Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'எனது ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட ஏற்பாடுகளே எனதுமகனுக்கு வினையாகிப் போனது' மஹிந்த ராஜபக்ஷ:

Featured Replies

'எனது ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட ஏற்பாடுகளே எனதுமகனுக்கு வினையாகிப் போனது' மஹிந்த ராஜபக்ஷ:

 
'எனது ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட ஏற்பாடுகளே எனதுமகனுக்கு வினையாகிப் போனது' மஹிந்த ராஜபக்ஷ:



'எனது ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட ஏற்பாடுகளுக்கு அமையவே, எனது மகன் யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது' என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கண்டியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (31) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

'பணச் சலவை சட்டத்தின் கீழேயே யோஷிதவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் பணம், இலங்கையில் முதலிடுவதற்கு தடை விதிக்கும் வகையிலேயே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் 7 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆயுதங்கள், போதைப்பொருட்கள், 16 வயதுக்கு குறைந்தவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி சம்பாதித்த பணம் உள்ளிட்ட 7 முறைகளில் சம்பாதித்த பணம் தொடர்பில் அச்சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

யோஷித உள்ளிட்ட ஐவருக்கும், இந்த சட்டத்தின் கீழேயே வழக்கு தொடரப்பட்டுள்ளது. அப்படிப் பார்த்தால், சீ.எஸ்.என் நிறுவனம், இதுவரை காலமும் ஊடக நடவடிக்கைகளைக் கையாளவில்லை. போதைப் பொருட்களையே விற்பனை செய்துள்ளது என அர்த்தப்படுகிறது. பயங்கரவாதத்தைத் தடுக்கவே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. பயங்கரவாதத்தை இல்லாதொழித்தவரது மகனையே அந்த சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இது தான், நல்லாட்சியோ?' என்று கேள்வி எழுப்பினார்.

கடந்த காலங்களில் செய்த தவறுகள் தற்போது நினைவுக்கு வருகின்றன என்றும் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் புதல்வி, கள்ளநோட்டுக்களைத் தயாரித்தபோது, பிரேமதாசவினால் நாட்டுக்கு செய்யப்பட்ட நல்ல விடயங்களைக் கருத்திற்கொண்டு, இவ்விடயத்தை கையாள்வதைக் கைவிடுங்கள் என்று நான் அன்று உரைத்தேன். பாசிக்குடாவில், ஜனாதிபதி ஒருவரின் மகன் செய்த பிரச்சினையைப் பார்த்து நான் அமைதி காத்தேன். இவை தான் நான் செய்த தவறுகள். நான் அன்று செய்த தவறுகள் இன்று எண்ணி கவலைப்படுகிறேன்' என்றும் அவர் மேலும் கூறினார்.
 

யோசிதவை கைது செய்ய காண்பிக்கப்பட்ட அவசரம், எம்பிலிபிட்டிய சம்வத்தில் காட்டப்படவில்லை – மஹிந்த ராஜபக்ஸ:-

தமது மகன்  யோசித ராஜபக்சவை கைது செய்ய காண்பிக்கப்பட்ட அவசரம், எம்பிலிபிட்டிய சம்பவம் தொடர்பில் காட்டப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

எம்பிலிபிட்டி இளைஞர் மரணத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் இதுவரையில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் யோசித ராஜபக்ஸ அவசர அவசரமாக கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தம்முடன் இணைந்திருக்கும் அனைத்து நபர்களுக்கும் அரசாங்கம் ஏதோவொரு வகையில் அழுத்தங்களையும் அடக்குமுறைகளையும் பிரயோகித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாளை தம்மையும் விசாரணைக்காக அழைத்து கைது செய்யப்பட முடியும் எனவும் கோதபாய ராஜபக்ஸ மற்றும் பெசில் ராஜபக்ஸவிற்கும் இதேநிலைமை ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் ஆட்சியில் இருந்த காலத்தில் பழிவாங்கல்களில் ஈடுபட்டதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யோசிதவுடன் எவ்வித முரண்பாடும் அரசாங்கத்திற்கு கிடையாது எனவும் தம்மை பழிவாங்கும் நோக்கில் இவ்வாறு யோசித கைதாகியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகள் துலாஞ்சலி பிரேமதாச கள்ள நோட்டு அச்சடித்த போதும் தற்போதைய ஜனாதிபதியின் புதல்வர் தஹாம் சிறிசேன பாசிகுடா பிரதேசத்தில் சிக்கல் ஒன்றில் சம்பந்தப்பட்ட போதும் அதனை பூதாகாரமாக்காது விட்டது தமது பிழையாகவே கருதுவதாகத் தெரிவித்தள்ளார்.

உள்ளுராட்சி மன்றத்தேர்தல் எவ்வாறு நடைபெறும் என்பது பற்றி தெரியவில்லை எனவும் தேர்தலுக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/128506/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.