪அம்மாவுக்கு‬ நிகர் இந்த உலகில் யாருமில்லை...

----------------------------------------------
நான் படித்த அம்மா கதைகளை இங்கு தொகுக்கிறேன் .இவை பலஇடங்களில் தொகுத்தவை .முக நூல் அதிகமாக 
தொகுத்தேன் 
உண்மையில் நான் கண் கலங்கிவிட்டேன்

  • தொடங்கியவர்

 ஒரு சிறு (உண்மைக்) கதை :அம்மாவும் , ஒத்தையடிப்பாதையும்
------------

"அம்மா , அம்மா கால் வலிக்குதும்மா! தூக்கிக்கம்மா!" அந்த சிறுவனின் வயது எட்டு. அம்மாவுக்கு பையனை தூக்க ஆசைதான். முயற்சித்தாள்.
"முடியலடா? இன்னும் கொஞ்ச தூரந்தான் ஊரு வந்துரும்பா" என்றாள்.

எப்போதும் தன் அப்பா ஊரிலிருந்து அம்மா ஊருக்கு , அந்த ஒத்தையடிப்பாதையில் தான் செல்வான். இயற்கை, தன் அழகை வழியெல்லாம், பச்சைப்பசேல் என்று வயல் வெளியாய் பறப்பிநிற்கும். தென்னை மரங்கள் கம்பீரமாய் , தலையசைத்து வரவேற்கும்.

அந்த அழகான சிறிய வாய்க்கால் வரப்பு ஓரம் , நடக்கும்போது அம்மா நிலக்கடலைச் செடியை , கொத்தாகப் பிடித்து , அதன் வேரில் உள்ள கடலையோடு , மண்ணைத்தட்டி , நிலக் கடலையை ஒவ்வொன்றாக ஊட்டும்போது , கால்வலி காணாமல் போகும்.
"அம்மா , அம்மா ! அங்க பாரேன் ஆட்டுக்குட்டி! " குறுக்கே வந்த ஆட்டுக்கூட்டத்திலுள்ள , துள்ளிக்குதிக்கும் ஆட்டுக்குட்டியை பார்த்ததும் , கால்வலி பஞ்சாய்ப் பறந்து போகும்.
"கால் வலிக்குதும்மா !" சிறு கற்கள் ரப்பர் செருப்புக்கும் காலுக்கும் இடையில் புகுந்து உறுத்தும்போது, அம்மா அதை அழகாகத் தட்டும்வரை ,அந்த ஒத்தயடிப்பாதையின் சுடுமண் காலைச்சுடும் . கால் நாட்டியமாடும்.

அதோ அங்கே புளிய மரம்!பார்க்கும்போதே அவனுக்கு நாக்கில் எச்சில் ஊறும்.
"அம்மா! எனக்கு புளியங்காய் வேணும்," என்பான் . என்றுமே யாருக்குமே எதையும் இல்லை என்று சொல்லாத அம்மா, தனக்கு பிடிக்காத, புளியங்காயை தன் மகனுக்கு தன் உயரத்தையும் , கால் வலியையும் பொருட்படுத்தாமல் ,குதித்து எட்டிப்பறித்துக் கொடுப்பாள் . அவன் அந்த பிஞ்சுப் புளியங்காயை ஒடித்து சுவைக்கும்போது, ஒத்தயடிப்பாதையில் அவனோடு வந்த கால்வலி மறைந்து , புளிச்சுவை நாக்கைச்சுளற்ற வைக்கும்.

"இன்னும் கொஞ்ச தூரந்தான். நம்ம பெரியம்மா வீடு வந்துரும்! "என்று கூறிய அம்மா ,தன் கைப்பயை எடுத்து, பொரி உருண்டையைக் கொடுத்தாள் . பொரி உருண்டையைக் 
கொறிக்கும்போது அதன் சுவையும், கண்கவர் வயல்வெளியின் காட்சியும், அவனை பல நிமிடங்கள் கால் வலியை மறக்கச்செய்யும்.

பெரியம்மா வீடு வந்தாகி விட்டது. அவர்கள் வீட்டுத்திண்னையில் ஆட்டுக்குட்டியை பார்க்க ஒரு பரவசம். இது அவனின் அடுத்த இரண்டு நாள் விளையாட்டுத்தோழன் .

புட்டிப்பாலை குழந்தைக்கு ஊட்டித்தான் அவன் இதுவரை பார்த்திருக்கிறான். ஆனால் ,
தாய் ஆடு காட்டில் மேய்வதால், ஆட்டுக்குட்டிக்குக்கு பெரியம்மா புட்டியில் , தாயின் வாஞ்சையோடு பாலூட்டுவது , அவனின் மனத்தில் ,இரக்கத்தையம் அன்பையும் ஊட்டியது.

இரண்டு நாளும் , இரண்டே நிமிடத்தில் கழிந்ததில் அவனுக்கு வருத்தம்.
"அம்மா போலாமாப்பா? "என்று பெரியம்மா கொடுத்த கனமான பலகாரப் பையுடன், அழைத்தபோது, அவனின் மனம் கனத்தது.

கனத்த இதயத்தோடு பெரியம்மாவையும் , ஆட்டுக்குட்டியையும் விட்டுவிட்டு, மீண்டும் அந்த ஒத்தயடிப்பாதையின் விளிம்பில் , அம்மாவின் கையைப் பிடித்து நடக்க ஆரம்பித்தான், திரும்பித்திரும்பிப் பார்த்துக்கொண்டே!

அவனுக்கு இப்போது நாற்பது வயதுக்கு மேல். சென்ற முறை ஊருக்குச் சென்றபோது 
அம்மா இல்லை. அந்த ஒத்தயடிப்பாதையாவது இருக்குமா என்று , தேடினான்.
கண்ணில் தட்டுப்பட்டதென்னவோ, வறண்ட பிளாட்டுபோட்ட நிலங்களும் , ஒரு டீக்கடையுந்தான்.

கனத்த இதயத்தோடு , டீக்கடையின் பெஞ்சில் , அண்ணே, ஒரு ....டீ..என்றவாறு அமர்ந்தான்....!!!

--புவி.
 

 

Edited by கவிப்புயல் இனியவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.