Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியலமைப்பு மாற்றத்துக்கு 11 சர்வஜன வாக்கெடுப்புகள் தேவையில்லை! - ஜயம்பதி விக்கிரமரட்ண 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அரசியலமைப்பு மாற்றத்துக்கு 11 சர்வஜன வாக்கெடுப்புகள் தேவையில்லை! - ஜயம்பதி விக்கிரமரட்ண 
[Thursday 2015-12-31 07:00]
அரசியலமைப்பின் சரத்துக்களை மீறாமல் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும். இதில் தற்போதுள்ள அரசியலமைப்புக்கு புறம்பாக எந்தவொரு மாற்றத்தையும் அரசாங்கம் முன்னெடுக்காதென பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் அரசியலமைப்பு நிபுணரான முன்னாள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் திருத்தம் செய்யப்படவுள்ள 11 சரத்துக்களுக்காக 11 தடவைகள் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென கூறியிருப்பது முற்றிலும் தவறானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியலமைப்பின் சரத்துக்களை மீறாமல் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும். இதில் தற்போதுள்ள அரசியலமைப்புக்கு புறம்பாக எந்தவொரு மாற்றத்தையும் அரசாங்கம் முன்னெடுக்காதென பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்தார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் அரசியலமைப்பு நிபுணரான முன்னாள் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் திருத்தம் செய்யப்படவுள்ள 11 சரத்துக்களுக்காக 11 தடவைகள் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென கூறியிருப்பது முற்றிலும் தவறானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

   

2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் 03ஆம் திகதி ஜீ. எல். பீரிஸ் அமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட புதிய அரசியலமைப்பிலும் அவர் ஒரு தடவை சர்வஜன வாக்கொடுப்பு நடத்துவது பற்றி மாத்திரமே குறிப்பிட்டுள்ளார். எனவே 11 தடவைகள் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது அரசியலமைப்புக்கு புறம்பானது என்றும் அவர் கூறினார்.

2016 ஆம் ஆண்டு ஜனவரி 09 ஆம் திகதி இலங்கை அரசியலமைப்பின் மிக முக்கியமான நாளாக அமையும். தற்போது ஆட்சியிலுள்ள ஜனாதிபதியின் விருப்பின்பேரில் நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படும். விருப்பு வாக்கு முறைக்கு பதிலாக கலப்பு தேர்தல் முறை அறிமுகம் செய்யப்படும். இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலும், ஜனநாயகம், நீதிமன்றத்தின் சுயாதீனமான செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்.

தற்போதுள்ள அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு அப்பால் அரசியலமைப்பில் எந்தவொரு மாற்றத்தையும் செய்யும் எதிர்பார்ப்பு அரசாங்கத்துக்கு இல்லை. ஜனவரி 09 ஆம் திகதி இதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் உள்ளடக்கக் கூடிய விதத்தில் முழுமையான பாராளுமன்ற தெரிவுக்குழு, அரசியலமைப்பு சபை என்ற பெயரில் கூடி 2/3 பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியும். புதிய அரசியலமைப்பு நகல் சட்டமூலம் ஒன்றை தயார்படுத்திக்கொள்வதற்காக மேற்படி நகல் சட்டமூலம் அமைச்சரவையினூடாக அங்கீகரித்துக்கொள்ளப்படும். அதன் பின்னர் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு 2/3 பெரும்பான்மையுடனும் சர்வஜன வாக்கெடுப்பினூடாகவும் நிறைவேற்றப்படும்.

இது தொடர்பாக தவறான செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. தற்போதுள்ள அரசியலமைப்புக்கு புறம்பாக செயற்படுவதாக தெரிவிக்கின்றனர். அது உண்மைக்குப் புறம்பானது. அரசியலமைப்புக்கு புறம்பாக செயற்படும் எந்தவொரு எண்ணமும் அரசாங்கத்துக்கு கிடையாது. புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் மிக ஒத்துழைப்புடன் செயற்படுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி கூறினார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=148201&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.