Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் கிபிர் விமான தாக்குதலில் 15 பொதுமக்கள் பலி 30பேர் படுகாயம் 25வீடுகள் எரிந்து நாசம்

Featured Replies

காயமடைந்தோரை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு பார்வையிட்டுள்ளது.

மன்னார் இலுப்பைக்கடவை படகுத்துறைக் குடியிருப்புக்கள் மீது நேற்று முன்தினம் சிறிலங்கா வான்படை நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகாயமடைந்து கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றவர்களை நேற்று இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு பார்வையிட்டுள்ளது.

-sankathi-

இலங்கை அரசின் போலிப்பீரச்சாரமாக கடற்புலிகளின் தளங்கலை தாக்கி அழித்ததாக ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிரது பாதுகாப்பு அமைச்சு

ஆனால் உண்மைச்சம்பவம்

மன்னார் கரையோரப்பகுதி மக்கள் அச்சத்தில் முற்றாக இடம்பெயர்வு.

மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள கரையோரப் பிரதேச மக்கள் விமானத் தாக்குதல் அச்சம் காரணமாக அப்பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மன்னார், இலுப்பைக்கடவை படகுத்துறைக் கிராமத்தின் மீது சிறிலங்கா விமானப் படையினர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடத்திய கண்மூடித்தனமான விமானத் தாக்குதலில் சுமார் 17 அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்தே இப்பகுதி மக்கள் விமானத் தாக்குதல்கள் தொடரலாம் என்ற அச்சத்தால் இடம்பெயரத் தொடங்கியிருக்கின்றனர்.

முற்றுமுழுதாக கடற்றொழிலாளர்களையே கொண்டுள்ள இந்தக் கிராமத்தின் மீதான தாக்குதலின் பின்னர், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் மன்னார் முசலி பிரதேச செயலர் பிரிவிலுள்ள கொக்குப் படையான் கரையோரக் கிராமத்தைச் சேர்ந்த அனைத்து மக்களும் நேற்று புதன்கிழமை அங்கிருந்து இடம்பெயர்ந்திருக்கின்றனர். இதனால் அக்கிராமம் வெறிச்சோடிப்போய்க் காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

முசலிப் பகுதியைச் சேர்ந்த 63 குடும்பங்களைச் சேர்ந்த 269 பேர் இடம்பெயர்ந்து நானாட்டான் பிரதேச செயலர் பிரிவிலுள்ள பொந்தியூகண்டல் என்ற பகுதிக்குச் சென்றுள்ளனர். இங்கு உறவினர்கள் மற்றும் நண்பர்களின் இல்லங்களில் தங்கியிருப்பவர்கள் தவிர ஏனையவர்கள் பாடசாலைகளில் அகதிகளாகத் தங்கியிருக்கின்றனர். இவர்களுக்கான சமைத்த உணவு நேற்று வழங்கப்பட்ட அதேவேளையில், உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது.

நானாட்டான் பகுதியில் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருக்கின்ற போதிலும் இப்பகுதியிலும் விமானத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் காணப்படுகின்றது. அதன் காரணமாக இவர்கள் மீண்டும் இடம்பெயரும் நிலையிலேயே இருப்பதாகவும் அங்கிருந்து பிந்திக் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.

இப்பகுதியில் தொடர்ந்தும் அச்ச நிலையும் பதற்றமும் காணப்படுகின்றது. மக்களின் வழமையான வாழ்க்கையும் முற்றாகச் சீர்குலைந்திருக்கின்றது. பாடசாலைகளும் மூடப்பட்டிருக்கின்றன.

-puthinam-

மன்னார் குண்டுவீச்சு தொடர்பாக

வெளிநாட்டு தூதர்களுக்கு விளக்கம்:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு.

மன்னார் படகுத்துறையில் நேற்றுமுன்தினம் இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் உட்பட வடக்கு கிழக்கில் தமிழர்கள் எதிர்கொள்ளும் அவல நிலையை சர்வதேச சமூகத்திற்கு விளக்குவதற்கான நடவடிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் சர்வதேச நாடுகளின் தூதர்களையும், பிரதிநிதி களையும் சந்தித்து மன்னார் தாக்குதல் உட்பட தமிழர்கள் அனுபவித்து வரும் அவலங்கள் தொடர்பாகக் கூட்டமைப்பினர் விளக்கமளிக்கவுள்ளனர்.

இம்மாதம் எட்டாம் திகதிக்கு முன் தமிழ்க் கூட்டமைப்பு எம். பிக்கள் அனைவரும் ஒன்றுகூடி இதுபற்றி ஆராய்வர் என அறிய வருகிறது. தற்போது வெளிநாடுகளுக்குப் பயணங்கள் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் நாடு திரும்பியதும் இச்சந்திப்பை மேற்கொள்வதெனக் கூட்டமைப்பு தீர்மானித்திருக்கிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, துரைரட்ணசிங்கம், தங்கேஸ்வரி, சிவநாதன் கிஷோர், சிவசக்தி ஆனந்தன், கனகரட்ணம், வினோதரலிங்கம் ஆகிய எட்டு எம். பிக்கள் மாத்திரமே தற்சமயம் இலங்கையில் உள்ளனர். மீதி 13 பேரும் வெளிநாடு களுக்குச் சென்றுள்ளனர். இம்மாதம் எட்டாம் திகதிக்கு முன்னர் இவர்கள் அனைவரும் நாடு திரும்பிவிடுவர் எனத் தெரிவிக் கப்படுகிறது.

இவர்கள் நாடு திரும்பியவுடன் உடனடியாகச் சந்திப்பு இடம்பெறும் என்றும் அதனைத் தொடர்ந்து தமிழர்கள் மீதான வன்முறை நடவடிக்கைகளை நிறுத்துமாறு சர்வதேச சமூகம், இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் சர்வதேச பிரதிநிதிகளிடம் கூட்டமைப்பு கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

-uthayan-

இலுப்பக்கடவை வான் தாக்குதல் தமிழின அழிப்பின் உச்சக்கட்ட நடவடிக்கையாகும்: யாழ் பொதுசன அமைப்புக்களின் ஒன்றியம்.

சிறிலங்கா பயங்கரவாத அரசின் மன்னார் இலுப்பைக்கடவை மக்கள் குடியிருப்புக்கள் மீதான வான்படையினரின் கோரத்தாக்குதலானது தமிழின அழிப்பின் அதி உச்ச நடவடிக்கையின் கோரச்சம்பவம் ஆகும். இது சர்வதேச சமூகத்தின் பாராமுகத்தின் வெளிப்பாடாக அமைகிறது என யாழ் மாவட்ட பொதுசன அமைப்புக்களின் ஒன்றியம் தமது கவலையையும் கண்டனத்தையும் தெரிவிக்கின்றது.

முற்றுமுழுதான மக்கள் குடியிருப்புக்களை இனம் கண்டு திட்டமிட்ட தமிழின அழிப்புக்களை சிறிலங்கா அரசு தொடர்ந்தும் போர் நடவடிக்கைகளாக நடத்திக்கொண்டு சமாதானத்திற்கான கதவுகள் திறந்திருப்பதாகக் கூறும் பச்சை வேடத்தை சர்வதேச சமூகம் இன்றும் நம்பிக் கொண்டு இருந்தால் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழின அழிப்பு தொடரும். பாராமுகமாக இருக்கும் சர்வதேசம் சிறிலங்கா அரசைக்கண்டிக்கவேண்டும் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-sankathi-

.

  • கருத்துக்கள உறவுகள்

மோசமான விளைவை எதிர்கொள்ள நேரிடும்'

மன்னாரில் அப்பாவிப் பொதுமக்கள் மீதான விமானத் தாக்குதலுக்காக இலங்கை அரசாங்கம் மிக மோசமான விளைவுகளை எதிர்நோக்க வேண்டியிருக்குமென விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனர்.

மன்னாரில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள இலுப்பைக்கடவை படகுத்துறை பகுதியின் குடிமனைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை விமானப் படையினர் நடத்திய கடும் தாக்குதலில் 20 இற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

எனினும், கடற்புலிகளின் முகாம்களே விமானப் படையினரின் துல்லியமான தாக்குதலுக்கிலக்கானதாகவும் 30 இற்கும் மேற்பட்ட புலிகள் கொல்லப்பட்டதாகவும் அரசும் படைத்தரப்பும் கூறி வருகின்றன.

இந்த நிலையிலேயே, அப்பாவிப் பொதுமக்கள் மீதான விமானத் தாக்குதலுக்காக இலங்கை அரசு மோசமான விளைவுகளை எதிர்நோக்க வேண்டியிருக்குமென புலிகள் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் சர்வதேச செய்தி நிறுவனமொன்றுக்கு கூறுகையில்;

அரசின் இந்த நடவடிக்கைக்காக புலிகள் பதில் தாக்குதலை நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்பாவி மக்கள் மீதான கொடூரத் தாக்குதலை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இதற்கான பின் விளைவுகளை இலங்கை அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்குமென நாம் கடுமையாக எச்சரிக்கின்றோம். இது மிகவும் பாரதூரமானது எனவும் தெரிவித்தார்.

எனினும், இது குறித்து அவர் விபரிக்க மறுத்துவிட்டதாகவும் அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

-தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

இலுப்பைக்கடவைக் கொடூரம்; சர்வதேசத்தின் பிரதிபலிப்பு என்ன?

மன்னாரில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள இலுப்பைக்கடவைப் பிரதேசத் தில் மக்கள் குடியிருப்புகள் மீது இலங்கை விமானப்படை விமானங்கள் நடத்திய கண்மூடித்தனமான குண்டு வீச் சில் எட்டுச் சிறுவர்கள் உட்பட இருபதுக்கும் அதிகமான பொதுமக்கள் உடல் சிதறிப் பலியாகியிருக்கின்றார்கள். முப்பதுக்கும் அதிகமான பொதுமக்கள் படுகாயமடைந் திருக்கின்றார்கள். பொதுமக்களின் இருபத்தைந்து வீடுகள் வரை குண்டு வீச்சால் தரைமட்டமாகி அழிந்துள்ளன. ஆனால், கடற்புலிகளின் தளமே இலக்கு வைக்கப்பட்டது என்று கடற்படை கூறுகின்றது.

விமானப்படையினரின் உளவுத் தகவல்களின்படி மன் னார் தாக்குதலில் கடற்புலிகளின் இலக்குகளே தாக்கப்பட் டன என்று அடித்துக் கூறுகின்றார் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க.

இத்தாக்குதலில் அந்தக் கடற்புலித் தளத்துக்கும், புலி களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத் தப்பட்டுள்ளது என்றும் "கதை' விட்டிருக்கின்றார் அவர்.

ஆனால், இத்தாக்குதலின் கொடூரம் என்னவென்பதை சுயாதீன வட்டாரங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.

குறிப்பாக, மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்குரிய ராயப்பு யோசெப் ஆண்டகை உண்மையைப் போட்டு டைத்து, உலகுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றார்.

""அப்பாவிப் பொதுமக்கள் வாழும் கிராமமே குண்டு வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. அங்கு குடிசை களே உள்ளன. அங்கு கடற்புலிகளின் முகாம்களோ, நிலைகளோ, பதுங்கு குழிகளோ, புலிகள் இருந்தமைக் கான தடயங்களோ எதுவுமில்லை.

""அங்குள்ள பங்குக் குருவானவரிடமும், அருட் சகோ தரிகள் மற்றும் பொதுமக்களிடமும் நான் நேரடியாக விசா ரித்தேன். அங்கு கடற்புலிகளின் எவ்வித இலக்குகளும் இல்லை என்பது அதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

""இந்தப் படகுத்துறைக் கிராமம், கடலிலிருந்து நூறு மீற்றருக்குள் உள்ளது. அருகில் கோயிலும் உள்ளது. கோயில் மிகத் தெளிவாகத் தெரிகின்றது. இங்குள்ள மக் கள், சிறு கொட்டில்களிலேயே வசித்து வந்தனர். அவற் றின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின் றது.'' என்று சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்த்த பின்னர் உண் மையை வெளியிட்டிருக்கின்றார் மன்னார் ஆயர்.

விடுதலைப் புலிகளை அழிக்கின்றோம் என்ற பெயரில் கொழும்பு அரசு மேற்கொள்ளும் தமிழின அழிப்புக் கொடூ ரத்தின் மற்றொரு கறை அத்தியாயம் இலுப்பைக்கடவை யில் அரங்கேறியிருக்கின்றது.

கொல்லபட்ட அப்பாவிப் பொது மக்களையும், சிறுவர் களையும் புலிகள் கணக்கில் சேர்த்து அறிக்கை விட்டு மகிழ்கின்றது பேரின வாதம்.

அப்பாவிப் பொதுமக்கள் மீதான இத்தகைய கண்மூடித் தனமான குண்டு வீச்சுத் தாக்குதல்கள் கொடூரமானவை என்றால், அந்தக் கொடூரத்தை நியாயப்படுத்தும் கொழும்பு அரசின் கூற்றை செயற்பாட்டை கேட்டும், பார்த்தும், அறிந்தும் வாளாவிருக்கும் சர்வதேச சமூகத்தின் மௌனப் போக்கு அதைவிடக் கொடூரமானது. இதுவே தமிழர் தரப் பின் ஆதங்கமாகும்.

யுத்த நடவடிக்கைகளுக்குப் பயந்து அஞ்சி யாழ். நாவாந்துறைப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து, மன் னாரில் அகதிகளாகக் கூடாரங்களை அமைத்து வாழ்ந்து வந்த மக்களே இவ்வாறு விமானக் குண்டு வீச்சுக்கு இலக் காகியிருக்கின்றார்கள் என்ற தகவலும் வெளியாகியிருக் கின்றது.

இத்தாக்குதல் குறித்து இராணுவப் பேச்சாளர் வழமை போல கதை அளக்கின்றார் என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதி ராஜாவும் வேதனையோடும், விசனத்தோடும் சுட்டிக் காட்டுகின்றார்.

செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவினரும், மன்னார் ஆயரும் வெளியிடும் உண்மைகள், இராணுவப் பேச்சாள ரின் கூற்றில் உள்ள பொய்யை நிரூபிக்கின்றன என்பதையும் அவர் தெளிவுபடுத்தியிருக்கின்றார

  • 3 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.