Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் முதல்வரானால்... இது கற்பனைக் கட்டுரை அல்ல, சீமானின் பொதுக்கூட்ட பேச்சு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோவை : நாம் தமிழர் ஆட்சிக்கு வந்து,  தான் முதல்வரானால் மாநில தலைநகரை மாற்றுவது உள்ளிட்ட பல மாற்றங்களை தமிழகத்தில் கொண்டுவருவதாக கோவையில் நடந்த கூட்டத்தில் சீமான் பேசினார்.

கோவையில் பிரசாரம் செய்துவரும் சீமான் தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், கோவை தெற்கு தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

அப்போது,  "நாங்கள் தேர்தலில் நிற்கவில்லை. ஓட்டு கேட்டு வரவில்லை. 4 ஆண்டுகள் படித்தோம். இப்போது தேர்வுக்கு நிற்கிறோம். நாங்கள் ஓட்டு கேட்டு வரலை. எதிர்கால தமிழர்களின் வாழ்க்கையை கேட்டு வருகிறோம். நாங்கள் குறை கேட்க வரவில்லை. குறை தீர்க்க வந்திருக்கிறோம்.

பல ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டு விட்டு, இப்போது என்ன பிரச்னை என மு.க.ஸ்டாலின் கேட்கிறார். இவ்வளவு நாள் மக்களுக்கு என்ன பிரச்னை என்பதே தெரியாமல்தான் ஆட்சி செய்து வந்தார்களா? கடந்த கால தவறுகளுக்கு மன்னித்துக்கொள்ளுங்கள் என்கிறார் ஸ்டாலின். நாமும்,  'உங்களுக்கு கடந்த காலங்களில் வாக்களித்து ஆட்சிக்கு வர வைத்த எங்களின் கடந்த கால தவறுகளுக்கு மன்னித்துக்கொளுங்கள்' என கேட்டுக்கொள்ளலாம்.

புதியதாக அரசியலுக்கு வந்தது போல், நாங்கள் வந்தால் அதை செய்வோம். இதை செய்வோம் என்கிறார்கள். ஏன் ஆட்சியில் இருந்த போது செய்யவில்லை. அத்தியாவசிய உணவு தேவையை கூட நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலையில் தமிழக மக்கள் உள்ளனர்.

seeman4001.jpgஜெயலலிதா காலில் விழுந்தால் பரவாயில்லை. கார் டயரில் விழுவதை என்னவென சொல்வது? ஹெலிகாப்டரை கும்பிட்டாலும் பரவாயில்லை. ஹெலிகாப்டர் நிழலை பார்த்து கும்பிடுகிறான்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடனை தள்ளுபடி செய்வேன் என்கிறார் கலைஞர். விவசாயியை கடனாளியாக்கியது யார் என்றால் பதிலில்லை. கல்வி கடன் ரத்து செய்வோம் என்கிறார். கடன் வாங்கி கற்கும் சூழலை ஏற்படுத்தியது யார் என்றால் அதற்கும் பதிலில்லை.

தமிழக முதல்வர் ஜெயலலிதா, தாய் போல இந்த நாட்டை ஆண்டேன் என்கிறார். எந்த தாய் டாஸ்மாக்கை திறந்து வைத்து, மகன்களை குடி எனச்சொல்வார் ? ... இந்த தேர்தலில் ஊழல், லஞ்சம், மது மூன்றும்தான் பிரச்னையாக உள்ளது. இந்த மூன்றையும் கொண்டு வந்தது யார் ?. நாங்கள் ஆட்சி க்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவேன் என்கிறார் கலைஞர். படிப்படியாக மூடுவேன் என ஜெயலலிதா சொல்கிறார். முதலில் உங்கள் சாராய ஆலைகளை மூடுங்கள். நாட்டை ஆளும் ஜெயலலிதாவுக்கு, ஆண்ட கருணாநிதிக்கு, ஆள நினைக்கும் விஜயகாந்துக்கு என்ன பொருளாதார கொள்கை இருக்கிறது. 94 வயதில் ஒருவரும் 70 வயதில் இன்னொருவரும் தமிழகத்தை இன்னுமொரு முறை ஆள துடிக்கிறார்கள்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தையே மாற்றுவோம். தமிழகத்தின் தலைநகர் இனி சென்னை இல்லை. நிர்வாக வசதிகளுக்காகவும், வளர்ச்சியை பரவலாக்கவுமே 5 தலைநகர். கணினி, துறைமுகத்துக்கு சென்னை தலைநகர். தொழில், வர்த்த தலைநகராக கோவை இருக்கும். மதுரை மொழி, கலை பண்பாடுக்கான தலைநகர், திருச்சி நிர்வாகத்துக்கான தலைநகர் என மொத்தம் 5 தலைநகரை அமைப்போம்.

நீங்கள் கனவில் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத தலைநகராக அது இருக்கும். அங்கு எல்லாமே இருக்கும். ஆடு, மாடு மேய்த்தல், விவசாயத்தில் இருந்து எல்லாமே அரசு பணி. வேலை இல்லை என ஒருவரும் சொல்லக் கூடாது. ஆடு, மாடு மேய்த்தல் அவமானம் என நீங்கள் சொல்ல முடியாது. ஏனென்றால் அது அரசு வேலையாகி விட்டதே. வேளாண் தொழிலை தேசிய தொழிலாக்கி அதை அரசே செய்யப்போகிறது” என்றார்.
vikatan.com

அண்ணை சீமான் தேவையில்லாத கதைகள் கதைச்சு ஆதரவை குறைக்கிறார் போல தென்படுது. மேலுள்ளதை வைத்து சொல்லவில்லை. அவரது அண்மைய பேச்சுகள் சிலவற்றைக்கேட்டேன், நடைமுறைக்கு சாத்தியமில்லதவற்றை கதைக்கிறார்.   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Surveyor said:

அண்ணை சீமான் தேவையில்லாத கதைகள் கதைச்சு ஆதரவை குறைக்கிறார் போல தென்படுது. மேலுள்ளதை வைத்து சொல்லவில்லை. அவரது அண்மைய பேச்சுகள் சிலவற்றைக்கேட்டேன், நடைமுறைக்கு சாத்தியமில்லதவற்றை கதைக்கிறார்.   

எங்களுக்கு அப்படித் தான் தெரியும், அளவை. ஏனெனில் நமது பார்வை வேறு, அங்குள்ள பார்வை வேறு

ஆனால் இவரது பேச்சை, ஏனைய தலைவர்களின் பேச்சுக்களுடன் ஒப்பீட்டுப் பாருங்கள்.

விஜயகாந்த் பேசுவதே புரியல. அவரும் முதல்வர் வேட்பாளர்.

94 வயது தாத்தாவையே குஷ்புவுடன் சேர்த்து தப்பாக பேசும் தலைவர்கள்.

பிரதமரும், முதல்வரும் பேசினாலே, தப்பாக பேசும் தலைவர்கள்.

அம்மாவுக்கு எதிராக வழக்கு போட்டார் என்பதற்காக, சு.சாமிக்கு சேலையை தூக்கி எதிர்ப்பு காட்டிய பெண் தொண்டர்கள். பாமர பெண்கள் அங்கே கீழ் உள்ளாடை போடுவது இல்லை என்ற வகையில், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆர்டர் கொடுத்த பெண் தலைமை அங்கே உள்ளதே.

சாதியை சொல்லி திட்டி பின் மன்னிப்பு கேட்கும் தலைவர்கள்

ஆகவே சீமான் பரவாயில்லை  ரகம். தம்மைப் போலன்றி, பெரு மதிப்புக்குரிய என்று சொல்லி கவுரவமாக திட்டுகிறார் என்பதும், வேறு தலவைர்கள், அவர் மேல் கொண்டுள்ள உள்ள ஆதங்கம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையில் சீமானின் திட்டங்கள் வரவேற்கத்தக்கவை. தமிழ்நாட்டுக்கு அவசியமானது கூட.....
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.