Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நட்பென்றால் இதுதான் நண்பா

Featured Replies

நட்பு உலகின் தோற்றத்திலிருந்து .....
படைத்தவனால் கிடைத்த அமிர்தம் ....!
காவியங்கள் காப்பியங்கள் கதைகள் ....
இலக்கியங்கள் புராணங்கள் மற்றும் ....
மறை நூல்கள் ,சொல்லாத விடயத்தையா ....
நான் சொல்லிவிடப்போகிறேன் ....?
எல்லாம் அங்கிருந்தே எடுக்கிறோம் ....!!!

புனித குர்ரானில் சொல்லாத நட்பா ....?
புனித பைபிளில் சொல்லாத நட்பா ....?
மறைநூல் திருக்குறளில் சொல்லாத நட்பா ....?
இதுவரை எழுதிய கவிஞர்கள் சொல்லாததா...?
நடித்து கலைத்த நாடகங்கள் சொல்லாததா...?
சிந்தனையாளர் கொட்டி தீர்த்த சிந்தனையை ....
விடவா நான் நட்பை விளக்கிடபோகிறேன்...?

முடிந்தவரை நண்பா நட்பு என்றால் என்ன ....?
பொறுக்கி எடுத்ததில் பெருக்கி சொல்கிறேன் ...!!!

மனைவியிடம் எதையும் மறைக்காமல் .....
பகிர்ந்தால் குடும்பம் பிரியும் என்று ....
புரிந்தும் உண்மையை சொல்லும் கணவன் ....
" குடும்ப நட்பின் தலைவன் " ....!!!

அவனுக்கு அவளுக்கு தலைவலித்தால் ....
இவனுக்கு இதயம் வலிக்கும் என்று ...
உள்ளத்தால் வேதனை படும் உயிர் ....
" உறவு நட்புக்கு தலைவன் ".....!!!

தடக்கி தடம் புரண்டு விழும்போது .....
கை கட்டி நின்று பார்க்காமல் ....
கைகொடுத்து தோள் கொடுத்து ....
தூக்கிவிடுபவன் நட்புகளின் ....
"உதவும் கரங்கள் நட்புக்கு தலைவன் "....!!!

நண்பனின் மலர்ச்சியில் மனம் ....
மகிழ்ந்து அவனின் வளர்ச்சியில் ....
மனம் நெகிழ்ந்து - அவன் உயர்ச்சியில் ....
உச்சி குளிர்ந்து உள்ளத்தால் வாழ்த்துபவன் ....
நட்புக்கெல்லாம் தலைவன் என்றார் ...
கண்ணதாசன் ஐயா.....!!!

திருவள்ளுவர் கூறும் நட்பு .....
குர்ரான் கூறும் உன்னத நட்பு .....
பைபிள் கூறும் அன்பு நட்பு .......
கடை பிடிக்க முயற்சி செய் ....
முடியாவிட்டால் அவற்றை....
வாசித்து பயிற்சி செய் ......
உலகமே உன் வசப்படும் .....!!!

என் பைந்தமிழ் மூதாதைகள் ....
நட்புக்கு வகையே கூறியுள்ளார்கள் .....!!!

" தலையாய நட்பு " - ஒருமுறை தண்ணீரில் ....
வளரும் பனைமரம் போல நட்பு கொண்ட ....
நொடிமுதல் உயிர்வரை தொடரும் .....!!!

" இடையாய நட்பு" - இடைக்கிடையே ...
தண்ணீரூற்றினால் வளரும் தென்னைபோல்....
நட்பை வளர்க்கும் நட்பாகும் .....!!!

" கடையாய நட்பு " தினம் தோறும்....
தண்ணீரூற்றினால் வளரும் பாக்குமரம்போல் ....
நட்பை வளர்க்கும் நட்பாகும் .....!!!

எந்த நட்பு எப்படி வரும் என்பதை ...
யார் அறிவார் பராபரமே என்பதுபோல் ...
வரும் நட்பை காப்பற்றுவதே நல் நட்பாகும் ....!!!

இவனுடன் இவளுடன் பழகினால் ....
இது இது கிடைக்கும் என்று கணக்கு....
போட்டு பழகுவதும் - துன்பம் வரும்போது ...
விலகி நின்றுவிட்டு நான் இருந்திருந்தால் ....
உன்னை விட்டிருக்க மாட்டேன் என்று ....
பாசாங்குடன் பழகும் நட்பும் கூடா நட்பு ....!!!

இறுதியில் யான் கூறுவது ....
பருவத்துக்கு காய்க்கும் மாங்காய்போல்...
மாங்காய் நட்பை காட்டிலும் ....
காலமெல்லாம் காய்க்கும் தென்னை போல் ...
தேங்காய் நட்பு சிறப்பு .....!!!

  • 5 months later...
  • தொடங்கியவர்

உரிமை கொள்ள
ஆயிரம் உறவுகள்
இருந்தாலும்,
உள்ளதைப் புரிந்து கொள்ள
நண்பா 
உன் ஓர் உறவுபோதும்...!!!

நட்பு  
ஆழ்கடல் போன்றது...
கரையில் தேடினால்,
சிப்பிகள்  கிடைக்கும்...
மூழ்கி தேடினால் தான்
உன்னைப் போல...
முத்துக்கள் கிடைக்கும்....!!!

+
கவிப்புயல் இனியவன் 
நட்பு கவிதை 
 

  • தொடங்கியவர்

உலகுக்கு ஒளி தரும் .....
சூரியனே.. கடமையை ....
முடித்து விட்டு .....
உறங்க சென்று விட்டது...! 

என் .....
உயிருக்கு ஒளி தரும் ....
நட்பே நீ மட்டும் .....
ஏன் விழித்திருக்கிறாய்.....?
போய் கண் உறங்கு...! 
உனக்காக நானும் .....
எனக்காக நீயும் ....
விடியல் நமக்காகத்தான் ...!!!

+
கவிப்புயல் இனியவன் 
நட்பு கவிதை 

அனுபவத்தால் வந்த கவி ...
********************
சில நட்பை  நாம்
புரிந்து கொள்ளாததால்
வெறுக்கிறோம்.....!!!!

சிலரை, நாம்
வெறுப்பதால் புரிந்து 
கொள்ளமறுக்கிறோம்...!!!

+
கவிப்புயல் இனியவன் 
நட்பு கவிதை

தென்றல் காற்றின் சுகம் .....
அர்த்தமுள்ள கவிதை சுகம் ....
அறியாத பொருள் இதம் .....
கலையாத கனவு இன்பம் ....
இன்னும் எவ்வளவோ...
அத்தனையும் கண்டேன்....
உன் அணையாத நட்பில் ....!!!

விழுந்தவுடன் மறைந்து விட
நாம்  மழைத் துளி அல்ல...
இறுதிவரை நம்முடன் .....
இருக்கும் கண்ணீர் துளி...!!!

+
கவிப்புயல் இனியவன் 
நட்பு கவிதை

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

கல்லூரியில் கலாய்ப்பது ..
காலத்துக்கும் அழியாது ...
காதலின் தொடக்க இடம் ...
சுகம்தான் அந்த இடம் ...
சொர்க்கத்தை காண ......
ஒரே இடம் ..........!!!

சண்டையிடுவோம் ...
சமாதானப்படுவோம் ...
சட்டையை கூட ......
மாறிப்போடுவோம் ...
சஞ்சலப்படாது மனம் ...!!!

கூத்தடிப்போம் ..
கும்மாளம் செய்வோம் ..
கூடிச்சாப்பிடுவோம் ...
தனியே ஒருவன் வந்தால் 
செத்தான் சேகர் ...!!!

விடுமுறை என்றால் பள்ளி ..
பருவம் சந்தோசப்படும்
கல்லூரி பருவம் கண்ணீர் விடும் ...!!!
கொடிய துன்பம் கல்லூரியின் ....
கடைசிநாள் ...!!!

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே 
கவிப்புயல் இனியவன் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.