Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வீட்டில் இருந்தோரை அச்சுறுத்தி ஆயுதமுனையில் கொள்ளை!

Featured Replies

வீட்டில் இருந்தோரை அச்சுறுத்தி ஆயுதமுனையில் கொள்ளை!
 
 
வீட்டில் இருந்தோரை அச்சுறுத்தி ஆயுதமுனையில் கொள்ளை!
உரும்பிராய் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் ஆயுத முனையில் துணிக கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
 
உரும்பிராய் கிழக்கு ஞானவைரவர் கோவில் வீதி பகுதியில் உள்ள வீடொன்றிலேயே நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில்  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.மூன்று மோட்டார் சைக்களில் வந்த இனந்தெரியாத ஏழு நபர்கள் தமது முகத்தினை துணியால் கட்டி மறைத்த வண்ணம் வாள், கத்தி, பொல்லு போன்று கூரிய ஆயுதங்களுடன் வந்து கொள்ளை சம்பவத்தினை மேற்கொண்டுள்ளனர்.
 
குறித்த வீட்டில் புடைவை வியாபார நிலையம் ஒன்று இருப்பதனால் எப்பொழுதும் வாடிக்கையாளர்களால் சூழ்ந்து காணப்படும். நேற்று முன்தினம் இரவும் குறித்த வீட்டில் பல வாடிக்கையாளர் இருந்த சமயம் மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் அங்கிருந்தவர்களை வாள் கொண்டு துரத்தியதுடன் வீட்டின் உரிமையாளரின் மோட்டார் சைக்கிள் உட்பட புடைவை வாங்குவதற்கு வந்திருந்த வாடிக்கையாளர்களின் ஆட்டோக்கள் மோட்டார் சைக்கிள்கள் என்பனவற்றை அடித்து நொருக்கியுள்ளனர்.
 
வீட்டின் உரிமையாளர் வீட்டின் உள்ளே சென்று கதவை பூட்டியதும் கொள்ளையர்களால் வீட்டின் யன்னல்கள் மற்றும் கதவுகளை அடித்து சேதமாக்கியுள்ளனர்.
 
அதேசமயம் புடைவை வியாபார பணம் வைக்கும் மேசை வீட்டின் வெளி மண்டபத்தில் வெளியே பூட்டிட்ட நிலையில் இருந்ததினால் இதனை உடைத்து அதற்குள் இருந்த பணம் மொத்தமாக கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் சில உயர்ந்த ரக புடவைகளையும் கொள்ளையர்கள் தம்வசம் எடுத்துச் சென்றுள்ளனர்.
 
பணத்தினையும் புடவைகளையும் கொள்ளையிட்ட கொள்ளையர்கள் இலாவகமாக தப்பிச் சென்றதனால் நேற்றிரவு அப்பகுதி சற்று பதற்றமாகா காணப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
 
மேற்படி சம்பவத்தில் தெய்வாதினமாக யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்பட்டிருக்கவில்லை. கொள்ளையர்கள் வாள் கொண்டு துரத்திய சமயம் வீட்டில் இருந்த தாமும் புடவை வாங்க வந்த வாடிக்கையாளர்களும் சிதறி ஓடியமையால் எவ்வித பாரதூரமான அசம்பாவிதங்களோ காயங்களோ ஏற்படவில்லை என வீட்டின்  உரிமையாளர் தெரிவித்தார். அத்துடன் அந்நேரம் இருந்த பதற்றமான சூழ்நிலையால் தம்மால் அவர்களையும் அவர்கள் வந்த மோட்டார் வாகனத்தின் இலக்கங்களையும் குறித்து கொள்ள முடியவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 
மேற்படி சம்பவம் தொடர்பாக உடனடியாக கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து  சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் சம்பவ இடத்தையும் சேதமாக்கப்பட்ட பொருட்களையும் பார்வையிட்டதுடன், மேலதிக விசாரணைகளுக்கென சேதமாக்கப்பட்ட ஆட்டோ மற்றும் மோட்டார் வாகனங்களை பொலிஸ் நிலையம் எடுத்துச் சென்றுள்ளனர்.
 
உரும்பிராய் பகுதியில் அண்மைக்காலமாக பல திருட்டுச் சம்பவங்களும், தெருச்சண்டைகளும் அதிகளவில் இடம்பெறுவதாகவும், பொலிஸார் இரவு வேளைகளில் கூடுதலான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கோள்ள வேண்டும் என்றும் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.