Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போரின் முடிவில் புலிகளின் முக்கியஸ்தர்கள் குடும்பத்துடன் படையினரிடம் சரணடைந்தது எப்படி? - ஆணைக்குழு முன் சாட்சியம் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போரின் முடிவில் புலிகளின் முக்கியஸ்தர்கள் குடும்பத்துடன் படையினரிடம் சரணடைந்தது எப்படி? - ஆணைக்குழு முன் சாட்சியம் 
[Monday 2015-12-14 09:00]

போரின் இறுதி நாட்களில் வட்டுவாகலில் அருட்தந்தை பிரான்ஸிஸ் ஜோஸப் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் கைக்குழந்தைகளை தாங்கிய பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பொதுமக்கள் பலர் முன்னிலையில் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். இவர்களின் கதி என்னவென்று நேற்று பருத்தித்துறையில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் கேள்வி எழுப்பினார் பெண் ஒருவர்.

போரின் இறுதி நாட்களில் வட்டுவாகலில் அருட்தந்தை பிரான்ஸிஸ் ஜோஸப் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் கைக்குழந்தைகளை தாங்கிய பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பொதுமக்கள் பலர் முன்னிலையில் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். இவர்களின் கதி என்னவென்று நேற்று பருத்தித்துறையில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் கேள்வி எழுப்பினார் பெண் ஒருவர்.
போரின் இறுதி நாட்களில் வட்டுவாகலில் அருட்தந்தை பிரான்ஸிஸ் ஜோஸப் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் கைக்குழந்தைகளை தாங்கிய பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பொதுமக்கள் பலர் முன்னிலையில் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். இவர்களின் கதி என்னவென்று நேற்று பருத்தித்துறையில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் கேள்வி எழுப்பினார் பெண் ஒருவர்.

   
எனது கணவர் சுந்தரம் பரமநாதனும் இவ்வாறு சரணடைந்தவர்களில் ஒருவராவார். தற்போதுவரை அவருக்கு என்ன நடந்தது என்பது தெரியாதுள்ளது. இராணுவத்திடம் நேரடியாக ஒப்படைக்கப்பட்ட எனது கணவர் நிச்சயம் உயிருடன்தான் இருக்க வேண் டும். அவர் தொடர்பான முழுமையான பொறுப்பையும் இராணுவமே ஏற்று பதிலளிக்க வேண்டும். எனது கணவரை எவ்வாறாவது என்னிடத்தில் ஒப்படையுங்கள் என திருமதி பரமநாதன் கண்ணீர் மல்க ஆணைக்குழுவிடம் கோரிநின்றார்.

வடக்குக்கு விஜயம் செய்துள்ள மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான காணமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதியின் ஆணைக்குழு மூன்றாவது நாளாக நேற்று பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் அமர்வுகளை நடத்தியது. இதன்போது சாட்சியமளிக்கையிலேயே அப்பெண்மணி மேற்கண்டவாறு மன்றாட்டமாக கோரினார்.அவர் தெடர்ந்தும் சாட்சியமளிக்கையில்-

முன்னதாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்த எனது கணவர் 1990 ஆம் ஆண்டு அவ்வமைப்பிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகியிருந்தார். அதன் பின்னர் என்னை திருமணம் செய்தார். எமது இல்லறவாழ்கை தொடர்ந்துகொண்டிருந்தபோது 2006 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்களை மீளவும் இணைத்துக்கொள்ளும் அறிவிப்பு விடுக்கப்பட்டு அச்செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அதன்பிரகாரம் எனது கணவர் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்த காலங்களில் இறுதி யுத்தம் ஆரம்பமானது. குறிப்பாக வன்னிப் பிரதேசத்தில் யுத்தம் உக்கிரமடைந்த வேளையில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி எனது கணவர் மீண்டும் எம்முடன் இணைந்துகொண்டார். இக்காலப்பகுதியில் முள்ளிவாய்க்கால் ஊடாக வட்டுவாகல் கடல்நீரேரியைக் கடந்து பொதுமக்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுகொண்டிருந்தனர். அதற்கமைவாக நாமும் அவ்வழி ஊடாக வெளியேறுவதற்கு சென்று கொண்டிருந்தோம்.

இரணைப்பாலைப் பிரதேசத்தை நாம் 17 ஆம் திகதி அடைந்தபோது அங்கு இராணுவத்தினர் இருந்தனர். எம்மை அங்குள்ள உள்ள பாடசாலைக்கு அழைத்துச்சென்றவர்கள் அங்கிருந்த கிணற்றில் தண்ணீர் பெற்றுத்தந்தனர். அதன் பின்னர் எம்மை அழைத்துக்கொண்டு சென்று இருபுறமும் முட்கம்பிகளால் அடைக்கப்பட்டிருந்த வயல்பகுதி ஒன்றுக்குள் வெளிக்குள் அடைத்து வைத்தனர். முட்கம்பி வேலிக்குள் நாங்கள் அமர்ந்திருந்தபோதுதான் அருட்தந்தை பிரான்ஸிஸ் ஜோசப்பைக் கண்டோம். அவருடன் உரையாடினோம். அன்றைய பொழுது நிறைவடைந்துவிட மறுநாள் 18 ஆம் திகதி காலை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அங்கம்வகித்த அனைவரும் சரணடையுங்கள். நீங்கள் ஒரு நாள் அல்லது ஒரு மாதம் அவ்வமைப்பில் இருந்தாலும் சரணடையவேண்டியது கட்டாயம். உங்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என இராணுவத்தினர் ஒலிபெருக்கி ஊடாக அறிவித்தனர்.

இராணுவத்தின் இந்த பகிரங்க அறிவிப்பினை அடுத்து வயல் வெளிக்குள் முட்கம்பிகளுக்கு மத்தியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நாம் அனைவரும் ஒன்றிணைந்து அருட்தந்தை பிரான்ஸிஸ் ஜோசப்பிடம் என்ன செய்வது என கேட்டோம். அதன்போது விடுதலைப்புலி போராளிகள் உள்ளிட்ட அனைவருக்குமாக தான் இராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடாத்திவிட்டு வருவதாக கூறி அருட்தந்தை சென்றார். இராணுவத்தினரிடம் சில மணிநேரம் பேச்சுவார்த்தை நடாத்திவிட்டு திரும்பி வந்த அருட்தந்தை விடுதலை புலி போராளிகளுடைய பெயர்கள் அடங்கிய விபரங்களை தருமாறு இராணுவம் கோருகின்றது. வழங்குவோமா என எம்மிடத்தில் கேட்டார்.அதன்போது அவர்கள் பொதுமன்னிப்பு அளிப்பதாக கூறுவதால் பட்டியலை வழங்குவோம் என நாம் தீர்மானித்துடன் பெயர் விபரங்களை அருட்தந்தை ஊடாக இராணுவத்திற்கு வழங்கினோம்.

அதனையடுத்து பெயர் விபரப் பட்டியலின் பிரகாரம் போராளிகள் அனைவரையும் இராணுவம் அழைத்துச்சென்றது. எனினும் சிறிது நேரத்தில் அவர்களை மீண்டும் அந்த முட்கம்பி பிரதேசத்துக்குள் அனுப்பியது. திரும்பி வந்தவர்கள் இராணுவம் எங்களுடைய குடும்பங்களை அழைத்துவருமாறு கோருகின்றது. ஆகவே எல்லோரும் வாருங்கள் என்று அவரவர் குடும்பங்களை கூட்டிக்கொண்டு இராணுவத்தினரிடம் சென்றார்கள் . அங்கிருந்த பத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தமது சிறு கைக்குழந்தைகளுடன் இராணுவத்திடம் சரணடைந்தார்கள். அதே போன்று குடும்ப உறுப்பினர்கள் யாருமில்லாது அறுபதுக்கும் மேற்பட்ட விடுதலைப் புலி போராளிகளும் இராணுவத்திடம் சரணடைந்தார்கள்.

எனக்கு பெண் பிள்ளைகள் இருந்த காரணத்தினால் எனது கணவர் என்னை அழைத்துச்செல்ல விரும்பவில்லை. இதனால் நான் முட்கம்பி பிரதேசத்திற்குள்ளேயே நின்றிருந்தேன். எனினும் கணவர் இராணுவத்திடம் சரணடைவதாக கூறினார். நான் விசாரணை முடிந்து வந்துவிடுகிறேன் நீங்கள் உங்கள் அம்மா விட்டிற்கு சென்று தங்கியிருங்கள் எனக் கூறிவிட்டு சென்றார். அதன்போது அவருடைய தேசிய அடையாள அட்டையினையும், ஒரு தொகை பணத்தினையும் நான் வழங்கினேன். மறுநாள் காலை 9 மணியளவில் சரணடைந்த அனைவரையும் இராணுவம் பஸ் வண்டிகளில் ஏற்றியது. சுமார் 12 மணியளவில் அப்பகுதியிலிருந்து அனைத்து பஸ்களும் புறப்பட்டுச் சென்றன. அதிகளவான பஸ் வண்டிகள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரணத்தினால் எனது கணவர் எந்த பஸ்ஸில் ஏற்றப்பட்டார் என்பதை என்னால் அடையாளம் கண்டிருக்கமுடியவில்லை.

இதன்போது இரண்டு முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்தன. பஸ்கள் ஒவ்வொன்றாக புறப்பட்ட போது தமிழீழ விடுலைப் புலிகள் இயக்கத்தின் யாழ்.மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளாராக செயற்பட்ட இளம்பருதியின் தாயார் திடீரென புறப்பட்ட பஸ் ஒன்றிலிருந்து இறங்கி வந்தார். அவர் நாங்கள் இருந்த முட்கம்பி பகுதிக்குள் நேராக வந்து எங்களுடன் அமர்ந்துவிட்டார். அதேபோன்று எனது கணவருடன் ஒன்றாகச் சென்ற ஆனந்த குமாரசாமி என்பவர் தனது மனைவியின் தொலைபேசி இலக்கத்தினை என்னிடத்தில் வழங்கி தான் சரணடைந்த தகவலை மனைவியிடம் அறிவிக்குமாறு கேட்டுச்சென்றிருந்தார்.

அதன் பின்னர் நாங்கள் வவுனியாவில் அமைக்கப்பட்டிருந்த இடைத்தங்கல் முகாமிற்கு சென்றுவிட்டோம். அன்றைய தினம் எனது கணவருடன் இராணுவத்திடம் சரணடைந்த எந்தவொரு நபரினதும் தகவல்கள் இதுவரையில் தெரியாதுள்ளன. அருட்தந்தை மற்றும் பெரும் தொகையான பொது மக்கள் முன்னிலையிலேயே எனது கணவர் உள்ளிட்ட பெரும்தொகையானவர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். இதற்கு அவர்களே நேரில் கண்ட சாட்சிகளாக உள்ளனர். சரணடைந்த எனது கணவர் உயிருடன்தான் இருக்க வேண்டும். என்ற நம்பிக்கை எனக்கு தற்போதும் உள்ளது .எனது கணவருக்கு என்ன நடந்தது என்பதை இராணுவமே கூறவேண்டும். அவர்களே அதற்கு பொறுப்பானவர்கள். தயவுசெய்து அவரை இராணுவத்தினரிடமிருந்து மீட்டுத் தாருங்கள். என கண்ணீருடன் ஆணைக்குழு முன்னிலையில் கோரிக்கை விடுத்தார்.

 

missing-witness-141215-seithy%20(1).jpg

 

missing-witness-141215-seithy%20(2).jpg

http://www.seithy.com/breifNews.php?newsID=146959&category=TamilNews&language=tamil

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"அருட்­தந்தை பிரான்ஸிஸ் முன்­னி­லையில் சர­ண­டைந்த 10 இற்கும் மேற்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு என்ன நடந்­த­து"
Published on Mon, 12/14/2015 - 01:36

யுத்­தத்தின் இறுதி நாட்­களில் அருட்­தந்தை பிரான்ஸிஸ் ஜோஸப் உட்­பட பொது­மக்கள் பலர் முன்­னி­லையில் வட்­டு­வா­கலில் வைத்து அறு­ப­துக்கும் மேற்­பட்ட விடு­தலைப் புலி உறுப்­பி­னர்கள் மற்றும் கைக்­கு­ழந்­தைகளை தாங்­கிய பத்­துக்கும் மேற்­பட்ட குடும்­பத்­தினர் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்­தனர். எனது கணவர் சுந்­தரம் பர­ம­நா­தனும் இவ்­வாறு சர­ண­டைந்­த­வர்­களில் ஒரு­வ­ராவார். தற்­போ­து­வரை அவ­ருக்கு என்ன நடந்­தது என்­பது தெரி­யா­துள்­ளது. இரா­ணு­வத்­திடம் நேர­டி­யாகஒப்­ப­டைக்­கப்­பட்ட எனது கணவர் நிச்­சயம் உயி­ரு­டன்தான் இருக்க வேண் டும். அவர் தொடர்­பான முழு­மை­யான பொறுப்­பையும் இரா­ணு­வமே ஏற்று பதி­ல­ளிக்­க­வேண்டும். எனது கண­வரை எவ்­வா­றா­வது என்­னி­டத்தில் ஒப்­ப­டை­யுங்கள் என திரு­மதி பர­ம­நாதன் கண்ணீர் மல்க ஆணைக்­கு­ழு­விடம் கோரி­நின்றார்.

jaffna.jpg

வடக்­குக்கு விஜயம் செய்­துள்ள மக்ஸ்வெல் பர­ண­கம தலை­மை­யி­லான காணமல் போன­வர்கள் தொடர்­பாக விசா­ரணை செய்யும் ஜனா­தி­ப­தியின் ஆணைக்­குழு மூன்­றா­வது நாளாக நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை ­ப­ருத்­தித்­துறை பிர­தேச செய­ல­கத்தில் அமர்­வு­களை நடத்­தி­யது. இதன்­போது சாட்­சி­ய­ம­ளிக்­கை­யி­லேயே அப்­பெண்­மணி மேற்­கண்­ட­வாறு மன்­றாட்­ட­மாக கோரினார்.

அவர் தெடர்ந்தும் சாட்­சி­ய­ம­ளிக்­கையில்

முன்­ன­தாக தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்­கத்தில் இணைந்­தி­ருந்த எனது கணவர் 1990 ஆம் ஆண்டு அவ்­வ­மைப்­பி­லி­ருந்து உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வில­கி­யி­ருந்தார். அதன் பின்னர் என்னை திரு­மணம் செய்தார். எமது இல்­ல­ற­வாழ்கை தொடர்ந்­து­கொண்­டி­ருந்­த­போது 2006 ஆம் ஆண்டு விடு­தலைப் புலிகள் இயக்­கத்தில் உறுப்­பி­னர்­க­ளாக இருந்­த­வர்­களை மீளவும் இணைத்­துக்­கொள்ளும் அறி­விப்பு விடுக்­கப்­பட்­டு அச்­செ­யற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அதன்­பி­ர­காரம் எனது கணவர் மீண்டும் தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்­கத்தில் தன்னை இணைத்­துக்­கொண்­டி­ருந்தார்.

அதனைத் தொடர்ந்த காலங்­களில் இறுதி யுத்தம் ஆரம்­ப­மா­னது. குறிப்­பாக வன்னிப் பிர­தே­சத்தில் யுத்தம் உக்­கி­ர­ம­டைந்த வேளையில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி எனது கணவர் மீண்டும் எம்­முடன் இணைந்­து­கொண்டார். இக்­கா­லப்­ப­கு­தியில் முள்­ளி­வாய்க்கால் ஊடாக வட்­டு­வாகல் கடல்­நீ­ரே­ரியைக் கடந்து பொது­மக்கள் இரா­ணு­வத்­தி­னரின் கட்­டுப்­பாட்­டுக்குள் சென்­று­கொண்­டி­ருந்­தனர். அதற்­க­மை­வாக நாமும் அவ்­வழி ஊடாக வெளி­யே­று­வ­தற்கு சென்­று­கொண்­டி­ருந்­தோம்.

இர­ணைப்­பாலைப் பிர­தே­சத்தை நாம் 17 ஆம் திகதி அடைந்­த­போது அங்கு இரா­ணு­வத்­தினர் இருந்­தனர். எம்மை அங்­குள்ள உள்ள பாட­சா­லைக்கு அழைத்­துச்­சென்­ற­வர்கள் அங்­கி­ருந்த கிணற்றில் தண்ணீர் பெற்­றுத்­தந்­தனர். அதன் பின்னர் எம்மை அழைத்­துக்­கொண்டு சென்று இரு­பு­றமும் முட்­கம்­பி­களால் அடைக்­கப்­பட்­டி­ருந்த வயல்­ப­குதி ஒன்­றுக்குள் வெளிக்குள் அடைத்து வைத்­தனர்.

முட்­கம்பி வேலிக்குள் நாங்கள் அமர்ந்­தி­ருந்­த­போ­துதான் அருட்­தந்தை பிரான்ஸிஸ் ஜோசப்பைக் கண்டோம். அவ­ருடன் உரை­யா­டினோம். அன்­றைய பொழுது நிறை­வ­டைந்­து­விட மறுநாள் 18 ஆம் திகதி காலை விடு­தலைப் புலிகள் இயக்­கத்தில் அங்­கம்­வ­கித்த அனை­வரும் சர­ண­டை­யுங்கள். நீங்கள் ஒரு நாள் அல்­லது ஒரு மாதம் அவ்­வ­மைப்பில் இருந்­தாலும் சர­ண­டை­ய­வேண்­டி­யது கட்­டாயம். உங்­க­ளுக்கு பொது மன்­னிப்பு வழங்­கப்­படும் என இரா­ணு­வத்­தினர் ஒலி­பெ­ருக்கி ஊடாக அறி­வித்­தனர்.

இரா­ணு­வத்தின் இந்த பகி­ரங்க அறி­விப்­பினை அடுத்து வயல் வெளிக்குள் முட்­கம்­பி­க­ளுக்கு மத்­தியில் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த நாம் அனை­வரும் ஒன்­றி­ணைந்து அருட்­தந்தை பிரான்ஸிஸ் ஜோசப்­பிடம் என்ன செய்­வது என கேட்­­டோம். அதன்­போது விடு­த­லைப்­புலி போரா­ளிகள் உள்­ளிட்ட அனை­வ­ருக்­கு­மாக தான் இரா­ணு­வத்­துடன் பேச்­சு­வார்த்தை நடாத்­தி­விட்டு வரு­வ­தாக கூறி அருட்­தந்தை சென்றார்.

இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சில மணி­நே­ரம் பேச்­சு­வார்த்தை நடாத்­தி­விட்டு திரும்பி வந்­த அருட்­தந்தை விடு­தலை புலி போரா­ளி­க­ளு­டைய பெயர்கள் அடங்­கிய விப­ரங்­களை தரு­மாறு இரா­ணுவம் கோரு­கின்­றது. வழங்­கு­வோமா என எம்­மி­டத்தில் கேட்­டார்.அதன்­போது அவர்கள் பொது­மன்­னிப்பு அளிப்­ப­தாக கூறு­வதால் பட்­டி­யலை வழங்­குவோம் என நாம் தீர்­மா­னித்துடன் பெயர் விப­ரங்­களை அருட்­தந்தை ஊடாக இரா­ணு­வத்­திற்கு வழங்­கினோம்.

அத­னை­ய­டுத்து பெயர் விபரப் பட்­டி­யலின் பிர­காரம் போரா­ளிகள் அனை­வ­ரையும் இரா­ணுவம் அழைத்­துச்­சென்­றது. எனினும் சிறிது நேரத்தில் அவர்­களை மீண்டும் அந்த முட்­கம்பி பிர­தே­சத்­துக்குள் அனுப்­பி­யது. திரும்பி வந்­த­வர்கள் இரா­ணுவம் எங்­க­ளு­டைய குடும்­பங்­களை அழைத்­து­வ­ரு­மாறு கோரு­கின்­றது. ஆகவே எல்­லோரும் வாருங்கள் என்று அவ­ரவர் குடும்­பங்­களை கூட்­டிக்­கொண்டு இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சென்­றார்கள் .

அங்­கி­ருந்த பத்­திற்கும் மேற்­பட்ட குடும்­பத்தி­னர் தமது சிறு கைக்­கு­ழந்­தை­க­ளுடன் இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்­தார்கள். அதே போன்று குடும்ப உறுப்­பி­னர்கள் யாரு­மில்­லாது அறு­ப­துக்கும் மேற்­பட்ட விடு­தலைப் புலி போரா­ளி­களும் இரா­ணு­வத்­திடம் சர­ண­ட­டைந்­தார்கள்.

எனக்கு பெண் பிள்­ளைகள் இருந்த கார­ணத்­தினால் எனது கணவர் என்னை அழைத்­துச்­செல்ல விரும்­ப­வில்லை. இதனால் நான் முட்­கம்பி பிர­தே­சத்­திற்­குள்­ளேயே நின்­றி­ருந்தேன். எனினும் கணவர் இரா­ணு­வத்­திடம் சர­ண­டை­வ­தாக கூறினார். நான் விசா­ரணை முடிந்து வந்­து­வி­டு­கிறேன் நீங்கள் உங்கள் அம்மா விட்­டிற்கு சென்று தங்­கி­யி­ருங்கள் எனக் கூறி­விட்டு சென்றார். அதன்­போது அவ­ரு­டைய தேசிய அடை­யாள அட்­டை­யி­னையும்இ ஒரு தொகை பணத்­தி­னையும் நான் வழங்­கினேன். மறுநாள் காலை 9 மணி­ய­ளவில் சர­ண­டைந்த அனை­வ­ரையும் இரா­ணுவம் பஸ் வண்­டி­களில் ஏற்­றி­யது. சுமார் 12 மணி­ய­ளவில் அப்­ப­கு­தி­யி­லி­ருந்து அனைத்து பஸ்களும் புறப்­பட்டுச் சென்­றன. அதி­க­ள­வான பஸ் வண்­டிகள் அங்கு நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த கார­ணத்­தினால் எனது கணவர் எந்த பஸ்ஸில் ஏற்­றப்­பட்டார் என்­பதை என்னால் அடை­யாளம் கண்­டி­ருக்­க­மு­டி­ய­வில்லை.

இதன்­போது இரண்டு முக்­கிய சம்­ப­வங்கள் நிகழ்ந்­தன. பஸ்கள் ஒவ்­வொன்­றாக புறப்­பட்ட போது தமி­ழீழ விடுலைப் புலிகள் இயக்­கத்தின் யாழ்.மாவட்ட அர­சியல் துறை பொறுப்­பா­ளா­ராக செயற்­பட்ட இளம்­ப­ரு­தியின் தாயார் திடீ­ரென புறப்­பட்ட பஸ் ஒன்­றி­லி­ருந்து இறங்கி வந்தார். அவர் நாங்கள் இருந்த முட்­கம்பி பகு­திக்குள் நேராக வந்து எங்­க­ளுடன் அமர்ந்­து­விட்டார். அதே­போன்று எனது கண­வ­ருடன் ஒன்­றாகச் சென்ற ஆனந்த குமா­ர­சாமி என்­பவர் தனது மனை­வியின் தொலை­பேசி இலக்­கத்­தினை என்­னி­டத்தில் வழங்கி தான் சர­ண­டைந்த தக­வலை மனை­வி­யிடம் அறி­விக்­கு­மாறு கேட்­டுச்­சென்­றி­ருந்தார்.

அதன் பின்னர் நாங்­கள் வவுனியாவில் அமைக்கப்பட்டிருந்த இடைத்தங்கல் முகாமிற்கு சென்றுவிட்டோம். அன்றைய தினம் எனது கணவருடன் இராணுவத்திடம் சரணடைந்த எந்தவொரு நபரினதும் தகவல்கள் இதுவரையில் தெரியாதுள்ளன. அருட்தந்தை மற்றும் பெரும் தொகையான பொது மக்கள் முன்னிலையிலேயே எனது கணவர் உள்ளிட்ட பெரும்தொகையானவர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். இதற்கு அவர்களே நேரில் கண்ட சாட்சிகளாக உள்ளனர். சரணடைந்த எனது கணவர் உயிருடன்தான் இருக்க வேண்டும். என்ற நம்பிக்கை எனக்கு தற்போதும் உள்ளது .எனது கணவருக்கு என்ன நடந்தது என்பதை இராணுவமே கூறவேண்டும். அவர்களே அதற்கு பொறுப்பானவர்கள். தயவுசெய்து அவரை இராணுவத்தினரிடமிருந்து மீட்டுத் தாருங்கள். என கண்ணீருடன் ஆணைக்குழு முன்னிலையில் கோரிக்கை விடுத்தார்.

http://www.virakesari.lk/article/1001

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.