Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உள்ளக விசாரணையில் பொன்சேகாவின் குற்றச்சாட்டு குறித்தும் விசாரிக்க வேண்டும்! - டிலான் பெரேரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து அரசாங்கத்தினால் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக விசாரணைப் பொறிமுறையில் விசா ரிக்கப்பட வேண்டியது அவசியம் என்று அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து அரசாங்கத்தினால் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக விசாரணைப் பொறிமுறையில் விசா ரிக்கப்பட வேண்டியது அவசியம் என்று அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

   

பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் உரையாற்றிய அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பில் கருத்து வெ ளியிடுகையிலேயே டிலான் பெரேரா மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் எதுவும் இடம்பெறவில்லையெனவும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்ளக விசாரணையை நடத்த வேண்டும் எனவும் இலங்கைக்கு வருகைதந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல்ஹுசேன் தெரிவித்திருக்கிறார்.

எனவே இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் உள்ளக விசாரணையை முன்னெடுக்க வேண்டும். இதேவேளை அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தற்போது பல்வேறு புதிய விடயங்களை தெரிவித்திருக்கிறார்.எனவே சரத்பொன்சேகா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக விசாரணைப் பொறிமுறையில் விசாரிக்கப்பட வேண்டும். இதனை தவிர்க்க முடியாது. இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து உள்ளக விசாரணையில் ஆராய வேண்டியது அவசியமாகும். ஆனால் எக்காரணம் கொண்டும் சரத்பொன்சோக கூறுவது போன்று சர்வதேச விசாரணை அவசியமில்லை. உள்ளக விசாரணையே போதுமானது என்பதனை வலியுறுத்துகின்றோம்.

மேலும் இவ்வாறு இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்ளக விசாரணைகளை நடத்தும்போது அப்போது இராணுவத் தளபதியாக இருந்த பொன்சேகாவும் பொறுப்புக்கூற வேண்டியவராகின்றார். என்னைப் பொறுத்தவரையில் யுத்தக் காலத்தில் போர் குற்றங்களோ இனப்படுகொலையோ இடம்பெறவில்லையென தொடர்ச்சியாக கூறி வருகின்றேன்.ஆனால் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் உள்ளக ரீதியில் விசாரணைகள் நடத்த வேண்டியது அவசியமாகும். அதற்காக சர்வதேச விசாரணையை நடத்த வேண்டியது அவசியமில்லை. அவ்வாறு உள்ளக விசாரணை நடத்தப்பட்டு யாராவது குற்றம் புரிந்திருந்தால் அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லாவிடின் மொத்த பாதுகாப்புத் தரப்புக்கு களங்கம் ஏற்படும் அபாயம் உள்ளது. அதனை தடுக்க வேண்டுமாயின் குற்றம் புரிந்தவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். இன்று சர்ச்சைக்குரிய விடயங்களை தெரிவிக்கின்றவர்கள் இனவாதிகள் இல்லையென்று கூறிவிட முடியாது. ஒருகாலத்தில் இவர்களும் இனவாதக் கருத்துக்களை முன்வைத்ததை நாம் மறக்கவில்லை. குறிப்பாக தமிழர்களும், முஸ்லிம்களும் சிறுபான்மை மக்கள் எனவும் அவர்கள் பெரும்பான்மை மக்களுக்கான உரிமைகளை கோர முடியாது எனவும் கடந்த காலங்களில் ஒருசிலர் தெரிவித்திருந்ததை நாம் மறக்கவில்லை. இன்று அவர்கள் இனவாதம் இல்லாதவர்கள் போல் உரையாற்றினாலும் அவர்களின் கடந்தகால நிலைப்பாடுகள் தொடர்பில் எமக்கு நன்றாகவே தெரியும்.

இது இவ்வாறிருக்க ஐக்கிய தேசியக் கட்சியை பிரதானமாக கொண்டுள்ள தற்போதைய தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது மகிழ்ச்சியான விடயமல்ல. இந்த அரசாங்கத்தில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கும் ஏனைய சில பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது என்பது எமக்கு தெரியும். ஆனால் ஒரு முக்கியமான விடயத்திற்காக நாங்கள் இந்த தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றோம். அதாவது இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ள நிலையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விரைவாக தேசிய பிரச்சினைக்கு தீர்வை கண்டுவிட வேண்டும். கடந்த காலங்களில் இரண்டு பிரதான கட்சிகள் பிரிந்து செயற்பட்டதனாலேயே எம்மால் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாமல் போனது. ஆனால் தற்போது ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து கொண்டுள்ள நிலையில் இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அருமையான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

அதாவது தற்போது இறுதி பஸ் வந்து கொண்டிருக்கின்றது. அந்த பஸ்ஸில் நாங்கள் ஏறிக் கொள்ள வேண்டும். அதனை தவறவிட்டோமானால் வேறு பஸ்கள் கிடையாது. இதனைப் புரிந்து கொண்டு அனைவரும் செயற்பட வேண்டும். எனது அரசியல் வாழ்க்கையில் நான் இந்த தேசிய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதையே பிரதானமாகக் கொண்டு செயற்பட்டுள்ளேன். எனவே இந்த ஒரு காரணத்திற்காக மகிழ்ச்சியின்மைக்கு மத்தியிலும் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் நாங்கள் அங்கம் வகிக்கின்றோம் என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=153243&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

"முதுகில புண்ணுள்ளவனுக்கு காடு நுழையப் பயம்."

ஒருக்கா சனல் 4ஐ சிங்கள மக்கள் பாக்க விடுங்கோ, அவர்கள் குற்றவாளிகளை இனங்காட்டுவார்கள். அதன் பிறகு உங்கட விசாரணையை தொடங்கலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.