Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை தொடர்ந்தும் சாதனை

Featured Replies

கோலூன்றிப் பாய்தலில் சந்தருவன் புதிய தெற்காசிய சாதனை
 

 

14823ishara-sandaruwan-pole-volt-recrd.jதெற்­கா­சிய விளை­யாட்டு விழாவின் ஆறாம் நாளான செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்ற மெய்­வல்­லுநர் போட்­டி­களில் இலங்­கைக்கு நான்கு தங்கப் பதக்­கங்கள் கிடைத்­தன.

 

ஆண்கள் மற்றும் பெண்­க­ளுக்­கான 4 x 100 மீற்றர் தொடர் ஓட்­டங்­க­ளிலும் ஆண்­களுக்­கான கோலூன்றிப் பாய்தல், பெண்­க­ளுக்­கான 800 மீற்றர் ஓட்டம் ஆகி­ய­வற்றிலும் இலங்­கைக்கு தங்கப் பதக்­கங்கள் கிடைத்­தன.

 

ஆண்­க­ளுக்­கான கோலூன்றிப் பாய்­தலில் இஷார சந்­த­ருவன் 4.90 மீற்றர் உயரம் தாவி, தெற்­கா­சிய விளை­யாட்டுப் போட்டி சாத­னையைப் புதுப்­பித்து தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்தார். 

 

ஆண்­க­ளுக்­கான 4 x 100 மீற்றர் தொடர் ஓட்­டத்தை 36.96 செக்­கன்­களில் நிறைவு செய்த இலங்கை அணி தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்­தது.

 

ஆண்­க­ளுக்­கான தொடர் ஓட்ட அணியில் ஹிமாஷா ஏஷான், மொஹமத் அஷ்ரவ், வினோத் சுரஞ்­சய, ஷெஹான் அம்பேபிட்டிய ஆகியோர் இடம்­பெற்­றனர்.

 

148234x100-men-relay.jpg

 

பெண்­க­ளுக்­கான 4 x 100 மீற்றர் தொடர் ஓட்­டத்தை 45.50 செக்­கன்­களில் நிறைவு செய்த இலங்கை அணி தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்­தது. இவ்­வ­ணியில் ல­க்ஷிதா சுகந்தி, என். சி. டி. பிரி­ய­தர்­ஷனி, ஷாமிலா ஷவன்தி, ருமே­ஷிகா ரத்­நா­யக்க ஆகியோர் இடம்­பெற்­றனர்.

 

ஆண்­க­ளுக்­கான 800 மீற்றர் ஓட்டப் போட்­டியில் இந்­துனில் ஹேரத் (1 நி. 51.46 செக்) தங்கப் பதக்­கத்தை வென்றார்.

 

இதே­வேளை விழாவின் ஏழாம் நாளான நேற்­றைய தினம் மாலை 6 மணி­வரை நடை­பெற்று முடிந்த போட்­டி­களில் இலங்­கைக்கு தங்கப் பதக்கம் எதுவும் கிடைக்­க­வில்லை.

 

148234x100-women-relay.jpg

 

எனினும் மெய்­வல்­லுநர் போட்­டி­களில் இரண்டு வௌ்ளிப் பதக்­கங்­களும் ஒரு வெண்­கலப் பதக்­கமும் டென்னிஸ் போட்­டி­களில் வெண்­கலப் பதக்­கமும் இலங்­கைக்கு கிடைத்­தது. 

 

குவா­ஹாட்டி மற்றும் ஷில்­லொங்கில் நடை­பெற்­று­வரும் 12ஆவது தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் இலங்கை குறிப்­பி­டத்­தக்­க­ளவு வளர்ச்­சியைக் கண்­டுள்­ளது.

 

பங்­க­ளா­தேஷில் 2010இல் நடை­பெற்ற தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் 16 தங்கப் பதக்­கங்­களை மாத்­தி­ரமே பெற்­றி­ருந்­தது.

 

14823VRA-20160212-m02-MED.jpgஇம் ­முறை இன்னும் ஐந்து நாட்கள் ஏஞ்­சி­யுள்ள நிலையில் இலங்கை 24 தங்கப் பதக்­கங்­களைப் பெற்று இரண்­டா­வது இடத்தில் நீடிக்­கி­றது.

 

மெய்­வல்­லுநர் போட்டி


வியா­ழ­னன்று நடை­பெற்ற மெய்­வல்­லுநர் போட்­டி­களில் பெண்­களுக்­கான 400 மீற்றர் சட்­ட­வேலி ஓட்­டத்தை 59.87 செக்­கன்­களில் நிறைவு செய்த இலங்­கையின் கௌஷல்யா வெண்­க­லப்­ப­தக்­கத்தை வென்றார்.

 

பெண்­க­ளுக்­கான 1500 மீற்றர் ஓட்டப் போட்­டியில் இலங்­கைக்கு வௌ்ளிப்­ப­தக்­கமே கிடைத்­தது. போட்­டியின் கடைசிக் கட்­டத்தில் வேக­மாக ஓடிய இந்­திய வீராங்­கனை சித்ரா தங்கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்தார். ஏ. அபே­ரத்ன (4:25:59) வெள்ளிப் பதக்­கத்தை வென்றார்.

 

பெண்­க­ளுக்­கான ஈட்டி எறி­தலில் நதீகா லக்­மாலி (54.13 மீற்றர்) வெண்­க­லப்­ப­தக்­கத்­தையும் ஆண்­க­ளுக்­கான 1500 மீற்றர் ஓட்டப் போட்­டியில் சஞ்­சீவ லக்மால் (3:54) வெள்ளிப் பதக்­கத்­தையும் வென்­றனர்.

 

டென்னிஸ் 


தேற்­கா­சிய விளை­யாட்டு விழா டென்னிஸ் வர­லாற்றில் 1995க்குப் பின்னர் இலங்­கைக்கு பதக்­கங்கள் கிடைத்­துள்­ளது. இம்­முறை டென்­னிஸில் இலங்­கைக்கு 7 வெண்­கலப் பதக்­கங்கள் கிடைத்­தன.

 

இலங்கை டென்னிஸ் அணியில் ஹர்­ஷன கொட­மான்ன, தினேஷ்­காந்தன் தங்கராஜா,  சாமல் திஸாநாயக்க, யசித்த டி சில்வா, அம்ரிதா முத்தையா, நெத்மி வாடுகே, மெதிரா சமரசிங்க, திசுரி மொல்லிகொட ஆகியோர் இடம்பெற்றனர்.

 

14823tennis.jpg

 

கால்­பந்­தாட்­டத்தில் இலங்­கைக்கு துர­திர்ஷ்டம்

ஆண்­க­ளுக்­கான கால்­பந்­தாட்டப் போட்­டியில் பதக்கம் ஒன்­றுக்கு குறி­வைத்து தெற்­கா­சிய விளை­யாட்டு விழாவில் பங்­கு­பற்­றிய இலங்கை, இறுதிச் சுற்றில் விளை­யாடும் வாய்ப்பை இழந்­தது.

 

இலங்­கை­யிலும் லீக் சுற்றில் 0 க்கு 1 என்ற கோல் அடிப்­ப­டையில் தோல்வி அடைந்­தி­ருந்த இந்­தியா, நேற்­று ­முன்­தினம் நடை­பெற்ற கடைசி லீக் போட்­டியில் மாலை­தீ­வுகள் அணியை 3 க்கு 2 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­கொண்­டது.

 

இந்தப் போட்டி முடிவை அடுத்து மாலைதீவுகளும் இந்தியாவும் குழு ஏயிலிருந்து அரை இறுதிச் சுற்றுக்கு தெரிவாகின.
மாலைதீவுகளிடம் 1 க்கு 3 என இலங்கை தோல்வி அடைந்திருந்தது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=14824#sthash.vVcG3n2l.dpuf
  • தொடங்கியவர்

12715655_10153207764305870_8152829108816

  • தொடங்கியவர்
தெற்காசிய விளையாட்டு மரதன் ஓட்டங்களில் இலங்கைக்கு 2 வெள்ளிகள், ஒரு வெண்கலம்
2016-02-12 21:44:54

இந்தியாவின் குவாஹாட்டியில் இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டிகளில் இலங்கைக்கு இரண்டு வெள்ளிப் பதக்கங்களும் ஒரு வெண்கலப் பதக்கமும் கிடைத்தன.

 

 

ஆண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் லண்டனில் வசித்து வரும் இலங்கை வீரர் அநுராத இந்த்ரஜித் குரே ஒரு செக்கன் வித்தியாசத்தில் தங்கப் பதக்கத்தை தவறவிட்டார்.


கடும் போட்டி நிலவிய ஆண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியின் முடிவுக் கோட்டை முதலில் கடப்பதற்கு அநுராத இந்த்ரஜித் கடுமையாக முயற்சித்தபோதிலும் அவருக்கு வெள்ளிப் பதக்கமே கிடைத்தது.


இவர் மரதன் ஓட்டத் தூரத்தை 2 மணி. 15 நிமி. 19.00 செக்கன்களில் நிறைவு செய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இந்தியாவின் நிட்டேந்தர் சிங் ராவத் (2:15:18.00) தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

 

14840marathon-sag-2016.jpg


பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இலங்கையின் என். கீதானி ராஜசேகர,  தங்கப்பதக்கம் வென்ற இந்தியாவின் கவிதா ராவுத், வெண்கலப்பதக்கம் வென்ற பி. ஜீ. எல். அநுராதி.


 

பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியில் இலங்கையின் என். கீதானி ராஜசேகர (2:50:47.00) வெள்ளிப் பதக்கத்தையும் பி. ஜீ. எல். அநுராதி (2:52:15.00) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.


இப் போட்டியில் இந்தியாவின் கவிதா ராவுத் (2:38:38.00) தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.


அநுராத இந்த்ரஜித் குறேயும் கீதானி ராஜசேகரவும் இவ் வருட மத்தியில் நடைபெறவுள்ள ரியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்ற தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

குறிபார்த்து சுடுதல்


ஸ்டாண்டர்ட் பிஸ்டலைக் கொண்டு 25 மீற்றர் தூரத்திலிருந்து குறிபார்த்து சுடுதல் (ஆண்கள்) போட்டியில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்து.
எஸ். பெர்னாண்டோ, எம். பத்திரன, ஜீ. எஸ். வெல்கம ஆகியோர் மொத்தமாக 1603 புள்ளிகளைப் பெற்று இலங்கைக்கான வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்தனர்.


இப் போட்டியில் இந்தியா தங்கப் பதக்கத்தையும் பாகிஸ்தான் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றதுடன் தனிநபர்களுக்கான போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய மூன்று பதக்கங்களும் இந்தியாவுக்கு சொந்தமானது.

 

கபடியில் இலங்கை வெற்றி


பாகிஸ்தானுக்கு எதிராக இன்று காலை நடைபெற்ற கபடி போட்டியில் இலங்கை 14 க்கு 13 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றுள்ளது. நேற்றைய தினம் பங்களாதேஷை 24 க்கு 16 என இலங்கை வெற்றிகொண்டிருந்தது.


இப் போட்டியிலும் இலங்கைக்கு பதக்கம் ஒன்று கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=14840#sthash.Ic1PvjB2.dpuf
  • தொடங்கியவர்

மகளிர்க்கான அஞ்சல் ஒட்டம் (வீடியோ)

  • தொடங்கியவர்

12728893_1052712208122370_58050077684597

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.