Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“கொக்கட்டிச்சோலை படுகொலை“ 29ஆவது ஆண்டு நிறைவு இன்று

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“கொக்கட்டிச்சோலை படுகொலை“ 29ஆவது ஆண்டு நிறைவு இன்று

[ Thursday,28 January 2016, 05:22:27 ]   
oil%20lamp.jpg

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 29ஆவது ஆண்டு நிறைவு இன்று வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது.

கடந்த 1987ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் திகதி கொக்கட்டிச்சோலை இறால் பண்ணையில் பணியாற்றிக்கொண்டிருந்த நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ஸ்ரீலங்கா படையினரால் வெட்டிக்கொல்லப்பட்டிருந்தனர்.

ஸ்ரீலங்கா படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் 150ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியானதோடு, 12 பேருக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் இதுவரை தகவல் இல்லை.

மண்முனைத்துறைக்கும் மகிழடித்தீவுக்கும் இடையில் அமைந்திருந்த இறால் பண்ணையில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுவதோடு, இது அப்போதைய அரசாங்கத்தின் திட்டமிட்ட இன அழிப்பு என மனித உரிமைகள் அமைப்புகள் குற்றஞ்சாட்டியிருந்தன.

தலைக்குடா, மகிழடித்தீவு, முனைக்காடு, தாண்டியடி, கொக்கட்டிச்சோலை, அம்பிளாந்துறை போன்ற பிரதேசங்களில் 1987ஆம் ஆண்டு ஜனவரி 28, 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் தொடர்ச்சியாக பொதுமக்கள் மீது படையினரால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த படுகொலை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப் பரராஜசிங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் கவனத்திற்கு  கொண்டுவந்ததை அடுத்து இந்த விடயம்  சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்தமை குறிப்பிடத்தக்கது. 

http://ibctamil.com/news/index/17714

Edited by கறுப்பி

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 29ஆவது ஆண்டு நினைவு தினம்!
 
 
கொக்கட்டிச்சோலை படுகொலையின் 29ஆவது ஆண்டு நினைவு தினம்!
மட்டக்களப்பு-கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தின் 29ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வுகள் இன்று உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.
 
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்திருந்த இந்நினைவு நிகழ்வு முன்னாள் மட்டக்களப்பு  மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான என்.-ஸ்ரீநேசன் எஸ்.வியாழேந்திரன் சி.யோகேள்வரன், என்.ஸ்ரீதரன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
 
இறந்தவர்களின் நினைவாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் உறவினர்களால் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
 
கடந்த 1987ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் திகதி கொக்கட்டிச்சோலை இறால் பண்ணையில் பணியாற்றிக் கொண்டிருந்த நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இச்சம்பவத்தின் போது படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
 
மண்முனைத்துறைக்கும் மகிழடித்தீவுக்கும் இடையில் அமைந்திருந்த இறால் பண்ணையில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுவதோடு, இச்சம்பவத்தை மனித உரிமைகள் அமைப்புகள் கண்டித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
                                                  kokkadicholai_murder_007.jpg
 
                                                  kokkadicholai_murder_011.jpg
 
                                                  kokkadicholai_murder_008.jpg
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.