Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாகிஸ்தானுக்கு நரேந்திர மோடி திடீர் விஜயம்

Featured Replies

பாகிஸ்தானுக்கு நரேந்திர மோடி திடீர் விஜயம்

இந்திய பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானுக்கு திடீர் விஜயம் மேற்கொள்கிறார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தானுக்கான தனது முதலாவது பயணத்தை இன்று மேற்கொண்டுள்ளார்.

முன்னறிவிப்பில்லாத திடீர் விஜயமாக பாகிஸ்தானின் லாஹூர் நகருக்கு அவர் சென்றுள்ளார்.

இந்த திடீர் விஜயம் தொடர்பில் தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்ட அவர், பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் ஷரிப்பை இன்று மதியம் லாகூரில் சந்திக்கவிருப்பதாக தெரிவித்திருந்தார்.

அத்துடன் இன்று பிறந்த நாள் கொண்டாடும் நவாஸ் ஷரிப்புக்கு தான் வாழ்த்து தெரிவித்ததாகவும் அவர் ட்வீட் செய்துள்ளார்.

நரேந்திர மோடி ட்விட்டர் பதிவு  இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று மதியம் பாகிஸ்தானின் லாஹோர் நகருக்கு செல்லவிருப்பதாக தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மோடி இந்தியா திரும்பும் முன்பு பாகிஸ்தான் செல்கிறார்.

அணு ஆயுத வல்லமை கொண்ட இரண்டு அண்டை நாடுகளுக்கு இடையில் அமைதி பேச்சுக்களை மீண்டும் தொடங்கும் முயற்சியாக, கடந்த மாதம் பாரிஸில் நடந்த பருவநிலை மாற்றம் பேச்சுக்களில், இவ்விரு தலைவர்களும் சந்தித்துப் பேசியுள்ளனர்.

2004ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு இந்திய பிரதமர் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதல் முறை.

http://www.bbc.com/tamil/india/2015/12/151225_modi_pakistan_visit

  • தொடங்கியவர்

மோடியின் திடீர் பாகிஸ்தான் பயணம் இதற்குதானா?

 

லாகூர்: ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லி திரும்ப இருந்த நிலையில், திடீரென பாகிஸ்தான் சென்றதற்கு வரவேற்பும், எதிர்ப்பும் கிளம்பி  உள்ளன.

lahore%20nawas.jpg

ஆப்கானிஸ்தான் சென்ற இந்திய பிரதமர் மோடி இன்று டெல்லி திரும்ப இருந்த நிலையில், திடீரென தனது பயணத் திட்டத்தை மாற்றி, பாகிஸ்தான் சென்றார். லாகூர் விமான நிலையத்தில் இறங்கிய அவரை, பிரதமர் நவாஸ் ஷெரீப் வரவேற்று தனது மாளிகைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் பிறந்தநாள் நிகழ்ச்சியில் மோடி கலந்துகொண்டார்.

எதிர்ப்பும் வரவேற்பும்

இந்நிலையில், பிரதமர் மோடியின் திடீர் பாகிஸ்தான் பயணத்திற்கு அரசியல் கட்சிகளிடையே வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்துள்ளன. காங்கிரஸ் கட்சி இதை அபத்தமானது என வர்ணித்துள்ளது. இதுபற்றி அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் அஜோய் குமார், “நாட்டின் பிரதமர் பாகிஸ்தானுக்கு செல்வது பற்றி டுவிட்டர் மூலம் தெரிந்துக்கொள்ள நேர்ந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. ஆப்கானில் இருந்து டெல்லி திரும்பும் வழியில் பாகிஸ்தானில் இறங்கி அந்நாட்டு பிரதமரை சந்திக்கும் நிலையில் இருநாடுகளின் உறவு இல்லை.
சில நாட்களுக்கு முன்தான் பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்தது. ஆனால், பாகிஸ்தான் பயணம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை” எனக் கூறினார்.
 

modi%20-%20sherif%20600.jpg

அதேப்போன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி, “மோடியின் இந்த சாகச பயணம் நாட்டின் பாதுகாப்பில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். இந்த பயணம் பகுத்தறிவுக்கு ஏற்றது இல்லை எனும் போது, இது கண்டிப்பாக அபத்தமான முடிவுதான்” என தெரிவித்துள்ளார்.

அதே சமயம் பா.ஜனதா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் மோடியின் இந்த திடீர் பாகிஸ்தான் பயணத்தை வரவேற்று பாராட்டியுள்ளன.
 
அரசு வட்டாரங்கள் சொல்வது என்ன?

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடியின் பாகிஸ்தான் பயணமானது அவரது தன்னிச்சையான முடிவு என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் பாகிஸ்தான் பயணம் தொடர்பாக இன்று காலைதான் முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் தகவல்கள் தெரிவித்து உள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி காபூல் நகரில் இருந்து பறக்க தொடங்கிய போது இதுதொடர்பான பணியில் அதிகாரிகள் ஈடுபட்டதாக அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

திருமண விழாவில் பங்கேற்கவா?

இந்நிலையில் லாகூர் சென்றடைந்த மோடி,  நவாஸ் ஷெரீப்க்கு இன்று பிறந்த நாள் என்பதால், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதன்பின் நவாஸ் ஷெரீப், தனி ஹெலிகாப்டர் மூலம் மோடியை தனது மாளிகைக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவரும் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர்.
 

lahore%20a%20600.jpg

லாகூர் சென்றடைந்த மோடி நவாஸ் ஷெரீப் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய மோடி, இந்தியா-பாகிஸ்தான் உறவு மேம்பட வேண்டும் என்றும் தெரிவித்ததாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் ட்விட் செய்துள்ளார்.

மேலும் நவாஸ் ஷெரீபின் பேத்தி திருமண விழாவும் அதே மாளிகையில்தான் நடைபெற்றது. எனவே அந்த திருமண நிகழ்ச்சியிலும் மோடி பங்கேற்றார்.

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் வரவேற்பு!

இதனிடையே மோடியின் இந்த திடீர் பயணத்திற்கு பிரிவினைவாத தலைவரான மிர்வாய்ஸ் உமர் பாரூக் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

“மோடியின் இந்த பயணம் சாதகமான நடவடிக்கை. இந்தியா-பாகிஸ்தான் உறவை மேம்படுத்தும் எந்த வாய்ப்பாக இருந்தாலும் அதனை காஷ்மீர் மக்கள் வரவேற்பார்கள். இரு நாடுகளுக்கிடையிலான பிரச்சினைகளுக்கு குறிப்பாக காஷ்மீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அனைத்து பக்கங்களிலும் அரசியல் விருப்பம் மற்றும் பார்வை தேவை” என அவர் கூறி உள்ளார்.

http://www.vikatan.com/news/world/56831-modi-reaches-nawaz-sharifs-home-holds-talks.art

  • தொடங்கியவர்

'திடீர்' பாகிஸ்தான் பயணம்: நவாஸ் உடன் மோடி சந்திப்பு

 

 
பாகிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் மோடியை லாகூர் விமான நிலையத்தில் வரவேற்றார் அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப். | படங்கள்: பிடிஐ
பாகிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் மோடியை லாகூர் விமான நிலையத்தில் வரவேற்றார் அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப். | படங்கள்: பிடிஐ

ட்விட்டரில் அறிவிப்பு... பாக். பிரதமர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பு...

நவாஸ் உடன் பேச்சு

பாகிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, லாகூரில் அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து பேச்சு நடத்தினார்.

ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு, தலைநகர் காபூலில் இருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்ட பிரதமர் மோடி வழியில் பாகிஸ்தானில் வெள்ளிக்கிழமை லாகூர் சென்றார்.

லாகூர் விமான நிலையத்தில் காத்திருந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், மோடியின் கரங்களைப் பிடித்து புன்னகையுடன் வரவேற்றார். அதன் பின்னர், நவாஸ் இல்லத்தில் இரு தலைவர்களும் சந்தித்துப் பேசினர்.

இதனிடையே, இந்தியப் பிரதமர் மோடியின் திடீர் வருகையையொட்டி, பாகிஸ்தான் தரப்பு பாதுகாப்பைப் பலப்படுத்தியிருந்தது.

modi03_2670948a.jpg

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் இன்று பிறந்தநாள் வாழ்த்துகள் கூறினார்.

modi01_2670950a.jpg

இரு தலைவர்களும் நவாஸ் இல்லத்துக்கு தனி ஹெலிகாப்டர் மூலம் சென்றனர்.

modi02_2670949a.jpg

நவாஸ் இல்லத்தில் நடந்த அவரது பேத்தியின் திருமண நிகழ்ச்சியில், இந்தியப் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

modi04_2670964a.jpg

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் இரு நாட்டு உறவு குறித்து பேச்சு நடத்தினர்.

modi05_2670984a.jpg

மணமக்களை வாழ்த்திய பிறகு, நவாஸ் இல்லத்தில் இருந்து லாகூர் விமான நிலையம் புறப்பட்டார் மோடி.

modi06_2670982a.jpg

தனது சில மணி நேர பாகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு, லாகூர் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்டார் மோடி.

*

ட்விட்டரில் மோடி திடீர் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் பயணித்தில் இருந்த பிரதமர் மோடி ட்விட்டரில் வெள்ளிக்கிழமை திடீர் அறிவிப்பை வெளியிட்டவர், "டெல்லிக்குத் திரும்பும் வழியில் லாகூரில் இன்று பிற்பகலில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்திக்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

மற்றொரு ட்வீட்டில் ஷெரீபுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறியதைத் தெரிவித்த மோடி, "ஷெரீபுடன் பேசினேன். அவரை வாழ்த்தினேன்" என்று கூறியிருந்தார்.

பிரதமர் மோடியின் இந்தத் திடீர் பயணத் திட்டம், வெளியுறவுத் துறை ரீதியிலும் சற்றே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மோடியின் இந்த முடிவு சர்வதேச அரங்கிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா - பாகிஸ்தான் இடையே இரு தரப்பு பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்குவது என மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு முடிவு செய்தது. இது தொடர்பான அறிவிப்பை, இஸ்லாமாபாத்துக்கு இந்த மாதத்தின் துவக்கத்தில் பயணம் மேற்கொண்ட வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வெளியிட்டார். இந்தச் சூழலில், மோடியின் இன்றைய திடீர் பயணம் கவனிக்கத்தக்கது.

முன்னதாக, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இந்தியாவால் கட்டப்பட்ட அந்நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். பின்னர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றினார்.

அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "பயங்கரவாதத்தின் புதிய நிழல்கள் நம்மை நெருங்கி வருகிறது. இந்த நேரத்தில்தான் நாம் ஆப்கானிஸ்தானுக்கு துணையாக நிற்க வேண்டும்" என்றார். | வாசிக்க - ஆப்கனில் மோடியின் விரிவான உரை

காங்கிரஸ் காட்டமான கருத்து

பாகிஸ்தான் பிரதமர் நவாஸை சந்திக்க லாகூருக்கு திடீர் பயணம் மேற்கொண்டது, தேசப் பாதுகாப்பில் அக்கறை இல்லாத மோடியின் அபத்தமான சாகசம் என்று காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. | விவரம் - மோடியின் திடீர் பாகிஸ்தான் பயணம் ஓர் அபத்த சாகசம்: காங்கிரஸ் காட்டம்

http://tamil.thehindu.com/world/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article8028938.ece?homepage=true

  • தொடங்கியவர்

பாகிஸ்தானுக்கு மோடி திடீர் பயணம்: கட்டித்தழுவி வரவேற்ற நவாஸ் ஷெரீப்!

 

லாகூர்: ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு திடீரென பாகிஸ்தான் வந்த பிரதமர் நரேந்திர மோடியை கட்டித்தழுவி  வரவேற்றார் நவாஸ் ஷெரீப்.

p2.jpg

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று டெல்லி திரும்ப இருந்த  நிலையில், திடீர் பயணமாக பாகிஸ்தான் நாட்டிற்குச் சென்றார். லாகூர் விமான நிலையம் சென்றடைந்த அவரை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கட்டித்தழுவி வரவேற்றார்.

p1.jpg

நவாஸ் ஷெரீப்க்கு இன்று பிறந்த நாள் என்பதால், அவருக்கு பிரதமர் மோடி, பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதன் பின் நவாஸ் ஷெரீப், தனி ஹெலிகாப்டர் மூலம் மோடியை தனது மாளிகைக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவரும் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர்.

p3.jpg

2004-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பாகிஸ்தான் சென்றார். அதன்பின் 11 ஆண்டுகள் கழித்து இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி,  பாகிஸ்தான் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் திடீர் பயணத்தை முன்னட்டு, லாகூரை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

http://www.vikatan.com/news/world/56830-pm-modi-hosted-by-nawaz-sharif.art

  • கருத்துக்கள உறவுகள்

மோடி பாக்கிஸ்தான் போறார்.நவாப் செரீப் இலங்கை வரப்போறாராம்.என்னமோ நடக்குது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.