Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மும்பை ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட விபரீதம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மும்பை ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட விபரீதம்!
[ வியாழக்கிழமை, 17 டிசெம்பர் 2015, 06:55.57 PM GMT ]
Air_india%20001.jpg
மும்பையில் ஏர் இந்தியா விமானத்தின் இயந்திரம் ஒன்றில் தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் இழுத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து அந்த விமானத்தின் விமானி மற்றும் இணை விமானியை ஏர் இந்தியா நிறுவனம் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது.

மும்பையில் ஏர் இந்தியா விமானத்தின் இயந்திரம் ஒன்றில் தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் இழுத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து அந்த விமானத்தின் விமானி மற்றும் இணை விமானியை ஏர் இந்தியா நிறுவனம் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் கீழ் இயங்கும் விமான விபத்துக்கள் புலனாய்வு அலுவலகம் அதிகாரபூர்வ விசாரணை ஒன்றைத் தொடங்கியிருக்கிறது.

மும்பையிலிருந்து ஹைதராபாதுக்கு செல்லவிருந்த ஏர் இந்தியா ஏ.ஐ 619 விமானம் புதனன்று மும்பையை விட்டுப் புறப்படும் நிலையில், பின்நோக்கி தள்ளப்படும் போது நடந்தது.

ஒரு சமிக்ஞையைத் தவறாகப் புரிந்து கொண்ட விமானிகள் இயந்திரத்தை இயக்கவேண்டிய காலத்துக்கு முன்னரே இயக்கத் தொடங்கியதால் இது நேரிட்டதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் கூறியது.

ரவி சுப்ரமணியன் என்று அடையாளம் காணப்பட்ட இந்த தொழில்நுட்ப ஊழியரின் உடல் மிகவும் மோசமாக சிதைந்திருந்த நிலையில் அதை பிரேத பரிசோதனைக்குக் கூட அனுப்ப முடியவில்லை என்று பி.டி.ஐ கூறியது.

இந்த சம்பவம் ஒரு "தகவல் பரிமாற்ற இடைவெளியால்" ஏற்பட்டது போல் தோன்றியதாகக் கூறும் ஏர் இந்தியா தலைவர் அஷ்வனி லோஹானி, அது குறித்து வேறெதையும் கூறவில்லை.

இந்த விமானம் ஒரு இழுவை வாகனத்தால் அது நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து பின்னோக்கி இழுக்கப்படும்போது நடந்ததாக டைம்ஸ் ஒஃப் இந்தியா செய்தித்தாள் கூறியது.

அரசுக்கு சொந்தமான இந்த விமான நிறுவனம் பெரும் கடனில் இருக்கிறது. மேலும் அது 2007ம் ஆண்டிலிருந்து லாபம் எதையும் ஈட்டவில்லை. இதற்கு முன்பாகவும் பல தொழில்நுட்பச் சிக்கல்கள், தாமதங்கள் மற்றும் விமான ஊழியர்கள் பணிக்குத் தாமதமாக வருவது போன்றவற்றால் பாதிக்கப்பட்டது.

ஏப்ரலில் ஒரு ஏர் இந்தியா விமானம் டில்லியிலிருந்து புறப்படத் தயாராகும் நிலையில், அந்த விமானத்தின் விமானிகள் இருவர் , விமானத்தை இயக்கும் பகுதியான காக்பிட்டிலிருந்தே சண்டையில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட சம்பவத்தை அடுத்து அவர்கள் இருவரையும் ஏர் இந்தியா நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது.

அதற்கு முன்னதாக, 2009ம் ஆண்டில், ஐக்கிய அரபு எமிரேட்டுகளிலிருந்து டில்லி சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் விமானிகளும், விமான ஊழியர்களும் அடிதடியில் ஈடுபட்டனர். அந்த விமனத்தில் 106 பயணிகளும் ஏழு ஊழியர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Air_india%2002.jpg

Air_india.jpg

http://www.tamilwin.com/show-RUmtzCSbSWlxyB.html

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, கறுப்பி said:
மும்பை ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட விபரீதம்!
[ வியாழக்கிழமை, 17 டிசெம்பர் 2015, 06:55.57 PM GMT ]
Air_india%20001.jpg
மும்பையில் ஏர் இந்தியா விமானத்தின் இயந்திரம் ஒன்றில் தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் இழுத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து அந்த விமானத்தின் விமானி மற்றும் இணை விமானியை ஏர் இந்தியா நிறுவனம் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது.

மும்பையில் ஏர் இந்தியா விமானத்தின் இயந்திரம் ஒன்றில் தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் இழுத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து அந்த விமானத்தின் விமானி மற்றும் இணை விமானியை ஏர் இந்தியா நிறுவனம் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக இந்திய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் கீழ் இயங்கும் விமான விபத்துக்கள் புலனாய்வு அலுவலகம் அதிகாரபூர்வ விசாரணை ஒன்றைத் தொடங்கியிருக்கிறது.

மும்பையிலிருந்து ஹைதராபாதுக்கு செல்லவிருந்த ஏர் இந்தியா ஏ.ஐ 619 விமானம் புதனன்று மும்பையை விட்டுப் புறப்படும் நிலையில், பின்நோக்கி தள்ளப்படும் போது நடந்தது.

ஒரு சமிக்ஞையைத் தவறாகப் புரிந்து கொண்ட விமானிகள் இயந்திரத்தை இயக்கவேண்டிய காலத்துக்கு முன்னரே இயக்கத் தொடங்கியதால் இது நேரிட்டதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் கூறியது.

ரவி சுப்ரமணியன் என்று அடையாளம் காணப்பட்ட இந்த தொழில்நுட்ப ஊழியரின் உடல் மிகவும் மோசமாக சிதைந்திருந்த நிலையில் அதை பிரேத பரிசோதனைக்குக் கூட அனுப்ப முடியவில்லை என்று பி.டி.ஐ கூறியது.

இந்த சம்பவம் ஒரு "தகவல் பரிமாற்ற இடைவெளியால்" ஏற்பட்டது போல் தோன்றியதாகக் கூறும் ஏர் இந்தியா தலைவர் அஷ்வனி லோஹானி, அது குறித்து வேறெதையும் கூறவில்லை.

இந்த விமானம் ஒரு இழுவை வாகனத்தால் அது நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து பின்னோக்கி இழுக்கப்படும்போது நடந்ததாக டைம்ஸ் ஒஃப் இந்தியா செய்தித்தாள் கூறியது.

அரசுக்கு சொந்தமான இந்த விமான நிறுவனம் பெரும் கடனில் இருக்கிறது. மேலும் அது 2007ம் ஆண்டிலிருந்து லாபம் எதையும் ஈட்டவில்லை. இதற்கு முன்பாகவும் பல தொழில்நுட்பச் சிக்கல்கள், தாமதங்கள் மற்றும் விமான ஊழியர்கள் பணிக்குத் தாமதமாக வருவது போன்றவற்றால் பாதிக்கப்பட்டது.

ஏப்ரலில் ஒரு ஏர் இந்தியா விமானம் டில்லியிலிருந்து புறப்படத் தயாராகும் நிலையில், அந்த விமானத்தின் விமானிகள் இருவர் , விமானத்தை இயக்கும் பகுதியான காக்பிட்டிலிருந்தே சண்டையில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட சம்பவத்தை அடுத்து அவர்கள் இருவரையும் ஏர் இந்தியா நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது.

அதற்கு முன்னதாக, 2009ம் ஆண்டில், ஐக்கிய அரபு எமிரேட்டுகளிலிருந்து டில்லி சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் விமானிகளும், விமான ஊழியர்களும் அடிதடியில் ஈடுபட்டனர். அந்த விமனத்தில் 106 பயணிகளும் ஏழு ஊழியர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Air_india%2002.jpg

Air_india.jpg

http://www.tamilwin.com/show-RUmtzCSbSWlxyB.html

மைண்ட் செட் !
இது பெரிய தலையிடி பிடித்த வேலை.

 

வாகனம் ஓட்டும்போது எமக்கு எதாவது சிந்தனை வந்துவிட்டால் நாம் அதில் ஊரிவிடுவோம் ஆனால் வாகனம் ஓடிகொண்டே இருக்கும்
வீடு வந்த பின்பு ரோட்டில் நடந்ததை மீளாய்வு செய்தால் நினவுக்கு வராது.

 

எல்லாம் சரி என்றால்தான் விமானம் தள்ளப்படும்.
டவரில் இருப்பவர் விமானத்தை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்த பின்பே விமானம்தள்ளபடும்.

 

விமானி டவர் என்ன சொல்கிறதோ அதன்படி தான் செய்வார்.
இவர்கள் இயத்திரத்தில் ஏதும் பார்பதென்றால்  அதுக்கும் விமானி டவருடந்தான்
பேச வேண்டும்.

 

இயந்திரத்தை இயக்குங்கள் என்று கீழிருப்பவர்கள் கிளியரன்ஸ் கொடுப்பார்கள்
தள்ளும்போது அடுத்த கட்டம் அதுதான் .........
இவர்கள் ஏதாவது சொல்லியிருப்பார்கள் .......
விமானி மைண்ட் செட் ஆகி இயந்திரத்தை இயக்கி இருப்பார்.

 

வழமைக்கு மாறான ஒன்றை செய்யும்போது ஒரு அலெர்ட்  கொடுத்தல் அவசியம்.
இப்போ ஒரு உயிர்
இரு விமானிகளின் வேலை
தேவை இல்லாமல் போயிருக்கிறது

இந்தியாவில் முதல் சம்பவம்: விமான என்ஜினில் சிக்கி உயிரிழந்த தமிழக என்ஜினியரின் கடைசி நிமிடங்கள்!

 

ந்தியாவிலேயே முதல் முறையாக இத்தகைய சம்பவம் நடந்திருக்கிறது. பிசியான மும்பை விமான நிலையத்தில் ஹைதராபாத் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டிருந்த போது, துணை விமானி தவறுதலாக விமான என்ஜினை இயக்கியதாக கூறப்படுகிறது. இதனால் விமான என்ஜின் அருகில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த  ரவி சுப்பிரமணியம் என்ற சர்வீஸ் என்ஜினியர்,  என்ஜின் உள்ளே இழுக்கப்பட்டு உடல் சிதறி இறந்து போனார்.

ravi%20.jpg

ஐயோ... என்ற ஒரே சத்தத்தைத் தவிர வேறு எதுவுமே எழவில்லையாம். அதற்கு பின்தான் நடந்த அதிர்ச்சி சம்பவம் மற்ற ஊழியர்களுக்கு தெரிய வந்துள்ளது. அவர்கள் கூப்பாடு போட, தொடர்ந்து  விமானத்தின் என்ஜின் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் என்ன செய்ய முடியும்? ரத்தம் தோய்ந்த சத்தம் அடங்கிய  என்ஜினை மட்டுமே காண முடிந்தது. அந்தளவுக்கு  ரவி சுப்பிரமணியத்தின், உடல் கூழ் கூழாகி போனதாம்.

விமானம் ரன்வேக்கு புறப்படத் தயாராக இருந்த போது, சர்வீஸ் என்ஜினியரான ரவி சுப்ரமணியம், தனது உதவியாளரிடம் விமானத்தின் முன்பக்க டயரில் வைக்கப்பட்டிருக்கும் டோ பாரை எடுக்க கூறியிருக்கிறார். அந்த சமயத்தில் விமான என்ஜினுக்கு முதுகுப்புறத்தை காட்டிக் கொண்டு சுப்ரமணியம் நின்று கொண்டிருந்துள்ளார். விமானத்தை  ரன்வேக்கு கொண்டு செல்ல கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானிக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக விமானம் நிறுத்தப்பட்டிருக்கும்  இடத்தில் இருந்து ரன்வேக்கு கொண்டு செல்லப்படும் போது, ஒரு பக்க என்ஜினை இயக்க விமான போக்குவரத்துத் துறை விதிகள் அனுமதி அளிக்கிறதாம். அந்த வகையில்தான் துணை விமானி, விமான என்ஜினை இயக்கியதாகவும் சொல்லப்படுகிறது.எல்லாம் மின்னல் வேகத்தில் நடந்து விட்டது.

engi%201%281%29.jpg

விபத்து நடந்ததும் ரவி சுப்பிரமணியத்தின் மனைவி சுஜதாவுக்கு விமான நிலையத்தில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. 'ரவி சுப்பிரமணியம் விபத்தில் சிக்கி விட்டார் உடனே வரவும்'  என மட்டும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர் அடித்து பிடித்து விமான நிலையம் ஓட,  அங்கு சென்ற பிறகுதான் ரவி சுப்பிரமணியம் உயிரோடு இல்லை என்று தெரிந்து,  கதறி அழுதுள்ளனர்.

இந்த சம்பவம் இரவு 8.46 மணிக்கு நடந்துள்ளது. ரவி சுப்பிரமணியத்தின் உடல் பகுதிகளை எடுக்கவே பல மணி நேரம் போராட வேண்டியது இருந்திருக்கிறது. அதிகாலை 3.30 மணியளவில்தான் கூப்பர் மருத்துவமனைக்கு கிடைத்த உடல் பாகங்களை கொண்டு சென்றுள்ளனர். போஸ்ட் மார்ட்டம் செய்யவே தேவையில்லை என்ற அளவிற்கு உடல் கூழாகி இருந்துள்ளது. எனினும் முறைப்படி போஸ்ட் மார்ட்டம் செய்து உடலை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

விபத்தில் பலியான ரவி சுப்பிரமணியம் 54 வயது  நிரம்பியவர். கடந்த 22 ஆண்டுகளாக ஏர் இந்தியாவில் பணி புரிகிறார். சென்னையை சேர்ந்த இவர் பணி நிமித்தமாக மும்பையில் குடியேறியுள்ளனர். இவரது பெற்றோர்கள் இப்போதும் சென்னையில்தான் வசிக்கின்றனர். ரவி சுப்பிரமணியம் - சுஜாதா தம்பதிக்கு கிருஷ்ணா என்ற என்ஜினியரிங் படிக்கும் மகன் உள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/56517-employee-dies-sucked-into-plane-engine.art

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.