Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படிப்படியாக இராணுவப்பிரசன்னத்தை குறைப்பதுதான் முறை! ஆஸி.தூதுவரிடம் வடக்கு முதல்வர் எடுத்துரைப்பு!

Featured Replies

படிப்படியாக இராணுவப்பிரசன்னத்தை குறைப்பதுதான் முறை! ஆஸி.தூதுவரிடம் வடக்கு முதல்வர் எடுத்துரைப்பு!
 
 
படிப்படியாக இராணுவப்பிரசன்னத்தை குறைப்பதுதான் முறை! ஆஸி.தூதுவரிடம் வடக்கு முதல்வர் எடுத்துரைப்பு!
போர் முடிவடைந்து 6வருடங்களாகி விட்டன. இராணுவப்பிரசன்னத்தை படிப்படியாக குறைப்பது தான் முறை. அதுமட்டுமல்ல இராணுவப்பிரசன்னம் தொடர்வது எமது மக்களால் ஏற்றுக் கொள்ளவும் முடியாது எனவும் வடமாகாண முதலமைச்சர் அவுஸ்திரேலிய தூதுவரிடம் எடுத்துரைத்தார்.
 
அவுஸ்திரேலிய தூதுவர் பீறின் கஸ்சன் மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் இடையில் சந்திப்பு ஒன்று முதலமைச்சர் வாசஸ்தலத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பின் பின்னர் ஆஸி. தூதுவரிடம் கலந்தாலோசித்த விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே வடக்கு முதல்வர் சி.வி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அவுஸ்திரேலிய தூதுவரின் யாழ். வருகையின் போது ஆஸி. அரசாங்கத்தினால் வடமாகாணத்திற்கு தேவைப்படும் உதவித்திட்டங்கள் தொடர்பில் பரிசீலிக்க வந்ததாக அவர்  என்னிடம் தெரிவித்தார்.
 
ஆஸி.அரசின் உதவித்திட்டங்கள் தொடர்பில் நான் ஒன்றைக் கூறினேன். மத்திய அரசு, ஆஸி. அரசு இணைந்து வடமாகாணத்திற்கு பல்வேறு உதவித்திட்டங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் இந்த நடவடிக்கைகள் தொடர்பில் மாகாண அரசுக்கு இருக்கும் பங்கு சொல்லக்கூடியதாக இல்லை. 
 
எங்கள் மக்களுக்காக செய்யும் போது மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்களின் கருத்தை அறிந்து செய்வது தான் முறை என்று கூறிறேன். ஆனால் அதற்கு அவர் அரசாங்கத்துடன் அரசாங்கம் இணைந்து செய்வதாக தெரிவித்தார். அதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் மக்களுடைய பிரதிநிதிகளை புறக்கணித்து மத்திய அரசின் சொற்படி செய்வது சரியில்லை என்றும் எங்களுடன் கலந்தாலோசித்து உதவித்திட்டங்களை செய்யுமாறு கேட்டிருந்தேன். அதற்கு அவர் அதனைத் தான் கருத்தில் எடுப்பதாகக் கூறிச் சென்றார்.
 
                                                    1458203824_meet1.jpg
 
                                                    1458203840_meet2.jpg
 
  • கருத்துக்கள உறவுகள்
எமது மக்கள் மத்தியில் இராணுவம் இருப்பது அவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் புதிய உயர்ஸ்தானிகராகப் பதவியேற்றிருக்கும் பிரைஸ்ஸி ஜோன் ஹட்டக்சனிடம் தெரிவித்தார்.

எமது மக்கள் மத்தியில் இராணுவம் இருப்பது அவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் புதிய உயர்ஸ்தானிகராகப் பதவியேற்றிருக்கும் பிரைஸ்ஸி ஜோன் ஹட்டக்சனிடம் தெரிவித்தார்.

   

நேற்று வடமாகாண முதலமைச்சரை அவருடைய அலுவலகத்தில் பிரைஸ்ஸி ஜோன் ஹட்டக்சன் சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போதே சீ.வி.விக்னேஸ்வரன் இதனை எடுத்துக் கூறியிருந்தார். சுமார் ஒரு மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட வடமாகாண முதலமைச்சர், வடமாகாணத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் உதவிகளையும், எதிர்காலத்தில் வழங்க வேண்டிய உதவித்திட்டங்கள் பற்றியும் ஆராய்வதற்கு வருகை தந்திருந்தார் என்றார்.

மத்திய அரசாங்கமும் அவுஸ்திரேலிய அரசாங்கமும் இணைந்து, செய்யும் வேலைத்திட்டத்தில் மாகாண அரசின் பங்கு சொல்லக்கூடிய அளவிற்கு இல்லை. எமது மக்களுக்காக செய்யும் போது அதுபற்றி மக்களின் பிரதிநிதிகளுடன் கலந்து பேசி கருத்துக்களை அறிந்து செய்வதே முறையானது. மக்களின் பிரதிநிதிகளை புறக்கணித்து மத்திய அரசாங்கத்தின் சொற்படி நடப்பது முறையற்றது என்பதை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் சுட்டிக்காட்டியதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், வடக்கின் பிந்திய நிலைமைகள் பற்றிப் பேசியபோது, இங்கு சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் இராணுவம் இருப்பது மக்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கின்றது. அரசாங்கம் எமக்கு நன்மை செய்வதாக உறுதியளித்து நன்மை செய்து வந்தாலும், தொடர்ந்து இராணுவம் இருப்பதை எமது மக்களினால் ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது என்பதை அவரிடம் சுட்டிக்காட்டியிருந்தேன்.

யுத்தம் முடிந்து 6 வருடங்கள் ஆகிவிட்டாலும், படிப்படியாக இராணுவ பிரசன்னத்தினை குறைப்பதே முறையானது. அதை கவனத்தில் எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர், மத்திய அரசாங்கம் மாகாண அரசாங்கத்தினைப் புறக்கணித்து தனது செயற்பாடுகளை முன்னெடுத்துக்கொண்டு செல்கின்றமை எமக்கு வருத்தத்தினை தருகின்றது என்றார்.

மாகாண சபைக்கான அதிகாரங்களைக் கொடுத்து, அதிகார பகிர்வில் ஈடுபடுவதாக குறிப்பிட்டதன் பின்னர் அதற்கு மாறாக மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்களை பிரயோகிப்பது அதிகார பகிர்வுக்கு எதிரான ஒரு தன்மையினை வெளிப்படுத்தும் என்பதனையும் ஏற்றுக்கொண்டுள்ளார். எமக்கு இருக்கும் பிரச்சினைகளையும், எங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதாகவும், எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளை வடமாகாண சபையுடன் இணைந்து செய்ய விரும்புவதாகவும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கூறினார் என வடமாகாண முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=153638&category=TamilNews&language=tamil

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

 உதெல்லாம் அவர்களின் அதிகாரத் திமிரையும், திணிப்பையும்  தமிழ்த் தலைமைகளை ஓரங் கட்டுவதையுமேகாட்டுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.