Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹிருனிகாவின் வாகனத்தில் நபர் ஒருவர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் 6 பேர் கைது

Featured Replies

ஹிருனிகாவின் வாகனத்தில் நபர் ஒருவர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் 6 பேர் கைது

 

ஹிருனிகாவின் வாகனத்தில் நபர் ஒருவர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் 6 பேர் கைது

 

பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவின் வாகனத்தில் நபர் ஒருவர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹிருனிகா பிரேமசந்திரவின் டிபென்டர் ரக வாகனத்தில் நேற்றைய தினம் நபர் ஒருவர் கடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பேரை காவல்துறையினர் இன்றைய தினம் கைது செய்துள்ளனர்.

கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் காவல்துறையினர் கைபற்றியுள்ளனர்.

இதேவேளை, கடத்தப்பட்ட நபர் தம்மை ஹிருனிகா பிரேமசந்திர மிரட்டியதாகவும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாகவும் முறைப்பாடு செய்துள்ளார்.

கொலன்னாவை பிரதேசத்தில் அமைந்துள்ள கட்சிக் காரியாலமொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

ஹிருனிகாவின் நெருங்கிய ஆதரவாளர் ஒருவரது மனைவியுடன் தாம் தொடர்பு பேணியதாகவும் இதன் காரணமாகவே கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாகவும் கடத்தப்பட்டவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/127150/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

ஹிருனிகாவின் வாகனத்தில் நபர் ஒருவர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் 6 பேர் கைது

 

ஹிருனிகாவின் வாகனத்தில் நபர் ஒருவர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் 6 பேர் கைது

 

பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவின் வாகனத்தில் நபர் ஒருவர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹிருனிகா பிரேமசந்திரவின் டிபென்டர் ரக வாகனத்தில் நேற்றைய தினம் நபர் ஒருவர் கடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பேரை காவல்துறையினர் இன்றைய தினம் கைது செய்துள்ளனர்.

கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் காவல்துறையினர் கைபற்றியுள்ளனர்.

இதேவேளை, கடத்தப்பட்ட நபர் தம்மை ஹிருனிகா பிரேமசந்திர மிரட்டியதாகவும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியதாகவும் முறைப்பாடு செய்துள்ளார்.

கொலன்னாவை பிரதேசத்தில் அமைந்துள்ள கட்சிக் காரியாலமொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

ஹிருனிகாவின் நெருங்கிய ஆதரவாளர் ஒருவரது மனைவியுடன் தாம் தொடர்பு பேணியதாகவும் இதன் காரணமாகவே கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாகவும் கடத்தப்பட்டவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/127150/language/ta-IN/article.aspx

தலயிலே கைவைத்தவனே அமெரிக்காவில் சும்மா இருக்கிறான் .....

 

இது வாலில் கைவைத்துவிட்டு அடி வாங்கி இருக்கிறார்.

 

கையை வைக்கிறவன் வைக்கணும் !

  • தொடங்கியவர்

 குடும்பம் ஒன்று கலைக்கப்படுவதனை தடுக்கவே முயற்சித்தேன் - ஹிருனிகா:-

 
2ஆம் இணைப்பு - குடும்பம் ஒன்று கலைக்கப்படுவதனை தடுக்கவே முயற்சித்தேன் - ஹிருனிகா:-



குடும்பம் ஒன்று கலைக்கப்படுவதனை தடுக்கவே முயற்சித்தேன் என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

தெமட்டகொட பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து அவர் விளக்கம் அளித்திருந்தார்.

தமது பணியாளர் ஒருவரின் குடும்பம் வெளிநபர் ஒருவரினால் சிதைவடையக் கூடிய அளவு பிரச்சினை ஏற்பட்டதனால் அதற்கு உதவுவதற்காக தாம் முயற்சித்ததாகத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் தமது பணியாளர்கள் என்றாலும் சட்ட விரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தால் அவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது பணியாளர் ஒருவரின் மனைவியுடன் குறித்த இளைஞர் தகாத உறவு கொண்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

குறித்த பணியாளரின் மனைவியை,  குற்றம்சாட்டப்பட்ட இளைஞர் பலவந்தமாக அழைத்து சென்று வைத்திருந்ததாகவும் அந்தப் பெண்ணுக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் ஹிருனிகா தெரிவித்துள்ளார்.

பிரச்சினைகளை தவிர்ப்பதே தமது நோக்கமாக இருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/127150/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்

ஹிருணிகா சட்டத்தினை தனது கையில் எடுக்க ஆரம்பித்துள்ளார் என விமர்சனங்கள் எழுந்துள்ளது

 

தெமட்டகொடையில் நபர் ஓருவர் கடத்தப்பட்ட சம்பவம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா சட்டத்தினை தனது கையில் எடுக்க ஆரம்பித்துள்ளார் என்பதை புலப்படுத்துகின்றது  என்ற விமர்சனங்களை உருவாக்கியுள்ளது


34 வயது நபர் ஓருவரை திங்கட்கிழமை நாடளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவின் அலுவலக பணியாளர்கள் அவரது வாகனத்தில் கடத்தியிருந்தனர். அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையை நியாப்படுத்தியுள்ள ஹிருணிகா குடும்பமொன்று பிளவுபடுவதை தடுப்பதற்காகவே தான் இதனை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.


கடத்தப்;பட்ட நபரான அமரசிங்க என்பவர் தன்னை ஹிருணிகா மிரட்டியதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் தன்மீது சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ள ஹிருணிகா தான் குறிப்பிட்ட நபரை அச்சுறுத்தவில்லை,தாக்கவில்லை,தனது பணியாளர்களில் ஓருவரின் குடும்பம் பிளவடைவதை தடுக்கவே உதவியதாக குறிப்பிட்டுள்ளார்.


ஏற்கனவே திருமணமானவரான அமரசிங்க,தனது பணியாளர்களில் ஓருவரின் மனைவியுடன் தகாத உறவுவைத்துள்ளதாகவும் குறிப்பிட்ட பெண்மணிக்கு இரு பிள்ளைகள் உள்ளதாகவும் ஹிருணிகா தெரிவித்துள்ளார். இந்த விடயத்துடன் தொடர்புட்டுள்ளவர்களில் ஹிருணிகாவை தவிர அனைவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


அவர் பாரிய தவறிழைத்துள்ளார்,ஹிருணிகாவினால் அவரது செயலை நியாயப்படுத்த முடியாது ஆனால் அவர் அதனை நியாயப்படுத்தும் விதமே அச்சத்தை ஏற்படுத்துகின்றது என ஹிருணிகாவின் ஆதரவாளர் ஓருவர் தெரிவித்துள்ளார். ஹிருணிகா தனது அரசியல் வன்முறையை தற்போது ஆரம்பித்துள்ளார் என சமூகஊடகங்களில் கருத்து வெளியாகியுள்ளது.


சில குடும்பங்களில் இருந்து காடைத்தனத்தையும், வன்முறையையும் பிரிக்க முடியாது போல தோன்றுகின்றது- தந்தை போலவே மகளும் செயற்படுகின்றார் என கருத்தும் சமூகஊடகங்களில் முன்வைக்கப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/127164/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்

ஹிருணிக்காவின் ஆதரவாளர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

141208194147_hirunika_premachandra__512x

 ஹிருணிக்கா பிரேமச்சந்திர

இலங்கையில் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவின் பாதுகாப்பு வாகனம் ஒன்றை பயன்படுத்தி நபர் ஒருவரை கடத்திச் சென்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அவரது 6 ஆதரவாளர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை அடையாள அணிவகுப்பொன்றில் நிறுத்துவதற்கு அனுமதி தருமாறு நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிபதி சந்தேகநபர்களை எதிர்வரும் 04-ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அன்றைய தினம் அவர்களை அடையாள அணிவகுப்பொன்றில் நிறுத்துமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிபதிகளுக்கு உத்தரவிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவின் டிஃபெண்டர் வாகனம் ஒன்றை பயன்படுத்தி சந்தேகநபர்கள் கொழும்பு தெமட்டகொடை பகுதியில் ஒருவரை கடத்தியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.

இதனிடையே, இந்த சம்பவத்துடன் தனக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று கூறியுள்ள ஹிருணிக்கா பிரேமச்சந்திர தனது ஆதரவாளர்களின் நடவடிக்கையை கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே தான் அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/global/2015/12/151223_hirunika_supporters

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு கிருசுகெட்ட வேலை. இப்படியா செய்யுறது.

அங்கிள் கோத்தவிடம் கேட்டிருந்தால் எப்படி ஸ்மார்ட்டா செய்யலாம் எண்டு சொல்லி தந்து இருப்பாரே..

CCTV யில் கடத்தல் பதிவுகள்....

https://youtu.be/7KV2-558dcI

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.