Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆனையிறவு வீழ்ச்சிக்குப் பின் யாழ்ப்பாணத்தை பாதுகாத்தது நானே என்கிறார் சரத் பொன்சேகா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நாட்டில் ஜனாதிபதி, பிரதமர் ஆட்சியில் இருக்கும்போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆட்சிப்பொறுப்பைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரும் வழமை உலகில் எங்கும் இல்லையென அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நேற்று சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் ஜனாதிபதி, பிரதமர் ஆட்சியில் இருக்கும்போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆட்சிப்பொறுப்பைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரும் வழமை உலகில் எங்கும் இல்லையென அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நேற்று சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

   

அவர் மேலும் உரையாற்றுகையில் இந்நாட்டில் தேசிய பொருளாதார திட்டம் இருக்கவில்லை. இதன் காரணமாகவே தற்போது பாரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. கடந்த காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை படுகொலை செய்தார்கள். ஆசியாவின் ஆச்சரியம் எனக் கூறினார்கள். அதனை நோக்கிச் செல்லவில்லை. மக்களை கடின வாழ்க்கைக்குள்ளேயே கொண்டு சென்றார்கள்.

கடந்த காலத்தில் நாடு தற்கொலை செய்வதில் மூன்றாவது இடத்தில் காணப்பட்டது. மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் 174 ஆவது இடத்தைப் பெற்றிருந்தது. மக்களின் கடின வாழ்க்கையை நெருக்கடியை மறைப்பதற்காக பாரிய நிதியை செலவழித்து கலை விழாக்கள், களியாட்டங்களை செய்தார்கள். தேசத்துக்கு மகுடம் என்ற தொனியில் பெருமளவில் நிதியை செலவிட்டு மக்களை திசைத்திருப்பினார்கள். தனி நபரின் வருமானம் 2500 டொலர்கள் 3000 டொலர்கள் எனக் கூறினார்கள்.

உண்மையிலேயே நாட்டில் 50 சதவீதமான தனி நபர்களின் வருமானம் 500 டொலர்களுக்கும் குறைந்ததாகவே காணப்பட்டது. நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் ஆண்டு வருமானம் மிகக் குறைந்த மட்டத்திலேயே இருந்தது. இயலுமானவரையில் கடன் வாங்கினார்கள். தரகுகளைப் பெற்றார்கள். களவாடினார்கள். இதனாலேயே தற்போதைய நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. திறைசேரியை சூறையாடினார்கள். கடன் சுமை பத்து மடங்காக அதிகரித்தது. மொத்த தேசிய உற்பத்தியில் 70 சதவீதம் கடனுக்கான வட்டி செலுத்தப் பயன்பட்டதே தவிர கடனை செலுத்த முடியவில்லை. நீதிமன்றங்களை அழுத்தத்திற்கு உட்படுத்தினார்கள். முழு நாடும் நெருக்கடியை சந்தித்த போதும் ஒரு குடும்பத்தினரும் அதனுடைய அடிவருடிகளும் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.

துறைமுக நகர அபிவிருத்தியின்போது 1500 டொலர் மில்லியன் கிடைக்கப் பெறும் எனக் கூறினார்கள். அந்தத் தொகை இலவசமாக வழங்கப்படவில்லை. 50 ஏக்கர் காணி வழங்கப்படுவதனாலேயே வழங்கப்படுகின்றது. இவ்வாறு அனைத்து முதலீடுகள் அபிவிருத்தி திட்டங்களிலும் மோசடிகளை மேற்கொண்டார்கள். அண்மையில் கூட்டங்களை நடத்துவதற்கு ஆரம்பித்திருக்கின்றார்கள். இவ்வாறான நிலைமையை நாட்டில் ஏற்படுத்தியதால் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் மீண்டும் நாட்டை தன்னிடத்தில் ஒப்படைக்கும்படி கோருகின்றார். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதி, பிரதமர் இருக்கையில் எவ்வாறு ஆட்சியை ஒப்படைக்குமாறு கோர முடியும். தேசிய பொருளாதார திட்டமொன்று காணப்படவில்லை. யுத்த வெற்றியை விற்றுப்பிழைக்க முயற்சித்தார்கள். அன்று தேனும் பாலும் கிடைத்தமையால் இன்று பொது எதிரணியில் அமர்ந்து கூச்சலிடுகின்றார்கள்.

யுத்தத்திற்கு எவ்விதமான பங்களிப்பையும் வழங்காது யுத்த வெற்றியை தனதாக்குவதற்கு பாதுகாப்பு செயலாளராகவிருந்த கோத்தாபய ராஜபக் ஷ முனைந்தார். யாழ்ப்பாணம் இராணுவத்திடம் வீழ்ந்தபோது அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் சந்திரானந்த சில்வா அதனை தனது வெற்றியாக கொள்ளவில்லை. ஆனால் எதனையுமே செய்யாது யுத்த வெற்றியை தனதாக்க முயன்றார். அது மிகவும் வெட்கமான விடயம். நான் என்ன பங்களிப்புச் செய்தேன் எனக் கேள்வியெழுப்புகின்றீர்கள். யுத்தத்தை திட்டமிட்டேன். இராணுவத்தை அதிகரித்தேன். முறையான பொறிமுறைகளை முன்னெடுத்தேன்.

இதற்கு அப்பால் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட தருணத்தில் உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு தனியொருவனாக எதிர்த்தேன். மேலும் ஆணையிறவு புலிகளிடம் வீழ்ந்தபோது யாழ்ப்பாணத்திற்கு செல்வதற்கு பலர் பின் வாங்கிய தருணத்தில் இரண்டு மணி நேரத்திற்குள் பலாலிக்குச் சென்றேன். அங்கு முறையாக திட்டமிட்டோம். அங்கு இன்றும் அப்பதுங்குக்குழியுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே மாவிலாறில் நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். அவ்வாறிக்கையில் குருதி சிந்தி அர்ப்பணிப்புடன் போராடிய இராணுவ வீரர்களுக்கு உரிய மதிப்பளிக்காது அவர்களின் அர்ப்பணிப்பை தமது சுயநலத்துக்கு பயன்படுத்தவே முனைந்தார்கள். இன்று கூச்சலிடும் நீங்கள் அன்று யுத்தத்தினை முன்னெடுத்த தளபதி திட்டமிட்டு பழிவாங்கப்படும் போது எங்கு சென்றீர்கள். நாட்டை மீண்டும் பாதாளத்துக்குள் கொண்டு செல்வதற்கு முயலாதீர்கள். அதன் அபாயத்தை புரிந்து கொள்ளுங்கள்.

நாட்டில் உரிய பொருளாதார அடித்தளம் இல்லை. மனித உரிமை மீறல்கள், ஜனநாயக மீறல்கள் போன்றவற்றால் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகையையும் நாம் இழந்து நிற்கின்றோம். ஆகவே மீண்டும் குடும்பமொன்றின் நலனுக்காக நாட்டை வீழ்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லாதீர்கள் என்றார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=154056&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரசியல் எனும் போர்வையில் தனது இராணுவ காலத்து பழிவாங்கல்களை தொடரவிருக்கின்றார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.