Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

29 ஜேர்மன் நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்ய இணக்கம்! 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

29 ஜேர்மன் நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்ய இணக்கம்! 
[Wednesday 2016-02-24 07:00]

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜேர்மன் விஜயத்தை யடுத்து அந்நாட்டின் 29 கம்பனிகள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்திருப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று தெரிவித்தார். இதன்படி ஜேர்மனில் அமைச்சரவை அந்தஸ்து வகிக்கும் விஷேட அமைச்சர் ஒருவரின் தலைமையின் கீழ் மே மாதம் முதல் வாரத்தில் தூதுக்குழுவொன்று இலங்கை வரவிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜேர்மன் விஜயத்தை யடுத்து அந்நாட்டின் 29 கம்பனிகள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்திருப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று தெரிவித்தார். இதன்படி ஜேர்மனில் அமைச்சரவை அந்தஸ்து வகிக்கும் விஷேட அமைச்சர் ஒருவரின் தலைமையின் கீழ் மே மாதம் முதல் வாரத்தில் தூதுக்குழுவொன்று இலங்கை வரவிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜேர்மன் விஜயத்தை யடுத்து அந்நாட்டின் 29 கம்பனிகள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்திருப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று தெரிவித்தார். இதன்படி ஜேர்மனில் அமைச்சரவை அந்தஸ்து வகிக்கும் விஷேட அமைச்சர் ஒருவரின் தலைமையின் கீழ் மே மாதம் முதல் வாரத்தில் தூதுக்குழுவொன்று இலங்கை வரவிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

   இதேவேளை ஜனாதிபதி அவுஸ்திரிய அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தெடர்ந்து மார்ச் முதல் வாரம் ஆஸ்திரியாவிலிருந்து முதலீட்டாளர்கள் குழு ஒன்று இலங்கை வரவுள்ளதாவும் அவர்கள் புதுபிக்கதக்க சக்தி மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பிலான துறைகளில் முதலீடு செய்யவிருப்பதாகவும் அமைச்சர் கருணாநாயக்க தெரிவித்தார்.

இலங்கைக்கு வழங்கும் கடன் தொகையை 250 மில்லியன் யூரோக்களாக அதிகரிக்க அவுஸ்திரிய அரசாங்கம் அங்கீகாரம் அளித்திருப்பதாகவும், கடன் பெறுவதிலும் பார்க்க காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலமாக மின்பிறப்பித்தல் போன்ற முதலீடுகளையே இலங்கை அரசாங்கம் பெரிதும் வரவேற்பதாக ஜனாதிபதி உயர்மட்ட சந்திப்புகளின்போது சுட்டிக்காட்டியதாகவும் அமைச்சர் கருணாநாயக்க தெரிவித்தார்.

இச் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஆரம்ப சிறுகைத்தொழில் அமைச்சர் தயா கமகே ஜனாதிபதியின் ஜேர்மன் மற்றும் அவுஸ்திரிய நாடுகளுக்கான விஜயத்தினரை யடுத்து இலங்கைக்கும் ஐரோப்பிய நாடுகளுக்குமிடையிலான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இருப்பதாக கூறினார்.

அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தினால் மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை மார்ச் மாதமளவில் நீக்கப்படுவதற்கும் ஜி. எஸ். பி பிளஸ் சலுகை ஜுலை செப்டம்பர் மாதமளவில் கிட்டுவதற்கும், சந்தர்ப்பம் கிட்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். மேலும் இரசாயன திரவியங்களுக்கு ஜேர்மன் பெயர்போன நாடு ஆனபடியால் விவசாயத்துக்கு பயன்படுத்தக் கூடிய உடல் நலத்துக்கு கேடு விளைவிக்காத இரசாயன திரவியங்களையும் இலங்கையில் சிறுநீரக பாதிப்பால் அவதியுறும் மக்களுக்கு தேவையான வைத்திய உபகரணங்களையும் தந்துதவுமாறும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்வைத்த கோரிக்கைக்கு அந்நாட்டு அரசாங்கம் சாதகமான பதிலளித்ததாகவும் அமைச்சர் கூறினார்.

ஜனாதிபதியின் ஜேர்மன் மற்றும் அவுஸ்திரியா நாடுகளுக்கிடையிலான விஜயம் உத்தியோகபூர்வமானதா அல்லது அரசை பிரதிநிதித்துவப்படுவதா என்பதுக் குறித்து வாதிடுவது அர்த்தமற்றது என கூறிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க, இச்சந்திப்புகளால் எமக்கு கிடைக்கும் நேர்மறையான பலாபலன்கள் குறித்து அவதானம் செலுத்துவதே இங்கு முக்கியமானது என்றும் கூறினார்.

அத்துடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அழைப்பினை ஏற்று ஜேர்மன் அதிபர் மற்றும் அவுஸ்திரிய ஜனாதிபதி ஆகியோர் இலங்கை வருவதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=152024&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

பிற‌கு என்ன இலங்கையில் தேனும் பாலும் ஒடும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.