Jump to content

ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூடியது: தாயகத்தை கைப்பற்ற சதி- வைகோ ஆவேச பேச்சு


Recommended Posts

பரபரப்பான சூழ்நிலையில் ம.தி.மு.க. உயர் நிலைக் கூட்டம் தாயகத்தில் இன்று காலை கூடியது.

இதில் கலந்து கொள்வதற்காக பொது செயலாளர் வைகோ காலை 10 மணிக்கு தாயகம் வந்தார். அங்கு ஆயிரக்கணக்கான தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் கூடி இருந்தனர்.

வைகோவைப் பார்த்ததும் புரட்சிப் புயல் வைகோ வாழ்க என்று உணர்ச்சி பொங்க வாழ்த்து கோஷம் எழுப்பி வரவேற்றனர். தாயகம் முன்பு உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு தொண்டர்கள் மத்தியில் வைகோ ஆவேசமாக பேசினார்.

அப்போது உணர்ச்சி மிகுதியால் கண்ணீர் விட்டு கதறி அழுதார். வைகோ வந்ததும் கூட்டம் தொடங்கியது. முன்னதாக தாயகத்தில் தொண்டர் வைத்திருந்த கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடினார். நிர்வாகிகள், தொண்டர்களுக்கு கேக் வழங்கினார்.

தொண்டர்கள் மத்தியில் வைகோ பேசியதாவது:-

ம.தி.மு.க.வை எத்தனையோ கஷ்டங்களை சந்தித்து வளர்த்தோம். 5 உயிர்களை இழந்தோம். தாயகம் என்ற பெயரில் புதிய கட்சி அலுவலகத்தையும் திறந்தோம்.

இந்த அலுவலகம் சாதாரணமாக கட்டப்பட்டது அல்ல. ஜோசப் என்பவர் ஏசு பிறந்த ஊரான பெத்லகேம் சென்று அங்கிருந்து புனித நீரை எடுத்து வந்து தெளித்து வாஸ்து முறைப்படி கட்டப்பட்டது.

13 வருடங்களாக எந்த வன்முறையிலும் ஈடுபடாமல், யாருக்கும் தீங்கு செய்யாமல் கட்சி நடத்துகிறோம். கலவரம் நிற்க வேண்டும், சாந்தி தழைக்க வேண்டும் என்பதே விருப்பம். கிறிஸ்துமஸ் பண்டிகையை கூட அந்த நோக்கத்தில்தான் இன்று கொண்டாடுகிறார்கள்.

ம.தி.மு.க. உருவான வரலாறை நினைத்துப்பார்க்கிறேன். கொலைகார பழி சுமத்தி வெளியேற்றினார்கள். பலர் மடிந்தனர். பொட்டல் காட்டில் நின்று கட்சி வளர்த்தோம். வீதி வீதியாக பணம் திரட்டி புதிய கட்டிடம் கட்டினோம். இதற்காக பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் அல்ல. இந்த தாயகம்தான் எனக்கு கோவில், மசூதி, தேவாலயம்.

குருவிக்குத்தான் கூடு கட்டிய கஷ்டம் தெரியும். ஏழை விவசாயி மனைவி மக்களுடன், மண்ணைப் பிசைந்து சுவர் எழுப்பி ஓலைகள் கட்டி குடிசை செய்து உள்ளே குடியேறுகிறான். அந்த விவசாயிக்குத்தான் கூரை வீட்டின் அருமை தெரியும். அவர்களைப் போலத்தான் தாயகத்தை கட்டினோம்.

1994 ஜனவரி 15-ல் இந்த அலுவலகம் திறக்கப்பட்ட போது என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தோம். அண்ணாவின் தாயகம் நினைவுக்கு வந்தது. அந்த பெயரை சூட்டினோம். இது எல்லோரும் கூடும் தாயகம் நம் அனைவருக்கும் வீடு. இதனை உருவாக்கப்பட்டபாடுகள் ஏராளம்.

இப்படி வளர்க்கப்பட்ட இயக்கத்தை நிர்மூலம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில் யாரும் ஆத்திரப்படக்கூடாது. அமைதி காக்க வேண்டும். பழிச்சொல்லுக்கு பழக்கப்பட்டவர்கள் நாம் துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். சாந்த குணம் உள்ளவர்கள் பாக்கிய வான்கள்.

13 வருடங்களாக கட்சி நடத்துகிறோம். எந்த கலவரத்திலும் ஈடுபட்டது இல்லை. பொதுமக்களுக்கு இடைïறு செய்தது இல்லை. முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக நடை பயணம் சென்றேன். 5 நிமிடம் கூட போக்குவரத்து நின்றது இல்லை.

நமது கட்சிதான் தமிழ் நாட்டுக்கு தேவையான நல்ல கட்சி. ஜெயிக்கலாம், ஜெயிக்காமல் போகலாம். ஓட்டு கிடைக்கலாம், கிடைக்காமல் போகலாம். ஆனால் தமிழ்நாட்டுக்கு நல்ல கட்சி நமது கட்சிதான். தற்போது ம.தி.மு.க.வை அழிக்க சில திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன.

அ.தி.மு.க. உடன்பாட்டில் இருந்து நம்மை வெளியேற்றுவது முதல் திட்டம். கலவரம் செய்து நாங்கள்தான் உண்மையான ம.தி.மு.க. என்று அறிவிக்க செய்வது இன்னொரு திட்டம். சதி திட்டங்கள் எங்கு வகுக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியும்.

கடந்த மாதம் 27-ந் தேதி இரவு 10.30 மணிக்கு சி.ஐ.டி. நகர் வீட்டில் முதல்- அமைச்சரை இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். 2 மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளனர். இன்று காலை கூட செஞ்சி ராமச்சந்திரன் ஒரு மணி நேரம் சந்தித்து பேசியுள்ளார்.

200-க்கும் மேற்பட்ட கிரிமினல்கள் போக்கிரிகளுடன் தாயகத்துக்கு உள்ளே வர திட்டமிட்டதாக தகவல் கிடைத்து உள்ளது. அவர்களை தடுத்தால் கலவரம் செய்யவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. போலீசாரும் அவர்களுடன் சேர்ந்து தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக தகவல் வந்துள்ளது.

கடைசி நேரத்தில் இது மாறலாம். உள்ளே நுழையும்போது நீங்கள் தடுத்தால் கைகலப்பில் ஈடுபடுவார்கள். அதன் பிறகு மாநகராட்சி தேர்தலில் நடந்ததுபோல வன்முறைகள் நிகழும். எனவே எந்த கட்டத்திலும் ஆத்திரப்படாதீர்கள்.

ம.தி.மு.க. என்ற கட்சியே இருக்க கூடாது என்பதுதான் அவர்கள் திட்டம். ஜெயிலில் இருந்து வெளிவர உதவும்படி நான் மன்றாடியதாக பழி சொல்லப்பட்டுள்ளது. நான் ஜெயிலில் இருந்து வெளிவர விரும்பாமல் தான் உள்ளே இருந்தேன். யாரிடமும் மன்றாடவில்லை. இன்னும் என் மீது வழக்கு உள்ளது.

தேர்தலில் ஆதரவு வேண்டும் என்று கேட்டவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும். நான் போய் கண்ணீர் விட்டு கதறி அழுதேனாம். தி.மு.க. வுக்கு ஆபத்து வந்த காலங்களில் கூட கட்சியை பாது காக்க போராடியவன். கட்சிப் பதவியில் இருந்து எல். கணேசன், செஞ்சி ராமச்சந்திரனை நீக்கினோம்.

கோர்ட்டில் அதற்கு மட்டும்தான் தடை பெறப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தை நடத்த தடை இல்லை. அவர்களே பொதுக்குழுவை கூட்டுவதாக அறிவித்துள்ளனர். அதன் பிறகு இங்கே ஏன் வர வேண்டும். தி.மு.க. தொண்டர்களுக்கும், எங்களுக்கும் பகை இல்லை. நீங்கள் குறுக்கே வராதீர்கள்

ரவுடிகள் வரட்டும், போலீஸ் வரட்டும் அறவழியில் எதிர்ப்போம். என்னையும் தாக்க திட்டமிட்டுள்ளனர். தாயகத்தை பூட்டி விட வேண்டும். இந்த கட்சி இருக்ககூடாது. அலுவலகம் இயங்க கூடாது என்று நினைக்கிறார்கள். பூட்டி போடவும் திட்டமிடுகிறார்கள்.

அப்படிப்பட்ட அநீதி நடந்தால் பொட்டல் காட்டில் நின்று கூட கட்சியை நடத்துவேன். என் உடம்பில் உயிர் இருக்கும் வரை கட்சியை வளர்ப்பேன். எனக்கு பிறகு லட்சோப லட்சம் தொண்டர்கள் வளர்ப்போம். எதற்கும் அஞ்ச மாட்டோம்.

(இவ்வாறு கூறும்போது வைகோ கண்கலங்கி அழுதார்)

எங்கள் மனதில் கள்ளம் இல்லை, துரோகம் இல்லை, எது நடந்தாலும் சந்திப்போம், கலவரம் செய்து தாயகத்தை பூட்டி விடலாம் ஆனால் நாங்கள் வாழும் தமிழக மக்களின் இதயங்களை பூட்ட முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

இன்றைய கூட்டத்தில் மொத்தம் உள்ள 36 மாவட்ட செயலாளர்களில் 33 பேர் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்ட செயலாளர் தியாகபாடி எல்.கணேசனுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதால் அவர் கலந்து கொள்ள வில்லை.

கோவை, புறநகர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.மாரியப்பன் உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். நீலகிரி மாவட்ட செயலாளர் நஞ்சன் அமெரிக்கா சென்று உள்ளார். இவர்கள் இருவரும் வைகோவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

பொருளாளர் கண்ணப்பன், மல்லை சத்யா, பட அதிபர் எஸ்.தாணு, செய்தி தொடர்பாளர் நன்மாறன், சென்னை மாவட்ட செயலாளர்கள் வேளச்சேரி மணிமாறன், ஜீவன், எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், வீர.இளவரசன், ஞானதாஸ், டாக்டர் சதன்திருமலை குமார், வரதராஜன், மாநில நிர்வாகிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், சீமா பஷீர், மனோகரா, ராமமூர்த்தி, குமாரி விஜயகுமார், தேவ தாஸ், அருணாசலம், பாளை. குருநாதன், உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஏற்கனவே கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட எல்.கணேசன் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்க வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

தென்மாவட்ட விவசாயிகளின் ஜீவாதார பிரச்சினையான முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக நடை பயணம் மேற்கொண்டு மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்தமைக்காக வைகோவுக்கு நன்றி தெரிவிப்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன

http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
    • யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 03:41 PM   தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.  பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.  சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.  அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.  அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk
    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.