Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் இறுதி நிகழ்வுகள்

Featured Replies

தமிழீழமே தமிழரின் விடிவுக்கு ஒரே வழி என உறுதியோடு தலைவரின் கரத்தை பலப்படுத்திய அரசியல் போராளி பாலா அண்ணாவின் உடல் தமிழீழத்திற்கு எடுத்துச் செல்லப்படுமா? அவர் நேசித்த மண்ணில் நேசித்த மக்களோடு உறங்குவது அவரின் இறுதி விருப்பமாகக் கூட இருந்திருக்கும் அல்லவா?

சிங்களம் இடம் கொடுக்குமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாயக மண்ணில் விதைக்கப்பட வேண்டுமென்பதே எனது அவாவும். நோர்வேயுடாக முயற்சிக்கலாம். அரசு சம்மதிக்கும் என்றே நினைக்கின்றேன்.

லண்டனில் அடக்கம் செய்யப்படும் என்று தட்ஸ்தமிழ் செய்தி போட்டு இருக்கே :rolleyes:

"The LTTE supreme council is in session at present discussing arrangements to honour him," the Tigers' Rasaiah Ilanthirayan told the BBC Sinhala service.

Edited by வினித்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாலா அண்ணனின் உடல் அவரது விருப்பப்படி தமிழீழ மண்ணில்தான் அடக்கம் செய்யப் படவேண்டும். உலகத் தமிழரின் விருப்பமும் இதுவாகத்தான் இருக்க முடியும்.

விடுதலை வேள்வியின்

விலை மதிக்க முடியாத உயிர்

விடை பெற்றுச் சென்று விட்டது

ஆற்றுப் படுத்த முடியாத துயரம். அவரோடு தோளோடு தோள் நின்ற எங்களின் பாசத்திற்கும் நேசத்திற்கும் உரிய அடல் அன்ரிக்கும், உற்றார் உறவினர்க்கும், மற்றும் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்

நிச்சயமாக அவர் ஈழத்தில் உறங்க வேண்டும்

"தேசத்தின் குரல்" எம் பாலா அண்ணாவின் இறுதி நிகழ்வுகள் புதனன்று லண்டனில் நடைபெறும் என்று இன்றைய சுடர் ஒளியில் செய்தி வந்துள்ளது.

கொழும்பு. டிச.15

நேற்று இலண்டனில் மறைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க மதியுரைஞர் அன்டன் பாலசிங்கத்தின் இறுதிக் கிரிகைகள் பெரும்பாலும் அடுத்த வாரம் முற்பகுதியில் அனேகமாக அடுத்த புதன் கிழமை 20ம் திகதி லண்டனில் இடம் பெறும் என்று நேற்று முற் கொண்டு கிடைத்த செய்திகள் தெரிவித்தன.

லண்டனில் அவரது துனைவியாரோடும், வன்னியில் புலிகளின் தலைமையோடும் கலந்து பேசி இறுதிக் கிரியை ஏற்பாடுகள் குறித்து தீர்மானிக்கும் முயற்சியில் சம்பந்தப்பட்டோர் ஈடுபட்டிருந்தனர்.

செவ்வாய்கிழமை வரை மலர்ச் சாலை ஒன்றில் வைக்கப்படும்அவரது புகழுடல் புதனன்று பிரம்மாண்டமான லண்டன் அலெக்ஸாண்டிரா மாளிகை மண்டபத்தில் மக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படலாம் என்றும் ஒருதகவல் தெரிவிக்கின்றது.

அதன் பின்னர் அவரது புகழுடல் தீயுடன் சங்கமமாகும். பின்னர் அவரது அஸ்தி அலெக்ஸாண்டிரா

மாளிகைத் தோட்ட நந்தவனப் பகுதியில் துவப்படும் எனத தெரிகின்றது.

இறுதிக் கிரிகையைகளில் நோர்வேயின் வெளிநாட்டு அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொலஹெய்ம் உட்பட பல பிரமுகர்களுயும், பல்வேறு புலம்பெயர் நாடுகளில் இருந்து வரும் பல்லாயிரக் கணக்கான தமிழர்களும் பங்குபற்றுபர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நன்றி : சுடர் ஒளி 15டிசம்2006

  • கருத்துக்கள உறவுகள்

பாலா அண்ணா சுகவீனமுற்று, லண்டன் கொண்டு செல்ல அப்போது முனைந்த போது, சந்திரிக்கா அம்மையார் அதைத் தடுத்தார் என்பதையும், மனிதாபிமானப் பிரச்சனையாகக் கூட, இவ்விடயத்தை அணுக முன்வரவில்லை என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். சிங்கள தேசம் தன் கட்டுமிராண்டிச் சிந்தனைகளில் இருந்து விலத்தும் என்ற நம்பிக்கையில்லை.

"தேசத்தின் குரல் மறைவு": வன்னியில் மூன்று நாட்கள் துக்கம்- புதன்கிழமை இறுதி நிகழ்வுகள்

[வெள்ளிக்கிழமை, 15 டிசெம்பர் 2006, 15:05 ஈழம்] [தாயக செய்தியாளர்]

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்கு மூன்று நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாட்களும் தாயகத்தில் துக்கம் கடைப்பிடிக்கப்படும். மேலும் புலம்பெயர் நாடுகளில் செயற்படும் தமிழ் அமைப்புக்களும் தேசத்தின் குரலுக்கு மூன்று நாட்கள் துக்கம் கடைப்பிடிப்பதாக அறிவித்துள்ளன.

இறுதி நிகழ்வுகள் பெரும்பாலும் எதிர்வரும் புதன்கிழமை (20.12.06) லண்டனில் நடைபெறும என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் உறுதியான தகவல்கள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

அவரது துனைவியாரோடும், விடுதலைப் புலிகளின் தலைமையோடும் இறுதி நிகழ்வுகள் பற்றிக் கலந்தாலோசித்த பின்னர் முடிவான தகவல்கள் அறிவிக்கப்படும் என இறுதி நிகழ்வு ஒழுங்கமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை மலர்ச்சாலை ஒன்றில் வைக்கப்படும் அவரது புகழுடல், புதன்கிழமை லண்டன் அலெக்சாண்டிரா மாளிகை மண்டபத்தில் மக்களின் இறுதி வணக்கத்துக்காக வைக்கப்படலாம் என்றும் ஒரு தகவல் தெரிவித்தது.

தேசத்தின் குரலின் இறுதி நிகழ்வில் நோர்வேயின் வெளிநாட்டு அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் உட்பட பிரமுகர்கள், பொதுமக்கள என பல்லாயிரக் கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி : புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.