Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமது பூர்வீக நிலப்பரப்பை அடையாளம் செய்யவே வடகிழக்கு மக்கள் விரும்புகின்றனர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமது பூர்வீக நிலப்பரப்பை அடையாளம் செய்யவே வடகிழக்கு மக்கள் விரும்புகின்றனர்!

இலங்கையின் புதிய அரசியலமைப்பை உருவாக்கும் போது கருத்தறியும் அமர்வுகளில் தமது தாயகப் பரப்பு எவ்வாறு அடையாளப்படுத்தப்படவேண்டும் என்பதை வடகிழக்கு மக்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள். காலம் காலமாக ஈழத் தமிழ் மக்கள் முன்னெடுத்த போராட்டத்தின் அடிப்படையிலும் அவர்கள் சந்தித்த அழிவுக்கள், ஒடுக்குமுறைகளை கருத்தில் கொண்டும் தமது உரிமைக்கான அபிலாசைகளை இதில் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இலங்கைத் தீவில் தமிழ் மக்களின் சம உரிமையை வழங்க சிங்களப் பேரினவாத அரசுகள் மறுத்தபோதும் ஈழத் தமிழ் இனத்தை இன அழிப்பு செய்ய முற்பட்டபோதும் தனி நாடு குறித்த கோரிக்கை உருப்பெற்றது. இதற்காக ஈழ இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போரிட்டனர். தமிழ் மக்களுக்கு சம உரிமையை முன்வைக்கும் பட்சத்தில் தனி ஈழக் கோரிக்கையை கைவிடவும் புலிகள் இயக்கம் தயாராக இருந்தது. ஆனால் தனி ஈழமும் இல்லை, தமிழர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்“ற பேரினவாதப் போக்கையே இலங்கை அரசுகள் கையாண்டன. இதனால் தமிழீழத்தை நோக்கி போராட நேர்ந்தது.

மாபெரும் இனப்படுகொலை ஒன்றை நடத்துவதன் ஊடாக தனி ஈழத்திற்கான ஆயுதப் போராட்டத்தை அழிப்பதுடன் மக்களின் மனங்களில் அந்த உணர்வு மீள எழாத வகையில் அச்சத்தையும் வடுக்களையும் உருவாக்குவே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நோக்கமாகும். இதன் காரணமாகவே ஈழத் தமிழ் மக்கள்மீது மிகவும் கொடிய வழிமுறையின்மீது இனப்படுகொலையும் போர்க்குற்றங்களும் நிகழ்த்தப்பட்டன. அதுவும் மிகவும் நன்கு திட்டமிட்ட முறையில் கட்டமைக்கப்பட்ட ரீதியில் நடைபெற்றது.

2009இற்குப் பிறகு தமிழ் கட்சிகளை அழிக்கும் செயலில் இலங்கை அரசுகள் ஈடுபட்டன. தமிழீழத்தை நாங்கள் கைவிட்டுவிட்டோம்! தனிநாடு கோரவில்லை என்று தமிழ் கட்சிகள் அடித்து சத்தியம் செய்யும் நிலைமை ஏற்பட்டது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழீழத்தை கைவிட்டுவிட்டோம் என்று இலங்கையின் உயர்நீதிமன்றத்தில் சத்தியக்கடாதாவழங்கி சத்தியம் செய்தது. ஆனாலும் தமிழ் கட்சிகளை ஒடுக்கும் நோக்கில் நம்பமாட்டோம் என்பதைப்போல் நடந்து கொண்டன இனவாத அரசும் அதற்கு ஆதரவான கட்சிகளும்.

தமிழ் மக்களுக்கு எந்தவொரு தீர்வையும் வழங்காத இலங்கை அரசின் போக்கும் அவ் அரசின் தமிழ் மக்கள்மீதான அணுகுமுறைகளும் ஈழத் தமிழ் மக்களின் நெஞ்சில் படிந்துள்ள தனி ஈழம் குறித்த கனவை தூண்டுவதாகவே அமைகின்றது. புதிய அரசியலமைப்பை எப்படி இருக்க வேண்டும் என்று கருத்தறியும் கிளிநொச்சி அமர்வில் புதிய அரசியலமைப்பில் வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு அதற்கு தமிழீழ மாநில அரசு என்று பெயரிடவேண்டும் என்று மக்கள் கோரியுள்ளனர்.

முல்லைத்தீவில் நடந்த கருத்தறியும் அமர்வில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தனித் தமிழீழம்தான் தீர்வு என்று முல்லைத்தீவு மக்கள் கூறினார்கள். ஈழப் போராட்ட வரலாற்றில் ஈழ வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் மிக்க நிலப் பகுதியாக விளங்கிய வன்ன மண்ணின் மக்கள் இந்தக் கோரிக்கையை பகிரமங்காக அழுத்தமாக பதிவு செய்திருக்கின்றனர். அத்துடன் ஒரு இனத்தை அழித்தொழித்த நாளை வெற்றி நாளாக கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் மக்கள் கோரியிருந்தார்கள்.

தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை முன்னெடுக்கிறோம் என்று கூறிக்கொண்டு அவர்களை அழித்தொழித்த தினத்தை போர் வெற்றி விழாவாக கொண்டாடுவது இன மேலாதிக்கத்தை இனவாத யுத்தத்தை கொண்டாடும் செயல். இதனை இலங்கை அரசு கைவிட்டு போர் வெற்றி தினத்தை இலங்கையின் கறுப்பு தினமாக போரின் அழிவு தினமாக கொண்டாட தயாரா? தமிழ் மக்களை தன்னுடைய பிரஜைகள் என இலங்கை அரசு கருதினால் தனது பிரஜைகள் அழிக்கப்பட்ட தினத்தை வெற்றிதினமாக கொண்டாட முடியாது.

அத்துடன் ஈழ மக்களின் விடிவுக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூறும் உரிமையை புதிய அரசியலமைப்பு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மக்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஈழத்தில் உள்ள மாவீரர் துயில் நிலங்களில் எல்லாம் கல்லறைகளை உடைத்து நொறுக்கிவிட்டு அதன்மீது இராணுவம் முகாமிட்டுள்ள நிலையில் இலங்கை அரசு ஈழ மக்களின் இந்தக் கோரிக்கைக்கு என்ன பதிலை சொல்லப்போகிறது?

போராடி மாணவர்களையும் போரில் மாண்டவர்களையும் நினைவுகூர்வதும் தமிழ் மக்களின் உரிமை. அதனை இலங்கை அரசுகள் தடைசெய்தன. போரில் மாண்ட போராளிகளை நினைவுகூற உள்ள தடைகளை நீக்குதல் இலங்கை இனப்பிரச்சினையை தீர்க்கும் முதல் புள்ளியாகும். தங்கள் பிள்ளைகளை, தங்கள் உறவுகளை நினைவுகூற அனுமதி கோரும் இந்த விடயத்தில் இலங்கை அரசு எப்படி நடந்துகொள்ளும் என்பதில்தான் இலங்கை அரசு தமிழ் மக்களை எப்படி நடத்துகிறது என்பதும் தங்கியுள்ளது.

கிளிநொச்சியில் உள்ள தர்மபுரம் பாடசாலையில் அண்மையில் விளையாட்டுப்போட்டி நடைபெற்றது. இதில் பாடசாலையின் விளையாட்டு அணி ஒன்று தன்னுடைய இல்லத்தை தமிழீழ வடிவில் அமைத்துக் கொண்டது. இந்த வெளிப்பாடும் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இதைப்போலவே யாழ்ப்பாணத்தில் ஈழவாரியம்பதியுறை ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவில் அம்மனின் அலங்காரத்தில் தமிழீழ வரைபடத்தை வைத்திருந்தனர் அப்பகுதி மக்கள்.

வடகிழக்கு இணைப்பு என்பது மக்களுக்கு எதிரானதல்ல. அது தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் சேர்ந்து வாழும் நிலப் பகுதியே. காலம் காலமாக வரலாற்றுபூர்வமாக தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் நிலப் பகுதியின் அடையாளம். இலங்கையில் நடைபெறும் தேர்தல்களின் முடிவை இலங்கை வரைபடத்தை வைத்து அறிவிக்கும்போது வடகிழக்கு வேறாகவும் இலங்கை வேறாகவும் வெளிப்படும். வடகிழக்கு மக்கள் தம்மை தாமே நிர்ணயிப்பதற்காகவே வடகிழக்கு இணைந்த சுயாட்சியைக் கோருகின்றனர்.

இணைக்கப்பட்ட வடகிழக்கு தமிழர் தாயகத்திற்குள் சிறுபான்மை இன மக்களாக சிங்களவர்கள் இருக்க விரும்பாவிட்டால் இலங்கைக்குள் சிறுபான்மை இன மக்களாக தமிழ் மக்கள் எப்படி வாழ்வது? இலங்கைக்குள் சிறுபான்மை இன மக்களாக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறை நெருக்கடிகளை ஈழத்தில் வாழும் சிங்கள மக்கள் எதிர்கொள்ள நேரிடாது. தமிழ் மக்கள் வரலாற்று பூர்வாக தங்கள் அடையாளம் எதுவோ அதனை பெறுவதையும் அவ்வாறு அடையாளப்படுத்த விரும்புவதையும் சிங்கள மக்கள் எதிர்ப்பதில் நியாயம் இல்லை.

அரசியலமைப்பு முயற்சிகளில் தமிழர் தாயகம் குறித்த உறுதிப்பாடு தேவை. அதற்கு என்ன காரணம்? அது பிரிவினையா? தமிழர் தாயகம் ஒடுக்கப்படுவதன் காரணமாகவே தமிழர் தாயகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமென ஈழத் தமிழ் மக்கள் விரும்புகின்றனர். உரிமையை கொடுத்தால் பிரிந்து செல்ல தேவையில்லை என்று வடக்கு முதல்வர் கூறியுள்ளளார். உரிமையை மறுத்ததன் காரணமாகவே பிரிந்து செல்லும் தீர்வுக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டனர்.

தமிழீழம் குறித்து தற்போது வடகிழக்கில் எழும் வெளிப்பாடுகள் எதனால் ஏற்பட்டுள்ளன என்பது முக்கியானமானது? ஈழத் தமிழ் மக்கள் இன்னமும் ஒடுக்கப்படுகின்றனர் என்பதையும் என்பதனையும் இலங்கை அரசு தமிழ் மக்களை எப்படி நடத்துகிறது என்பதனையுமே காட்டுகின்றது. ஈழ மக்களின் நெஞ்சில் அவர்களின் தாயகம் குறித்திருக்கும் கனவும் அவர்கள் கோரும் உரிமையுமே இங்கு வெளிப்படுகின்றது.

தமது தாயக நிலபரப்பை தமது பூர்வீக நிலபரப்பை அடையாளப்படுத்தும் தமிழ் மக்களின் உணர்வுக்கு இலங்கை அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டும். அது திணிக்கப்படும் விடயமல்ல. அது குடிகளின் வரைபடம். அது தேர்தல் முடிவு உள்ளிட்ட பல்வேறு தருணங்களிலும் வெளிப்படும் விடயம். எந்தவொரு மக்கள் கூட்டமும் தாம் வாழும் நிலத்த்தின் வரைபடத்தை தமது பண்பாட்டின் வரைபடத்தை டையாளப்படுத்த விரும்புவார்கள். அதனையே வடகிழக்கு ஈழ மக்களும் விரும்புகின்றனர். அந்த அடையாளப்படுத்தும் நிலப்பரப்பு இணைந்த ஒரு நாட்டில் தேசமாக இருப்பதா அல்லது தனிநாடாக பிரிந்துசெல்வதா என்பதை இலங்கை அரசின் செயற்பாடுகளே தீர்மானிக்கப் போகின்றன.

வடகிழக்கு இணைப்பு, சமஸ்டி ஆட்சிமுறையை கோருதல் என்பன வடகிழக்கு மக்களால் பெரும்பான்மையாக வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனையே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தன்னுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்கள் ஆணையாக முன்வைத்துள்ளது. எனவே புதிய அரசியலமைப்பு என்பது பெயர் மற்றாக இருக்காது உள்ளடக்க மாற்றமாக இருக்க வேண்டும் எனில் அது தமிழ் மக்களின் அபிலாசைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

http://bit.ly/1n3d6eY

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.